Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
2 posters
Page 1 of 1
ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
[You must be registered and logged in to see this image.]
ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி
அடிக்கடி, பயன்படுத்தப்பட்டு வருவது மேற்கண்ட தொடர்… வாழ்த்தும் பொருளில் தொடரை எளிமையாகப் பயன்படுத்திக் கொள்கிறோம். அப்படியானால் இத்தொடரின் பொருள் ஓரளவு நமக்குப் புரிந்திருக்கிறது.
இப்போது சிக்கல் என்னவென்றால் இந்த உவமைத்தொடரில் இடம் பெற்றிருக்கும் அருகு எனும் சொல்.. அப்படியே இருக்க வேண்டுமா? அல்லது அறுகு என இருப்பதுதான் சரியானதா? என்று கேட்டால் பலருக்கும் குழப்பம் ஏற்படும்.
அறுகு என்பதே சரியான சொல். அறுகம்புல்லைக் குறிப்பது அறுகு என்னும் சொல்தான்.
அருகு என்னும் சொல்லுக்கு வேறு பொருள்.. அருகி வருகிறது, அதாவது குறைந்து வருகிறது என்பதுதான் பொதுப்படையான பொருள். இந்தச் சொல் பயன்பாட்டை வாக்கியத்தில் கவனியுங்கள்.
‘ஆசிரியரை மதிக்கும் மாணவர் எண்ணிக்கை இக்காலத்தில் அருகி வருகிறது’ என்று சொல்கிறோம். அல்லவா?..இப்போது குறைந்து வருகிறது என்பதைக் குறிக்கிறது.
ஏதோ புதிய நண்பருடன் சிவகாசியிலிருந்து சாத்தூருக்கு இருசக்கர ஊர்திப் பயணம் போய்க் கொண்டிருக்கிறோம். “ஐயா சாத்தூருக்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது?” என்று கேட்கிறார். “தம்பி, அருகில்தான். மேட்டமலை வந்துவிட்டது. இதோ வந்து விட்டோம்.” என்று பதில் சொல்லும் இடத்தில் அந்த ஊருக்கான தொலைவு இப்போது குறைந்து கொண்டு இருக்கிறது. அந்த ஊரை நெருங்கி விட்டோம் என்பது பொருள்.
குடிப்பழக்கம் உள்ளவர் எண்ணிக்கை இப்போது மிகவும்’ பெருகி’ விட்டது.. என்றால் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது என்றுதானே பொருள். அருகுதல் என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல்தான் பெருகுதல். அருகி பெருகி உருகி…. என்னும் சொற்கள் ஒப்பு நோக்கத்தக்கன..
பெருகுதல் என்பது அளவில் மிகுதியையும் அருகுதல் என்பது அளவில் குறைவதையும் குறிக்கிறது என்றால் உருகுதல் என்பது… நிலை மாறி காணாமல் போவதையும் குறிக்கும். இரண்டு சொற்களும் வேறு வேறு நிலையைக் குறிக்கும் சொற்கள். மெழுகுவர்த்தி உருகிக் காணாமல் போய்விடுகிறது. பனிக்கட்டி உருகினால் நீராகுமே தவிர பனிக்கட்டி காணாமல் போய்விடும்.
சாதாரணமாக வீட்டில் வளரும் ஒரு செடியை அதனுடைய வளர்ச்சி விகிதத்தைச் சற்று குறைக்க வேண்டுமானால் கையில் அரிவாளைக் கொடுத்து இந்தச் செடியை கொஞ்சம் அருவி விடுங்கள்… என்று சொல்வர். அது அருவி.. இல்லை அருகி… அருகி எனும் சொல்லே, அருவி என மருவி இருக்கிறது. அருகி விடு என்றால், குறைத்து விடு என்பது பொருள். “என் அருகில் வா” என்று அழைத்தால் உனக்கும் எனக்குமான இடைவெளியில் அளவைக் குறைத்து விடு.
இன்னும் ஆழமாய்ப் பார்க்குமிடத்து, அருகு எனும் இச்சொல் நுணுக்கமான பொருள் வேறுபாட்டுடன் பயன்பட்டிருக்கிறது..
குறை, கிட்டு, நெருங்கு, கெடு என்னும் ஏவல் வினைப் பொருட்களில் அருகு எனும் சொல் வழங்கிவருகிறது. சுருங்குதல் கிட்டுதல், அணைதல் பக்கத்தில்… ஆங்கிலத்தில் border, edge, proximity, nearness, neighbourhood இச்சொற்களுக்குள் எவ்வித நுணுக்கமான பொருள் வேறுபாடு உண்டோ அந்த அந்த வேறுபாடுகளோடு கூடிய பொருட்களிலெல்லாம் அருகு எனும் சொல்லைப் பயன்படுத்தலாம். |
‘பருகு வன்ன அருகா நோக்கமொடு’… பொருநராற்றுப்படை… கெடு என்னும் பொருளில்… அருகுவித்து ஒருவரை அகற்றலின்.. கலித்தொகை… மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு.. பரிபாடல் அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும் பரிபாடல்.. பொருந்து ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து… நெடுநெல்வாடை. |
அறுகு என்னும் சொல் அறுகம் புல்லைக் குறித்ததாக இருக்கிறது. இச்சொல், ஆண் புலி, யானை, யாளி, அட்சதை என்னும் வேறு பொருள்களிலும் பயன்படுகிறது. |
இவை தவிர அறுகம்புல்லையும் குறிக்கிறது
.
ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரோடி… என்பதே முறையான தொடர்.
ஆலமரத்தின் விதை எத்துணை சிறிது என்பதை நாம் அறிவோம்.. ஆனால் அதிலிருந்து புறப்படும் ஆலமரம் உருவத்தில் மிகப்பெரிய மரமாக வளர்வதோடு ஆணிவேரை ஆழமாகப் பதித்து அசையாமல் நிலைத்து நிற்கும்… அதன் நிழலில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் இளைப்பாறலாம். ஆலமரத்தில் எண்ணற்ற பறவைகள் கூடுகட்டி வாழலாம்… அணில் போன்ற விலங்குகள் தங்கள் வாழிடமாகக் கொள்ளலாம்.. காக்கை போன்ற பறவைகள் விரும்பி உண்ணும் ஆலம்பழங்கள்..ஆலமரத்தைப் போல பலருக்கும் பயன்பட்டு நீங்கள் நிலைத்து வாழ வேண்டும் என்று ஒரு தனி மனிதரையோ குடும்பத்தையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ வாழ்த்த வேண்டும்..
சிறிய அளவில் ஒரே ஒரு அறையில் அமர்ந்துகொண்டு சிறிய அளவில் மருத்துவ சேவை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு மருத்துவமனை பின்னாளில் ஏராளமான படுக்கை வசதிகளோடு எல்லா விதமான நவீன கருவிகளோடு கூடிய உயர்ந்த சிறப்பு மருத்துவமனையாக வளர்வதில்லையா?
அடுத்தது அறுகு போல் வேரோடி… இதைச் சிலர் அருகுபோல் வேரூன்றி என்று எழுதுவது உண்டு…அஃது… பிழையானது…அறுகு தன்னுடைய வேரை நாலாபக்கமும் பரப்பிக் கொண்டே போய்… தொடர்ந்து படர்ந்து அடர்ந்து விடும் தன்மையைக் கொண்டது… அதைப்போல தனி மனிதராக இன்று புகழுக்குரிய இச்செயலைத் தொடங்கும் நீங்கள் விரைவில் குடும்பம், குழந்தைகள் ,வாரிசுகள் என்று கிளை விரித்து வேரோடி குலம் தழைத்து வாழ வேண்டும் என்பது பொருள்… ஒரு நிறுவனமானால், இன்று ஒரே ஒரு கிளையோடு தொடங்கும் இந்த நிறுவனம், எதிர்காலத்தில் உலகமெங்கும் கிளைபரப்பி தனித்துவம் பெற்றதாகப் புகழ் பெறுவதோடு மாந்தர் அனைவர்க்கும் பயன்பட வேண்டும் என்பது பொருள்.
குறிச்சொற்கள் [You must be registered and logged in to see this link.] |
தமிழ் முத்துமணி
Re: ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
வாசகர்கள் பார்வைக்கு வந்த அறுகும் அருகும்.
எது சரி எது தவறு என்று குழம்பாமல் இருக்க
அருகில் வந்த அருகு.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
எது சரி எது தவறு என்று குழம்பாமல் இருக்க
அருகில் வந்த அருகு.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ராதா பொருள் என்ன?
» கும்பாபிஷேகம் செய்வதன் பொருள் என்ன?
» பொருட்களின் மீது குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகங்களுக்கு என்ன பொருள்?
» இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?
» சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன?
» கும்பாபிஷேகம் செய்வதன் பொருள் என்ன?
» பொருட்களின் மீது குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகங்களுக்கு என்ன பொருள்?
» இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?
» சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|