ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதி சங்கரரும் அத்வைத தரிசனமும்!

Go down

ஆதி சங்கரரும் அத்வைத தரிசனமும்! Empty ஆதி சங்கரரும் அத்வைத தரிசனமும்!

Post by சிவா Thu Apr 27, 2023 11:23 pm

ஆதி சங்கரரும் அத்வைத தரிசனமும்! 10-19210

ஈஸ்வரனின் அம்சமாகவே இந்த நிலவுலகம் வாழவந்துதித்தவர் ஆதிசங்கரர். சித்திரை மாத அமாவாசைக்குப் பின்வரும் வளர்பிறை பஞ்சமியில், சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது. “காலடி”யில் பிறந்த அவர் “காலடி” படாத இடம் பாரதத்தில் இல்லை. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் நடந்து நடந்து, அத்வைத சித்தாந்தத்தைப் பரப்பினார். உலக உயிர்களின் உன்னதத்தை, அத்வைத தத்துவத்தின் அடிநாதமாக வழங்கியவர். அவருடைய பிரதான நோக்கம்,

1. வேத தர்மத்தை காப்பது.

2. மனிதர்கள் ஒவ்வொருவரும் பிரம்மத்தை தங்களுக்குள் உணரச் செய்வது.

ஆதிசங்கரர் இந்து சமயத்தின் மூன்று முக்கிய நூல்களுக்கு (கீதை, உபநிடதங்கள், ப்ரம்ம சூத்ரம்), தனது தத்துவ விளக்கத்தை அளித்தார். ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து நிறைவேற்ற வேண்டிய மகத்தான காரியங்களை வெறும் 32 வயதில் செய்து முடித்தார். ஏகம் என்பது பிரம்மம். அந்த பிரம்மத்தை அறியும் ஓர் அடையாளமாகவே ஏக தண்டத்தை ஏந்தி இந்திய சமய மரபின் பெரும் புரட்சிக்கு வித்திட்டார்.

தனக்குப்பின் அத்வைத தர்மத்தையும் தத்துவத்தையும் அகிலமெல்லாம் பரப்ப சிஷ்யர்களை உருவாக்கினார். ஆங்காங்கே பீடங்களையும் மடங்களையும் உருவாக்கினார். மனிதாபிமானமும், மனித சமத்துவமும் இல்லையேல், ஆன்மிகத்தின் அடித்தளம் அசைந்து விழுந்துவிடும் என்ற உண்மையை உரக்கச் சொன்னவர் ஆதிசங்கர பகவத் பாதர்.

அத்வைதம் என்பது அகில உலகமும் பரந்துள்ள மகத்தான தத்துவம்.

அதனை வடிவமைத்தவர் சங்கரர்; அகில உலகமெல்லாம் கொண்டு சேர்த்த உன்னதப் பணியைச் செய்தவர்.

த்வைதம் என்றால் இரண்டு. “அ” என்பது அதை மறுப்பது. அதாவது இரண்டற்றது என்பதே அத்வைதம். அதை நேரடியாக ஒன்று என்று சொல்லாமல் இரண்டற்றது என்று சொல்வதைப் புரிந்து கொள்வதே அத்வைத சித்தாந்தம். ஒரே சத்தியத்துக்குப் புறம்பாக எதுவுமே இல்லை என்பது அத்வைதம். ஆதிசங்கரரின் காலத்தில், தீண்டாமை எனும் கொடுமை இருந்தது. இதில் சற்றும் விருப்பமில்லாத சங்கரர் வாழ்வில், ஒரு அற்புதம் நடத்த திட்டமிட்டான் இறைவன்.

இப்படிப்பட்ட நாடகங்கள் எல்லா மஹான் களின் வாழ்விலும் நடந்திருக்கிறது. இதை வைத்து, “இதுகூட ஞானிகளுக்குத் தெரிவதில்லை” என்று, நமது குறை அறிவால் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. காசியிலே அவர் தனது அத்வைத கொள்கைகளை மற்றவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்த காலம் அது.

அவர் மனதிலே தீண்டாமை இல்லை. அவரைச் சுற்றி இருந்தவர்கள் மனதில் இருக்கவே செய்தது.

ஒருநாள் தன் சீடர்கள் புடைசூழ, கங்கையில் நீராடச் சென்று கொண்டிருந்தார். வீதிகள் விரிவாக இருக்காது காசியில். குறுகிய ஒரு வீதியின் வழியே சென்று கொண்டிருந்தபொழுது, எதிரே ஒருவன் தன் மனைவியுடன், நான்கு நாய்களை இழுத்துக் கொண்டு வந்துகொண்டிருந்தான். மனைவியின் கையிலோ மதுக்குடம். சங்கரர் அவனைப் பார்த்து “சற்று விலகி நில்” என்று கூறுகிறார்.

வந்தவன் முகத்தில் புன்னகை. “யாரை விலகச் சொல்கிறாய்? இந்த உடலையா? இல்லை இந்த உடலில் உள்ள ஆன்மாவையா? எதை விலகச் சொல்கிறாய் ?” என்று பொருள்படும் வகையில் கேள்வி கேட்கிறான். இதைக் கேட்டவுடன், சங்கரர் சற்று திகைத்தார். வந்தவன் பார்வதி பரமேஸ்வரன் என்று சங்கரருக்கு உள்ஞானம் உணர்த்தியது. நமஸ்காரம் செய்து நிமிர்ந்தபோது சிவபெருமான் பார்வதியுடன் அவருக்குக் காட்சி அளிக்கிறார். அவருடன் வந்த நாய்கள் நான்கு வேதங்கள். பார்வதி வைத்திருந்தது அமிர்தக்குடம்.

ஒரு குரு, எந்த வடிவிலும் வந்து உண்மையை உணர்த்துவார். உருவத்தை எடை போட்டு ஞானத்தை அளக்காதே என்பதை நமக்கு எடுத்துக்காட்டவே இந்த நிகழ்வு.

அப்போது சங்கரர் பாடிய ஐந்து ஸ்லோகங்கள் தான் மனிஷா பஞ்சகம். இதன் பின்னணியில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்.

1. அழிந்து விடக்கூடிய உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாகுபாடு பார்ப்பது தவறு. ஒரு ஜீவனை விட மற்றொரு ஜீவன் உயர்ந்தது அல்ல.

2. எல்லா உயிர் இனங்களிலும் ஒரே ஆன்மா தான் (பரமாத்மா) வீற்றிருக்கிறது.

3. நீர்நிலையில் பிரதிபலிக்கும் சூரியன் பிம்பம்போல், எல்லாப் படைப்பிலும் ஆண்டவன் வீற்றுள்ளான். கலங்காத நீரில் தெரியும் பிம்பம் போல், அத்வைதி எல்லாவற்றிலும் இறைவனைக் காண்கிறான்.

4. கங்கையின் நீரினிலும் குட்டையின் நீரினிலும் காண்கின்ற சூரியனில் வேற்றுமை உண்டோ?

5. தண்ணீரைத் தாங்கி நிற்பது மண்குடமோ, பொற்குடமோ அதில் தெரியும் சூரியனின் பிம்பத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

அதுபோல் அனைவரிலும் அனைத்திலும் உறைவது அந்த பரமாத்மனே. வெளிப்பார்வைக்கு நல்லது, கெட்டது போல் தெரியும். கெட்டது, நல்லது போல் தெரியும். இந்தக் காட்சி மாறுபாட்டின் காரணம் மாயை. அந்த மாயையை உரித்துக் காட்டவே இந்த நிகழ்வு.

இதை விளக்குவது மனிஷா பஞ்சகம். உண்மையில் அத்வைத தத்துவத்தின் சுடர் விளக்கு மனிஷா பஞ்சகம். இந்த ஐந்து ஸ்லோக வெளிச்சத்தில் அத்வத தரிசனத்தை நம்மால் முழுமையாக தரிசிக்க முடியும்.

தொகுப்பு: பாரதிநாதன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum