ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’

2 posters

Go down

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ Empty சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’

Post by Dr.S.Soundarapandian Sat Jun 18, 2022 5:42 pm

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’
1 . 1934இல்  ‘மணிக்கொடி’ இதழில் புதுமைப்பித்தன் எழுதியது இக் கதை.

மணிக்கொடி (1933- 1939) - இதைப்பற்றிச் சிறிது அறிந்துகொள்ளவேண்டும்.

கு.சீனிவாசன் அவர்களின் தொடக்க முயற்சியால் உருவானது மணிக்கொடி இதழ்; ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவந்தது; ‘தேசிய வாரப் பத்திரிகை’ முதல் பக்கத்தில் போட்டுள்ளனர்; கு.சீனிவாசன் , காங்கிரஸ்காரராகப் பலமுறை சிறை சென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. காங்கிரசின் ‘சுயராஜ்யா’ நாளிதழின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியர் குழுவிற்குப் பொறுப்பு வகித்தவர்  கு.சீனிவாசன் ; இந்த நாளிதழ் 1924இல், சென்னை பிராட்வேயில் இருந்து வெளியானது.

2 . நாலுநாயக்கன் பட்டி ஆரோக்ய மாதா தெருவைச் சொல்லிக் கதையைத் தொடங்குகிறார்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ Bo8uIO7

பெயரில்தான் ‘ஆரோக்யம்’ இருக்கிறதே தெருவில் இல்லை என்ற சாடலுடன் தொடங்குகிறது கதை ! அன்றும் சரி, இன்றும் சரி! எந்தத் தெருதான் சுத்தமாக உள்ளது? அவ்வழியாக வெளிநாட்டுப் பிரதமர் போனால், தெருவையே ‘வெற்றிகரமாக’ வெள்ளைத்துணியால் இழுத்து மறைத்துவிடும் காரியமல்லவா நடக்கிறது இங்கே!
ஆரோக்ய மாதா தெருவைக்காட்டி, கதையின் மண்வாசனையை நம் மூக்கில் விடுகிறார் புதுமைப்பித்தன்; இது ஒரு சிறுகதை உத்தி.
3 . நாலுநாயக்கன் பட்டி ஏழைப் பெண்கள் அக்கம் பக்கத்தில் ஆலைகளுக்கு  வேலைக்குப் போகிறார்களாம் ; ஆனல் அதுபற்றி அறிய  ‘நமக்கு நேரமில்லை’ என்கிறார்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ KUrMSPp

அன்றும் இன்றும், எல்லா ஊர்களிலும் இதுதான் நிலை! நாயினும் கேடாகப் பாடுபடும் பெண்களைப் பற்றி யாருமே அக்கறைப் படுவதில்லை! இன்றும் சென்னையில், காலை ஆறு மணி அளவில் சில இடங்களில் ஒரே கும்பலாகப் பெண்கள் நிற்கிறார்கள்; என்ன என்று கேட்டால்,  “ஏஜண்டு வேன் வரும்; அதில் ஏற்றி நாங்கள் வேலை பார்க்கவேண்டிய இடத்துக்குக் கொண்டுபோய் இறக்கிவிடுவார்கள்; வேலை முடிந்ததும் காசைக்கொடுத்து அனுப்பி விடுவார்கள்”  என்கிறார்கள்!  ஒரு கேள்வி இல்லை, கேட்பாடு இல்லை!
‘நமக்கு நேரமில்லை’ என்பது, சமுதாயத்திற்குப் புதுமைப்பித்தன் கொடுக்கும் அடி!

4 . அடுத்து ஒரு கிறித்தவப் பணக்காரரை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ SzKFC57

கர்த்தர் திருப்பணியைச் சுவாமிதாஸ் மேற்கொள்வதே பொருளற்றது என்கிறார் ஆசிரியர்! இயேசு இதுபற்றிக் கூறியுள்ளது பற்றியெல்லாம் இவருக்குக் கவலையில்லை எனக் காட்டுகிறார்! மதத்திற்குள் ஒளிந்துகொண்டு , தங்கள் ‘சாம்ராஜ்யத்தை’ நடத்தும் போக்கு அன்றும் இருந்தது! இன்றும் இருக்கிறது! இதைக் கண்டு பொங்கியவர் புதுமைப் பித்தன் என மதிப்பிட வேண்டும்!  
வசதியான  சுவாமிதாஸ், உதிர்ந்து விழும் கொடுக்காப்புளிப் பழங்களை, மற்றவர்கள் எடுத்து உண்ணட்டும் என நினைக்காமல், ஒரு கூறு ஒருபைசா என அதை விற்கும் சவரியாயி என்ற மூதாட்டிக்கு மொத்தக் குத்தகைக்கு விட்டுப் பணம் பண்ணுவதாகக் காட்டுகிறார் ஆசிரியர்! ‘இயேசுநாதரின் தத்துவங்களை நன்கு புரிந்துகொண்டவர்’ சுவாமிதாஸ்! புதுமைப் பித்தன் வரிகள் :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ KKp7uJF

‘சுவாமிதாஸ் ஐயர்’ என்பதைப் பார்த்து இவரைப் பிராமணர் என நினைக்கவேண்டாம்!  G.U.Pope ஐப், ‘போப்பையர்’ என எழுதுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும்.  
நம் கதைத் தலைப்பில் வந்துள்ள ‘கொடுக்காப்புளி மரம்’ சுவாமிதாஸ் வீட்டின் முகப்பில்தான் உள்ளது!

5 . அடுத்துப், பெர்னாண்டஸ் என்ற பிச்சைக்காரரை அறிமுகப் படுத்துகிறார் ஆசிரியர்.:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ St5lL9x

பிச்சைக்காரரை ‘நல்லவர்’ என்று காட்டுகிறார் ஆசிரியர்; ஏனன்றால் இதே பிச்சைக்காரர்தான் பின்னே சுவாமிதாஸைக் கொல்பவர்; அப்போது கதைக்கு ‘இரக்கச் சுவை’ வருவதற்காக இந்த உத்தி!
பிச்சைக்காரரின் மகளைப் பாருங்கள்! வருத்தம் எதுவும் இல்லாமல் சிரித்துக்கொண்டு அவர் பின்னால் வருகிறாள் ! அந்த வயதில் பிச்சை என்றால் என்ன என்பது அச் சிறுமிக்குத் தெரியாது! இந்தச் சிறுமையைத்தான் சுவாமிதாஸ் பின்னே கொல்கிறார்! அப்போது அவலச் சுவை மிகுவதற்காக இப்போதே சிறுமையை ஏதுமறியாப் பெண்ணாகப் படைப்பது ஒரு சிறுகதை உத்திதான்!
ஆனால் ஆசிரியரின் இந்த இரு உத்திளிலும்  கற்பனை ஏதுமில்லை!
நம் வீடுகளில் இன்றும் காணலாம்; வீட்டில் ஒருவர் இறந்துகிடப்பார்; பலரும் அழுதுகொண்டிருப்பர்; ஆனால் இதை உணராது, அவ்வீட்டுச் சிறார்கள் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருப்பர்; பார்த்திருக்கிறீர்களா?

6. இப்போதுதான் கதையின் உச்சம் (climax) !
பிச்சைக்காரரின் ஏதுமறியா மகள், சுவாமிதாஸ் வீட்டுக் கொடுக்காப்புளிப் பழங்களைப் பாவாடையில் அள்ளிக்கொள்கிறாள்!  மீதி நடந்ததைப் படியுங்கள்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ BI03KOq

தன் அன்பு மகள் கொல்லப்படவே, வெகுண்ட  பிச்சைக்காரர் என்ன செய்தார்? பார்ப்போம்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ 4gMRh2I

சுவாமிதாஸ் காலி!
இங்கு கதையின் திருப்பமும் உச்சமும் ஒன்றாக இருக்கும் சிறுகதை அமைப்பைக் (structure of short story) காண்பீர்!
7 . பிறகு என்ன நடந்தது?
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ N2uK08G

சுவாமிதாஸுக்கு ஒன்றுமில்லை !அவர் சிறுமியைக் கொன்றது தற்செயல்! ஆனால் பெர்னாண்டஸ் செய்தது கொலை! இதுதான்  நீதிமன்றத் தீர்ப்பு!
‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ – என்ற சொல்லைக் கண்டு உள்ளூரச் சிரிக்கிறார் ஆசிரியர்!
இதை எப்படி வருணித்தார் புதுமைப்பித்தன் என்று மேலே பார்த்தோம்!
கதை மாந்தர் யாரையும் கொண்டு பேசவைக்காமல், ஆசிரியரே நொந்து , சினந்து, பேசுவதைக் கவனியுங்கள்! இவ்வாறு சிறுகதையில் ஆசிரியரே நேரே வெளிக்கிளம்பிப் பேசுவது ஒரு சிறுகதை உத்தி! ஆசிரியரின் வெளிப்படையான சீற்றம் அவருக்குச் சிறுகதை எழுதுவதற்கு ஒரு சமுதாய நோக்கம் இருந்தது என்பதைக் காட்டுகின்றது!
தண்டனைக் காலம் முடிந்து , பெர்னாண்டஸும் இறந்துவிடுவதாகக் கதை முடிகிறது!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ Empty Re: சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’

Post by T.N.Balasubramanian Sat Jun 18, 2022 6:14 pm

ஐயோ பாவமே --கொடுக்காப்புளி கொடுத்த இரெண்டு சாவுகள்.
பொதுவாகவே அந்த காலங்களில் கிறித்துவ குருமார்களை 
கருணைமிக்கவர்களாகவே விவரிப்பார்கள் 

திருச்சியில் நடேச அய்யர் என்ற கிருத்துவர் இருந்ததாக நினைவு.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ Empty Re: சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’

Post by Dr.S.Soundarapandian Sat Jun 18, 2022 6:22 pm

நன்றி இரமணியன் அவர்களே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ Empty Re: சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum