ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்

2 posters

Go down

இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Empty இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்

Post by சிவா Sat Jun 03, 2023 10:40 pm


2017, ஆகஸ்ட்19: உத்தர பிரதேசத்தின் முசாஃபர்நகரில் உள்ள கத்தெளலி அருகே கலிங்கா-உத்கல் எக்ஸ்பிரஸின் 14 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த ரயில் புரியில் இருந்து ஹரித்வாருக்கு சென்று கொண்டிருந்தது. இந்தச் சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.

2017, ஜனவரி 22 : ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் ஹீராகுட் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது 39 பேர் உயிரிழந்தனர்.

2016, நவம்பர் 20: கான்பூருக்கு அருகிலுள்ள புக்ராயனில் ஒரு பெரிய ரயில் விபத்து நடந்தது, இதில் 150 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன.

2015, மார்ச் 20: டேராடூனில் இருந்து வாரணாசிக்கு செல்லும் ஜனதா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இந்த விபத்தில் 34 பேர் உயிரிழந்தனர்.

2014, மே 4: திவா சாவந்த்வாதி பயணிகள் ரயில் நாகோடானே மற்றும் ரோஹா ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது. இதில், 20 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர்.

2013, டிசம்பர் 28: பெங்களூர்-நாந்தெட் எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்து 26 பேர் பலியானார்கள். குளிரூட்டப்பட்ட பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி பிகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் மோதியதில் 28 பேர் உயிரிழந்தனர்.

2012, ஜூலை 30 : இந்திய ரயில்வே வரலாற்றில், 2012 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டுகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு சுமார் 14 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் தடம் புரண்டது மற்றும் நேருக்கு நேர் மோதல்கள் இரண்டும் அடங்கும். 2012 ஜூலை 30 ஆம் தேதி டெல்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் அருகே தீப்பிடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

2011,ஜூலை 07: உத்திரப் பிரதேசத்தில் ரயில் பேருந்து மீது மோதியதில் 38 பேர் உயிரிழந்தனர்.

2010 செப்டம்பர் 20 : மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷிவ்புரியில் குவாலியர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர் மற்றும் 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2010, ஜூலை 19: மேற்கு வங்கத்தில் உத்தர பங்கா எக்ஸ்பிரஸ் மற்றும் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் மோதிக்கொண்டன. இதில் 62 பேர் இறந்தனர் மற்றும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2010, மே 28,: மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்படுவோர் நடத்திய தாக்குதலில் கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 170 பேர் உயிரிழந்தனர்.

2009, அக்டோபர் 21,: உத்தரப் பிரதேசத்தில் மதுரா அருகே மேவார் எக்ஸ்பிரஸின் கடைசி ரயில் பெட்டு மீது கோவா எக்ஸ்பிரஸின் இஞ்சின் மோதியது. இந்த விபத்தில் 22 பேர் பலியானார்கள். 23 பேர் காயமடைந்தனர்.

2009, பிப்ரவரி 14 : (ரயில் பட்ஜெட் தினம்) ஹவுராவிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 14 பெட்டிகள் ஒடிஷாவில் உள்ள ஜாஜ்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டன. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர்.

2008 ஆகஸ்ட் 01: செகந்திராபாத்தில் இருந்து காக்கிநாடா நோக்கிச் சென்று கொண்டிருந்த கௌதமி எக்ஸ்பிரஸ் இரவில் தீப்பிடித்தது. இதன்காரணமாக 32 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

2005, ஏப்ரல் 21: குஜராத்தில் வதோதரா அருகே சாபர்மதி எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மோதிக்கொண்டதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 78 பேர் காயமடைந்தனர்.

2005 பிப்ரவரி 3: மகாராஷ்டிராவில் நாக்பூர் நோக்கிச்சென்றுகொண்டிருந்த ரயில், டிராக்டர்-டிராலியுடன் மோதியதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

2003 ஜூன் 22: மகாராஷ்டிராவில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 51 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

2003, ஜூலை 2,: ஆந்திரப் பிரதேசத்தில் ஹைதராபாத்தில் இருந்து 120 கிமீ தொலைவில் உள்ள வாரங்கலில், மேம்பாலத்தின் மேலே இருந்து கோல்கொண்டா எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளும் இன்ஜினும் சாலையில் விழுந்தன. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

2003, மே 15 : பஞ்சாபில் லூதியானா அருகே ஃபிராண்டியர் மெயிலில் தீப்பிடித்ததில் குறைந்தது 38 பேர் உயிரிழந்தனர்.

2002, செப்டம்பர் 9: ஹவுரா-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது. இதில் 120 பேர் உயிரிழந்தனர்.

2001, ஜூன் 22: மங்களூர்-சென்னை மெயில், கேரளாவில் கடலுண்டி ஆற்றில் விழுந்தது. இதில் 59 பேர் உயிரிழந்தனர்.

2001, மே 31: உத்திரப் பிரதேசத்தில் ரயில்வே கிராசிங்கில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது ரயில் மோதியது. 31 பேர் உயிரிழந்தனர்.

2000, டிசம்பர் 2 : கொல்கத்தாவில் இருந்து அமிர்தசரஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஹவுரா மெயில் டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் 44 பேர் பலியானார்கள். 140 பேர் காயமடைந்தனர்.

1999, ஆகஸ்ட் 3 : டெல்லி நோக்கிச் சென்ற பிரம்மபுத்ரா மெயில் மேற்கு வங்கத்தில் உள்ள கேசல் என்ற இடத்தில் அவத்-அசாம் எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் 285 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 312 பேர் காயமடைந்தனர்.

1998, நவம்பர் 26 : பஞ்சாபின் கன்னாவில் ஃபிராண்டியர் மெயில், சீயல்தா எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் 108 பேர் இறந்தனர். 120 பேர் காயமடைந்தனர்.

1997, செப்டம்பர் 14 : அகமதாபாத்-ஹவுரா எக்ஸ்பிரஸ் சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் ஆற்றில் விழுந்தது. 81 பேர் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர்.

1996, ஏப்ரல் 18: எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தெற்கு கேரளாவில் பேருந்து மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.

1995, ஆகஸ்ட் 20 : புது டெல்லி சென்றுகொண்டிருந்த புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஃபிரோஸாபாத்தில் காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் 250 பேர் பலியானார்கள். 250 பேர் காயமடைந்தனர்.

1993, டிசம்பர் 21: கோட்டா-பீனா எக்ஸ்பிரஸ், ராஜஸ்தானில் சரக்கு ரயில் மீது மோதியது. 71 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

1990 ஏப்ரல் 16 : பாட்னா அருகே பயணிகள் ரயிலில் தீப்பிடித்தது. இதில் 70 பேர் உயிரிழந்தனர்.

1985, பிப்ரவரி 23: ராஜ்நந்த்காவில் பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்தன. இதில் 50 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர்.

1981, ஜூன் 6 : பிகாரில் புயல் காரணமாக ரயில் ஆற்றில் விழுந்தது. இதில் 800 பேர் உயிரிழந்தனர். 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Empty Re: இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்

Post by Dr.S.Soundarapandian Sun Jun 04, 2023 1:12 pm

காரை உற்பத்தி செய்து தள்ளுகிறார்கள்! ஆனால் அதில் உள்ள குறையை இன்றுவரை யாரும் கண்டுகொள்வதில்லை! காலில் மிதிக்கும் வேகத்தை அதிகப்படுத்தும் தகட்டையும் , பிரேக்கையும் அடுத்தடுத்து வைப்பார்களா? இதைப்போன்று உள்ள ஒரு பிழைதான் இப்போது நடந்துள்ளதும்! நாலுபேர் சொல்லிவிட்டால் போதும் கண்ணை மூடிக்கொண்டு அதிலேயே போகவேண்டியது! கண்ணை மூடிக்கொண்டு போகாதே என்று சொல்லும்போதுதான் ‘பகுத்தறிவு’ பேசவேண்டி வருகிறது!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum