Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை
2 posters
Page 1 of 1
செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை
கடந்த 2017-ம் ஆண்டு, தலைமை செயலகத்தில் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கின்றனர்.
கடந்த மே மாதத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவுகளுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைப்பெற்றது. இந்த நிலையில், இன்று கீரின்வேஸ் சாலையிலுள்ள அமைச்சரின் அரசு பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தலைமை செயலகத்தில் உள்ளே அமைச்சர் சேம்பரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளும், இந்தியன் வங்கியின் அலுவலர்களும் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்பது முதற்கட்ட தகவல்.
தமிழக அரசியல் வரலாற்றில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அலுவலகத்தில் சோதனை நடத்துவது இதுவே முதல்முறை என்கிறார்கள். கடந்த 2017-ம் ஆண்டு, தலைமை செயலகத்தில் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கின்றனர். ஆனால், அமைச்சர் ஒருவரின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
Re: செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை
அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரின் சகோதரர் அசோக்குமார் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரின் சகோதரர் அசோக்குமாரின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.
கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகம், தொழிற்கூடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. எட்டு நாள்கள் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், கரூர் மண்மங்கலம் அருகேயுள்ள ராமேஸ்வரபட்டியில் இருக்கும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் தற்போது திடீர் சோதனையைத் தொடங்கியிருக்கின்றனர். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு அமைந்திருக்கும் ராமகிருஷ்ணபுரத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேபோல, கரூர் வெங்கமேடு பகுதியிலுள்ள கருப்பணசாமி கோயில் தெருவில் அமைந்திருக்கும் சண்முக செட்டியார் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கியிருக்கின்றனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்களின் பாதுகாப்போடு இந்தச் சோதனையை அதிகாரிகள் தொடங்கியிருக்கின்றனர். தற்போது, மேற்குறிப்பிட்ட மூன்று இடங்களிலும் அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டிருக்கின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Re: செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை
இ.டி சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்: செந்தில் பாலாஜி பேட்டி
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் மற்றும் சென்னை வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் (ஜுன் 13) திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை சோதனை குறித்த தகவல் கிடைத்ததும் நடைபயிற்சி சென்று இருந்த செந்தில் பாலாஜி அவசரமாக வீடு திரும்பினர்.
முழு ஒத்துழைப்பு
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “அமலாக்கத் துறை சோதனை குறித்து சட்டப்படி எனக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. வருமான வரித்துறை சோதனையில் பறிமுதல் செய்த விவரங்கள் குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை சோதனை முடிந்த பிறகு முழு விவரம் தெரியவரும். அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.
ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டால் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். அமலாக்கத் துறையோ, வருமான வரித்துறையோ யாராக இருந்தாலும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம். சோதனை முடிவில் தான் என்ன நோக்கத்துடன் வந்துள்ளார்கள் என்று தெரியும்” என்று கூறினார்.
2011 முதல் 2016 வரையிலான அ.தி.மு.க ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்வரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக செந்தில் பாலாஜிக்கு சொந்தாமான இடங்கள் அவர்களது உறவினர், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று செந்தில் பாலாஜியின் வீடுகளில் அமலாக்கத் துறை திடீர் சோதனை நடத்தப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Re: செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை
செந்தில்பாலாஜி வீட்டின் முன்பு துணை ராணுவம் குவிப்பு: கைது நடவடிக்கையா?
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டின் முன் திடீரென துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் சற்று முன் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். மேலும் அவருடைய உதவியாளர் விஜயகுமாரை தனியாக அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை பசுமை சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டின் முன் திடீர் என துணை இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 பேர்கள் கொண்ட துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே செந்தில் பாலாஜி இன்று கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கும் நிலையில் கைது நடவடிக்கை இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Re: செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை
செந்தில் பாலாஜியின் உதவியாளரை அழைத்து சென்ற அமலாக்கத்துறை.. எங்கே அழைத்து சென்றனர்?
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாகவும், அவர்கள் எங்கே அழைத்து சென்றனர் என்று தெரியவில்லை என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய ராணுவத்தின் துணை ராணுவ படையினர் பாதுகாப்பிற்கு இருக்கின்றனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவல் படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவல் சார் உதவியாளர் விஜயகுமார் என்பவரை அமலாகத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அவர் எந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்? எந்த இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது? என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அரசு சார்பில் உதவியாளராக நியமிக்கப்பட்டவர் விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
Re: செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை
செந்தில் பாலாஜி --
தூணிலும் இருப்பர் துரும்பிலும் இருப்பர் என்பதற்கிணங்க
அதிமுகாவிலும் இருந்தார் இப்போது திமுகாவிலும் இருக்கிறார்.
அதிமுகாவில் இருந்தபோது திமுகா அவரை கிழி கிழி என கிழித்தது.
தேர்தல் சமயத்தில் திமுகாவிற்கு தாவினார். எப்பிடி?
சர்வேஸ்வரனுக்குதான் வெளிச்சம்..
எங்கும் அகப்படாமல் வெற்றி அடையும் 007 பாண்ட்
தூணிலும் இருப்பர் துரும்பிலும் இருப்பர் என்பதற்கிணங்க
அதிமுகாவிலும் இருந்தார் இப்போது திமுகாவிலும் இருக்கிறார்.
அதிமுகாவில் இருந்தபோது திமுகா அவரை கிழி கிழி என கிழித்தது.
தேர்தல் சமயத்தில் திமுகாவிற்கு தாவினார். எப்பிடி?
சர்வேஸ்வரனுக்குதான் வெளிச்சம்..
எங்கும் அகப்படாமல் வெற்றி அடையும் 007 பாண்ட்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை
செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறை சோதனை முடிவு
சென்னை தலைமை செயலகத்திலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை முடிந்தது. சுமார் 3 மணிநேரம் சோதனை நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறைக்கு பலத்த பாதுகாப்புடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவர் மற்றும் வங்கி அதிகாரிகள் 3 பேர் சோதனையில் ஈடுபட்டனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரையடுத்து அவரது வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த மே மாதம் 26-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை வருமான வரித் துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் உறவினர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
Re: செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை
இப்போது நெஞ்சு வலி காரணமாக ஓமாந்தூரார் ஆசுபத்திரியில் உள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» செந்தில் பாலாஜி அலுவலகத்தில் குண்டுவீச்சு
» செந்தில் பாலாஜி =சிறப்பு விருந்தினர்.
» அமைச்சர் செந்தில் பாலாஜி கைது
» செந்தில் பாலாஜி கைது: திமுகவுக்கு என்ன சிக்கல்?
» செந்தில் பாலாஜி -அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு -உச்ச நீதிமன்றம்.
» செந்தில் பாலாஜி =சிறப்பு விருந்தினர்.
» அமைச்சர் செந்தில் பாலாஜி கைது
» செந்தில் பாலாஜி கைது: திமுகவுக்கு என்ன சிக்கல்?
» செந்தில் பாலாஜி -அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு -உச்ச நீதிமன்றம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|