ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

Top posting users this week
ayyasamy ram
 தண்ணீர் துளிர்க்கும் அபூர்வ லிங்கம் Poll_c10 தண்ணீர் துளிர்க்கும் அபூர்வ லிங்கம் Poll_m10 தண்ணீர் துளிர்க்கும் அபூர்வ லிங்கம் Poll_c10 
heezulia
 தண்ணீர் துளிர்க்கும் அபூர்வ லிங்கம் Poll_c10 தண்ணீர் துளிர்க்கும் அபூர்வ லிங்கம் Poll_m10 தண்ணீர் துளிர்க்கும் அபூர்வ லிங்கம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் துளிர்க்கும் அபூர்வ லிங்கம்

Go down

 தண்ணீர் துளிர்க்கும் அபூர்வ லிங்கம் Empty தண்ணீர் துளிர்க்கும் அபூர்வ லிங்கம்

Post by சிவா Thu 16 Feb 2023 - 23:01


 தண்ணீர் துளிர்க்கும் அபூர்வ லிங்கம் Vikatan%2F2019-05%2Fc2da8717-cdba-4cc4-be57-1e89e925694a%2F2_1549865062.jpg?auto=format%2Ccompress&format=webp&dpr=1

‘கண்டனென் கற்பினுக்கணியை’ என்று சிரஞ்சீவி அனுமனால் போற்றப்பட்ட கற்பின் கனலாம் ஜானகிதேவி, அக்னிப் பிரவேசம் முடித்து, அயோத்தி நகர் திரும்பினார். மகாவிஷ்ணுவும் திருமகளும் மனித குலத்தில் பிறந்து, மனித இயல்புகளுக்குத் தங்களை ஒப்புவித்துக் கொண்டு வாழ்ந்தவர்கள். அதன் காரணமாகவே, எல்லோரும் சந்தேகத்துக்கு இடமின்றி வாழவேண்டும் என்பதை உணர்த்த நடந்த அற்புத லீலைதான் அக்னிப் பிரவேசம்.

அக்னியின் வெம்மை அன்னையைத் தகிக்கவில்லைதான். ஆனாலும், ராமபிரான் தன்னைச் சந்தேகித்தாரே என்ற நினைவு அன்னையின் மனதை கனலாகத் தகித்துக்கொண்டே இருந்தது. சீதையின் மனத்துயர் அறிந்து ராமபிரானும் வேதனையுற்றார். சீதையின் மனத்துயர் போக்க விரும்பிய ராமபிரான், தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீக்கி அருளிய ஈசனை தியானித்தபடி, புஷ்பக விமானத்தில் ஏறி தென்திசை நோக்கிப் பயணித்தார். அவர்களுடைய சோக நெருப்பானது புஷ்பக விமானத்தையும் சூடாக்கி, கனக்கத் தொடங்கியது.

துயர் கொண்டோருக்குத் துணை வரும் அந்த தீனதயாளன் உடனே வழிகாட்டினார். ஆம், கெடில நதிக்கரை அருகே ஒளிவீசும் ஒரு சிவலிங்கத்திருமேனியாக ஈசன் காட்சி தந்தார். புஷ்பக விமானம் தானாக இறங்கத் தொடங்கியது. மனதை அழுத்திய பாரத்தை இறக்கி வைக்க சீதாதேவி ஈசனைத் தொழுதார். ஆற்றின் அருகே குளிர்ந்தத் திருமேனியாக சோடச (பதினாறு பட்டைகள் ) லிங்கத்திருமேனியாக எழுந்தருளிய ஈசன், சீதாதேவியின் அனலைக் குளிர்வித்தார்.

நடந்தவை யாவுமே உலக நன்மைக்காக என்று எடுத்துரைத்தார். சீதாதேவி சீதளதேவியாக மாறி ராமபிரானோடு அயோத்தி நகர் திரும்பினாள். சீதாதேவியை குளிர்வித்து இன்ப வாழ்வு அருளிய ஈசன் அன்றிலிருந்து அங்கேயே அமர்ந்து சீதப்பட்டீஸ்வரர் என்று அருள்பாலித்தார். அந்த ஊரும் சீதப்பட்டீஸ்வரம் என்றானது.

 தண்ணீர் துளிர்க்கும் அபூர்வ லிங்கம் Vikatan%2F2019-05%2Fcc509e81-da26-49d3-9c6a-d19ff92bcc34%2F2a_1549865128.jpg?auto=format%2Ccompress&format=webp&dpr=1

ராமாயணக் காலத்தில் இருந்தே புகழ் பெற்று விளங்கிய இந்த சீதப்பட்டீஸ்வரம் என்ற ஊர் தற்போது சின்னஞ்சிறிய கிராமமாக அடையாளமின்றிக் காணப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் அரசூர் அருகே தற்போது தென்மங்கலம் என்றழைக்கப்படும் சீதப்பட்டீஸ்வரத்தில் குடிகொண்டுள்ள சீதப்பட்டீஸ்வரர் ஆலயத்தின் தற்போதைய நிலைமையைக் கண் கொண்டு பார்க்க இயலவில்லை என்று கேள்விப்பட்டோம். இனிமையான வாழ்வை அருளும் ஈசன், பொலிவிழந்த இடத்தில் இருக்கலாமா என்ற கேள்வியோடு புறப்பட்டோம்.

காண்பவர்களுக்குக் களிப்பை அளிக்கும் இந்த ஈசனின் ஆலயம் ஆளரவமற்றப் பாதையில் ஒடுங்கிக் காணப்படுகிறது. உள்ளே நுழையும்போதே இப்படிப் போகாதீர்கள்; அப்படிப் போகாதீர்கள் என ஏகப்பட்ட கெடுபிடிகள். ஆலயத்தின் பாதை வனத்துறைக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் இங்கு வரும் பக்தர்கள் நெருக்கடிக்குள்ளாகிறார்கள். ஒருவழியாக ஈசனின் ஆலயத்துக்குள் சென்றோம். நல்ல உள்ளங்களின் ஒத்துழைப்பால் ஆலயத்தில் சில திருப்பணிகள் நடைபெற்று வந்துள்ளதைக் காணமுடிந்தது. அது தற்போது நின்று போன காரணத்தால் பொலிவிழந்த நிலையில் ஆலயம் உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாமல், எங்கும் பாசிகள் படர்ந்து ஆங்காங்கே விரிசல்கள் விட்டு ஆலயம் பாழ்பட்டு நிற்கிறது.

எவ்வுயிர்க்கும் காவலாக நிற்கும் ஈசனின் திருக்கோயில் இந்த நிலையில் இருப்பதா என்று கண்கள் கலங்கின; மனம் சோகத்தால் கனத்தது. ஆகம விதிகளின்படி ஆலயத்தின் திசைகளுக்குரிய பரிவார தெய்வங்களான கணபதி, முருகர், சண்டேஸ்வரர், நவகிரகங்கள் காட்சி தருகின்றனர் . சீதாளேஸ்வரர் மனம் மகிழும் நாயகியாக அன்னை பார்வதி வீற்றிருக்கிறாள். அத்தனை தெய்வங்களும் ஒருங்கே இருந்தாலும், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைதான் மிக மிகக் குறைவாக உள்ளது.

 தண்ணீர் துளிர்க்கும் அபூர்வ லிங்கம் Vikatan%2F2019-05%2F0a90a09e-87ce-4cb4-aff1-21595e7984eb%2F2c_1549865161.jpg?auto=format%2Ccompress&format=webp&dpr=1

800 ஆண்டுகளுக்கு முந்தைய இங்குள்ள கல்வெட்டு ஒன்று ‘ஆற்றுத்தளி நாயனார்’ என்று இந்த ஈசனைக் குறிப்பிடுகிறது. இந்த ஈசன் பதினாறு பட்டைகளோடு ‘தகதக’வென்றுக் கருவறையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ஷோடச லிங்கம் கருவறையில் இருப்பது வெகு அபூர்வமானது என்கிறார்கள் ஊர் மக்கள்.

பதினாறு பட்டை லிங்கத்திருமேனியின் உச்சியில் ஒரு துளி பாலை விட்டால் அது பதினாறு பிரிவாகப் பிரிந்து திருமேனியெங்கும் பரவும் அழகே அலாதியானது. இந்த ஆலயத்தில் வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்கிறார்கள். குறிப்பாக வெப்பு நோய்கள் குணமாகும். மேலும் கணவன் - மனைவிக்கிடையே உண்டாகும் பூசல்கள் தீர்ந்து குடும்ப ஒற்றுமை மேலோங்கும். பிரிந்திருக்கும் உறவுகள் ஒன்று சேரும் என்கிறார்கள் ஆலய நிர்வாகிகள்.

ஆலயத்தின் உள்ளே அழகிய சிவ-சக்தி உற்சவ சிலைகள் காணப்படுகின்றன. கருவறை விமானத்தின் உட்புறம் அழகாகக் கட்டப்பட்டு சீதோஷ்ண நிலையைக் கட்டுப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. வெளியே கடுமையான வெயில் இருந்தபோதிலும் கருவறை சிவலிங்கத் திருமேனி சில்லென்று இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அதில் நீர் கசிந்தவாறே இருந்தது. ஆம், சீதளம் என்றால் குளிர்ச்சி என்றே பொருள். இந்த ஈசன் குளிர்ச்சியாக, எப்போதும் நீர் ஊறிய வண்ணமே இருப்பதால்தான் சீதப்பட்டீஸ்வரர் என்றும் சீதாளேஸ்வரர் என்றும் வணங்கப்படுகிறார் என்று கூறுகிறார்கள்.

 தண்ணீர் துளிர்க்கும் அபூர்வ லிங்கம் Vikatan%2F2019-05%2F12b280ff-45dd-4b41-b27d-a277a01742c3%2F2d_1549865180.jpg?auto=format%2Ccompress&format=webp&dpr=1

ராமரும் சீதையும் வழிபட்டது மட்டுமல்லாமல் இங்கு கௌதமர், வசிஷ்டர் உள்ளிட்ட ரிஷிகளும் தெய்வப் பசுக்களும் வழிபட்டுள்ளனர் என்கிறார்கள் ஊர் மக்கள். பழைமையான சிவலிங்கங்கள் இன்றும் இந்தப் பகுதியில் கிடைத்தவாறே உள்ளன. நாங்கள் சென்றபோது கூட அங்கிருந்த பெண்மணி ஒருவர், தங்கள் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்த போது ஆற்றில் ஒரு அழகிய சிவலிங்கம் கிடைத்ததாகக் கூறினார். ஓரடி உயரம் கொண்ட அந்த அழகிய லிங்கத்தை, தங்கள் வீட்டில் வைத்துப் பூஜிப்பதாகவும் கூறினார். இவை யாவும் ரிஷிகள் உருவாக்கிய லிங்கங்களாக இருக்கலாம் என்றும் கூறினார்கள்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆலயத்தை ஒட்டி நீர் நிலை ஒன்றும் அந்த நீரைச் சேந்தி வயலுக்கு அனுப்பச் சால் அமைப்பு ஒன்றும் இருந்துள்ளது. அந்த அமைப்பு உருண்டையானக் கல் ஒன்றுடன் இணைத்து வெகு காலம் வைத்திருந்தார்கள். அது ஒரு மாயக் கல் என்றும், எவர் அதை தூக்கிக் கொண்டுபோய் எங்குப் போட்டாலும் மீண்டும் அது ஆலயத்தின் அருகிலேயே வந்துவிடும் என்றும் கூறுகிறார்கள். உண்மையில் அந்தக் கல் அபூர்வமான லிங்கம் என்றும் அது ஓர் அரிய பொக்கிஷம் என்றும் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.

ஒருமுறை வடநாட்டு மாந்திரீகன் ஒருவன் இங்கு வந்தபோது அந்த லிங்கத்தைக் கண்டு அதில் இருந்த கல்வெட்டு வாக்கியங்களைப் படித்தான். அதில் முக்கண் தலையை பலி கொடுத்து, குடுமியைத் திருகி தனத்தைக் கொள்க’ என்று இருந்ததாம். புத்திசாலியான அந்த மாந்திரீகன் ஒரு தேங்காயை உடைத்து, சிவலிங்கத்தின் உச்சியைத் திருகி அதனுள் இருந்த வைர, வைடூரியங்களைக் கொண்டு சென்றானாம். அத்துடன் கோயிலின் சாந்நித்யம் குறைந்து போன தாக அந்த ஊர்ப் பெரியவர் ஒருவர் கதையாகச் சொன்னார்.

 தண்ணீர் துளிர்க்கும் அபூர்வ லிங்கம் Vikatan%2F2019-05%2F020093b7-be6c-4690-a725-0e614cd91266%2F2e_1549865213.jpg?auto=format%2Ccompress&format=webp&dpr=1

இன்னும் சிலரோ, ‘ஈசன் எந்த மந்திரக்கட்டுக்கும் கட்டுப்படாதவர். அவரா மாந்திரீகத்துக்குக் கட்டுப்படுவார்? இந்தப் பகுதியில் அடிக் கடி நடைபெற்ற போர்களால் தான், ஈசனின் ஆலயம் கவனிப்பாரின்றி போய்விட்டது’ என்கிறார்கள்.

எது எப்படியோ, அழகே உருவான, அபூர்வமான இந்த ஈசனின் ஆலயம் சிதைந்து விடக் கூடாது. அதைவிட இழிச்செயல் வேறெதுவும் இல்லை. கண்ணுக்கெதிரே ஒரு சிவாலயம் சிதைந்து போவது என்பது நம் கலாசாரத்துக்கு விடப்படும் சவால். அந்நியர்களின் ஆதிக்கம் வலுப்பெற்றிருந்த காலத்தில், நம் ஆன்மிகம், கலை, கலாசாரம் ஆகியவற்றின் நிலைக்களனாகத் திகழ்ந்த எண்ணற்ற ஆலயங்களைக் காப்பதற்காக ஆயிரம் ஆயிரம் உயிர்களைத் தியாகம் செய்த வரலாற்றை இந்த தேசம் முழுக்கக் கண்டிருக்கிறது.

நமது தொன்மையான அடையாளம் சிவவழிபாடு. அடையாளத்தை இழந்த இனம், நிச்சயம் மற்றவர்களின் ஆதிக்கத்தில் அவதியுறும். நம்முடைய அடையாளமான ஆலயங்களைப் புனரமைப்போம். அதில் அன்றாடம் பூஜைகளும் விழாக்களும் நடைபெறச் செய்வோம்.

புல் நுனியிலிருக்கும் பனித்துளியைப் போல இந்த வாழ்வு நிலையில்லாதது, எனவே வாழ்வு அழியுமுன் நல்லறங்கள் செய்து நாயகனைத் தொழுவோம். தோல் பையாகிய உடம்பிலிருந்து ஜீவனாகியக் கூத்தன் கிளம்பும் முன்னர் அறங்கள் செய்வோம். அன்பர்களே வசதியில் மேலான ஆலயங்களுக்கு மட்டுமே வாரி வழங்கி வழிபட்டு வருகிறீர்களே? ஒருவேளை விளக்கேற்றக்கூட வழியின்றிக் கிடக்கும் இதுபோன்ற ஆலயங்களையும் கொஞ்சம் கண்ணெடுத்துப் பார்க்கலாமே!

வரப்புயர கோன் உயரும் என்றால் வழிபாடு உயர வம்சம் உயரும்தானே? மெல்லிய இழைகளால் ஒரு சிலந்திகூட ஈசனுக்கு ஆலயம் எழுப்பிய புராணத்தைக் கண்டிருக்கிறோம். சிலந்திக்கு இருக்கும் வைராக்கியம் நமக்கு இல்லையா? இயன்றதைக் கொடுப்போம் ஈசனுக்கு. சீதைக்கு இரங்கிய சீராளன் நம் எல்லோரையும் காப்பான். திருவிளக்கிட்டாரை தெய்வம் அறியும்; திருப்பணிக்கு இட்டாரை தெய்வம் காக்கும். இது சத்தியமான உண்மை. நமது முன்னோர்கள் அமைத்த கற்றளி ஆலயங்களைப் போல இனி நம்மால் உருவாக்க முடியாது; இருப்பதையேனும் புனரமைத்து, பொலிவு குன்றாமல் காப்போம். அதற்கு எல்லோரும் பொருளுதவி செய்வோம்.

 தண்ணீர் துளிர்க்கும் அபூர்வ லிங்கம் Vikatan%2F2019-05%2F1cbb397c-1f00-456d-8270-e905d4c69f0c%2F2f_1549865236

‘பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.’



எல்லாச் சுமைகளையும் ஈசன் சுமக்கக் காத்திருக்கிறான். வீணே மனம் சஞ்சலம் கொள்ளாமல் அவன் தாள் பணிந்து அவனுக்கே ஆளாவோம்.

-மு. ஹரி காமராஜ் @ விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum