ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை

Go down

சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Empty சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை

Post by சிவா Tue Feb 07, 2023 8:00 am



சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை Th-6_91

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் காட்டூர் ஆனந்தன் என்கிற  ஆனந்தன் (44). ரவுடியான  இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள்  பல்வேறு காவல்நிலையங்களில் உள்ளன. இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். காட்டூர் ஆனந்தன் தன்  குடும்பத்துடன் வலசையூரில் வசித்து வந்தார்.    

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) இரவு 9 மணியளவில் ஆனந்தன் தனது மனைவியிடம், காட்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் கிளம்பிச்சென்றார். அவருடன் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் (24) என்பவரும் சென்றார். உறவினர்களைச் சந்தித்துவிட்டு இரவு 10.30 மணியளவில், வலசையூர் திரும்பிக் கொண்டிருந்தார். காட்டூர் சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவரை வழிமறித்தது.  

இதைக்கண்டு மிரண்டு போன காட்டூர் ஆனந்தன், அந்த கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளை சாலையோர  பள்ளத்தில் இறக்கினார். அப்போது நிலை தடுமாறி அங்கிருந்த புதருக்குள் விழுந்தார். சுதாரித்து எழுந்த அவர், அங்குள்ள விவசாய நிலத்தின் வழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடினார். ஆனாலும் விடாமல் விரட்டிச்சென்ற கொலைகார கும்பல் அவரை அரிவாள், பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை  செய்தனர். 50 மீட்டர் தொலைவுக்கு அவரை விரட்டிச் சென்று கொன்றுள்ளனர். இதில் நிகழ்விடத்திலேயே காட்டூர் ஆனந்தன் ரத்த வெள்ளத்தில் பலியானார். உடன் சென்ற பிரபாகரனுக்கும் தாடையில் லேசான காயம் ஏற்பட்டது. காட்டூர் ஆனந்தன் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே கொலை கும்பல் அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளது.    

இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமண தாஸ் மற்றும் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றனர். மாவட்ட காவல்துறை எஸ்பி சிவக்குமார், வாழப்பாடி டிஎஸ்பி ஹரிசங்கரி ஆகியோரும் நிகழ்விடம் சென்று விசாரித்தனர். காயம் அடைந்த பிரபாகரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காட்டூர் ஆனந்தன் சடலம், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

காட்டூர் ஆனந்தன் கொல்லப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் வலசையூர், வீராணம், அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வலசையூர், அரூர் முதன்மைச் சாலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கொலை நடந்த இடம் மாவட்டக் காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும், கொலையுண்ட நபர் வசித்து வந்த இடம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட வலசையூர் பகுதி என்பதால் மாநகர காவல்துறை துணை ஆணையர் லாவண்யா தலைமையிலான  காவல்துறையினரும் நிகழ்விடம் சென்று விசாரித்தனர்.  காட்டூர் ஆனந்தன் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதால், அவருக்கு எதிரிகளும் அதிகம். அதனால் பழிக்குப்பழியாக  இந்தக்கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கொலை கும்பல், காட்டூர் ஆனந்தனின் நடவடிக்கைகளை பல நாள்களாக நோட்டமிட்டு வந்திருக்கலாம் என்றும், அதனாலேயே அவர் இரவு நேரத்தில் தனியாக வருவதை அறிந்து கொலை திட்டத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. காட்டூர் ஆனந்தன் ஆள் நடமாட்டம் இல்லாத சுடுகாடு அருகே வந்தபோது மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படைக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.  சம்பவத்தின் போது உடன் இருந்த ஆனந்தனின் கூட்டாளி பிரபாகரன் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ரவுடி காட்டூர் ஆனந்தன் கொலையுண்ட சம்பவம், வலசையூர், அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.  

நக்கீரன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரையில் மாமூல் கேட்ட பிரபல ரவுடி குத்தி கொலை
» பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது
» சேலத்தில் 6 பேர் வெட்டிக்கொலை சரண்அடைந்தவரின் மகன் சிக்கினார்: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை
» பிரபல ரவுடி பினு காவல் நிலையத்தில் சரணடைந்தார்...
» போலீசாரை தாக்கி தப்பியோடிய பிரபல ரவுடி சுட்டுக்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum