ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்

Go down

மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Empty மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்

Post by சிவா Sun Aug 13, 2023 1:50 am

மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  INDIA-POLITICS-MANIPUR-UNREST-154139


மியான்மரில் 2021ம் ஆண்டு ராணுவ புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட குழப்பத்தால், மணிப்பூருக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சம்பவங்கள் ஆகியவை, மணிப்பூர் கலவரத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளதாக சிங்கப்பூரை சேர்ந்த பத்திரிகை தலையங்கம் எழுதி உள்ளது.

மணிப்பூரில் மெய்டி சமூகத்தினர் மற்றும் பழங்குடியினரான கூகி சமூகத்தினர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே 3ம் தேதி மோதல் வன்முறையாக வெடித்தது. 150க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். கலவரம் வெடித்த மறுநாள் கூகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக நடுரோட்டில் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில், இந்த கலவரம் தொடர்பாக சிங்கப்பூரை சேர்ந்த ‛ தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் ' என்ற பத்திரிகை எழுதிய தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

சட்ட விரோத குடியேற்றம்


இந்தியா மியான்மர் நாடுகள் 1,643 கி.மீ., தூரம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. எல்லை பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் 16 கி.மீ.,தூரம் வரை விசா இன்றி சென்று வர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மியான்மரில் ராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து, 2021ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால், மியான்மரில் இருந்து வருபவர்கள் குறித்து கண்காணிப்பு ஏதும் இல்லை. இதனால், பலர் எளிதாக இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் குடியேறி வந்தனர். மணிப்பூர் மாநிலமானது, மியான்மருடன் 398 கி.மீ., தூரம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இதனால், அந்த நாட்டில் இருந்து ஏராளமானோர், மணிப்பூருக்குள் நுழைகின்றனர். கடந்த ஜூலை 22 மற்றும் 23ல் மியான்மரின் கம்பார் பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக 718 பேர் அங்கிருந்து மணிப்பூருக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக அதிகளவு குடியேற்றமும் நடப்பதால், பெரும்பான்மை அந்தஸ்தை இழக்க நேரிடும் என்ற அச்சம் மெய்டி சமூகத்தினர் இடையே ஏற்பட்டது. இந்த மக்கள்தொகை மாற்றத்தை அடிப்படையாக வைத்தே, கலவரம் மூண்டதாக தெரிகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்டி சமூகத்தினர் சுமார் 32 லட்சம் பேர் வசிப்பதாக தெரியவந்து உள்ளது. மற்ற 90 சதவீத மக்கள் தொகையில், ‛கூகி, நாகா இனத்தவர்கள்' உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

மியான்மரில் வசிக்கும் ‛சின்' இன மக்களுடன் கூகி இன மக்கள் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவர்களை சட்டவிரோதமாக மணிப்பூர் மாநிலத்திற்குள் ஊடுருவவும் உதவி செய்வதாக குற்றம்சாட்டிய மெய்டி சமூகத்தினர், ‛கூகி' சமூகத்தினரில் பெரும்பான்மையானோர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டு


கலவரம் தொடர்பாக முதல்வர் பைரோன் சிங் கூறுகையில், சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மற்றும் மியான்மரில் வசிக்கும் போதை மருந்து கடத்தல்காரர்களால் மணிப்பூரில் கலவரம் வெடித்ததாகவும், இவர்கள் மாநிலத்தை சீர்குலைக்கவும் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த கலவரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், கலவரத்தில் உயிரிழந்தவர்களில் 118 பேரின் உடல்கள் இன்னும் உரிமை கோரப்படவில்லை எனவும், அவர்கள் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனவும் தெரிவித்தார்.

கணக்கெடுப்பு


சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தொடர்பான பிரச்னை வெடித்ததை தொடர்ந்து, மியான்மர் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்து மணிப்பூரில் குடியேறியவர்கள் குறித்து அடையாளம் கணக்கெடுக்கும் பணியை மாநில அரசு துவக்கியது. பயோ மெட்ரிக் முறையில் அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக நுழைந்தவர்கள், பல ஆண்டுகள் இங்கேயே தங்கியிருந்து இந்திய குடியுரிமை பெறுவதை தடுக்கவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை மணிப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கலாம் என சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

எவ்வளவு பேர் மணிப்பூருக்குள் ஊடுருவி உள்ளனர் என்ற உறுதியான தகவல் இல்லாத நிலையில், ஏராளமானோர் ஊடுருவி உள்ளனர் என்ற ‛மெய்டி' சமூகத்தினரின் குற்றச்சாட்டை ‛கூகி' சமூகத்தினர் நிராகரித்துள்ளனர். தங்களை அவமதிக்கவும், பதற்றத்தை தூண்டவுமே இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக தெரிவித்தவர்கள். சட்டவிரோதமாக கணக்கெடுத்தவர்களை கணக்கெடுக்கும் பணியை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் விவகாரம்


கலவரத்தின் மற்றொரு முக்கிய பிரச்னையாக இருப்பது மணிப்பூரின் மலைப்பகுதிகளில் போதைப்பொருட்கள் தயாரிக்க பயன்படும் ‛பாப்பி' சாகுபடி பரவலாக உள்ளது. உள்ளூர் போராளி குழுக்களின் கண்காணிப்பின் கீழ் ‛கூகி' சமுதாயத்தினர் இதனை பயிரிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது மியான்மர் உள்ளிட்ட தெற்கு - கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தகம் ஆகிறது.

போதை கடத்தல் பிரச்னை குறித்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து இதற்கு எதிரான நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கிவிட்டது. ஆனால், இந்த நடவடிக்கை தங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கை என தெரிவித்த ‛கூகி' சமூகத்தினர், வேறு வாய்ப்புகள் மற்றும் வழி இல்லாததால் இதனை பயிரிடுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், ‛பாப்பி' சாகுபடியை மாநில அரசே ஊக்குவிக்கிறது. சாகுபடியை தவிர்க்கவும், இது இல்லாத சூழ்நிலையை உருவாக்கவும் மாநில அரசு எந்த ஆதரவையும் தரவில்லை. உணவு பதப்படுத்தும் மையம், போக்குவரத்து மானியம், குளிர்சாதன பதப்படுத்தும் கிடங்கு ஆகியவற்றை நீண்ட காலமாக கோரி வருகிறோம். ஆனால் மாநில அரசு கண்டு கொள்ளாததால், காய்கறி சாகுபடி சாத்தியம் இல்லாததாக ஆகி உள்ளது. பொருளாதார ரீதியாக பலன் அளிப்பதாலும், குழந்தைகளின் கல்விச்செலவு, நிலையான வருமானம் கிடைப்பதால் ‛பாப்பி' சாகுபடியில் ‛கூகி', ‛ நாகா' மற்றும் நேபாளிகள் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

சட்ட விரோத ஊடுருவல், போதை மருந்து மற்றும் ஆயுதக் கடத்தல் ஆகியவை எளிதாக நடப்பதால், இந்தியா - மியான்மர் எல்லை அதிக கவனம் பெற்றது. இதனையடுத்து மணிப்பூரில் வேலி அமைக்கும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டு உள்ளது. இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது.

https://www.straitstimes.com/asia/south-asia/unrest-in-myanmar-linked-to-ongoing-ethnic-strife-in-india-s-manipur


மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மணிப்பூர் கலவரம்
» வந்தாா்.. வியந்தாா்.. சென்றாா்! | அமெரிக்க அதிபா் இந்திய பயணம் குறித்த (தினமணி) தலையங்கம்
»  சிங்கப்பூர் கலவரம்: விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!
» சிங்கப்பூர் கலவரம்: கைது செய்யப்பட்ட 28 பேரில் ஒருவர் மலேசியர்!
» எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum