by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
சிறுநீர் கழிக்கும்போது வாடை... எதை உணர்த்துகிறது, சிகிச்சை அவசியமா?
சிறுநீர் கழிக்கும்போது வாடை... எதை உணர்த்துகிறது, சிகிச்சை அவசியமா?
சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் வரை வெளியேற்றும் சிறுநீரில், அந்த உணவின் வாடை வீசும். இந்த மாதிரியான வாடை பிரச்னைக்குரியதா...
சிறுநீர் கழிக்கும்போது வரும் வாடை எதை உணர்த்துகிறது? ஒவ்வொரு முறை ஒவ்வொருவித வாடை வருகிறது. சாப்பிடும் உணவுக்கும் சிறுநீர் வாடைக்கும் தொடர்பு உண்டா? சிறுநீரில் வாடை வந்தால் சிகிச்சை அவசியமா?
நாம் சாப்பிடுகிற திட உணவுகளும், தண்ணீர் உள்ளிட்ட திரவ உணவுகளும் செரிமானமாகி, கழிவுகள் மலம் மற்றும் சிறுநீரின் வழியேதான் வெளியேறும். அதனால் அவற்றில் வாடை வருவது இயல்புதான்.
நம்மூரைப் பொறுத்தவரை ஏசி அறைகளில் வேலை செய்தாலும் அவ்வப்போது எழுந்து சென்று இளைப்பாற திறந்தவெளிப் பகுதிகள் இருக்கும். அதுவே வெளிநாடுகளில் எல்லாமே ஏசி செய்யப்பட்ட சூழலாக இருக்கும். அங்கே வேலை பார்ப்பவர்களுக்கு சிறுநீரில், அவர்கள் சாப்பிட்ட உணவின் வாடையே வீசும்.
சாப்பிட்ட பிறகு ஒருமணி நேரம் வரை வெளியேற்றும் சிறுநீரில், அந்த உணவின் வாடை வீசுவது இயல்புதான். அதன் பிறகு அந்த வாடை நின்றுவிடும். இந்த மாதிரியான வாடை பிரச்னைக்குரியதல்ல.
அதுவே மோசமான துர்வாடை என உணர்ந்தால் அது தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். அப்படி வாடை வரும்போது மருத்துவரை அணுகினால் அவர் சிறுநீர்ப்பாதை தொற்றா என சந்தேகித்து அதற்கான டெஸ்ட்டை பரிந்துரைப்பார். தேவைப்பட்டால் யூரின் கல்ச்சர் டெஸ்ட்டும் பரிந்துரைக்கப்படும்.
சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்தவரை அவர்களின் சிறுநீரில் ஒருவித இனிப்பு வாடைகூட வீசும். அதை அலட்சியப்படுத்தவே கூடாது. அது 'டயாபட்டிக் கீட்டோஅசிடோசிஸ்'(Diabetic ketoacidosis) எனப்படும் மோசமான பாதிப்பாகக்கூட இருக்கலாம். ரத்தச் சர்க்கரை அளவுக்கதிகமானதன் அறிகுறியாகவும் அப்படி வாடை வீசலாம்.
எனவே நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது வருகிற வாடையின் தன்மை எப்படிப்பட்டது என்பதைப் பாருங்கள். உணவுடன் தொடர்புடையதா, சகித்துக்கொள்ள முடியாததா என பார்த்து, சந்தேகம் வந்தால் மருத்துவரை அணுகி, தேவையான பரிசோதனைகளைச் செய்து பாதிப்பு ஏதும் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சிறுநீர் கழிக்கும்போது வாடை... எதை உணர்த்துகிறது, சிகிச்சை அவசியமா?
பல பிரச்னைகளுக்கும் சிறுநீர்ப் பரிசோதனையைப் பரிந்துரைப்பது ஏன்?
சிறுநீரில் உள்ள புரத அளவை வைத்து சிறுநீரக பாதிப்புகள், நோய்கள் இருக்கின்றனவா எனக் கண்டறியலாம். சிறுநீரில் கீட்டோன்ஸ் அளவை வைத்து நீரிழிவு பாதிப்பின் தீவிரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
காய்ச்சல் தொடங்கி, பல பிரச்னைகளுக்கும் சிறுநீர்ப் பரிசோதனை செய்யச் சொல்கிறார்களே... அது அவ்வளவு முக்கியமானதா? மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வோர், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டுமா?
நம் உடலில் இதயத்துக்கு அடுத்து சிறுநீரகங்கள்தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சிறுநீரைப் பரிசோதிப்பதன் மூலம் உடலிலுள்ள பல பிரச்னைகளைக் கண்டுபிடிக்க முடியும். யூரின் ரொட்டீன் என்ற பரிசோதனையின் மூலம் தொற்று முதல் கற்கள் வரை பல விஷயங்களைக் கண்டுபிடிக்கலாம்.
சிறுநீர்ப் பரிசோதனையின் மூலம் நீரிழிவு நோயைக் கண்டுபிடிக்கலாம். சிறுநீரில் உள்ள புரத அளவை வைத்து சிறுநீரக பாதிப்புகள், சிறுநீரகங்களில் ஏதேனும் நோய்கள் இருக்கின்றனவா எனக் கண்டறியலாம். சிறுநீரில் கீட்டோன்ஸ் அளவை வைத்து நீரிழிவு பாதிப்பின் தீவிரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
யூரின் ரொட்டீன் எனப்படும் முதல்கட்ட சோதனையிலேயே இத்தனை விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும். அடுத்த கட்டமாக கிருமித்தொற்று உறுதியானால் கலச்சர் டெஸ்ட்டும், யூரிக் அமிலத்தின் அளவை வைத்து ஸ்கேனும் தேவையா என்பதை மருத்துவர் பரிந்துரைப்பார்.
சிறுநீரகம் தொடர்பான நோய்கள் சமீப காலமாக இள வயதினரிடமும் அதிகரித்து வருவதால் 35 ப்ளஸ் வயதிலிருந்தே வருடம் ஒருமுறை சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்வது நல்லது. குறிப்பாக, குடும்பப் பின்னணியில் யாருக்காவது சிநுநீரகக் கற்கள், புற்றுநோய், சிறுநீரகச் செயலிழப்பு போன்றவை இருந்தால் இன்னும் இள வயதிலிருந்தே டெஸ்ட் செய்து பார்க்கலாம்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சிறுநீர் கழிக்கும்போது வாடை... எதை உணர்த்துகிறது, சிகிச்சை அவசியமா?
![சிறுநீர் கழிக்கும்போது வாடை... எதை உணர்த்துகிறது, சிகிச்சை அவசியமா? 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![சிறுநீர் கழிக்கும்போது வாடை... எதை உணர்த்துகிறது, சிகிச்சை அவசியமா? 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: சிறுநீர் கழிக்கும்போது வாடை... எதை உணர்த்துகிறது, சிகிச்சை அவசியமா?
"சிறுநீரில் இரத்தம் வந்தால் புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்" - டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் |
சிறுநீரில் ரத்தம் என்பது அலட்சியப்படுத்தக்கூடாத ஒரு விஷயம். ஏனெனில் இது புற்றுநோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். சிறுநீரில் ரத்தம் என்பது ஏதேனும் ஒரு தொற்றால் நிகழலாம். சிறுநீரில் கற்கள் ஏற்படுவதால் நிகழலாம். ஏதாவது அடிபட்ட காரணத்தினாலோ, சிறுநீரில் கட்டி ஏற்பட்டதினாலோ நிகழலாம். சிறுநீரகத்தில் உள்ள பிரச்சனைகளாலும் சிறுநீரில் ரத்தம் வெளியேறலாம். இதை நாம் ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது. பீட்ரூட் போன்ற உணவுகளை நாம் சாப்பிடும்போது அதனால் சிறுநீரின் நிறம் சிறிது மாறலாம். ஆனால் அது ரத்தமல்ல. 50, 60 வயதுடைய பெண்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படும். சிறுநீரில் ரத்தம் வருமானால் அது சிறுநீர் கழிக்கும்போது மட்டுமே ஏற்படும்.
மாதவிடாய் காரணமாக ரத்தம் வெளியேறினால் உள்ளாடைகளில் கசிவு ஏற்பட்டிருக்கும். இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதிகம் புகைப்பிடிப்பவர்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சிறுநீரில் ரத்தம் வெளியேறும் பிரச்சனையோடு எங்களிடம் வந்தால் முதலில் முழுமையான உடல் பரிசோதனைகளை மேற்கொள்வோம். எதனால் இது ஏற்பட்டது என்பது பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்படும். தொற்றுகளினால் ஏற்பட்டிருந்தால் மருந்துகளின் மூலம் குணப்படுத்தி விடலாம். சில நேரங்களில் சிறுநீர்ப்பையையே அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதுபோன்று பல்வேறு வகையான சிகிச்சைகள் இருக்கின்றன.
எதனால் சிறுநீரில் ரத்தம் வருகிறது என்பதை முழுமையாக ஆராய்ந்த பிறகு தான் சிகிச்சையை முடிவு செய்வோம். காலம் தாழ்த்தி சிகிச்சைக்கு வருபவர்கள் இங்கு பலர் உண்டு. ஒருமுறை சிறுநீரில் ரத்தம் வந்தால் கூட உடனே மருத்துவரிடம் நீங்கள் வர வேண்டும். அதுவே உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
Re: சிறுநீர் கழிக்கும்போது வாடை... எதை உணர்த்துகிறது, சிகிச்சை அவசியமா?
அடிக்கடி சிறுநீர் வருவதை கட்டுப்படுத்த...
கார்ப்பு, கைப்புச்சுவை மற்றும் வெப்பத்தன்மை கொண்ட உணவுப் பொருட்களும், மருந்துப் பொருட்களும் சிறுநீரின் வெளியேற்றத்தைக் குறைப்பதுடன், ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் மட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. அதில் மஞ்சள் முன் நிற்கும் உணவுப் பொருளாகும்.
ஐந்து கிராம் மஞ்சள் தூளை இருநூறு மில்லி லிட்டர் கலந்து, கொதிக்கவிட்டு, நூறு மில்லியாக வற்றியதும் வடிகட்டி, இரவு உணவிற்கு முக்கால் மணி நேரம் முன்பாகப் பருகிவர, அடிக்கடி வெளியேறும் சிறுநீர் உபாதையானது நன்கு மட்டுப்படுத்துவதுடன், சர்க்கரையின் அளவை ரத்தத்திலும், சிறுநீரிலும் நன்றாகக் குறைக்கும்.
வெப்பத்தன்மையும், துவர்ப்புச் சுவையும் கொண்ட மருதாணி இலையாலும் நீங்கள் பயன்பெறலாம். சுமார் எட்டு முதல் பத்து இலைகளை கொதிக்கும் இருநூறு மில்லி வெந்நீரில் கலந்து, இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, சிறுநீர் அதிகம் கழிக்கும் உபாதையானது கட்டுப்படும்.
கேப்பை ராகி எனப்படும் கேழ்வரகு தசைகளுக்கு வலுவூட்டக் கூடிய உணவுப் பொருள் எளிதில் செரிக்காது. இதன் மேல் தோல் வயிற்றில் செருகிப் பேதியை உண்டாக்கும். அதனால் முளைகட்டிக் குத்திப் புடைத்தபின், இதன் மாவுக் கஞ்சி, களி, கூழ், தோசை, அடை முதலிய உணவாக்கிக் கொள்ளலாம். நீரிழிவு நோயில் அதிக அளவில் சிறுநீர் வெளியாவதைத் தடுக்கும்.
மூலிகைகளில் தொட்டாற்சுருங்கி எனும் பரந்துவிரிந்த வளரியல்பு கொண்ட தாவரம், துவர்ப்பு, கசப்பு ஆகிய சுவைகளைக் கொண்டது. வெப்பத் தன்மையானது இதன் இலை, மூல நோய், பவுத்திரப் புண்களைக் குணமாக்கும். உடலைத் தேற்றும். இலைச்சாறு புண்களைக் குணமாக்கும். அதிக அளவில் வெளியேறும் சிறுநீரை அடக்கும். முழுத் தாவரத்தை உலர்த்தி, தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, பத்து கிராம் அளவு காலையில் வெந்நீருடன் நாற்பத்து எட்டு நாட்கள் வரை சாப்பிட்டுவர நீரிழிவு நோயும் கட்டுப்படும்.
கைப்புச்சுவையும் வெப்பத்தன்மையும் கொண்ட சுண்டைக்காய் வற்றலுடன் , நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் இவற்றை சம எடையாக எடுத்து நன்கு காய வைத்து, வறுத்து, இடித்துத் தூள் செய்து கொள்ள வேண்டும்.
இதனை இரண்டு சிட்டிகை அளவு இருநூறு மில்லி மோருடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். காலை மாலை என இரு வேளைச் சாப்பிட, சிறுநீர் வெளியேற்றும் கட்டுப்படுவதுடன் நீர்ப்பேதியும் குணமாகிவிடும்.
சிறுகுறிஞ்சான் இலைகள், அத்துடன் சம எடை அளவு நாவற் கொட்டை பருப்பு இரண்டையும் தனித்தனியாக நிழலில் உலர்த்தி, தனித்தனியாக இடித்து, தூளாக்கி, சலித்து, ஒன்றாகக் கலந்துவைத்துக் கொண்டு பத்து கிராம் அளவு தூளை வாயிலிட்டு வெந்நீர் குடித்துவர வேண்டும். தொடர்ந்து காலை, மாலை வேலைகளில், நாற்பது நாட்கள் வரை சாப்பிடலாம்.
சந்திரபிரயாகுளிகை, வஸந்தகுசுமாகரம், ரஸம் மாத்திரை, நிரூர்யாதி குளிகை, சிலாசத்து பற்பம், அமருதமேஹாரி சூரணம், நிசாகதகாதி கஷாயம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் நல்ல பயனை அளிக்க வல்லவை.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கிராமத்து வாடை..!! [ லிமரைக்கூ .
» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
» பீர் வாடை வந்தால் கூலா பேசுவாரு..!!
» ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?
|
|