ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு

2 posters

Go down

மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Empty மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு

Post by சிவா Sun Mar 19, 2023 9:23 pm

மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு TkfD4AV

நம்முடைய உணர்ச்சிகளையும், மற்றவர்கள் உணர்வதையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு செயல்படுவது ‘சிறந்த ஆளுமை பண்பாகும்’. அறிவுடன் சேர்ந்து, உணர்வு சார்ந்த நுண்ணறிவும் இருந்தால்தான் எதையும் தலைமை ஏற்று சிறப்பாக நடத்த முடியும்.

உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) என்பது தங்கள் சொந்த உணர்ச்சிகளை அறிந்துகொள்வது, மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது மற்றும் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சமூக ரீதியாக இணக்கமாக வாழ்வதாகும்.

வாழ்க்கையைச் சிறப்பாக வாழவும், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கவும், நேர்மறையான உறவுகளை உருவாக்கவும், நிம்மதியாக இருக்கவும் 'உணர்ச்சி நுண்ணறிவு' அவசியமானது.

எல்லோருக்கும் மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம், பொறாமை, அன்பு, பாசம், ஆசை, வெறுப்பு, விரக்தி, கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், எரிச்சல், சலிப்பு, அவநம்பிக்கை, தனிமை போன்ற பல்வேறு உணர்ச்சிகள் இருக்கும். அது அளவிற்கு மீறி வெளிப்படும்போது நம்மையும், நம் சுற்றத்தாரையும் பாதிக்கும்.

உணர்வுசார் நுண்ணறிவின் மூலம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், சூழலுக்கு ஏற்றவாறு செயல்படவும், பிரச்சினைகள் வராமல் தடுக்கவும் முடியும். முக்கியமாக, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்களை 'உணர்ச்சி நுண்ணறிவு' மூலம் எளிதாக கட்டுப்படுத்தலாம்.

செயல்பாட்டின் அடிப்படையில் நமது மூளையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று உணர்ச்சிகளை வைத்தே முடிவெடுக்கும் 'உணர்ச்சி மூளை'. மற்றொன்று எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கக்கூடிய 'ஆராய்ந்து பார்க்கும் மூளை'.

உணர்ச்சிவசப்படும்போது, 'உணர்ச்சி மூளை' மட்டும்தான் வேலை செய்யும். கோபத்தில் அல்லது சோகத்தில் எடுக்கும் முடிவுகள் தவறாக இருப்பதற்கு காரணம் இதுதான்.

நம்முடைய உணர்ச்சிகளையும், மற்றவர்கள் உணர்வதையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு செயல்படுவது 'சிறந்த ஆளுமை பண்பாகும்'. அறிவுடன் சேர்ந்து, உணர்வு சார்ந்த நுண்ணறிவும் இருந்தால்தான் எதையும் தலைமை ஏற்று சிறப்பாக நடத்த முடியும்.

உணர்வு சார் நுண்ணறிவை மேம்படுத்த, நீங்கள் அனைவரிடமும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்? என்பதை கவனியுங்கள். துக்கம், பயம் போன்ற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். தன்னம்பிக்கை ஊட்டும் விஷயங்களைப் பற்றி யோசிக்கவும், பேசவும் பழகுங்கள்.

கோபமாகவும், வருத்தமாகவும் இருக்கும்போது நீங்கள் ஒருவரிடம் பேசுவதற்கு முன்னால், ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளியிடுங்கள். பின்பு மனதுக்குள்ளே 1-ல் இருந்து 10 வரை மெதுவாக எண்ணுங்கள். இந்த நேரத்துக்குள் உங்கள் மனம் அமைதியாகி இருக்கும். சிந்தனையில் தெளிவு உண்டாகி இருக்கும். அவ்வாறு இல்லையெனில் சிறிது நேரம் ஒதுக்கிவிட்டு, நீங்கள் அமைதியான பிறகு செயல்படுங்கள்.

பதற்றமாகவும், கவலையாகவும் உணர்ந்தால், குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தைக் கழுவுங்கள். குளிர்ச்சியான சூழல் பதற்றத்தைக் குறைக்க உதவும்.

குழப்பமான மனநிலையில் இருக்கும் நேரங்களில் இயற்கையான சூழலுக்குச் செல்லுங்கள். ஆழ்ந்து சுவாசியுங்கள். அந்த சமயத்தில் உங்களுக்குப் பிடித்த அழகிய காட்சியை மனக்கண் முன்னே கொண்டு வாருங்கள். இது மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்களை நீக்கி, புதிய கண்ணோட்டத்துடன் ெசயல்பட உதவும்.

தினத்தந்தி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Empty Re: மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு

Post by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

"உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) என்பது தங்கள் சொந்த உணர்ச்சிகளை அறிந்துகொள்வது, மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது மற்றும் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சமூக ரீதியாக இணக்கமாக வாழ்வதாகும்."-
அண்மைக்கால அரசியற் சீர்கேடுகளுக்கு இந்த அறிவு இல்லாததே காரணம்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum