Latest topics
» பெண்ணும் இனிப்பும்by ayyasamy ram Today at 10:14
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 21:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05
» நாவல்கள் வேண்டும்
by mini Mon 19 Aug 2024 - 21:17
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54
» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:11
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:10
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:00
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Abiraj_26 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெயிலால் உண்டாகும் கருமையை நீக்க தர்பூசணி ஃபேஸ் மாஸ்க்.
Page 1 of 1
வெயிலால் உண்டாகும் கருமையை நீக்க தர்பூசணி ஃபேஸ் மாஸ்க்.
அவ்வப்போது சில வீட்டுக் குறிப்புகளை முயற்சி செய்தால் மட்டுமே சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள முடியும். வெயிலினால் உண்டாகும் முகக்கருமையை நீக்க முடியும். |
என்னதான் நாம் வெயில் படாமல் இருக்க ஸ்காஃப் அணிந்து முகத்தை மறைத்தாலும் அல்லது சன் ஸ்கீன் அப்ளை செய்தாலும் தப்பிப்பது கடினம். முகம் கருமை என்பது சம்மர் காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. அதற்காக நாம் அப்படியே விடுவதும் சருமத்தை பாதிக்கும். எனவே அவ்வப்போது சில வீட்டுக் குறிப்புகளை முயற்சி செய்தால் மட்டுமே சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள முடியும். முகக்கருமையை நீக்க முடியும். அப்படி முகக்கருமை போக தர்பூசணி பழத்தை இப்படி யூஸ் பண்ணி பாருங்க.. |
தர்பூசணி மற்றும் தேன் மாஸ்க் :
தர்பூசணி சாருடன் தேன் கலந்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நன்கு மிக்ஸ் செய்துகொண்டே இருக்க கெட்டியான பதம் கிடைக்கும். பின் அதை முகம் , கை , கால்களில் தடவி அரை மணி நேரம் காய வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி தினமும் செய்தால் முகம் கருமை நீங்கி பளபளப்பாக மாறும்.
தர்பூசணி மற்றும் எலுமிச்சை :
தர்பூசணி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் மூன்றையும் நன்கு கலந்து பின் முகம் , கழுத்தை சுற்றி அப்ளை செய்யுங்கள். குறைந்தது 15 நிமிடங்கள் காய வையுங்கள். பின் தண்ணீரில் கழுவ முகம் பளிச்சென மாறும்.
தர்பூசணி மற்றும் தயிர் :
சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வதில் தர்பூசணி மற்றும் தயிர் இரண்டுமே சிறந்தது. எனவே தயிருடன் தர்பூசணி சாறு கலந்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் காய வையுங்கள். பின் முகத்தை கழுவுங்கள். இப்படி தினமும் செய்தால் கோடைக் கருமையை எளிதாக அகற்றிவிடலாம்.
Re: வெயிலால் உண்டாகும் கருமையை நீக்க தர்பூசணி ஃபேஸ் மாஸ்க்.
வெயில் காலத்தில் ஆய்லி ஸ்கின்னை எப்படி பராமரிப்பது.? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்..!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையான சருமம் இருக்கும். அவை அவர்களின் ஜீன்களை பொறுத்தது. ஆனால், நம்மில் பெரும்பாலானோருக்கு ஆயில் ஸ்கின் இருக்கும். அவற்றை எப்படி பராமரிப்பது என தெரியாமல், தினமும் நொந்து நூலாகி விடுவோம். இயற்கையாகவே உடலில் எண்ணெய் அதிகம் சுரப்பதால், முகம், சருமத்தில் எந்நேரமும் எண்ணெய் வடிவது போன்ற உணர்வை தான் ஆயில் ஸ்கின் என்கிறோம். இந்த வகை சருமத்தை பராமரிப்பது எப்படி என இங்கு நாம் காணலாம். |
சருமத்தில் வடியும் அளவுக்கு அதிகமான எண்ணெயை கட்டுப்படுத்த உங்கள் முகம் மற்றும் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் நாள் ஒன்றுக்கு 3 - 4 முறை முகத்தை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்வது நல்லது.
மென்மையான பேஸ் வாஸ்களை பயன்படுத்தவும் : எண்ணெய் சருமம் உள்ளவர்கள் அடிக்கடி முகத்தை கழுவுவதை நாம் பார்த்திருப்போம். அப்படி நீங்களும் அடிக்கடி முகத்தை கழுவுவராக இருந்தால், குறைந்த ரசாயனம் கொண்ட மென்மையான பேஸ் வாஸ்களை பயன்படுத்தலாம். மாறாக கடின பேஸ் வாஸ் பயன்படுத்துவது சருமத்தின் இயற்கை எண்ணையை வற்ற செய்துவிடும்.
முகத்தை தண்ணீரில் கழுவிய பின்னர், உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை உறுதி செய்ய பாடி லோஷன்களை அல்லது முக கிரீம்களை பயன்படுத்தலாம். இந்த பாடி லோஷன்கள் சரும வறட்சி மற்றும் சருமத்தில் வெடிப்பு உண்டாவதை தடுக்க உதவும்.
முகத்திற்கு ஒப்பனை செய்ய துவங்குவதற்கு முன்னர் எப்போதும் ப்ரைமரை பயன்படுத்துங்கள். இந்த ப்ரைமர்கள் உங்கள் ஒப்பனையின் ஆயுட் காலத்தை நீட்டிக்க பெரிதும் உதவும். அத்துடன், ஒப்பனை பொருட்களில் உள்ள அமிலங்கள் உங்கள் சருமத்தியில் படியாதபடி பாதுகாக்கும்.
கையில் எப்போதும் ஒரு ப்ளோட்டிங் காகிதத்தை வைத்திருங்கள். இது உங்கள் முகத்தில் இருந்து வடியும் அளவுக்கு அதிகமான வியர்வை அல்லது எண்ணெய் பசையை துடைத்து எடுக்க உதவும். வெயில் காலங்களில் இவற்றை எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது.
ஒப்பனையின் போது பயன்படுத்தும் டோனர்கள் தேர்வு செய்யும் போது, ஆல்கஹால் இல்லாத டோனாராக பார்த்துக்கொள்வது நல்லது. இந்த டோனர்கள் உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை காப்பதோடு, சரும எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.
எண்ணெய் பசை வகை சருமம் கொண்டவர்கள் வாரம் 2 முறை சார்க்கோல் பேஸ்பேக் பயன்படுத்தலாம். இந்த பேஸ்பேக் சருமத்தின் இறந்த செல்களை அகற்றுவதோடு, சரும துளைகளில் மறைந்திருக்கும் மாசுக்களையும் வெளியேற்றுகிறது.
இரவு உறங்க செல்வதற்கு முன் உங்கள் முகத்தில் உள்ள ஒப்பனையை அகற்றுவது அவசியம். குறிப்பாக எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் இரவு தூங்க செல்வதற்கு முன் ஒப்பனைகளை முழுவதுமாக அகற்றுவது நல்லது. ஒப்பனையை அகற்ற கிளிசரின் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது.
Re: வெயிலால் உண்டாகும் கருமையை நீக்க தர்பூசணி ஃபேஸ் மாஸ்க்.
பயணத்தின் பின் ஏற்படும் முகக் கருமையை தவிர்க்க சில டிப்ஸ்..!
பயணம் என்று எடுத்துக்கொண்டால் காடு, மலை, வெயில், கடல், உப்புக்காற்று என்று எல்லாம் கலந்து தான். பயணம் குதூகலமாக கழித்துவிட்டு வீட்டிற்கு வந்து கண்ணாடியை பார்த்தால் ஒரு பெரிய வருத்தம் முகத்தை சூழ்ந்து கொள்ளும். காரணம் ஊர் சுற்றும்போது ஏற்படும் சரும பாதிப்புகள் தான்.
ஈரப்பதம், மாசுபாடுகள் அல்லது சூரிய ஒளியின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களால் தோல் வறண்டு, அரிப்பு, எரிச்சல், சிவப்பு, செதில்களாக அல்லது எதிர்பாராத சரும வெடிப்புகள், பிம்பிள்கள், தடிப்புகளைக் கூட உணரலாம். இதற்கெல்லாம் என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? நாங்கள் டிப்ஸ் தருகிறோம்.
உங்கள் சருமம் நன்கு செயல்படும் உங்கள் தினசரி தோல் பராமரிப்புப் பொருட்களில் குறைந்தது ஒன்று அல்லது இரண்டையாவது பேக் செய்யுங்கள். அவற்றில் பயண அளவிலான சின்ன சைஸ் பேக்குகளை வாங்கி உங்கள் பயண பையில் எப்போதும் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் சருமத்தை மிருதுவாக்க ஹைலூரோனிக் அமிலம்(hyaluronic acid), கோடுகளைக் குறைக்க வைட்டமின் சி, சருமத்தின் தெளிவை அதிகரிக்க செயல்படுத்தப்பட்ட கார்பன், நிறமாற்றத்தைக் குறைக்க சாலிசிலிக் அமிலம்(salicylic acid) போன்ற சில அத்தியாவசிய பொருட்களை உங்கள் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதே போல பயணிக்கும் போது, வெப்பம் காரணமாக, கனமான மற்றும் கிரீம் அடிப்படையிலான சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சருமத்தில் அதிக வியர்வைக்கு வழிவகுக்கும். ஜெல் அடிப்படையிலான சன்ஸ்கிரீனைத் தேர்வுசெய்யவும். அது லேசான நிலைத்தன்மையுடன் இருக்கும் மற்றும் சருமத்தில் அதிக ஈரப்பதத்தை விட்டுவிடாது.
அதிகப்படியான வியர்வை வறட்சிக்கு வழிவகுக்கும் என்பதால் பயணப் பையில் இருக்க வேண்டிய மற்றொரு பொருள், Face mist. கோடைகாலத்தில் வெயிலைத் தணிக்க வெள்ளரி பேஸ்மிஸ்ட், ரோஜா பேஸ்மிஸ்ட் ஆகியவை சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். பயணத்திட இடையே முகம் வறளும்போது விரைவான புத்துணர்ச்சிக்காக ஒரு நாளைக்கு 2-3 முறை ஸ்ப்ரே செய்துகொள்ளலாம்.
பயணத்தின் போது குளித்தவுடன், ஒலிவ் எண்ணை, தேங்காய் எண்ணை அல்லது ஏதாவது ஒரு மாய்ஸ்சுரைசர் போடுவது உங்கள் தோலை வறட்சியில் இருந்து பாதுகாப்பதுடன் மிருதுவாக பராமரிக்க உதவும்.
அதேபோல . இது முகத்தை சுத்தம் செய்வதுடன் பயணம் முழுக்க க்ளோ ஆக உதவும். சருமம் அதிகம் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளும் எளிய வழி இது.
Re: வெயிலால் உண்டாகும் கருமையை நீக்க தர்பூசணி ஃபேஸ் மாஸ்க்.
கோடையில் உதடு வெடிப்பை போக்க....
கொளுத்தும் கோடையில் வெப்பம் மற்றும் சூரிய ஒளி காரணமாக உதடுகள் வறண்டு போவதுடன், வெடிப்பும் ஏற்படக்கூடும். எனவே, உதடுகளிலுள்ள வறட்சியை நீக்கி அழகு தேவதையாக உலா வர சில டிப்ஸ்...
SPF உடன் ஈரப்பதமூட்டும் லிப் பாம்களை பயன்படுத்தலாம். தேன் மெழுகு, வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்ட லிப் பாம் தேந்தெடுக்க வேண்டும். இந்த பொருட்கள் உங்களின் உதடுகளை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
உலர்ந்த உதடுகள் மற்றும் சருமத்துக்கு ஈரப்பதத்தை வழங்குவதில் தேங்காய் எண்ணெய்க்கு முக்கிய இடம் உள்ளது. ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளன. இவை சருமத்துக்கு ஊட்டமளிப்பதுடன் ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. எனவே, தேங்காய் எண்ணெயை உதடுகளில் அவ்வப்போது தடவி, ஒரு சில நிமிடங்கள் கழித்து துடைத்து விடலாம்.
வெயில் காலத்தில் உடலில் நீரேற்றம் குறைய அதிக வாய்ப்புள்ளது. நீரிழப்பு வறட்சியை ஏற்படுத்துவதால், உதடுகளில் இது வெடிப்புக்கு வழிவகுக்கிறது. எனவே, உடலை நீரேற்றமாக வைத்திருக்க அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஓருசிலர் உதடுகளை அடிக்கடி நாக்கினால் நக்கி ஈரப்பதமாக்குகின்றனர். ஆனால், அப்படி செய்யும் போது உதடுகள் உலர்ந்து போகக்கூடும் என்பதால், இதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
வெளியே செல்லும் போது சூரிய ஒளியில் இருந்து உங்கள் முகம் மற்றும் உதடுகளுக்கு நிழல் கிடைக்க தொப்பி அல்லது முகமூடி போன்றவற்றை அணியலாம். காரமான மற்றும் அமில வகை உணவுகள் உதடுகளை எரிச்சலடையச் செய்து, அவை வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. எனவே, இதுபோன்ற உணவுகளை தவிர்க்கலாம்; இல்லாவிட்டால் குறைந்தளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Similar topics
» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
» அக்குள் கருமையை போக்க வழிகள்
» கழுத்து கருமையை போக்கணுமா? வீட்டுல பொருளிருக்கு!
» இயற்கையான ஃபேஸ் பேக்
» அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
» அக்குள் கருமையை போக்க வழிகள்
» கழுத்து கருமையை போக்கணுமா? வீட்டுல பொருளிருக்கு!
» இயற்கையான ஃபேஸ் பேக்
» அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|