ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை

3 posters

Go down

விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை Empty விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை

Post by சிவா Mon Jan 30, 2023 12:32 pm

விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை Vishnu10
நீல நிற விஷ்ணு கரந்தை (எ) விஷ்ணு காந்தி. விஷ்ணு கிராந்தி, விஷ்ணு கிரந்தி.

வெள்ளை நிற மலர்களை உடைய விஷ்ணு கிராந்தி யை காண்பது மிக மிக அபூர்வம்.
விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை White_10

தாவரவியல் பெயர் -:

SPHOERANTHUS MIRTUS.

தாவரக்குடும்பம் -:

ASTERACEAE.

வேறு வகைகள் -:

1. SPHOERANTHUS SENEGACENSIS. 2. SPHOERANTHUS ANGOLENSIS. 3. SPHOERANTHUS HIRTUS.
4. SPHOERANTHUS POLYCEPHALUS.

வேறு பெயர்கள்

- விஸ்ணுகரந்தை. விஷ்ணு கிராந்தி, மொட்டப்பாப்பாத்தி, நாறும் கரந்தை என்பன. ஆங்கிலத்தில் EAST INDIAN GLOBE-THISTLE & RICE FIELD WEED.

பயன்படும் பாகங்கள் -:

 செடிமுழுதும்.

வளரியல்பு -:

கொட்டக்கரந்தை ஈரமான வளமான இடங்களில் வளரக்கூடியது. முக்கியமாக வயல்களில் நெல்லுடன் கழையாகவும் வரப்போரங்களிலும் வளரக்கூடியது.

இதன் தாயகம் ஆப்பிரிக்கா.

இது சுமார் 30-60 செ.மீ.உயரம் வளரக்கூடியது. பற்களுள்ள நறுமணமுடைய இலைகளை மாற்றடுக்கில் கொண்ட சிறு செடி. இது அதிக கிளைகளைக் கொண்டிருக்கும். தண்டு உருண்டையாக இருக்கும். இலையின் நீளம் 2-7 செ.மீ ம், அகலம் 1 – 1.5 செ.மீ. கொண்டது. பிரவுன் மற்றும் பச்சையாக இருக்கும். பூ தனியாக தண்டின் உச்சியில் குஞ்சம் போன்று சிறு பந்து போன்று உரண்டையான செந்நிறப் பூ கொத்தினை உடையது. பூ உருண்டையாக கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும். வெளிபக்கப்பூ பெண் பூக்கள் மத்தியில் நீண்டிருபது தன்மகரந்தசேர்க்கையைக் கொண்டது.

நவம்பர் முதல் மார்ச்சு வரை பூத்துக் காய்க்கும். பழம் வாசனையுடையது, குவிந்திருக்கும். நாட்பட்டால் வாசனை மறைந்து விடும்.

இத் தாவரம் படர் கொடி வகையைச் சார்ந்தது. இதன் இலை மற்றும் மலர்கள் மிகச் சிறியவை.இதன் மலர்கள் மூன்று நிறங்களில் காணப்படும் நீலம், வெள்ளை, மற்றும் செந்நிறம். பெரும்பாலும் நீல நிற மலர்களைக் கொண்ட செடியை அனைத்து பகுதிகளிலும் மிக எளிதாக காண முடிகிறது.


மருத்துவ குணங்கள்:



‘கொட்டைக் கரந்தைதனைக் கூசாம லுண்டவர்க்கு
வெட்டைதணியுமதி மேகம்போம் – துட்டச்
சொறிசிரங்கு வன்கரப்பான் றோன்றா மலப்பை
மறிமலமுந் தானிறங்கு மால்.’



கொட்டைக் கரந்தைக்கு வெள்ளை, ஓழுக்குப் பிரமேகம், சினைப்பு, கிரந்தி, கரப்பான் இவைகள் நீங்கும். வெளிவராமல் தங்கிய மலத்தைப் போக்கும்.

காய் விடுவதற்கு முன் பயன் படுத்துதல் அதிக பலன் தரும்.

விஷ்ணு கிராந்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இருமல்— இரைப்பு குணமாகும்.

விஷ்ணு கிராந்தி சமூலம் ( வேர், தண்டு, இலை, பூ அனைத்தும்) சுண்டைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.

விஷ்ணு கிராந்தி செடியை காயவைத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட்டு வர இருமல், சளி, உட் சூடு, காய்ச்சல் முதலியவை குணமாகும்.

விஷ்ணு கிராந்தி சமூலம் அரைத்து கொட்டைப் பாக்கு அளவு தயிரில் கலந்து கொடுக்க இரத்த பேதி, சீதபேதி குணமாகும். காரம், புளி அவ்வமயம் நீக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கு ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.

விஷ்ணு கிராந்தி செடியை அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் 40 நாட்களில் உடல் சூடு நீங்கி, கண் பிரகாசமாகி, சுவாசம் கட்டுப்படும்.. அதன் பிறகு 40 நாட்கள் தேன் கலந்து சாப்பிட யோகம் சித்தியாகும்.

விஷ்ணு கிராந்தி, ஓரிதழ் தாமரை, கீழா நெல்லி மூன்றையும் சம அளவு எடுத்து, 10 கிராம் எடை அளவு காலை, மதியம், இரவு உணவிற்கு முன் பாலுடன் அருந்தி வர நரம்புத்தளர்ச்சி, தூக்கத்தில் விந்து வெளியாதல், ஞாபக மறதி, உடல் சூட்டை குறைத்து உடல் பலம் பெற உதவுகிறது.

முழு செடியையும் நன்கு அரைத்து பத்து கிராம் அளவு ஒரு மண்டலம் சாப்பிட்டு வர கண்ட மாலை நோய் நீங்கும்.

செடியின் அனைத்து பகுதியையும், கண்டங்கத்திரி வேர், ஆடா தோடை, தூது வளை வகைக்கு முப்பது கிராம் சிதைத்து, ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து மூன்று வேளையும் 50 மில்லி வீதம் கொடுத்து வர எலும்புருக்கி நோய் தீரும்.

முழு தாவரத்தையும் ஐந்து கிராம் அளவு மைபோல் அரைத்து பாலில் கலந்து வடிகட்டி, மூன்று வேளையும் சாப்பிட்டு வர சீதபேதி, இரைப்பு, இருமல், ஈளை, காய்ச்சல், மேகம், எலும்புருக்கி, வாதம், பித்தம் நோய்கள் குணமாகும்.

விஷ்ணு கிராந்தி செடியின் அனைத்து பகுதியையும், கண்டங்கத்திரி வேர், பற்படாகம், தூதுவளை வகைக்கு 30 கிராம் சிதைத்து ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து மூன்று வேளைக்கு 50 மில்லி வீதம் கொடுத்து வர விடாத காய்ச்சலும் குணமாகும்.

கபவாதசுரம் என்ற வகையைச் சேர்ந்த டெய்கு காய்ச்சலுக்கு,  ஆரம்ப நிலையில் நிலவேம்புக் கசாயம் சிறந்தது. டெங்கு காய்ச்சலுக்கான வைரஸை அழிக்கும் தன்மை நிலவேம்புக்கு உண்டு. அதே நேரம் டெங்கு முழுமையாக தாக்கும் போது விஷ்ணுகிராந்தி வேர்-6, கீழாநெல்லி  வேர்-6, ஆடாதொடை இலை-8 ஆகிய மூலிகைனளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், சித்தரத்தை, தானிப்பச்சரிசி, கோஸ்டம், அதிமதுரம், அக்கரா பரங்கிப்பட்டை, கோரைக்கிழங்கு,  பற்பாடகம், சீந்தில்கொடி, நிலவேம்பு, பேய்குடல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும்  நாட்டுமருந்துக்கடைகளில் கிடைக்கின்றன.

இந்தப்பொடியை ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள மூலிகைகளுடன் சேர்த்து 4 லிட்டர் தண்ணீர் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு இதை ஒரு லிட்டராகச் சுண்டும் வரை காய்ச்சி வடிகட்டி தேவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்துக்  குடிக்கலாம்.

இந்தக் கஷாயத்தை பெரியவர்களுக்கு 100 மில்லி அல்லது சிறியவர்களுக்கு 50 அல்லது 25 மில்லி குழந்தைகளுக்கு 5 மில்லி  கொடுக்கலாம். தினமும் மூன்று வேளை எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால், டெங்கு மட்டுமல்ல, விடாத காய்ச்சலும் விலகி  ஓடும் என்கிறார்கள் சித்தமருத்துவர்கள்.


சித்தர் வரிகள்:



" போமென்ற வெள்ளை விஷ்ணு கரந்தை தன்னை

பிடுங்கி வந்து நிழலிலுலர்தா யுணர்த்தி கொண்டு

ஏமென்று இடித்து சூரணமே செய்து

எழிலான மண்டலம் தான் தேனில் உண்ணு

சாலமென்ற சாவுபொய்யாம் சதுர்முகவன் படைப்பு

தப்பியே சதாகோடி தரிந்திருக்கும்

காமென்ற கருவூரார் கொண்ட கற்பம்

காரணமாம் அடியாருக்கு கருதினாரே' ""



வெள்ளை விஷ்ணு கரந்தை சமூலமாக எடுத்து உலர்த்தி சூரணம் செய்து, ஒரு மண்டலம், அதாவது 48 நாள் காலை மற்றும் மாலை, தேனில் மூன்று விரல் அளவு சேர்த்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால் சாவு பொய்யாகும் என்றும், பிரம்மன் படைத்த விதியை மீறி சதாகோடி (நூறு கோடி) ஆண்டுகள் இருக்கலாம் என்றும் இது கருவூரார் உண்டு வந்த கற்பம் என்றும் போகர் கூறியுள்ளார்.


செல்வம் தரும் மூலிகை:



இந்த வெள்ளை விஷ்ணு கரந்தை மூலிகை தன ஆகர்ஷ்ணத்தை உண்டாக்கும்.இந்த மகாலட்சுமி தன ஆகர்ஷ்ண மூலிகை என்னும் வெள்ளை விஷ்ணு கரந்தை, அஷ்ட லட்சுமிகளை நம் இல்லத்தில் நிலைப்பெற வைக்கும் ஆற்றல் கொண்டது. எங்கேனும் காணக் கிடைத்தால் தவறாது எடுத்து வந்து வீட்டில் வளர்க்கவும்.

#விஷ்ணு_காந்தி #விஷ்ணு_கிராந்தி #விஷ்ணு_கிரந்தி #விஷ்ணுகிராந்தி #விஷ்ணு|கிரந்தி #விஷ்ணுகாந்தி #கொட்டக்கரந்தை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை Empty Re: விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை

Post by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:31 pm

நல்ல தகவல்கள்.

நாம் நாடுவது முழுதும் ஆங்கில ரசாயன மருந்துகளே.
அவைகள் உடல் உபாதைகளை மரக்கடிக்க செய்யுமே தவிர,
குணப்படுத்தாது . நாட்டு மருந்துகள் குணப்படுத்தும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை Empty Re: விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை

Post by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm

விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை 3838410834 ..... விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை 103459460 ...... விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை 1571444738 .. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை Empty Re: விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum