ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்குரு ஜக்கி வாசுதேவ்

2 posters

Go down

சத்குரு ஜக்கி வாசுதேவ் Empty சத்குரு ஜக்கி வாசுதேவ்

Post by சிவா Sun Feb 19, 2023 9:21 pm

சத்குரு ஜக்கி வாசுதேவ் 225px-Sadhguru-Jaggi-Vasudev

சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றி எமக்கு எந்த அபிப்பிராய பேதமுமில்லை, இந்துமதம் தன்னில் அடிக்கடி பல யோகியரை பல வழிகளில் உருவாக்கும் வல்லமை கொண்டது,

இங்கு சீர்திருத்தவாதிகளோ இல்லை புதுவழி காட்டுபவர்களோ காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை அடிப்படை ஆதாரத்தில் இருந்து வழுவாமல் சொல்பவர்களோ வந்து கொண்டேதான் இருப்பார்கள்,

அவர்கள் ஏதோ ஒருவடிவில் வருவார்கள், இந்துமதத்தின் சிறப்பே இப்படியானவர்கள் எவ்வகையில் வந்தாலும் அவர்களை ஏற்றும் கொள்ள்ளும்
குரு என்பதன் அடையாளம் வேறு, யோகியர் ஞானியர் மகரிஷியர் என்ற வரிசை வேறு எனப்தில் எப்பொழுதுமே ஒரு தெளிவு வேண்டும்,

குரு என்பவர் லவுகீகவாழ்வில் தாமரை இலையில் நீர் போல இருப்பார், அவர் போதனைகள் செய்வார் அதற்கான தட்சனையோ கூலியோ வாங்குவார் அதை கொண்டு அவரின் கடமையும் இன்னும் பல காரியங்களையும் செய்வார்,

யோகியர், ரிஷிகள், ஞானியர் என்பவர் வேறு அவர்கள் பட்டினத்தார் போல வேறுபாதை கொண்டவர்கள் அவர்கள் நோக்கமும் வழிபாடும் போதனையும் வேறு,

குரு என்பதிலும் பல வடிவம் உண்டு, காஞ்சி பெரியவர் ஒருவழியான குரு என்றால் இன்னும் லவுகீகத்தில் இருந்துகொண்டே போதித்த ராமகிருஷ்ண பரம்பஹம்சர் போன்றவர்கள் உண்டு,

#சத்குரு_ஜக்கி_வாசுதேவ் பற்றி எம்மால் ஒரு விஷயமே உறுதியாக கூறமுடியும்,

இந்த்மதம் அதற்கான ஆபத்த் எந்த வடிவில் வருமோ அந்த வடிவில் ஒருவரை உருவாக்கி தன்னை தற்காக்கும் ஆச்சரியமான மதம்,

அரிஸ்டாட்டில் எழும்பினால் அது சாணக்கியனை உருவாக்கும்,

அலெக்ஸாண்டர் எழும்பினால் அது சந்திரகுப்தனை உருவாக்கும்,

புத்தன் எழும்பினால் அது ஆதிசங்கரரை உருவாக்கும்,

சமணரும் பவுத்தரும் சாத்வீகமாக எழும்பினால் அது சம்பந்தரையும் அப்பர் சுவாமிகளையும் உருவாக்கும்,

ஒளரங்கசீப் வாளோடு எழும்பினால் அது வீரசிவாஜியினை உருவாக்கும்,

கிறிஸ்தவ போதகர்கள் பலர் எழும்பினால் அது விவேகானந்தரை உருவாக்கும்,

எதிரி எவ்வழியோ அவ்வழியில் தனக்குரிய காவலர்களை இந்துமதம் உருவாக்கும்,

தமிழகத்தில் கூட சினிமா திராவிட ஆபத்து இந்து எதிர்ப்பாக‌ வந்தபொழுது அது எம்ஜி ராமசந்திரன் என சினிமாவில் இருந்தே இந்துமத காவலனை உருவாக்கிற்று, அதை நம்பத்தான் வேண்டும்,

அப்படி இந்த மாறுபட்ட உலகில் ஒருமாதிரியான உலக தரத்தில் இந்துமதத்துக்கான ஆபத்து உருவாகும் பொழுது மாய தோற்றங்களில் பிரமாண்ட வேடங்களில் எதிரிகள் வரும்பொழுது அது சத்குரு ஜக்கி வாசுதேவ், பங்காரு அடிகள் போன்றோரை உருவாக்கும்,

( சர்சைகள் இருந்தாலும் நித்தியானந்தா சுவாமியும் இவ்வகைதான், அவர் மேல் யாரும் பாதிக்கபட்டதாக புகார் அளிக்கவில்லை, எந்த பெண்ணும் நேரடியாக வழக்கு தொடுக்கவுமில்லை,

அவர் சரியில்லாதவராக இருந்திருந்தால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அவர் ஆசிரமங்கள் தொடர்ந்து நடக்கவும் முடியாது
ஆக மக்களை வசபடுத்தும் ஒரு ஆன்மீகம் அவரிடம் இருப்பது நிஜம் அதை மறுக்கமுடியாது )

காலம் எப்படியோ அப்படித்தான் இந்துமதத்துக்கு காவலர்கள் வருவார்கள் இது வரலாறு, இவர்களால் மதமாற்றம் தடுக்கபடும் பாரத இந்துமத பெருமை உலகெல்லாம் காக்கபடும் அது நிஜம்,

#சத்குரு என வணங்கபடும் ஜக்கிவாசுதேவ் இல்லாவிடில் இன்னொருவரை அதே வடிவில் இந்துமதம் நிறுத்தத்தான் செய்யும்,

ஒரு ஆஸிரமத்துக்கு பாரத பிரதமரும் ஜனாதிபதியும் சும்மா வரமுடியாது, ஆயிரம் தகவல்களை உற்திபடுத்திய பின்புதான் அவர்கள் கால்வைப்பார்கள்,

இல்லையேல் அது அவர்களின் கட்சி அரசியல் எல்லாவற்றுக்குமான சர்ச்சையாக வந்துவிடும் ஆபத்தும் உண்டு,

அவ்வகையில் சத்குரு சர்ச்சைக்கு அப்பாற்பட்டவராகத்தான் இருக்கமுடியும் ஜனாதிபதியின் வருகை அதை சொல்கின்றது,

ஆம், காலம் எதுவோ அவ்வடிவில் இந்துதம் தன்னை மீட்டெடுக்கும், அக்காலமே இப்பொழுது ஜக்கிதேவினை அப்படி உருவாக்கியிருக்கின்றது, அதற்கு அவரும் சரியானவர் என தன்னை நிரூபித்துகொண்டும் இருக்கின்றார்,

இந்துமத பெருமையினை உலகறிய செய்யவேண்டும் என விரும்பிய ராமநாதபுர மன்னர் செய்தத்ம் இந்து தொண்டு, அவரால் அனுப்பபட்ட விவேகானந்தர் அமெரிக்காவில் செய்ததும் இந்து தொண்டு,

அவ்வகையில் #ஜக்கிவாசுதேவ் தான் உணர்ந்த இந்து ஆன்மீகத்தை ஏகபட்ட சிந்தனைமிக்க கேள்விகள் எழும் இந்த காலத்தில் இந்த தலைமுறைக்கும்  உலகுக்கும் விளக்கிகொண்டிருக்கின்றார், அவ்வகையில் அவர் செய்வது சரியான சேவை அதை மறுக்க முடியாது
"நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க கூடாது" என்றது இந்துமதம் அதையெல்லாம் நோக்கினால் இன்றுவரை அருணகிரி நாதரை ஏற்கமுடியாது, பட்டினத்தாரை ஏற்க முடியாது,

ஒன்றின் தொடக்கம் அல்ல அதன் முடிவே கவனிக்கதக்கது எனும் வகையில் அய்யா ஜத்குருமேல் சர்ச்சைகள் அவசியமற்றவை,

பிரம்ம ரிஷியார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சத்குரு ஜக்கி வாசுதேவ் Empty Re: சத்குரு ஜக்கி வாசுதேவ்

Post by T.N.Balasubramanian Sun Feb 19, 2023 9:36 pm

Code:
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க கூடாது" என்றது இந்துமதம் அதையெல்லாம் நோக்கினால் இன்றுவரை அருணகிரி நாதரை ஏற்கமுடியாது, பட்டினத்தாரை ஏற்க முடியாது,

மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்: :வணக்கம்:


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சத்குரு ஜக்கி வாசுதேவ் Empty Re: சத்குரு ஜக்கி வாசுதேவ்

Post by சிவா Sun Feb 19, 2023 9:42 pm

சத்குரு ஜக்கி வாசுதேவ் 40waeFb

இது வரையிலும் கோயில்களில் சிறிய அளவில் பூஜை, பாராயாணங்கள் என்று இருந்த சிவராத்திரி விழாவை உலக அளவில் பிரமாண்ட ஆன்மீக திருவிழாவாக மாற்றிய பெருமை சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களையே சாரும்.

கோவை என்றாலே குறிப்பிட்ட மார்க்கத்தினரின் குண்டு வெடிப்பும் , கல்வி சேவை செய்கிறேன் என்ற பெயரில் மலையை ஆக்கிரமித்து மத சேவை செய்யும் காருண்யாவுமே அடையாளம் என்றாகி விட்ட நிலையில் அகில உலகமும் திரும்பி பார்க்கும் வகையில் ஈஷாவையும் ஆதியோகியையும் மிகப்பெரும் அடையாளமாக்கியவர் .

ஆனால் மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் குறித்து ஆங்காங்கே சில சலசலப்புகள் எழுவதை பார்க்கமுடிகிறது.

என்னை பொறுத்த வரை ஈஷாவின் மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் குறை காண்பது அர்த்தம் அற்றது. மாற்று மதத்தினர் ஆயிரம் சொல்வார்கள், ஏனென்றால் பிழைப்பு போகிறதே என்ற அழுகை அது. ஆனால் இந்துக்களாகிய நாமும் சேர்ந்து கொண்டு வசை பாடுவது தவறு.
சிவராத்திரி விழாவில் ஆடாலாமா, பாடலாமா என்றால் நிச்சயம் ஆடலாம் பாடலாம்.

ஆதி காலம் தொட்டே தமிழ் கலாச்சாரத்திற்கும் நடனத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனென்றால், வேறு எந்த கலாச்சாரமும் நடனம் ஆடும் ஒருவரை கடவுளாக ஏற்று கொண்டது இல்லை. தமிழர்களாகிய நாம் தான் அவரை ‘நடராஜர்’ அதாவது ‘நடனங்களுக்கு அரசர்’ என அழைக்கிறோம். மேலும், அவருக்கென்று சிதம்பரத்தில் கோவிலும் கட்டியுள்ளோம்.

கிராமத்து சிறு கோயில்களின் கொடைவிழா முதல் ஆகம விதிகளின் படி திருவிழாகள் நடத்தப்படும் மிகப்பெரிய கோயில் திருவிழாக்கள் வரை வாத்தியங்களின் இசையும் பஜனைகளும் ஆடல் பாடல்களும் தானே அடி நாதம்.

ஊஞ்சல் சேவை என்கிறார்கள், அதுவும் ஒரு வகையான ஆனந்த நடனம் தானே. பூபல்லக்கு, அதுவும் அப்படியானதுதானே. சிறு தெய்வங்களுக்கு தாரை தப்பட்டை என்றால் பெரிய கோயில்களில் நாதஸ்வரமும் மிருதங்கமும். அந்தந்த பகுதி மக்களின் வாழ்வியலுக்கு ஏற்ப இவை மாறுபட்டாலும் அடிப்படை என்னவோ ஆடலும் பாடலும் தான்.

அதுமட்டுமின்றி, கூத்தன், ஞான கூத்தன்,சபேசன் அம்பலத்தான், தில்லையம்பலத்தான், அம்பலத்தரசன், பொன்னம்பலம் என நடனத்துடன் தொடர்புடைய பல பெயர்களை கொண்டுதானே சிவபெருமானை அழைக்கிறோம்.

இன்னும் சொல்லபோனால் இந்த பிரபஞ்சமே ஒரு வித நடனத்தில் தான் இயங்குகிறது. அறிவியலாளர்களே பிரபஞ்சதின் சரியான முறையான இயக்கத்தை காஸ்மிக் டான்ஸ் என்று பெயரிட்டுத்தான் அழைக்கின்றனர்.

மஹாசிவராத்திரியின் தலைவனான நடராஜரை கொண்டாடும் விழாவில் நடனம் ஆடாவது தவறு என்று எப்படி சொல்ல முடியும்.

நடனம் ஒரு அற்புதமான யோகம். கண்களை மூடி எண்ணங்களை ஒருமுகப்படுத்தி தியானித்து யோக நிலையை அடைவது எல்லோராலும் சாத்தியமற்றது.

ஆனால் மெய் மறந்த ஒரு நடனத்தின் மூலம் இந்த உலகத்தையே மறக்க முடியும். முறையாக ஆட வேண்டும் என்ற கட்டாயம் அல்ல.

எப்படி ஆடினாலும் நடனம் ஆடுபவருக்கு அற்புத உணர்வுகளை வழங்க வல்லது. நடனம் உடல் மீதான அனைத்து அடையாளங்களையும் மறக்க செய்யும்.

ஆண், பெண், ஜாதி, மதம், பதவி, அதிகாரம் என்ற எந்த ஒரு எண்ணமும் நடனம் ஆடுபவரின் மனதில் இருக்காது.நடனம் மட்டுமே முழு மனதையும் ஆக்கிரமித்து நிற்கும். தன்னை மறக்க செய்யும் இதுவும் ஒரு யோகம் தான் .

ஒரு பார்வையாளராக இருந்து நடனத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. ஆனால், அதை அனுபவித்து மட்டுமே உணர முடியும்.
இப்படி, யோக அறிவியலின் படியே , ஈஷா மஹா சிவராத்திரி விழா நடைபெறுகிறது.

அங்கு ஆடுப்பவர்கள் யாரும் மது போதையில் ஆடவில்லை. அரைகுறை ஆடைகளுடனோ, இல்லை அசிங்கமான அங்க அசைவுகளுடனோ ஆடவில்லை.முறையாக விரதம் இருந்தே செய்கின்றனர்.

இதை அசிங்கம் என்றோ, ஆபாசம் என்றோ கூறுபவர்கள் நடராஜரின் நடனத்தையும் ஆதியோகியாக அமர்ந்து அவர் தோற்றுவித்த யோக அறிவியலையும் புரிந்து கொள்ளாமல் அறியாமையில் ஆர்ப்பரிக்கின்றனர்.

பிற மதத்தவர்கள் எவரும் தங்கள் மதத்தின் குறைகளை பொதுவெளியில் விமர்சிப்பதில்லை. கிண்டல் கேலி செய்வதில்லை. ஆனால் நாம் மட்டும் ஏன்?

எனவே ஆதரிக்கவில்லை என்றாலும் தயவு செய்து அசிங்கபடுத்தாதீர்கள்...

நல்லினி @ முகநூல்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சத்குரு ஜக்கி வாசுதேவ் Empty Re: சத்குரு ஜக்கி வாசுதேவ்

Post by சிவா Mon Feb 20, 2023 9:18 pm

என் வாழ்க்கையில் முக்கியமானவர்..'' ஜக்கி வாசுதேவ் குறித்து நடிகை வர்ஷினி செளந்தரராஜன்



சத்குரு ஜக்கி வாசுதேவ் Varshini_soundararajan_telugu_actress_DP

சத்குரு ஜக்கி வாசுதேவ் குறித்து பிரபல நடிகை வர்ஷினி செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலர் விரும்பம் தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு திரையுலகில், 'சந்தமாமா கதலு' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் கிடைத்த வரவேற்பால் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்ற அவர், 'லவ்வர்ஸ்', 'கை ராஜா கை', 'ஸ்ரீ ராம ரக்‌ஷா' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் சின்னத் திரையில் கோலோச்சிய வர்ஷினி, பெல்லி கோலா என்ற குறுந்தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால், அதிக அளவிலான ரசிகளைப் பெற்றார்.

தெலுங்கு திரையுலகில் பணிபுரிந்து வரும் தமிழ்ப் பெண்ணான இவர், கோவையில் நடைபெற்ற மஹாசிவராத்திரி விழாவில் கலந்துகொண்டுள்ளார். அங்கு ஜக்கி வாசுதேவ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, கனவு நிஜமானது. அன்புள்ள சத்குரு உங்களைப் பார்ப்பதோடு மட்டும் அல்லாமல் தொட்டுப் பார்க்க வேண்டும் எனக் கனவு கண்டுள்ளேன். அந்தக் கனவை நிறைவேற்றியதற்கு நன்றி. என் வாழ்க்கையில் நீங்கள் மிகமுக்கிய பங்காற்றியுள்ளீர்கள். என் மீது காட்டிய உங்கள் அன்புக்கு நன்றி. ஹரஹர மகாதேவ் எனப் பதிவிட்டுள்ளார்.

வர்ஷினி செளந்தரராஜன் ஈஷா யோகா மைய புரமோஷன் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சத்குரு ஜக்கி வாசுதேவ் Empty Re: சத்குரு ஜக்கி வாசுதேவ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum