ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’

Go down

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Empty சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’

Post by Dr.S.Soundarapandian Thu May 26, 2022 8:54 pm

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’

’திரிபுரம்’ என்றதும் ஏதோ புராணக் கதை போல என நினைக்க வேண்டாம்!
நம் வாழ்வுக் கதைதான்!

1 . ஆந்திராவிலிருந்து ‘பஞ்சம் பிழைக்க’இரு பெண்கள், தமிழகம் வருகின்றனர்; அவர்களின் சீரழிவுதான் கதை!

2. இவ்விருவரோடு , பஞ்சத்திற்காக வேறு இடம் பெயரும் மக்கள்பலரும் சாலையில் எப்படிப்போனார்களாம்? தாம் போகும் வட்டாரமும் பஞ்சமான இடமா இல்லயையா என்பதெல்லாம் தெரியாது, சாலையில் எதிரெதிர்த் திசையில் போனார்களாம்! இக் காட்சியைப் படமாக எடுக்கும் இயக்குநருக்கு நல்ல கைக்குறிப்பு இது! :
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ ECku8FR

3 . தாய் நரசம்மாவும் , வயதுக்கு வந்த மகள் வெங்கிட்டம்மாளும்தான் பிழைப்புத்தேடிப் பயணம் வருகிறவர்கள். சாப்பிட ஒன்றும் இல்லை! பட்டினிதான்! ’பட்டினி’யால் ஏற்படும் வலியையையும் அவமானத்தையும் துல்லியமாக வேறுபடுத்துகிறார் பாருங்கள் கதாசிரியர்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ TWWvlMJ

4 . அந்த இரு பெண்களும் முதலிற் சென்னையில் வேலை கிடைக்குமா என்று சுற்றியுள்ளனர்! ‘கக்கூஸ்’ கழுவும் தோட்டி வேலைதான் கிட்டியது! ஆனால், இதுவரை இப்படிப்பட்ட வேலையெல்லாம் செய்தது கிடையாதே? எப்படிச் செய்வது? இந்தத் தயக்கம் காரணமாக , வேற்றூர் கிளம்புகின்றனர்;டிக்கெட் இல்லாததால், விருதுநகரில் இறக்கி விடப்பட்டுள்ளனர்!
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ GBWRak0

பிச்சை எடுத்தே காலத்தை ஓட்டிவிடலாம் என்று அப் பெண்கள் முடிவு செய்ய இயலாது பயணத்தைத் தொடர்ந்தனராம்!
கு.அழகிரிசாமி, கதையின் ஒவ்வொரு அசைவிலும் மக்களின் மன நுட்பங்களைக் காட்டிச் செல்கிறார் பாருங்கள்! ‘சிறந்த சமுதாய ஞானி கு.அழகிரிசாமி’ என்று நம்மைக் கதறவைக்கும் இதுபோன்ற பல இடங்கள் இவரின் எல்லாச் சிறுகதைகளிலுமே உள்ளன!
5 . பயணத்தைத் தெற்கு நோக்கித் தொடர்ந்தனரே ஒழியக், கோவில்பட்டிப் ‘பிராந்தியத்தில்’ உள்ள பஞ்ச நிலை பற்றி அவர்களுக்குத் தெரியவில்ல! எழுதுகிறார் ஆசிரியர்:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ UUxVVTh

நாம், நமது வட்டார நிலை தெரியாமலேதான் வாழ்கிறோம்! வாய் கிழிய வெளிநாட்டு அரசியல் எல்லாம் பேசுவோம்! ஆனால் , நம் வட்டாரத்து நிலை நமக்குத் தெரியாது!இதை ஆசிரியர் கூறும்போதுதான் நம் கண் திறக்கிறது! இதற்குக் காரணம் என்ன தெரியுமா? நம் கண் முன்னே தெரியும் ‘உள்நோக்க ஊடகங்கள்’ சொல்வதுதான் நமக்கு வேதவாக்கு! நாம் யாரைத் தலைவர்கள் என்று நினைக்கிறோமோ அவர்களிடம் நம்மை அடகுவைத்து, ‘அவருக்குத் தெரியாததா?’ என விடுவதும்தான்!

6 .சாத்தூரில் , ஒரு வெள்ளிரிக்காய்த் துண்டு கீழே கிடந்தது!அதை எடுத்துச் சாப்பிடலாம் என்றால், அவமானமாக இருந்தது அப் பெண்களுக்கு! தாய்க்குச் சாப்பிட எண்ணம் வந்தது! கையிலும் எடுத்தாள்! ஆனால் மகள் அதை வெறுக்கிறாள்! அந்த நிலையில் அழகிரிசாமி எழுதுகிறார் பாருங்கள்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ P4ENSWe

தனி மனிதன், ‘தனி மனிதன்’ அல்ல! அவன் சமுதாயத்தின் கருத்தோட்டத்தைப் புறக்கணித்துப் போக முடியாது என்பதை அழகாக விளக்குகிறார் அல்லவா?

7 . பட்டினி கிடந்த வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் என்னாகும்?எனக்குத் தெரியாது! நம்மில் பலருக்குத் தெரியாது!ஆசிரியர் கூறுவதைக் கேட்போம்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ IzamY2X

8 . கன்னிப் பெண்ணாகிய வெங்கிட்டம்மா பசியால் துடிக்கிறாள்! பார்த்த வாலிபர்கள் உதவ விழைகின்றனர்! இந்த நிலையை ஓர் ஓவியமாக்க முடியுமா? என்னால் முடியாது! அழகிரிசாமி தீட்டுகிறார்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Nz1ES9M

காட்சியை விவரிப்பது வேறு! அது என்னாலும் முடியும்! ஆனால் அங்குள்ள மாந்தர்களின் உளவியலை , ஆசிரியர் தீட்டியது போன்று,என்னால் வரைய முடியாது!

9 .நரசம்மாவுக்கு இப்போது மான அவமானம் எல்லாம் பெரிதாகப் படவில்லை! எல்லாம் பார்த்துப் பழகியாகிவிட்டது! ஆனால், இந்த நிலையைவிட்டு நீங்கிப் வேறு வாழ்க்கை முறைக்கு அவளால் போக முடியவில்லை!இதனை எப்படிக் காட்டுகிறார் ஆசிரியர்?:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ C993Gpw

சமுதாயத்துக்கும் தனிமனிதர்களுக்கும் இடையே நடைபெறும் நுட்பமான போராட்டம்!

10 . கடைசியில், வெங்கிட்டம்மாள் என்ற ஆந்திரக் கன்னி, தனது கற்பை இழக்கவேண்டி வந்தது! ‘கக்கூஸ்’ கழுவுவதே அவமானம் என முன்பு நினைத்த அவள், இப்போ கற்பை இழக்கவேண்டிவந்தது! பட்டினியும், சமுதாயமும் அவளை அங்கேதான் தள்ளிவிட்டது!:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ GqyBSq5

11 . பத்து ரூபாய்க்காகக் கற்பை இழந்தபின், புகைவண்டிநிலையம் வந்தாள் வெங்கிட்டாம்மாள், தாய் நரசம்மாவுடன்.
அப்போது, கற்பிழந்து பெற்ற பணத்தை, ஒரு கையிலிருந்து மறுகைக்கு மாற்றினாள்; மீண்டும் அந்த இடக் கையிலிருந்து அதை வலக் கைக்கு மாற்றினாள்! மாற்றும்போது பலமாகச் சிரித்தாள்! வாய்விட்டுச் சிரித்தாள் ! பலமுறை விட்டுவிட்டுச் சிரித்தாள்!
அந்தச் சிரிப்புக்குப் பொருள் என்ன?
ஆசிரியர் இப்படி முடிக்கிறார்!:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ Y5WeN0n

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’ CHbXQ6o

‘திரிபுரம்’ என்ற தலைப்பின் பொருளும் நமக்கு விளங்குகிறது!
சத்தமில்லாமல், நம் கண்ணில் துளிர்க்கும் நீரைத் துடைத்துக் கொள்கிறோம்!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum