ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா?

Go down

மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Empty மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா?

Post by சிவா Sun Apr 12, 2009 3:27 pm

அண்மைய அரசியல் நிகழ்வுகளையும் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்ட விதத்தையும் பார்க்கையில் மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்வதை உணர முடிகிறது.

முதலாவதாக,மூன்று அமைச்சர்களும் ஆறு துணை அமைச்சர்களும் தேர்தலில் வெற்றி பெறாமல் ‘பின்புற வாசல்வழியாக’ அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள்.அப்படியானால், பாரிசான் நேசனலிடம் திறமை வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லையா?

ஒரு வேளை, இந்த செனட்டர்களிடம் வழக்கத்துக்கு மாறான திறமைகளும் விவேகமும் ஓளிந்து கிடக்கிறதோ.அப்படி இருந்தால் அது அப்துல்லா அகமட் படாவி, ஜைட் இப்ராகிமை நியமனம் செய்ததுபோல் பாராட்டத்தக்க செயல்தான்.

ஆனால், இவர்கள் தோற்றுப் போனவர்கள். 12-வது பொதுத்தேர்தலில் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் அரசாங்கம். அப்படியிருக்க மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அமைச்சர்களாவது எவ்விதம்?

இது நம் தேர்தல்முறையையே கேலி செய்கிறது. மக்களிடமிருந்து அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது எனலாம்.

மேலும், அம்னோ இளைஞர் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி ஜமாலுடின் அமைச்சராக நிய்மிக்கப்படாதது அம்னோ தேர்தலைக் கேலி செய்கிறது.

இரண்டாவதாக, தேசிய ஒருமைப்பாட்டை மேற்பார்வை செய்ய ஓர் அமைச்சு உருவாக்கப்பட்டிருப்பது.மலேசியர்கள் பக்காத்தானுக்கு வாக்களித்ததை ‘ஒற்றுமையற்ற’ செயலாக அரசாங்கம் கருதுகிறா? அவ்வாறு மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்யத்தான் இந்த அமைச்சு உருவாக்கப்பட்டதா?

பாரிசான் உறுப்புக்கட்சிகள் ஒவ்வொன்றிலும் உறுப்பினர்களின் ஒற்றுமையைப் பாதுகாக்க ‘ஒற்றுமை விவகாரப் பிரிவு’ அமைப்பது நல்லதாக இருக்குமே.

மூன்றாவதாக, ஹிஷாமுடின் உசேன், உள்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது. அது பாரிசானுக்கே கெடுதலாக அமையலாம்

அவரது ஆற்றலைக் குறைத்துக்கூற விரும்பவில்லை.கிரீஸ் கத்தியை உயரத் தூக்கி அசைத்துக்காட்டியது, இசா சட்டத்துக்கு அவர் கொடுத்து ஆதரவு ஆகியவை நினைவுக்கு வருவதால் அவரது நியமனத்தை நல்லதாக நினைக்க முடியவில்லை.

‘எனக்காக வேலை செய்ய வேண்டாம், என்னுடன் சேர்ந்து வேலை செய்யுங்கள்’ என்று அப்துல்லா அகமட் படாவி கூறினார்.

மிகத் தாராள மனப்போக்குக் கொண்டவராக அப்துல்லா இருந்தபோதும் அவரின் அம்னோ சகாக்கள் அவருடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை.

புதிய பிரதமரும் அவரின் அமைச்சர்களும் ‘வேண்டியவர்களுக்கே முன்னுரிமை கொடுப்பது,வேலைசெய்யாமலேயே வேலை செய்வதுபோல் காட்டிக்கொள்வது’ போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், என்னதான் அரசியல் அடக்குமுறைகளைக் கொண்டு வந்தாலும் அவற்றையும் மீறி மக்கள் ஜன்நாயகக் கோட்பாடுகளை நிலைநிறுத்த முயல்வார்கள் என்று எச்சரிக்கிறோம்.



-கடிதம் ஹார் வை முன் (Har Wai Mun)
- மலேசியா இன்று
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Empty Re: மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா?

Post by சிவா Sun Apr 12, 2009 3:29 pm

மஇகா அமைச்சரவையிலிருந்து வெளியேறுகிறதா?

புதிய நிர்வாகம் இந்திய சமூகத்துக்கு உரிய மதிப்பை அளிக்கவில்லை என்பதால், மஇகா அமைச்சரவையிலிருந்து விலகுவது பற்றி ஆலோசித்து வருவதாகக் கட்சி வட்டாரமொன்று தெரிவித்தது.

இப்படி நடப்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.என்றாலும் மஇகா பாரிசான் நேசனலுக்குள் தனித்து நின்று இந்திய சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.

“இதன் தொடர்பில் விரைவில் முடிவு செய்யப்படும்.இம்மாதப் பிற்பகுதியில் நடைபெறும் அடுத்த மஇகா செயலவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம்”, என்றாரவர்.

இந்தியர்கள் ‘இன்னமும் இரண்டாம் தர. மூன்றாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதை’கட்சி மிகப் பெரிய குறைபாடாகக் கருதுகிறது.

இரண்டாவதாக, மஇகா-வுக்கு உயர்நிலை அமைச்சர் பதவி கொடுக்கப்படாதது. அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதற்கு இது முக்கிய காரணமாகக் கூட இருக்கலாம்.பொதுப் பணி அமைச்சு மஇகா-வுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியிடமும் நடப்புப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமும் திரும்பத் திரும்ப வலியுறுத்தியும்கூட அது ஏற்கப்படவில்லை.

பொதுப் பணி அமைச்சு எப்போதுமே மஇகாவுக்குத்தான் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் மார்ச் 8 தேர்தலில் மஇகா தலைவர் ச.சாமிவேலு தோல்வி அடைந்ததை அடுத்து அது கைமாறியது. மஇகாவுக்கு மனித வள அமைச்சு கொடுக்கப்பட்டது.

இப்போது மஇகாவின் ஒரே அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம்.அவர் மனிதவள அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இரு துணை அமைச்சர்கள் உள்ளனர்.சரவணன் (கூட்டரசுப் பிரதேசம்), எஸ்.கே.தேவமணி (பிரதமர் துறை).

மனிதவள அமைச்சர் என்பது ஒரு ‘ஜூனியர்’ பதவி என்றும் அது மஇகா, பாரிசான் நேசனலின் மூன்றாவது பெரிய கட்சி என்பதைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அந்த கட்சி வட்டாரம் தெரிவித்தது.

“மஇகாவின் கடின உழைப்பின் காரணமாக புக்கிட் செலாம்பாவிலும், புக்கிட் கந்தாங்கிலும் இந்திய வாக்காளர்கள் பலர் பாரிசானுக்குத் திரும்பி வந்தும்கூட கட்சி நியாயமாக நடத்தப்படவிலலை.

“நாங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறோம். இது பாரிசான் அரசாங்கத்துக்கு இந்தியர்களின் ஆதரவு மேலும் சரிவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

“பாரிசானுக்கு நீண்டகாலமாகவாகவே ஆதரவு காட்டாத சமூகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை இந்திய சமூகம் பார்க்கிறது”. மசீசவுக்கு நான்கு அமைச்சர் பதவிகள் திரும்பக் கொடுக்கப்பட்டிருப்பதுடன் கூடுதலாக துணை அமைச்சர் பதவி ஒன்றும் கொடுக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு அவர் அவ்வாறு கூறினார்.

இதன் தொடர்பில் சாமிவேலுவுடன் தொடர்புகொண்டபோது அவர் கருத்துரைக்க மறுத்து விட்டார்.ஆனால் நடப்பு நிலவரத்தில் அவருக்கு மனத் திருப்தி இல்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum