ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருந்து காத்திருந்து..!

Go down

காத்திருந்து காத்திருந்து..! Empty காத்திருந்து காத்திருந்து..!

Post by சிவா Sun Jan 24, 2010 4:17 am

மாணிக்கம் பூங்காவுக்கு வந்து அரைமணி ஆகியிருந்தது.

இடது கையை உயர்த்தி கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தான். அது நாலரை காட்டியது.

`நாலு மணிக்கே மல்லிகா வந்துவிடுவதாக சொல்லியிருந்தாள். தாமதத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?' என்ற கேள்வி மண்டையை

குடைந்தது.மாணிக்கம் முதலில் மல்லிகாவை சந்தித்தது இந்தப் பூங்காவில் தான். தன்னை மறந்து தனிமையில் இருக்கும் இந்த இடத்தில் தான் மல்லிகாவின் அழகில் தன்னை மறந்தான்.

முதல் சந்திப்பில் அவனாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவள் இதழ்க்கோடியில் ஒரு சிறு புன்னகை மட்டும் எட்டிப் பார்த்தது. அடுத்து வந்த நாட்களில் புன்னகை சிரிப்பாக மாறி, நட்பு வடிவில் நாலு வார்த்தை பேச வைத்தது.

கலகல பேர்வழியான மாணிக்கம் தினமும் ஒரு மணி நேரம் எதை எதையோ பேசி அவளை அவன்பால் ஈர்க்கச் செய்துவிட்டான்.

இன்றுதான் தன் காதலை சொல்ல இருந்தான்.

தன் காதலை ஏற்றுக் கொள்வாளா? இல்லை நிராகரித்து விடுவாளா? என்ற பயம் மனதில் ஓர் பக்கம் குடிகொண்டிருந்தாலும், `கம்பீரமான தோற்றத்தோடு நல்ல வேலையிலும் இருக்கும் தனக்கு என்ன குறைச்சல்? அவளுக்கு இதைவிட வேறு என்ன வேணும்?' என்று தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டு மல்லிகாவை எதிர்பார்த்து காத்திருந்தான்.

அதற்கு மேலும் அவனை காக்கவைக்காமல் மல்லிகா பூங்கா நுழைவுவாயிலில் கால் பதித்தாள்.

மல்லிகா மாணிக்கத்தை நெருங்க, நெருங்க அவள் முகம் பளிச்சென பிரகாசித்தது. சிவந்த நிறத்தோடு, அழகான தோற்றத்தில் அன்று அவன் கண்ணுக்கு தேவதையாகத் தெரிந்தாள்.

மாணிக்கத்துக்கு ஏற்ற ஜோடியாக அவளால் இருக்க முடியும். அவ்வளவு அழகாகவும், மங்களகரமாகவும் இருந்தாள். ஆனால் அவள் எதையோ பறிகொடுத்தவள் போல் இருந்தாள். சந்தோஷத்தை இழந்த நிலை அவள் முகத்தில் தெரிந்தது. அவன் அருகே வந்தவள் மவுனப் புன்னகையுடன் ``எப்ப வந்த மாணிக்கம்? வந்து ரொம்ப நேரமாச்சா?'' என்றாள்.

``ம்... வந்து அரைமணி நேரமாகுது...!''

``வீட்டுல கொஞ்சம் வேலை அதிகம். அதான் தாமதம்''

``அப்படியா?'' சின்னதாய் பதில் வார்த்தையை முடித்தான்.

மல்லிகா மாணிக்கத்தை உற்றுப் பார்த்துவிட்டு ``முகத்தில் சந்தோஷம் தெரியறாப்போல் இருக்கு''

``ஒண்ணுமில்லை, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.''

``பேசலாமே! நாம ஒரு மாசமா அதைத்தானே செஞ்சுக்கிட்டு இருக்கோம்''



சின்னப் புன்னகையோடு சிமெண்ட் மேஜை மேல் மாணிக்கம் பக்கத்தில் அமர்ந்து கூறினாள். மாணிக்கம் தன்னை சுதாரித்துக்கொண்டு "நான் நல்லா யோசித்து தான் முடிவெடுத்தேன்...'' என்று தயங்க...

``என்ன சொல்ல வர்றீங்க?''

``நீ ரொம்ப அழகா இருக்கே!''

``இத சொல்லத்தான் யோசனை செய்தீங்களா...''

``நான் என்ன சொல்ல வந்தன்னா...'' ராகம் இழுத்தபடி தயங்க, "மாணிக்கம், என்ன இது! திடீர்னு என்னாச்சு உங்களுக்கு? சொல்ல வந்ததை முழுசா சொல்லுங்க''

அவன் இருக்கையை விட்டு இரண்டடி நகர்ந்து எதிரில் இருந்த ரோஜா செடியில் இருந்த பூவின் இதழை வருடியபடி ``உன் விருப்பத்தோட உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு..''

அவள் சிறிது நேரம் மவுனமானாள்.

அவன் இதை எதிர்பார்க்கவில்லை. ரோஜா இதழை வருடியிருந்த அவன் விரல்களை ரோஜாச்செடியிலிருந்த முள் முத்தமிட, அவன் "ஸ்ஸ்ஸ்...!'' என்றான். விரலில் இருந்து சிவப்பு சிந்தியது.

``மாணிக்கம், ரோஜா பார்க்க அழகா இருக்கு! அத தொட்ட பிறகுதான் தெரியும், அதைச் சுற்றி முட்கள் இருப்பது. அதுபோலத்தான் என் வாழ்க்கையும். என்னப்பத்தி முழுசா தெரிஞ்சா இப்படி அவசரப்பட்டிருக்க மாட்டே!''

"உன் கடந்த காலம் பற்றி நான் தெரிஞ்சிக்க விரும்பல''

அவள் சற்று பிரமித்து நின்றாள். பிறகு தன்னை சுதாரித்துக் கொண்டு ``மாணிக்கம், உன் மனசுல இருந்த விஷயத்தை வெளிப்படையாக பேசிட்டே! நான் அது மாதிரி பேச முடியாது. நான் யோசிச்சு என் முடிவை நாளைக்கு சொல்றேன்'' என்றபடி அங்கிருந்து புறப்பட்டாள்.

``நல்ல பதிலா வரட்டும்'' என்று சொல்லி அனுப்பினான்.

இரவு மல்லிகாவுக்கு தூக்கமில்லை. யோசித்துப் பார்த்தாள்.

எந்த ஓர் பெண்ணும் மாணிக்கத்தை கட்டிக்கொள்ள விருப்பமில்லை என்று சொல்லமாட்டாள். ஆனால் அந்தத் தகுதி தனக்கு இல்லை என்பதை உணர்ந்திருந்தாள்.

அவள் ஏற்கனவே திருமணமானவள். கணவன் குடிகாரன். தினம் தினம் வீட்டுக்காரனோடு போராடுவதே அவள் வாழ்க்கை! இப்படி ஒரு புருஷனோடு வாழ்வதை விட மரணத்தை தழுவ நினைத்த நாட்கள் அதிகம்.

வேறு வழியில்லாமல் திருமணம் முடிந்த ஆறு மாதத்திலேயே கோர்ட்டுக்கு போனாள். சந்தோஷத்தை தவிர கஷ்டத்தையே அதிகம் சந்தித்தவளுக்கு, பூங்காவில் கிடைத்த வைரம் தான் இந்த மாணிக்கம். மனமாற்றத்துக்கு பசுமை நிறைந்த இயற்கைச் சூழலை நாடுவது அவள் வழக்கம். அப்போது தான் மாணிக்கம் பழக்கமானான். அவன் பேசிப்பேசி அவளுக்குள் புது உணர்வை ஏற்படுத்தினான். அவன் பேச்சில் கிடைத்த சின்ன சந்தோஷத்திற்காக அவனிடம் தொடர்ந்து பழகி வந்தாள்.

மாணிக்கம் சொன்னதை நினைத்து சந்தோஷமாக இருந்தாலும், மனம் உறுத்தலாகவே இருந்தது.

உண்மையை சொல்லிவிட்டால் அடுத்து அவன் எடுக்கும் எந்த முடிவுக்கும் அவள் தயாராக இருந்தாள். அதனால் மறுநாள் தன் கடந்த காலத்தை, அதாவது குடிகாரனுடன் வாழ்ந்து முடித்த கசந்த காலத்தை சுருக்கமாக ஒரு கடிதத்தில் தீட்டினாள். மறுநாள் பூங்காவில் காத்திருந்த மாணிக்கத்துக்கு பூங்கா வாசலில் எதிர்ப்பட்ட சிறுவனிடம் கடிதம் கொடுத்து மாணிக்கத்திடம் சேர்க்கச் செய்தாள்.

அடுத்த நாள், அதே நேரம், மல்லிகா பூங்காவில் வழக்கமான இடத்தில் இருந்தாள். மாணிக்கம்தான் வரவில்லை.

அன்று மட்டுமில்லை, அவள் காத்திருந்த அடுத்தடுத்த நாட்களிலும்!

'

***
நகலன்


காத்திருந்து காத்திருந்து..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum