Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
Page 1 of 1
ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் இந்தியாவிற்குள் போதைப் பொருட்களைக் கொண்டு வருவதற்கு ஹைடெக் வழிகளை பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில், பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் இந்தியாவிற்கு போதைப்பொருள் அனுப்புவதற்கு ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர் என்று பாகிஸ்தான் அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பஞ்சாப் எல்லையில் அமைந்துள்ள கசூர் நகரில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் பாதுகாப்பு சிறப்பு உதவியாளர், மாலிக் முகமது அகமது கான் மூத்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஹமீத் மிருக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார். மாலிக் முகமது அகமது கான் கசூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சட்டமன்ற உறுப்பினர் (MPA) ஆவார்.
ஜூலை 17 அன்று மாலிக் முகமது அகமது கான் ட்வீட் செய்த ஒரு வீடியோவில், கசூரில் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் குறித்து மாலிக் முகமது அகமது கானிடம் பத்திரிக்கையாளர் ஹமீத் மிர் கேள்வி கேட்கிறார், அதற்கு மாலிக் முகமது அகமது கான் அதை உறுதிப்படுத்தும் வகையில் பதிலளித்தார். “ஆம், அது (கடத்தல்) மிகவும் பயமாக இருக்கிறது” என்று மாலிக் முகமது அகமது கான் கூறினார். மேலும், “சமீபத்தில் ஒவ்வொரு ட்ரோனிலும் 10 கிலோ ஹெராயின் கட்டப்பட்டு நாடுகளின் குறுக்கே வீசப்பட்ட இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதை தடுக்க ஏஜென்சிகள் முயற்சி செய்கின்றனர்” என்றும் மாலிக் முகமது அகமது கான் கூறினார்.
Big disclosure by PM’s advisor Malik Muhammad Ahmad Khan. Smugglers using drones In the flood affected areas of Kasur near Pakistan-India border to transport Heroin. He demanded a special package for the rehabilitation of the flood victims otherwise victims will join smugglers. pic.twitter.com/HhWNSNuiKp — Hamid Mir حامد میر (@HamidMirPAK) July 17, 2023 |
வீடியோவை பகிர்ந்து, “பிரதமரின் ஆலோசகர் மாலிக் முகமது அகமது கானின் பெரிய வெளிப்பாடு இது. இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கசூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெராயின் கடத்தல்காரர்கள் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக சிறப்பு நிவாரணத்தை மாலிக் முகமது அகமது கான் கோரினார், இல்லையெனில் பாதிக்கப்பட்டவர்கள் கடத்தல்காரர்களுடன் சேருவார்கள்,” என்று ஹமீத் மிர் பதிவிட்டுள்ளார்.
கசூர் பஞ்சாபின் கெம்கரன் மற்றும் ஃபெரோஸ்பூரின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் பஞ்சாப் காவல்துறை வெளியிட்ட தரவுகளின்படி, ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் மட்டும் ஜூலை 2022-2023 வரை NDPS சட்டத்தின் கீழ் 795 FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானை ஒட்டிய பஞ்சாப் மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாபில் உள்ள மூத்த BSF அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, இந்தப் பிரச்சினையை இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் எழுப்பிய போதிலும், ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் எல்லை தாண்டிய போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்கிறது என்று கூறினார்.
இந்த ஆண்டு மட்டும் 260 கிலோ ஹெராயின், 19 ஆயுதங்கள், 30 மேகசின்கள் (தோட்டாக்கள் பொருத்தப்படும் கருவி), 470 தோட்டாக்கள் மற்றும் 30 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் பஞ்சாபின் எல்லைப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி தெரிவித்தார்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தொலைபேசியில் பேசிய ஹமீத் மிர், மாலிக் முகமது அகமது கானின் கருத்துக்கள் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தப்படுவதை முதன்முறை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது என்று கூறினார். மாலிக் முகமது அகமது கானிடம் இருந்து இந்த ஒப்புதல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது என்றும் ஹமீத் மிர் கூறினார்.
“மாலிக் முகமது அகமது கான் கசூரின் MPA ஆவார், மேலும் அவர் பாகிஸ்தானில் உள்ள அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபனத்திற்கு மிகவும் நெருக்கமானவர். அவர் முந்தைய இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் தற்போதைய இராணுவ தளபதிக்கு மிகவும் நெருக்கமானவர்,” என்று ஹமீத் மிர் கூறினார்.
ட்ரோன்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் குறித்த கேள்வியைக் கேட்க அவரைத் தூண்டியது எது என்று கேட்டபோது, மூன்று பக்கங்களிலும் இந்தியாவால் சூழப்பட்ட கசூரில் சுற்றுப்பயணம் செய்ததாக ஹமீத் மிர் கூறினார்.
“இந்த கிராமவாசிகள் (கசூரில்) தங்களுக்கு மொபைல் சிக்னல்கள் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஆளில்லா விமானங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு மதுபானங்கள் கடத்தப்படுவது குறித்து அவர்கள் பேசிக் கொண்டனர். எல்லை தாண்டிய ட்ரோன் இயக்கங்களால் இங்குள்ள மொபைல் சிக்னல்கள் பாதுகாப்பு ஏஜென்சிகளால் ஜாம் (முடக்கம்) செய்யப்படுகின்றன என்று மாலிக் முகமது அகமது கான் என்னிடம் கூறினார்,” என்று ஹமீத் மிர் கூறினார்.
வீடியோ ஒளிபரப்பப்பட்ட பிறகு, மாலிக் முகமது அகமது கான் தனது நாட்டின் ஸ்தாபனத்திலிருந்து நிறைய விமர்சனங்களை எதிர்க் கொண்டதாக ஹமீத் மிர் கூறினார்.
“அவர் உள்ளூர் MPA மற்றும் அவர் இந்த பகுதிக்கு பிரதமர் வருகை தர முயற்சித்து வருகிறார். அவர் தனது கருத்துக்களுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டார்… மொபைல் போன் இணைப்பு இல்லாததால் அவர் தனது தொகுதியினரிடமிருந்து அதிக பின்னடைவை எதிர்கொள்கிறார், மேலும் போதைப்பொருள் கடத்தலின் உதாரணங்களை மேற்கோள் காட்டி அதை நியாயப்படுத்த முயன்றார்,” என்று ஹமீத் மிர் கூறினார்.
கருத்துகளுக்காக மாலிக் முகமது அகமது கானுக்கு அழைப்புகள் மற்றும் செய்திகள் அனுப்பிய நிலையில், எந்த பதிலும் கிடைக்கவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» குழந்தையைக் கொன்று வயிற்றில் போதைப் பொருள் கடத்தல்
» ஈரானில் ஒரே நாளில் 20 போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு தூக்கு
» "போதைப் பொருள் கடத்தல்காரர் முதல்வரின் மனைவிக்கு வேண்டியவர்"
» போதைப் பொருள் பயன்படுத்தியதாக லிண்ட்சே லோகன் மீண்டும் கைது
» மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி போதைப் பொருள் பறிமுதல்
» ஈரானில் ஒரே நாளில் 20 போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு தூக்கு
» "போதைப் பொருள் கடத்தல்காரர் முதல்வரின் மனைவிக்கு வேண்டியவர்"
» போதைப் பொருள் பயன்படுத்தியதாக லிண்ட்சே லோகன் மீண்டும் கைது
» மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி போதைப் பொருள் பறிமுதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|