ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமலாம்பா தேவி காதல்!

2 posters

Go down

திருமலாம்பா தேவி காதல்! Empty திருமலாம்பா தேவி காதல்!

Post by சிவா Tue Feb 14, 2023 8:36 am


இந்திய திருநாட்டில் எத்தனையோ பேரரசுகள் தோன்றி வளர்ந்து செயற்கரிய செயல் பல செய்து பின்னர் மறைவுற்றன. அதில் ஒன்றுதான் #விஜய_நகரப்_பேரரசு. விஜய நகரப் பேரரசுகளில் மிகவும் புகழ் வாய்ந்தவர் கிருஷ்ண தேவராயர். அவருடைய சகோதரர் அச்சுத தேவராயர். இவருடைய மனைவிகளில் மிகவும் அன்புக்குரியவரும், நெஞ்சில் கலந்தவருமாகிய #திருமலாம்பா_தேவி தன்னுடைய தங்கை மூர்த்திமாம்பா தேவியை பெண் கொடுத்த வகையில் தஞ்சைக்கு தன் நாயகனுடன் வருகிறார்.

ஆம், தஞ்சை செவ்வப்ப நாயக்கரின் மனைவியே மூர்த்திமாம்பா. விஜய நகரத்திலிருந்து அச்சுத தேவராயருடன் தஞ்சை வந்தார். விஜய நகரத்தில் இருந்தபோது அச்சுத தேவராயர் வரதாம்பிகா என்பவரை திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வை தேவி திருமலாம்பா எழுதிய வரதாம்பிகா பரிணய சம்பூ என்ற நூலின் மூலம் அறியலாம். இந்நூல் வடமொழியில் எழுந்த சம்பூ காவியங்களில் மிகச்சிறந்த ஒன்றாகும்.

அச்சுத தேவராயரின் பட்டத்து அரசியான வரதாம்பிகை பற்றி எழுதிய நூலின் கடைசிப் பகுதியில் தன்னைப் பற்றியும், தன் அறிவு, ஆற்றல், திறமை பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளார். இதில் எந்த ஒன்றையும் பார்த்தாலோ, படித்தாலோ, கேட்டாலோ அது காவியமாகவோ, நாடகமாகவோ, கவிதையாகவோ எதுவாக இருந்தாலும் அது அப்படியே மனதில் பதித்துக் கொள்ளும் ஆற்றல் தனக்குள்ளது என்று கூறுகிறார். தான் பல துறைகளில் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், பல மொழிகள் தனக்கு தெரிவதாகவும் அதன் வாயிலாக தான் வெளிப்படுவதாகவும் கூறுகின்றார்.

இவை அனைத்தையும்விட தாம் அச்சுத தேவராயரின் மனதுக்கு இனியவளாகவும், காதலியாகவும் இருப்பதோடு அவரின் மனைவி என்பதையும் இந்நூலில் தெளிவுபட உரைக்கின்றார். மேலும் திருமலாம்பா தேவியின் கரங்கள் கமலம் போல சிவந்து இருப்பதற்குக் காரணம் புலவர்களுக்கு பரிசில்களை அள்ளி அள்ளித் தருவதாலும் பல மொழிகளில் எப்போதும் எழுதிக்கொண்டே இருப்பதாலும் இவ்வாறு சிவந்துள்ளது என்று கூறுகிறார்.

வாஜ்பேய யாகம், புண்டரீக யாகம், சர்வதோமுக யாகம் ஆகியவற்றைச் செய்த பெரியோர்களின் ஆசியை எப்போதும் பெற்றவர் என்றும், அதற்கெல்லாம் மேலாக அவருடைய பஞ்சமம் பாடும் குரலானது எப்போதும் குயிலைவிட இனிமையானதாகவும், வாணியின் வீணை ஒலிக்கு நிகரானதாகவும் இருந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன. இவரைப்பற்றி தஞ்சை அரசவைப் பெண் கவியான இராமபத்ராம்பா, அச்சுத தேவராயரின் மனம் கவர்ந்த தேவி திருமலாம்பா என்றும் இவள் அழகும், சிறப்பும் பொருந்தியவள் என்றும், நற்குணம் மிக்கவள் என்றும் கூறுகிறார்.

கி.பி. 1532 ஆம் ஆண்டு அச்சுத தேவராயர் தம் இரு மனைவியரோடும் மகவோடும் தஞ்சைக்கு வருகிறார். அப்போது வரும் வழியில் திருவரங்கத்தில் பல நாட்கள் தங்கியிருந்து அறச்செயல்கள் பல செய்தார். அப்போது திருமலாம்பா தாம் இயற்றிய பக்த சஞ்சீவி எனும் நிகழ்ச்சியை திருஅரங்கன் முன்பு வைணவர்கள் நடத்திக் கொள்வதற்காக நிலம் அளித்ததை கல்வெட்டு கூறுகிறது. அதே போன்று விஜய நகரத்து ஹம்பியில் உள்ள விட்டலா கோயில் கல்வெட்டு அச்சுத தேவராயர் கொடுத்த கொடை பற்றி கூறுகின்றது. இக்கல்வெட்டு அழகிய பாடல் வடிவில் வெட்டப்பட்டுள்ளது. இப்பாடலை இயற்றியவர் திருமலாம்பா என்ற குறிப்பும் காணப்படுகிறது. இப்பாடலின் வழி திருமலாம்பாவின் கவி புனையும் ஆற்றலையும், புலமையையும் அறிய முடிகிறது. திருவரங்கத்தில் அச்சுதராயர் மன்னர் துலாபார மகாதானம் அளித்த செய்தியினையும் திருமலாம்பா கவிதையாக வடித்துக் கொடுத்துள்ளார்.

தஞ்சையில் இவரது பெயரில் ஒரு பேட்டையும், அதனுள் ஒரு கோயிலையும் எழுப்பிய பெருமை இவருக்குண்டு. கி.பி. 1538 ஆம் ஆண்டு தஞ்சையை செவ்வப்ப நாயக்கர் ஆட்சி செய்த போது அக்கோயிலுக்கு மகா பிரதிஷ்டையும் செய்யப்பெற்றது. அக்கோயில் இராஜகோபால சாமி கோயிலாகும். கோயிலின் கர்ப்ப கிரகத்தில் காணும் செய்தியானது திருமலாம்பா தேவி தர்மமாக திருமலையம்மன் பேட்டை மதனகோபால பெருமாள் திருபிரதிஷ்டை செய்கையில் அச்சுத தேவராயர் அதிட்டானமாக கட்டளையிட்ட திருவுள்ளம் பட்டினப்படி என்ற ஆணை குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி இக்கோயில் தஞ்சை வடக்கு வீதியிலிருந்து எல்லையம்மன் கோயில் தெரு செல்லும் வழியில் மிகப்பெரிய இராஜகோபுரத்துடன் கருங்கற்கள் கொண்டு கட்டப்பெற்றுள்ளது. அழகிய கோயிலாக கட்டப்பெற்றுள்ள அப்பகுதி திருமலாம்பா பெயரில் திருமலையம்மன் பேட்டை என்றும், இவரது தருமமாக இக்கோயில் கட்டப்பெற்றுள்ளது என்றும் இரண்டு கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மேலும் இங்கு காணப்படும் கிரந்த கல்வெட்டு ஒன்று அச்சுத தேவராயரின் புகழைப் பாடுகிறது. பாடல் அமைப்பை ஒப்புநோக்கும் போது இப்பாடல் திருமலாம்பா எழுதியதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தஞ்சை - திருச்சி சாலையில் தற்போது சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் ஊர்ப்பகுதி திருமலை சமுத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் முந்தைய பெயர் திருமலையம்மன் சமுத்திரமாகும். அன்றைய காலகட்டத்தில் நீர்நிலைகளை ஏற்படுத்தும்போது மன்னரின் பெயரிலோ அல்லது மாதேவியரின் பெயரிலோ அமைப்பது வழக்காகும். அந்த வகையில் இவ்வூருக்கு இப்பெயர் ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம். தன் தேவியின் மீது மன்னர் கொண்டிருந்த அளவற்ற அன்பும், காதலும், அத்தேவியின் மீது கொண்ட ஈடுபாடும் அத்தேவியின் பெயரில் நீர்நிலையையும், ஒரு ஊரையும் ஏற்படுத்தியது. மன்னன் கொண்ட காதலால் தோற்றுவிக்கப்பட்ட மகத்தான கொடையே மேலே கண்ட கோயிலும், இவ்வூரும் என்றால் மிகையல்ல. இன்றும் கூட அந்த மன்னர், அந்த தேவி அதாவது அச்சுத தேவராயரையும், திருமலாம்பாவையும் வடக்கு வீதி எல்லையம்மன் கோயில் தெரு சந்திப்பில் உள்ள இராஜகோபால சாமி கோயிலில் காணலாம்.

தினமணி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருமலாம்பா தேவி காதல்! Empty Re: திருமலாம்பா தேவி காதல்!

Post by Dr.S.Soundarapandian Tue Feb 14, 2023 12:38 pm

திருமலாம்பா தேவி காதல்! 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum