Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
Page 1 of 1
ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
ஆயிரம் ஹைக்கூ !
கவிஞர் இரா. இரவி .!
நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 120.
மூன்றடிகளில் உலகை அளக்கும்
வாமன கவி படைக்கும் வித்தகர்
உள்ளத்தனையது உயர்வு
என்பதை ஓங்கி சொல்லிவருபவர்
அதுபோலவே தன்வாழ்க்கையை
பாங்குடன் அமைத்துக்கொண்ட செயல் வீரர்.
அதனால்தான் கல்லூரியில் கால்பதிக்காத
இவர் எழுதிய நூல்களை
இன்று பல்கலைக்கழகங்கள்
தன் மாணவர்களுக்கு
பாட நூலாக அறிவித்துள்ளது.
முற்போக்கு சிந்தனைகள்
வளர்க்கும் இவர் கவிதைகள்
காலத்தால் அழியா தரம் வாய்ந்தவை.
ஹைக்கூ திலகம்
என்ற அடைமொழியுடன்
மதுரை மண்ணிற்கு அடையாளமாகி போன
நம் கவிஞர்
தனது ஆயிரம் ஹைக்கூவில்
தமிழ் தொடங்கி
எழுச்சி மலர்ச்சி
புதுமை புரட்சி என
பல்வேறு தலைப்புகளில்
தன் கருத்து காவியத்தை
விதைத்துள்ளார்.
சொல்லவரும் விஷயத்தை சுற்றிவளைக்காது
மஹாகவி சொல்வாரே
மோதி மிதித்துவிடு பாப்பா என்று
அதுபோலவே தன் வார்த்தை சட்டைகளை வளைத்து சொடுக்கியுள்ளார்.
*" *தடுக்கி விழுந்ததும்*
*தமிழ் பேசினான்**
*அம்மா*
என தமிழ் மொழியை
மறுதலிப்பவர்களை சாடி
,*பல்லாயிரம் வயதாகியும்*
*இன்னும் இளமையாய்*
*தமிழ்*
என தமிழுக்கு பெருமை
சேர்த்துள்ளார்
முற்போக்கு சிந்தனைகளை
மெதுவாய் அடிமனதிலிருந்து
கிளறி எடுத்து தூசு தட்டுவதில் கெட்டிக்காரர்
இந்த வித்தக கவிஞர்...
*"தூணிலும் இருப்பார் துரும்பிலும்* *இருப்பார் சரி*
*பின் ஆலயங்கள் எதற்கு*
என்று சாடுவதோடு
*ஆறுகால பூஜை* *ஆலயத்தில் கடவுளுக்கு*
*பட்டினியில் மனிதன்*
என எடுத்துரைக்கும்போது
நமக்கும் என்னடா சாமி
என உள்ளபடியே கோபம் தான் வருகிறது.
*திருந்தாத மக்கள்*
*அமோக வசூல்*
*சாமியார் தரிசனம்*
என போலி சாமியார்களை தோலுரிக்கும் வேகமாகட்டும்
*அங்கீகரிக்கப்பட்ட*
*சூதாட்டம்*
*பங்குசந்தை*
என பங்குச்சந்தைக்கு
தன் எதிர்ப்பை சொல்லி
அங்கலாய்க்கும் பாணியாகட்டும் கவிஞரின் வரிகளில்
கனல் தெறிப்பது நிதர்சனம்.
தனது மனித நேய
கவிதைகளில்
முதியோர் இல்லங்கள்
வயதானவர்களின் அவலநிலையை கூற புகுகையில்
*குஞ்சுகள் மிதித்து*
*கோழிகள் காயம்*
*முதியோர் இல்லம்*
என முதியோர் நிலையை
நம் கண்முன்னே கொண்டு வருகிறார்.
*செடிவளர்த்தோம் கொடிவளர்த்தோம்*
*மனிதநேயம் ?*
என்ற கேள்விக்குறியுடன்
முடித்த கவிதை
கவிதையல்ல
பிரம்பு கொண்டு சுளீர் என அடித்த உணர்வு..
*ஊதிய உயர்வு*
*வறுமையில்வாடியதால்*
*சட்ட மன்ற* *உறுப்பினர்களுக்கு*
என தவறுகள் எங்கு கண்டாலும்
தவறாமல் வார்த்தை சாட்டைகள் கொண்டு
கசையடி கொடுக்கும் பணி
இவரது தனி பாணி.....
இவர் இயற்கையை நேசிக்கும் இதயத்துக்கு
சொந்தக்காரர் என்பதை
*நட்சத்திர கவிஞர்கள்*
*நிலவின் தலைமையில்*
*வானில் கவியரங்கம்*
என 3வரிகளில் விண்ணில் தோன்றும்
நிலவை முழுவதுமாய்
காட்சிப்படுத்தி
கவிதை படைத்த அழகு,
*ஒவ்வொரு நாளும்*
*ஒவ்வொரு மாதிரி*
*நிலவும் அவளும்*
என்று நிலவை ரசிக்கும்
நளினம் நம்மை வியக்க வைக்கிறது.
**பட்டுப்பூச்சிகளின்*
*அழுகுரல்கள்*
*பட்டுப்புடவையில்**
என்ற கவிதை பார்த்துவிட்டு
பட்டுசேலை கட்டவே
கூசுகிறது....
இது அவர் எழுத்துக்களுக்கு கிடைத்த வெற்றி
*வயலுக்கு உரமிட்டது*
*புற்களை மேய்ந்த ஆடு*
என்று பிரதி உபகாரம் செய்யும் பக்குவத்தை
சிறப்பாக சித்தரித்துள்ளார் கவிஞர்.
*காணிக்கை கேட்காத*
*கடவுள் அம்மா*
என அம்மாவை போற்றும் கவிஞர்
*
*மாதா பிதா குரு*
*ஒரேவடிவில்**
*மனைவி*
என தன் 3வரிகளையும்
சேர்த்து முழு மனதையும்
மனைவிக்கே எழுதி வைத்துள்ளார்.
*வியர்வை எழுதிய உன்னத* *கவிதை*
*நெல் மணிகள்* என
விவசாயிகளின்
பெருமை பேசும் பாங்கு
**சிரித்தான்* *பிச்சைக்காரன்*
*சாலையோர* *வியாபாரியிடம்* *கையேந்தும்** *காவல்துறை*
என காவலரை
கேலிசெய்யும் போங்கு.....
*மூடநம்பிக்கைகளை*
*முற்றுப்புள்ளியாக்கியது*
*ஈரோட்டு மை*
என்று பெரியாரை
நம் கண் முன்னே கொண்டுவரும் கவிஞரை
*மூடநம்பிக்கையை*
*முற்றுப்புள்ளி ஆக்கியது*
*இந்த மதுரை காரரின்*
*மை..* *ஏனெனில் இது*
*ஈரோட்டு முற்போக்கு* *சிந்தனைகளுடன்*
*இணைந்து வளர்ந்த மை*
என கவிஞரை பாராட்டவே தோன்றுகிறது
பொதுவாகவே கவிஞரின்
நூற்களை வாசிக்கும்
நான் அந்த தாக்கத்தில்
ஹைக்கூ எழுத தொடங்கிவிடுவது வழக்கம்.
அந்த அளவு எழுத்துக்களில்
புதுமை புரட்சி என புதுப்புது யுத்திகள் காட்டி மிரட்டிவிடுவார். ஐயா அவர்கள் வெற்றிப்பயணம்
மேலும் வளரும்...
நன்றி
கவிஞர் இரா. இரவி .!
நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 120.
மூன்றடிகளில் உலகை அளக்கும்
வாமன கவி படைக்கும் வித்தகர்
உள்ளத்தனையது உயர்வு
என்பதை ஓங்கி சொல்லிவருபவர்
அதுபோலவே தன்வாழ்க்கையை
பாங்குடன் அமைத்துக்கொண்ட செயல் வீரர்.
அதனால்தான் கல்லூரியில் கால்பதிக்காத
இவர் எழுதிய நூல்களை
இன்று பல்கலைக்கழகங்கள்
தன் மாணவர்களுக்கு
பாட நூலாக அறிவித்துள்ளது.
முற்போக்கு சிந்தனைகள்
வளர்க்கும் இவர் கவிதைகள்
காலத்தால் அழியா தரம் வாய்ந்தவை.
ஹைக்கூ திலகம்
என்ற அடைமொழியுடன்
மதுரை மண்ணிற்கு அடையாளமாகி போன
நம் கவிஞர்
தனது ஆயிரம் ஹைக்கூவில்
தமிழ் தொடங்கி
எழுச்சி மலர்ச்சி
புதுமை புரட்சி என
பல்வேறு தலைப்புகளில்
தன் கருத்து காவியத்தை
விதைத்துள்ளார்.
சொல்லவரும் விஷயத்தை சுற்றிவளைக்காது
மஹாகவி சொல்வாரே
மோதி மிதித்துவிடு பாப்பா என்று
அதுபோலவே தன் வார்த்தை சட்டைகளை வளைத்து சொடுக்கியுள்ளார்.
*" *தடுக்கி விழுந்ததும்*
*தமிழ் பேசினான்**
*அம்மா*
என தமிழ் மொழியை
மறுதலிப்பவர்களை சாடி
,*பல்லாயிரம் வயதாகியும்*
*இன்னும் இளமையாய்*
*தமிழ்*
என தமிழுக்கு பெருமை
சேர்த்துள்ளார்
முற்போக்கு சிந்தனைகளை
மெதுவாய் அடிமனதிலிருந்து
கிளறி எடுத்து தூசு தட்டுவதில் கெட்டிக்காரர்
இந்த வித்தக கவிஞர்...
*"தூணிலும் இருப்பார் துரும்பிலும்* *இருப்பார் சரி*
*பின் ஆலயங்கள் எதற்கு*
என்று சாடுவதோடு
*ஆறுகால பூஜை* *ஆலயத்தில் கடவுளுக்கு*
*பட்டினியில் மனிதன்*
என எடுத்துரைக்கும்போது
நமக்கும் என்னடா சாமி
என உள்ளபடியே கோபம் தான் வருகிறது.
*திருந்தாத மக்கள்*
*அமோக வசூல்*
*சாமியார் தரிசனம்*
என போலி சாமியார்களை தோலுரிக்கும் வேகமாகட்டும்
*அங்கீகரிக்கப்பட்ட*
*சூதாட்டம்*
*பங்குசந்தை*
என பங்குச்சந்தைக்கு
தன் எதிர்ப்பை சொல்லி
அங்கலாய்க்கும் பாணியாகட்டும் கவிஞரின் வரிகளில்
கனல் தெறிப்பது நிதர்சனம்.
தனது மனித நேய
கவிதைகளில்
முதியோர் இல்லங்கள்
வயதானவர்களின் அவலநிலையை கூற புகுகையில்
*குஞ்சுகள் மிதித்து*
*கோழிகள் காயம்*
*முதியோர் இல்லம்*
என முதியோர் நிலையை
நம் கண்முன்னே கொண்டு வருகிறார்.
*செடிவளர்த்தோம் கொடிவளர்த்தோம்*
*மனிதநேயம் ?*
என்ற கேள்விக்குறியுடன்
முடித்த கவிதை
கவிதையல்ல
பிரம்பு கொண்டு சுளீர் என அடித்த உணர்வு..
*ஊதிய உயர்வு*
*வறுமையில்வாடியதால்*
*சட்ட மன்ற* *உறுப்பினர்களுக்கு*
என தவறுகள் எங்கு கண்டாலும்
தவறாமல் வார்த்தை சாட்டைகள் கொண்டு
கசையடி கொடுக்கும் பணி
இவரது தனி பாணி.....
இவர் இயற்கையை நேசிக்கும் இதயத்துக்கு
சொந்தக்காரர் என்பதை
*நட்சத்திர கவிஞர்கள்*
*நிலவின் தலைமையில்*
*வானில் கவியரங்கம்*
என 3வரிகளில் விண்ணில் தோன்றும்
நிலவை முழுவதுமாய்
காட்சிப்படுத்தி
கவிதை படைத்த அழகு,
*ஒவ்வொரு நாளும்*
*ஒவ்வொரு மாதிரி*
*நிலவும் அவளும்*
என்று நிலவை ரசிக்கும்
நளினம் நம்மை வியக்க வைக்கிறது.
**பட்டுப்பூச்சிகளின்*
*அழுகுரல்கள்*
*பட்டுப்புடவையில்**
என்ற கவிதை பார்த்துவிட்டு
பட்டுசேலை கட்டவே
கூசுகிறது....
இது அவர் எழுத்துக்களுக்கு கிடைத்த வெற்றி
*வயலுக்கு உரமிட்டது*
*புற்களை மேய்ந்த ஆடு*
என்று பிரதி உபகாரம் செய்யும் பக்குவத்தை
சிறப்பாக சித்தரித்துள்ளார் கவிஞர்.
*காணிக்கை கேட்காத*
*கடவுள் அம்மா*
என அம்மாவை போற்றும் கவிஞர்
*
*மாதா பிதா குரு*
*ஒரேவடிவில்**
*மனைவி*
என தன் 3வரிகளையும்
சேர்த்து முழு மனதையும்
மனைவிக்கே எழுதி வைத்துள்ளார்.
*வியர்வை எழுதிய உன்னத* *கவிதை*
*நெல் மணிகள்* என
விவசாயிகளின்
பெருமை பேசும் பாங்கு
**சிரித்தான்* *பிச்சைக்காரன்*
*சாலையோர* *வியாபாரியிடம்* *கையேந்தும்** *காவல்துறை*
என காவலரை
கேலிசெய்யும் போங்கு.....
*மூடநம்பிக்கைகளை*
*முற்றுப்புள்ளியாக்கியது*
*ஈரோட்டு மை*
என்று பெரியாரை
நம் கண் முன்னே கொண்டுவரும் கவிஞரை
*மூடநம்பிக்கையை*
*முற்றுப்புள்ளி ஆக்கியது*
*இந்த மதுரை காரரின்*
*மை..* *ஏனெனில் இது*
*ஈரோட்டு முற்போக்கு* *சிந்தனைகளுடன்*
*இணைந்து வளர்ந்த மை*
என கவிஞரை பாராட்டவே தோன்றுகிறது
பொதுவாகவே கவிஞரின்
நூற்களை வாசிக்கும்
நான் அந்த தாக்கத்தில்
ஹைக்கூ எழுத தொடங்கிவிடுவது வழக்கம்.
அந்த அளவு எழுத்துக்களில்
புதுமை புரட்சி என புதுப்புது யுத்திகள் காட்டி மிரட்டிவிடுவார். ஐயா அவர்கள் வெற்றிப்பயணம்
மேலும் வளரும்...
நன்றி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கனவு மெய்ப்பட வேண்டும் ! நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ஆ. குமாரி லெட்சுமி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் : கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி *****
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
» விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் : கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி *****
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|