Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணரை பற்றி ஓசோ
Page 1 of 1
கிருஷ்ணரை பற்றி ஓசோ
-
கிருஷ்ணரை பற்றி ஓசோ Main-qimg-abe55c1bb398392e796c81c5cc6ea49c-lq
-
கிருஷ்ணன் முற்றிலும் யாரோடும் ஒப்பிட முடியாதவன்;
மிகவும் வித்தியாசமானவன்.முதலாவதாக, கிருஷ்ணன்
மிகப்புராதன காலத்தவனாக இருந்தாலும்,
அவன் எதிர்காலத்திற்கும் சொந்தமானவனாக, உண்மையான
எதிர்காலத்தவனாக இருப்பதில்தான், அவனுடைய தனித்
தன்மையே அடங்கி இருக்கின்றது.
மனிதன், இனிமேல்தான் அந்த உயரத்திற்கு வளர வேண்டும்.
அங்கேதான், அவன் கிருஷ்ணனின் சம காலத்தவன் ஆக முடியும்.
கண்ணன் இன்னும் நம் புரிந்து கொள்ளுதலுக்கு அப்பாற்
பட்டவனாகத்தான் இருக்கிறான்
நம்முடைய முழு வரலாற்றிலும், பரிபூரண உயரத்தையும்,
ஆழத்தையும் எட்டிய ஒரே ஒரு மாமனிதன் கிருஷ்ணன்தான்.
இருந்தும்கூட, அவன் அப்படியொன்றும் இறுக்கமானவனாகவோ,
சோகமானவனாகவோ, கண்ணீர் சிந்துகின்றவனாகவோ இல்லை.
பெரும்பாலும், ஆன்மீகவாதிகளின் பிரதான குணம்
என்னவென்றால், வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்றோடிப்
போனவர் போலவும், வாழ்க்கையை விட்டு விலகிப் போனவர்
போலவும், அவர், மந்தமானவராகவும், இறுக்கமானவராகவும்,
துக்கமுடையவராகவும் காணப்படுவார்.
அப்படிப்பட்ட நீண்ட ஞானிகளின் வரிசையில் கிருஷ்ணன் மட்டுமே
ஆடியபடியும், பாடியபடியும், சிரித்தபடியும் வருகிறான்.
ஆனந்தமாகச் சிரிக்கும் மதம், வாழ்க்கையை ஒப்புக் கொள்ளுகிற
மதம், அதன் முழுப் பரிமாணத்தோடு இனிமேல்தான் பிறக்க
வேண்டும்... அப்படி பிறந்த முதல் மனிதன்
கிருஷ்ணன்..
--
![கிருஷ்ணரை பற்றி ஓசோ Vikatan%2F2019-05%2F2bd79586-8211-4091-ac59-c7565468f33b%2F77232_thumb.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1](https://gumlet.vikatan.com/vikatan%2F2019-05%2F2bd79586-8211-4091-ac59-c7565468f33b%2F77232_thumb.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1.0)
-
இன்று வரை, ஒவ்வொரு மதமும் வாழ்க்கையை இரண்டு பாகமாகப்
பிரித்து வைத்திருக்கிறது. ஒன்றை ஏற்றுக் கொள்கிறது; மற்றதை
மறுக்கிறது. ஆனால், கிருஷ்ணன் மட்டுமே வாழ்க்கையை
முழுமையாக ஏற்றுக் கொள்கிறான்.
இவ்வாறு வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொள்வதன் மூலம்தான்
கிருஷ்ணனின் முழுப்பலனையும் பெற முடியும். அதனால்தான், இந்திய
நாடு கிருஷ்ணனைப் பூரணமான கடவுள் அவதாரமாகப் போற்றுகிறது
நாம் அனுபவிக்கும் துயரங்கள், எதிர்மறைத்தன்மை, அழுத்தப்பட்ட
உணர்வுகள், நிபந்தனைகள் என்னும் பெரிய பாலைவனத்தில், ஆடிப்பாடி
ஆனந்தப்படும் ஒரு சிறிய பாலைவனச் சோலையாக அவன் திகழ்கிறான்
இன்று வரை, மனித மனம், வாழ்க்கையைத் துண்டு துணுக்காகவே
பார்த்துப் பழகி விட்டது; அதை தர்க்கத்திற்குரியதாகவும்
(முரண்பட்டதாகவும்) பார்க்கிறது.
ஆன்மீகவாதி உடலை மறுக்கிறான்; உயிரை மதிக்கிறான். இதில் பரிதாபம்
என்னவென்றால், அவன் தன் உடலையும், உயிரையும் இரு கூறாக்கி,
இவற்றிடையே மோதலை உருவாக்கி விடுகிறான்.
இந்த உலகை மறுக்கிறான். இன்னொரு உலகை ஏற்கிறான். இப்படி
இரண்டிற்கும் இடையில் ஒரு பகைமையை ஏற்படுத்தி விடுகிறான்.
நாம், நம் உடலை மறுத்தால் நம் வாழ்க்கை, இயல்பாகவே துக்கமும்,
துன்பமும் நிறைந்ததாக மாறி விடும். ஏனென்றால்,
நம்முடைய வாழ்க்கையின் சகல சத்தும் சாரமுமாக இருப்பவை,
உடல் சார்ந்த ஆரோக்கியமும், உத்வேகமும், நுண் உணர்வுகளும், அழகும்,
சங்கீதமும்தான்.
ஆகவே, உடலை வெறுத்து ஒதுக்கும் ஒரு மதம், ரத்தசோகை பிடித்ததாகவும்,
நோய்ப்பட்டதாகவும்தான் இருக்க முடியும்...
இதனால்கிருஷ்ணனுக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது.இறந்த கால
மதங்களுக்கும், எதிர்கால மதங்களுக்கும் நடுவே
ஒருபெரிய புரட்சி ஆரம்பமாகிறது.
Last edited by ayyasamy ram on Sat Nov 05, 2022 1:33 pm; edited 2 times in total
Re: கிருஷ்ணரை பற்றி ஓசோ
![கிருஷ்ணரை பற்றி ஓசோ 2129](https://www.shakthionline.com/uploads/news/2018/08/28/large/2129.jpg)
வாழ்க்கையை, அதன் சகல அம்சங்களோடும், பருவங்களோடும்,
வண்ணங்களோடும் அவன் ஏற்றுக் கொள்கிறான். அவன் மட்டும்,
எதையும் தேர்ந்தெடுப்பதில்லை;
ஒரு நிபந்தனையின்றி வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக்
கொள்கிறான். காதலை அவன் தவிர்ப்பதில்லை; ஒரு மனிதன்
என்ற முறையில் அவன் பெண்களை விட்டு ஓடிப்போவதில்லை.
கடவுளை அறிந்தவன், அனுபவித்தவன் என்ற முறையில், அவன்
மட்டுமே, போரைக் கண்டு முகம் திரும்பி ஓடிப் போகாதவனாக
இருக்கிறான்.
அன்பும், அருளும் நிறைந்தவனாக அவன் இருந்தும் கூட, போரை
ஏற்றுப் போரிடும் தைரியம் அவனிடம் இருக்கின்றது. அவன்
இதயம் சுத்தமான அகிம்சை குணம் உடையது.
அப்படியிருந்தும், தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது,
வன்முறையின் கொடுமைக்குள்ளும், நெருப்புக்குள்ளும் அவன்
பாய்ந்து செல்கிறான்.
அவன் தேனை ஏற்றுக் கொள்கிறவன்தான் என்றாலும் அவனுக்கு
விஷத்தைக் கண்டால் பயமில்லை.
கிருஷ்ணன், வாழ்க்கையின் இருமைப் பண்பையும், தர்க்க
முரணையும் முழுசாக ஏற்றுக் கொள்வதால், அவன் இருமையைக்
கடந்து அப்பால் செல்கிறான்.
ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டு மறுபகுதியை மறுக்கிற முரண்பாடு
உங்களுக்குள் உள்ளவரைக்கும், நாம் சொல்லுகிறோமே அந்த
ஆழ்நிலையை நாம் அடைய முடியாது.
ஆழ்நிலை என்பது தேர்வு செய்யாமல், இரு பகுதிகளையும் ஒன்றாக
ஏற்றுக் கொள்கிற போதுதான், முழுமையை ஒப்புக் கொள்கிற
போதுதான், சாத்தியமாகும்.
அதனால்தான், கிருஷ்ணன், எதிர்வரும் காலத்திற்கு ஏற்ற, மிக
முக்கியத்துவமுடையவன் ஆகிறான். அவனுடைய இந்த முக்கியத்துவம்,
காலப் பெருவழியில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்லும்.
மகான்கள், தீர்க்கதரிசிகளின் ஒளியும், பகட்டும் மங்கிக் கொண்டே
செல்லும்போது, அடக்கி வைத்தலை வலியுறுத்தும் உலக மதங்கள்
குப்பைத் தொட்டியில் வீசப்படும் போது, கிருஷ்ணனின் சுடர்,
தன் சிகரத்தை நோக்கி உயர்ந்து, அதன் சிகரத்தின் உச்சியில் நின்று
ஒளிவீசும்...
-ரங்கராஜ்ஜியம்
நன்றி: தமிழ் கோரா
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
» நமக்கு விருப்பமான முறையில் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
» கட்சித் தலைவர்களைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் சொன்ன கருத்து - கலைஞரைப் பற்றி - சூப்பர்
» சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !
» பெண்களின் உடல் வளர்ச்சி பற்றி!
» நமக்கு விருப்பமான முறையில் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
» கட்சித் தலைவர்களைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் சொன்ன கருத்து - கலைஞரைப் பற்றி - சூப்பர்
» சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !
» பெண்களின் உடல் வளர்ச்சி பற்றி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|