ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசவத்துக்குப் பிறகான `போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' ஏற்பட காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்

Go down

பிரசவத்துக்குப் பிறகான `போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' ஏற்பட காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்  Empty பிரசவத்துக்குப் பிறகான `போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' ஏற்பட காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்

Post by சிவா Sat Apr 15, 2023 9:28 pm

பிரசவத்துக்குப் பிறகான `போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' ஏற்பட காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்  OGbBWl3

``கர்ப்பம் உறுதியானதும் எல்லாப் பெண்களுக்கும் இயல்பிலேயே மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் இருக்கும். பிரசவ தேதி நெருங்க நெருங்க, அந்த மகிழ்ச்சி காணாமல் போய், பயமும் பதற்றமும் அதிகரிக்கும். பிரசவம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற தவிப்பு இருக்கும். பிரசவமானதும் அந்த உணர்விலிருந்து விடுபடுவார்கள். சுகப்பிரசவமோ, சிசேரியனோ... அதனால் உணரப்படும் உடல்வலி, தாய்ப்பால் கொடுப் பதில் அசௌகர்யம், கூடவே ஹார்மோன் மாற்றங்கள் என எல்லாம் சேர்ந்துகொண்டு சிலருக்கு மனநிலையில் தடு மாற்றங்களை ஏற்படுத்தலாம். 3-4 வாரங்கள் வரை இப்படி உணர்வது இயல்பானதுதான். அதைத் தாண்டியும் தொடர்ந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.

சில பெண்களுக்கு பிரசவமான உடனே ஒருவித மன அழுத்தம் ஆரம்பிக்கும். சிலருக்கு கர்ப்ப காலத்திலேயே இந்த மாற்றம் ஆரம்பிக்கும். பிரசவமான சில வாரங்கள் தொடங்கி சில மாதங்கள் வரை கூட இந்த மன அழுத்தம் தொடரலாம். பிரசவத்தை அடுத்த சில நாள்களுக்கு மட்டுமே நீடிக்கும் மன அழுத்தத்தை ‘பேபி ப்ளூஸ்’ (Baby blues) அல்லது ‘போஸ்ட் பார்ட்டம் ப்ளூஸ்' (Postpartum Blues) என்று சொல்வோம். 3- 4 வாரங்களுக்கு மேலும் அந்த மன அழுத்தம் அதிகரித்தால் அதை ‘போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன்’ (Postpartum depression) என்று சொல்வோம். கர்ப்ப காலத்திலேயே ஆரம்பிக்கும் இந்த டிப் ரெஷன், பிரசவத்துக்குப் பிறகும் தொடரும் பட்சத்தில், அதை ‘பெரிபார்ட்டம் டிப்ரெஷன்' (Peripartum Depression) என்று சொல்வோம்.

ஆரம்பகட்ட அறிகுறிகள்...


* தூக்கமின்மை

* சாப்பிடப் பிடிக்காதது

*குழந்தையைத் தூக்கி கொஞ்சவோ, தாய்ப்பால் ஊட்டவோ பிடிக்காதது

* கணவர் அருகில் வந்தாலே வெறுப்பாக உணர்வது

* பயம்...

அறிகுறிகள் மோசமாவதை உணர்ந்தால் உடனே கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும். யார், என்ன நினைப் பார்களோ, தான் நல்ல அம்மா இல்லை என சொல்லிவிடுவார்களோ என்றெல்லாம் பயந்து மன அழுத் தத்தை வெளியே சொல்லாமல் இருந்தால், ஒருகட்டத்தில் அது தீவிர மடையும்.

தீவிர அறிகுறிகள்...


மன அழுத்தம் தீவிரமாகும்போது தனிமை உணர்வு, அதீத பயம், தற்கொலை எண்ணம், குழந்தையைத் துன்புறுத்தும் எண்ணம் போன்றவை வரலாம். யாரோ பேசுவது காதில் ஒலிப்பதாக உணர்வது, எல்லோரும் தன்னையே கவனிக்கிறார்கள், தன்னை பற்றியே பேசுகிறார்கள் என்று நினைப்பது போன்றெல்லாம் தோன்றினால் சற்றும் தாமதிக்காமல் மனநல மருத்துவரை அணுக வேண்டும். ‘போஸ்ட்பார்ட்டம் சைக்கோசிஸ்’ (Postpartum psychosis) எனப்படும் அது சற்று தீவிரமான, ஆபத்தான நிலை.

தீர்வுகள்...


பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவரையே முதலில் அணுகலாம். அவர் அந்தப் பெண் ணின் மனநிலை மாற்றங்களை, அறிகுறிகளைக் கேட்டறிந்து, ஆரம்பகட்ட மருந்துகளைப் பரிந்துரைப்பார். மருந்துகள் எடுத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாமா, அது குழந்தையை பாதிக்குமா என்றெல்லாம் பயப்படத் தேவை யில்லை. இது சாதாரண மருந்துகளுக்குக் கட்டுப்படுமா அல்லது மனநல மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமா என்பதை யும் மகப்பேறு மருத்துவரே முடிவு செய்வார்.

தேவைப்பட்டால் குறிப்பிட்ட காலத்துக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அடுத்தகட்டமாக தெரபி பரிந்துரைக்கப் படும். ‘ஆமாம்... நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்... உங்களுக்கு இந்தப் பிரச்னைகள் இருக்கின்றன. நீங்கள் கற்பனையாகச் சொல்ல வில்லை...’ என சம்பந்தப்பட்ட பெண் மற்றும் ஆணுக்கு நம்பிக்கை அளிப்பதுதான் தெரபிஸ்ட்டுகளின் முதல் சிகிச்சை. மற்றவர் களிடம் உதவி கேட்கக் கற்றுத் தரப்படும். கிடைக்கிற ஓய்வை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ளச் சொல்வோம். முன்பெல் லாம் இரவிலும் விழித்திருந்து குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியிருந்தது. இன்று பிரெஸ்ட் பம்ப் உதவியோடு தாய்ப் பாலை சேகரித்து வைத்து, மற்றவர் உதவியோடு குழந்தைக்குக் கொடுக்கச் சொல்லலாம்.

தூக்கம் இல்லாததால்தான் பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தம் பாதிக்கிறது. எனவே, அது முதலில் சரிசெய்யப்பட வேண்டும். புதிதாகக் குழந்தை பெற்ற அம்மாக்களுக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தெரபியின்போது கணவரும் உடனிருக்க வலியுறுத்துவோம். கணவர் மற்றும் குடும்பத்தாரின் சப்போர்ட் இருக்கும் பட்சத்தில் அந்தப் பெண்ணால் சீக்கிரம் இந்தப் பிரச்னையில் இருந்து மீள முடியும். மன அழுத்தத்திலிருந்து மீளும் இந்தப் போராட்டப் பயணத்தில் கணவரும் நிச்சயம் கைகோக்க அறிவுறுத்துவோம். மனநிலையில் முன்னேற்றம் தெரியும்பட்சத்தில் மருந்து களைப் படிப்படியாகக் குறைக்கச் சொல் வார்கள் மருத்துவர்கள். அப்படியே மன அழுத்தத்திலிருந்தும் முழுமையாக வெளியே வந்துவிடலாம்.

ஆண்களையும் பாதிக்கலாம்!


`போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன்' பெண்களை மட்டுமே பாதிக்கும் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது கணவர்களையும் பாதிக்கும். சட்டென மாறிப்போன சூழல், பொருளாதார நெருக்கடி, குழந்தையைப் பார்த்துக்கொள்வதால் ஏற்படும் தூக்கமின்மை, மன அழுத்தம், அத் துடன் வேலையையும் பார்க்க வேண்டிய நிர்பந்தம், மனைவியின் கவனம் முழுவதும் குழந்தையின் பக்கம் திரும்பியது போன்ற வையே ஆண்களுக்கு இந்தப் பிரச்னை பாதிப்பதற்கான காரணங்கள். கவுன்சலிங் மற்றும் தெரபி மூலம் இவர்களையும் இதிலிருந்து மீட்கலாம்.”

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum