ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி?

2 posters

Go down

உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Empty உருளைக்கிழங்கு – மருத்துவ பயன்கள்

Post by ayyasamy ram Fri Nov 18, 2022 9:58 am

உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Main-qimg-607942e08babd58c8fe93beade900399-lq
-
உருளைக் கிழங்கு ஓர் உன்னதமான ஊட்டச்சத்து மிக்க உணவு ஆகும். உருளைக் கிழங்கின் இலை இசிவு நோயை அகற்றக் கூடியது. மலத்தை இளக்கக் கூடியது, சிறந்த சிறுநீர்ப் பெருக்கி, சிறந்த நரம்பு வெப்பு அகற்றி உருளைக் கிழங்கை உணவாகக் கொள்வதால் உடல் நலம் பேணிக்காக்கப்படுகிறது.

உருளைக் கிழங்கால் உடல் எடை குறைகிறது. சர்க்கரை நோய்க்கும் துணை மருந்தாகின்றது. வயிற்றுக் கோளாறுகள் வயிற்றுப் புண்களைப் போக்கக் கூடியது. மலச்சிக்கலை மறையச் செய்வது. வெளிப்பூச்சாகவோ மேல்பற்றாகவோ பயன்படுத்துவதால் தீக்காயங்கள், நீர்க் கொப்புளங்கள், கணுக்கால்களில் உண்டான ஆறாத புண்கள், பாத வெடிப்புகள் ஆகியன குணமாகும்.

உருளைக் கிழங்கில் உள்ள “ஸ்டார்ச்” எனப்படும் மாவுச் சத்து குடலுக்கு இதம் தந்து மலச்சிக்கலை மறையச் செய்யும் நார்ச்சத்து போன்ற செயலை உடையது. இது மலத்தை உறையச் செய்கிறது. மலத்தை வெளித்தள்ள உதவுவதால் மலக்குடலில் ஏற்படும் புற்று நோய்க்கு தடை போடுகிறது. ரத்தத்தில் சேறும் கொழுப்புச் சத்தை “டிரைகிளிசனாட்ஸ்” என்னும் இதய ரத்த நாளங்களுக்கு ஊறு செய்யும் கொழுப்புச்சத்து சேர்வது தவிர்க்கப்பெறுகிறது.
-
பதிவிட்டவர்:முகில் மதி (தமிழ்-கோரா)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Empty உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி?

Post by ayyasamy ram Fri Nov 18, 2022 10:00 am


உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? LVmO153

* பச்சை உருளைக் கிழங்கை அரைத்து மேற்பற்றாகப் போடுவதால் தீக்காயங்கள், தீக் கொப்புளங்கள், பனிவெடிப்பு, பாத குதிக்காலில் தோன்றும் வெடிப்பு, புண்கள், கண் இமைகளின் கீழ்த்தோன்றும் வீக்கங்கள் ஆகியன குணமாகும்.

* பச்சை உருளைக் கிழங்கை தோலுடன் சிறுசிறு துண்டுகளாக்கி உடன் சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுத்து அதைக் கொண்டு தினமும் முகத்தைக் கழுவி வருவதால் முகம் பளபளப்படையும் முகச் சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் மறைந்து போகும். இளமையான தோற்றத்தையும் அது தரும்.

* பச்சை உருளைக் இரு துண்டுகளாக குறுக்கே வெட்டி அதன் சதைப் பகுதியை நெற்றிப் பொட்டுகளின் இருபுறமும் சற்று மென்மையாக அழுத்தித் தேய்ப்பதால் தலைவலி குணமாகும். குறிப்பாக மன உளைச்சலால் வருகின்ற தலைவலி தணியும்.

* உருளைக் கிழங்கைப் போதிய அளவு வில்லையாகத் துண்டித்து இரண்டு கண்களின் மேலேயும் வைத்துக் கொண்டு சிறிது நேரம் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருக்க கண் சிவப்பு, கண் எரிச்சல் கண்களில் ஏற்படும் சோர்வு காணமற் போகும்.

* பாலுள்ள, பிசுபிசுப்பான காய்கறிகளைக் கையாள்வதாலோ வேறு ஏதேனும் காரணங்களால் கைகளில் பிசுபிசுப்பு ஏற்பட்ட நிலையில் உருளைக் கிழங்கு பசையை கைகளில் இட்டுத் தேய்த்துக் கழுவ பிசுபிசுப்புத் தன்மை பறந்து போகும்.

* பழமையான நீண்டநாட்களாகப் பயன்படுத்தாத காலணிகளின் மீது பச்சை உருளைக் கிழங்கை வெட்டி காலணிகளின் மீது சிறிது நேரம் தேய்த்து வைத்திருந்து பின் வழக்கம் போல பாலிஷ்போட புதியன போல பொலிவு பெறும்.

* வெள்ளிப் பாத்திரங்கள் கறுத்துப்போவது என்பது இயற்கை. உருளைக்கிழங்கை நீரில் இட்டு கொதிக்க வைத்து எடுத்த நீரை ஆற வைத்து கறுத்த வெள்ளிப் பொருட்களை ஒருமணி நேரம் அந்த நீரில் ஊற வைத்து எடுக்க பளபளப்பாக விளங்கும்.

* வயிற்றில் சுரக்கும் அமிலம் இரவு நேரத்தில் நம் தூக்கத்தைக் கெடுக்கக் கூடியதாக இருக்கும். வயிற்றில் எரிச்சல், வயிற்று உப்பிசம் உடையவர்கள் நன்கு வேகவைத்து மசித்து ஒரு உருளைக் கிழங்கைச் சூடான பாலுடன் சேர்த்து பருகுவதால் அமிலச்சுரப்பு மட்டுப்பட்டு தூக்கம் அமைதியான உணர்வு உண்டாகும்.

* உருளையில் மிகுந்துள்ள சத்துக்களோடு “டேனின்ஸ்”, ஃப்ளேவனாய்ட்ஸ்”, மற்றும் “ஆல்கலாய்ட்ஸ்” ஆகியன அடங்கியுள்ளன. இவற்றில் “டேனின்ஸ்” என்னும் சத்துப் பொருள் வற்ற வைக்கும் தன்மை உடையது. இதனால் வயிற்றுப் போக்கு தவிர்க்கப்படுவதோடு குணப்படுத்தவும் இயலுகிறது.

* சமீபகால ஆய்வுகள் மூலம் பச்சை உருளைக் கிழங்கின் சாற்றை பருகுவதன் மூலமும் உருளைக் கிழங்கினை வேகவைத்த நீரைப் பருகுவதன் மூலமும் மூட்டு வலிகள், வாத வீக்கம் ஆகியன குணமாகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

உருளைக் கிழங்கு சாறு, உருளைக் கிழங்கு வேக வைத்த நீர் பருகுவதால் அதில் பொதிந்திருக்கும் பொட்டாசியம், “சல்பர்”, “பாஸ்பரஸ்”, குளோரைட் ஆகியனவும் “விட்டமின் சி” சத்தும் “என்ஸைம்கள்” என்னும் வேதிப் பொருள்களும் தோலுக்கு ஆரோக்கியம் தருவதோடு மிக்க பொலிவையும் பளபளப்பையும் உண்டாக்குகிறது.

மேல்பூச்சாக பூசுவதால் தோலின் இறந்த திசுக்களை அகற்றி விட்டு புதிய திசுக்களை வளரச் செய்யும் உரமாகிறது. பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவையும் காணாமல் போகின்றன.

பதிவிட்டவர்:முகில் மதி (தமிழ்-கோரா)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Empty Re: உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி?

Post by krishnaamma Fri Nov 18, 2022 11:11 am

இரண்டு திரிகளையும் இணைத்துவிட்டேன் அண்ணா...புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Empty Re: உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி?

Post by ayyasamy ram Fri Nov 18, 2022 12:14 pm

உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Empty Re: உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum