Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’
Page 1 of 1
திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’
திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’
1 . சாரங்கன் என்ற சிறுவன், தன் சக நண்பர்களுக்கு , அன்புக்குரியவரும் நடுத்தர வயதுக்காரருமான பத்திரிகை ஆசிரியர் கொடுத்தது போல ஒரு டைரியத் தனக்கும் தரவில்லை என ஏங்குகிறான்! ஒரு நாள் , அவனே சக நண்பர்களுக்குக் கொடுத்த அதே கம்பெனி அதே வண்ண டைரி ஒன்றை வாங்கி, ஆசிரியரிம் வீட்டுக்காரரிடம் கொடுத்து, “ என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு என்று எழுதுங்கள்.” என்று கூறுகிறான்! இதுதான் ‘அன்பளிப்பு’ கதையின் முடிவுக் காட்சி!
2. கதை நடுத்தர வயதுக்காரரான ஒரு பத்திரிகை ஆசிரியர் கூற்றாக முழுதும் அமைகிறது. அந்தப் பத்திரிகை ஆசிரியர் வேறு யாருமல்ல , கு.அழகிரிசாமியேதான்!
3. ஆனால், கதையின் சிறப்பானது சிறார்களோடு நடுத்தர வயதுக்காரர் ஒருவர் கொள்ளும் தூய அன்பும், அவர், அச் சிறுவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது தூய அன்பைச் செலுத்துவதிலும் இவற்றைச் சித்திரிப்பதிலும்தான் உள்ளது!
4. கதையின் ஓட்டமானது, விறைப்பான எந்தக் கருத்தை நோக்கியும் செல்லவில்லை! அக்கம் பக்கத்தில் உள்ள சிறார்களின் அப்பழுக்கற்ற இதயங்களின் பலகோணப் படப்பிடிப்பே இந்தக் கதை!
‘சிறுகதையானது, ஒரு மையக் கருவை நோக்கித்தான் செல்லவேண்டும் ’ என்ற ‘பண்டிதர் இலக்கணத்தை’த் தகர்த்துவிட்டார் கு.அழகிரிசாமி!
5. சிறார்களின் நடவடிக்கைகளை நாம் இவ்வளவு துல்லியமாகப் பார்த்திருக்கவே மாட்டோம்! பார்த்திருந்தாலும் நமக்கு இவ்வளவு துல்லியமாக எழுத்தில் கொண்டுவந்திருக்கவே முடியாது! ‘சாகித்திய அகாதெமி பரிசு கொடுத்தது முற்றிலும் பொருந்தும்’ என நம் வாய்க்குள் ஓசையில்லா , கனத்த, ஒலி கேட்கிறது!
ஒன்றுமில்லை! சிறுவர்கள் தூங்கும் நடுத்தர வயதுக்காரரான தம் நண்பரை எழுப்புகின்றன; சிறார்கள் கைகளால் தட்டுவதை வெகு நுட்பமாக , இப்படி எழுதுகிறார் அழகிரிசாமி!:
முதுகில் நாலைந்து கைகள் வந்து பலமாக அடிக்க ஆரம்பித்து விட்டன. அடிகளால் ஏற்பட்ட வலியை விட, அவற்றால் ஏற்பட்ட ஓசை மிகப் பெரியதாக இருந்தது!
நாமும்தான் தூங்கியிருக்கிறோம்; நம்மையும்தான் சிறார்கள் தட்டி எழுப்பியிருக்கிறார்கள்; என்றைக்காவது இந்த நுட்பத்தைக் கவனித்துள்ளோமா?இந்த நுட்பம்தான், அழகிரிசாமியை, ‘எழுத்தாளன்’ ஆக்குகிறது!
நாம் ஒருவரின் வீட்டிலிருந்து ‘போய் வருகிறேன்’ என ஒருவரிடத்தில் சொல்வதானால் , ஏறத்தாழ வாசல் அருகே நின்றபடியே கூறிவிட்டு வருவோம்; ஆனால் சிறுவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்! இது கதாசிரியர் கூறித்தான் எனக்குத் தெரிய வந்தது! :
என்னோடு நடுக்கூடம் வரையில் நடந்து வந்தான் சாரங்கன். அப்புறம் பளிச்சென்று மறு பக்கமாகத் திரும்பி, “போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
பாருங்கள்! தான் பேசிக்கொடிருந்தவர் பின்னாலே போய்ப், பிறகு சட்டென்று திரும்பி , அதன்பிறகுதான் ‘போய்விட்டு வருகிறேன்’ என்று சொல்கிறான்! இதுதான் அழகிரிசாமி! இதற்குத்தான் சாகித்திய அகாதெமி விருது! வாழ்க்கையில்தான் எவ்வளவு நுணுக்கங்கள்? நுட்பங்கள்? நாம் நிதானமாகச் சிந்தித்தால்,’ஆமாமாம்! சிறுவர்கள் இப்படித்தான் செய்வார்கள்! இவர் எழுதிய பிறகுதான் தெரியவருகிறது!’ என்று மகிழ்வு கலந்த வியப்பை அனுபவிக்கத் தொடங்குவோம்!
6. சிறுவர்களோடு பெரியவர்கள் விளையாடுவதை நாம் அறிவோம்தான்! ஆனால், அப்போது, இரு தரப்பாரின் நிலைகளையும் கு.அழகிரிசாமி வரைந்துள்ளது போல யாரும் சொன்னதில்லை! :
உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும், அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும், ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப் பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை; அவர்களுடைய அன்பில் அந்த விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனத்தில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாக நடத்தவில்லை. நண்பர்களாக நேசித்தேன்.
7. ‘அழுதுகொண்டிருந்த சிறுவன் , அழுகைநிறுத்தினான்’ என்றுதான் நமக்கு எழுதத் தெரியும்! ஆனால் அழகிரிசாமி எப்படித் தீட்டுகிறார் பாருங்கள்-
அழுகையை நிறுத்தினான். என்னைத் திரும்பிப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். அவனுடைய வயிறு அசாதாரணமாக குழிந்து புடைத்தது.
அழுகையை நிறுத்தும் சிறுவனின் வயிற்றை இனிமேலாவது நாம் கவனிப்போமே!
8. சிறுவன், சிறுமி நம் வீட்டுக்குள் வருவதை நாம் கண்டிருக்கிறோம்; ஆனால் சிறுவன் நுழைவதற்கும் சிறுமி நுழைவதற்கும் உள்ள வேறுபாட்டை எந்த ஆங்கிலக் கதாசிரியனும் வேறு எந்தமொழிக் கதாசிரியனும் எழுதியதே இல்லை! அழகிரிசாமி எழுதுகிறார் பாருங்கள்!:
பாக்கிய தேவதை என ஒரு தெய்வ மகள் உண்மையிலேயே இருந்து, ஒரு தரித்திரனின் வீட்டில் அடியெடுத்து வைத்தது போல இருந்தது பிருந்தாவின் வரவு.
9. நமக்கு நம் தெருவிலுள்ள பையனோடு பழக்கம் இருக்கும் ;ஆனால், அவனின் தந்தையோடு பழக்கம் இருக்காது! இந்த நிலையை எப்படி அழகிரிசாமி நவில்கிறார் பாருங்கள்-
இவனுடைய அப்பாவை வீதியிலும் பஸ் ஸ்டாண்டிலும் ஆயிரம் தடவைகள் பார்த்திருக்கிறேன். ஒரு தடவைகூட நாங்கள் பேசிக் கொண்டதில்லை. ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் என்று எவ்வித சைகை ஜாடையின் மூலமாகக் கூடக் காட்டிக் கொண்டதில்லை. அப்படியிருக்க அங்கு நான் எப்படிப் போவது?
பையனின் வீட்டுக்குப் போவது தனக்குத் தயக்கமாக இருக்கிறது எனக்கூற வந்தவர் அதனை எப்படி தீட்டிக் காட்டுகிறார் பாருங்கள்!
10. ‘வீட்டுக்கு வாருங்கள்’ என்று கூறிக் கூடவே, நண்பரான ஆசிரியருடன் சேர்ந்து சென்ற சிறுவன் , வீடு வந்ததும் என்ன செய்தான்? அழகிரிசாமி வடிக்கிறார் பாருங்கள்!:
இருவரும் கைகோத்துக்கொண்டே சென்றோம். அவன் வீட்டுக்கு முன்னால் போனதும், என் கையை விட்டுவிட்டு வீட்டுக்குள்ளே வேகமாக ஓடினான். அப்புறம் வெளியில் வந்து வாசல் பக்கத்திலுள்ள அறையைத் திறந்து, “வாருங்கள், வாருங்கள்” என்று படபடப்பாக இரைந்து சொன்னான்.
கூடவே வந்தானாம்; வீடு வந்ததும் சடக்கென்று கையை உதறிவிட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடினானாம்! தொடர்ந்து, ‘வாருங்கள் வாருங்கள்’ என்று மெதுவாகக் கூறவில்லையாம்! படபடப்பாகவும் இரைந்தும் கூறினானாம்! இதுதான் காட்சிச் சித்திரிப்பு என்பது! இதுதான் ஒரு நிகழ்வை உரைநடையில் கூறுவதற்கும், சிறுகதையில் தீட்டுவதற்கும் உள்ள வேறுபாடு!
11. சாரங்கன் என்ற அச் சிறுவனால் அழைக்கப்பட்டுச் சாரங்கன் வீட்டு அறையில் உட்கார்ந்திருந்தபோது, உள்ளே சாரங்கணின் தந்தை எட்டிப்பார்த்து என்ன செய்தார்? இங்கே ஒரு நுட்பம்! அழகிரிசாமி தூரிகை ஓட்டம் :
அப்போது வெளியிலிருந்து வந்த அவனுடைய தகப்பனார், அறைக்குள் எட்டிப் பார்த்தார். என்னைப் பார்த்து “வாருங்கள்” என்று சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டார். “என்ன விசேஷம்?” என்று என்னை அவர் விசாரிக்காமல் விட்டது எனக்கு ராஜமரியாதை செய்தது போல் இருந்தது.
சாரங்கனின் தந்தை ஆசிரியரைப் பார்த்து ‘எதற்கு வந்தீர்கள்? ’ என்றெல்லாம் கேட்கவில்லையாம்! அப்படிக் கேட்டிருந்தால், வளைந்து நெளிந்து, ‘பையன் ஆசையாகக் கூப்பிட்டான்’ என்றோ, ’சும்மாதான் என்றோ ’ எதுஎதையோ கூறவேண்டி வந்திருக்கும்! அது எதுவுமில்லாமக் ‘வாருங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டது ஆசிரியருக்கு ’ராஜமரியாதை’ செய்தது போல இருந்ததாம்!உண்மையில் இப்படியெல்லாம் கு.அழகிரிசாமி எழுதிக்காட்டுவது, நமக்கு ‘ராஜமரியாதை’ செய்வதுபோல இல்லை?
முற்றிலும் சிறார்களை மையப்படுத்திக் கதை இருந்தாலும், உலகில் ‘அன்பு’ என்றால் என்ன? என்கிற பெரிய வினாவை நம் மண்டையில் போடுகிறது ‘அன்பளிப்பு’ச் சிறுகதை!
***
1 . சாரங்கன் என்ற சிறுவன், தன் சக நண்பர்களுக்கு , அன்புக்குரியவரும் நடுத்தர வயதுக்காரருமான பத்திரிகை ஆசிரியர் கொடுத்தது போல ஒரு டைரியத் தனக்கும் தரவில்லை என ஏங்குகிறான்! ஒரு நாள் , அவனே சக நண்பர்களுக்குக் கொடுத்த அதே கம்பெனி அதே வண்ண டைரி ஒன்றை வாங்கி, ஆசிரியரிம் வீட்டுக்காரரிடம் கொடுத்து, “ என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு என்று எழுதுங்கள்.” என்று கூறுகிறான்! இதுதான் ‘அன்பளிப்பு’ கதையின் முடிவுக் காட்சி!
2. கதை நடுத்தர வயதுக்காரரான ஒரு பத்திரிகை ஆசிரியர் கூற்றாக முழுதும் அமைகிறது. அந்தப் பத்திரிகை ஆசிரியர் வேறு யாருமல்ல , கு.அழகிரிசாமியேதான்!
3. ஆனால், கதையின் சிறப்பானது சிறார்களோடு நடுத்தர வயதுக்காரர் ஒருவர் கொள்ளும் தூய அன்பும், அவர், அச் சிறுவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது தூய அன்பைச் செலுத்துவதிலும் இவற்றைச் சித்திரிப்பதிலும்தான் உள்ளது!
4. கதையின் ஓட்டமானது, விறைப்பான எந்தக் கருத்தை நோக்கியும் செல்லவில்லை! அக்கம் பக்கத்தில் உள்ள சிறார்களின் அப்பழுக்கற்ற இதயங்களின் பலகோணப் படப்பிடிப்பே இந்தக் கதை!
‘சிறுகதையானது, ஒரு மையக் கருவை நோக்கித்தான் செல்லவேண்டும் ’ என்ற ‘பண்டிதர் இலக்கணத்தை’த் தகர்த்துவிட்டார் கு.அழகிரிசாமி!
5. சிறார்களின் நடவடிக்கைகளை நாம் இவ்வளவு துல்லியமாகப் பார்த்திருக்கவே மாட்டோம்! பார்த்திருந்தாலும் நமக்கு இவ்வளவு துல்லியமாக எழுத்தில் கொண்டுவந்திருக்கவே முடியாது! ‘சாகித்திய அகாதெமி பரிசு கொடுத்தது முற்றிலும் பொருந்தும்’ என நம் வாய்க்குள் ஓசையில்லா , கனத்த, ஒலி கேட்கிறது!
ஒன்றுமில்லை! சிறுவர்கள் தூங்கும் நடுத்தர வயதுக்காரரான தம் நண்பரை எழுப்புகின்றன; சிறார்கள் கைகளால் தட்டுவதை வெகு நுட்பமாக , இப்படி எழுதுகிறார் அழகிரிசாமி!:
முதுகில் நாலைந்து கைகள் வந்து பலமாக அடிக்க ஆரம்பித்து விட்டன. அடிகளால் ஏற்பட்ட வலியை விட, அவற்றால் ஏற்பட்ட ஓசை மிகப் பெரியதாக இருந்தது!
நாமும்தான் தூங்கியிருக்கிறோம்; நம்மையும்தான் சிறார்கள் தட்டி எழுப்பியிருக்கிறார்கள்; என்றைக்காவது இந்த நுட்பத்தைக் கவனித்துள்ளோமா?இந்த நுட்பம்தான், அழகிரிசாமியை, ‘எழுத்தாளன்’ ஆக்குகிறது!
நாம் ஒருவரின் வீட்டிலிருந்து ‘போய் வருகிறேன்’ என ஒருவரிடத்தில் சொல்வதானால் , ஏறத்தாழ வாசல் அருகே நின்றபடியே கூறிவிட்டு வருவோம்; ஆனால் சிறுவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்! இது கதாசிரியர் கூறித்தான் எனக்குத் தெரிய வந்தது! :
என்னோடு நடுக்கூடம் வரையில் நடந்து வந்தான் சாரங்கன். அப்புறம் பளிச்சென்று மறு பக்கமாகத் திரும்பி, “போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
பாருங்கள்! தான் பேசிக்கொடிருந்தவர் பின்னாலே போய்ப், பிறகு சட்டென்று திரும்பி , அதன்பிறகுதான் ‘போய்விட்டு வருகிறேன்’ என்று சொல்கிறான்! இதுதான் அழகிரிசாமி! இதற்குத்தான் சாகித்திய அகாதெமி விருது! வாழ்க்கையில்தான் எவ்வளவு நுணுக்கங்கள்? நுட்பங்கள்? நாம் நிதானமாகச் சிந்தித்தால்,’ஆமாமாம்! சிறுவர்கள் இப்படித்தான் செய்வார்கள்! இவர் எழுதிய பிறகுதான் தெரியவருகிறது!’ என்று மகிழ்வு கலந்த வியப்பை அனுபவிக்கத் தொடங்குவோம்!
6. சிறுவர்களோடு பெரியவர்கள் விளையாடுவதை நாம் அறிவோம்தான்! ஆனால், அப்போது, இரு தரப்பாரின் நிலைகளையும் கு.அழகிரிசாமி வரைந்துள்ளது போல யாரும் சொன்னதில்லை! :
உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும், அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும், ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப் பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை; அவர்களுடைய அன்பில் அந்த விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனத்தில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாக நடத்தவில்லை. நண்பர்களாக நேசித்தேன்.
7. ‘அழுதுகொண்டிருந்த சிறுவன் , அழுகைநிறுத்தினான்’ என்றுதான் நமக்கு எழுதத் தெரியும்! ஆனால் அழகிரிசாமி எப்படித் தீட்டுகிறார் பாருங்கள்-
அழுகையை நிறுத்தினான். என்னைத் திரும்பிப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். அவனுடைய வயிறு அசாதாரணமாக குழிந்து புடைத்தது.
அழுகையை நிறுத்தும் சிறுவனின் வயிற்றை இனிமேலாவது நாம் கவனிப்போமே!
8. சிறுவன், சிறுமி நம் வீட்டுக்குள் வருவதை நாம் கண்டிருக்கிறோம்; ஆனால் சிறுவன் நுழைவதற்கும் சிறுமி நுழைவதற்கும் உள்ள வேறுபாட்டை எந்த ஆங்கிலக் கதாசிரியனும் வேறு எந்தமொழிக் கதாசிரியனும் எழுதியதே இல்லை! அழகிரிசாமி எழுதுகிறார் பாருங்கள்!:
பாக்கிய தேவதை என ஒரு தெய்வ மகள் உண்மையிலேயே இருந்து, ஒரு தரித்திரனின் வீட்டில் அடியெடுத்து வைத்தது போல இருந்தது பிருந்தாவின் வரவு.
9. நமக்கு நம் தெருவிலுள்ள பையனோடு பழக்கம் இருக்கும் ;ஆனால், அவனின் தந்தையோடு பழக்கம் இருக்காது! இந்த நிலையை எப்படி அழகிரிசாமி நவில்கிறார் பாருங்கள்-
இவனுடைய அப்பாவை வீதியிலும் பஸ் ஸ்டாண்டிலும் ஆயிரம் தடவைகள் பார்த்திருக்கிறேன். ஒரு தடவைகூட நாங்கள் பேசிக் கொண்டதில்லை. ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் என்று எவ்வித சைகை ஜாடையின் மூலமாகக் கூடக் காட்டிக் கொண்டதில்லை. அப்படியிருக்க அங்கு நான் எப்படிப் போவது?
பையனின் வீட்டுக்குப் போவது தனக்குத் தயக்கமாக இருக்கிறது எனக்கூற வந்தவர் அதனை எப்படி தீட்டிக் காட்டுகிறார் பாருங்கள்!
10. ‘வீட்டுக்கு வாருங்கள்’ என்று கூறிக் கூடவே, நண்பரான ஆசிரியருடன் சேர்ந்து சென்ற சிறுவன் , வீடு வந்ததும் என்ன செய்தான்? அழகிரிசாமி வடிக்கிறார் பாருங்கள்!:
இருவரும் கைகோத்துக்கொண்டே சென்றோம். அவன் வீட்டுக்கு முன்னால் போனதும், என் கையை விட்டுவிட்டு வீட்டுக்குள்ளே வேகமாக ஓடினான். அப்புறம் வெளியில் வந்து வாசல் பக்கத்திலுள்ள அறையைத் திறந்து, “வாருங்கள், வாருங்கள்” என்று படபடப்பாக இரைந்து சொன்னான்.
கூடவே வந்தானாம்; வீடு வந்ததும் சடக்கென்று கையை உதறிவிட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடினானாம்! தொடர்ந்து, ‘வாருங்கள் வாருங்கள்’ என்று மெதுவாகக் கூறவில்லையாம்! படபடப்பாகவும் இரைந்தும் கூறினானாம்! இதுதான் காட்சிச் சித்திரிப்பு என்பது! இதுதான் ஒரு நிகழ்வை உரைநடையில் கூறுவதற்கும், சிறுகதையில் தீட்டுவதற்கும் உள்ள வேறுபாடு!
11. சாரங்கன் என்ற அச் சிறுவனால் அழைக்கப்பட்டுச் சாரங்கன் வீட்டு அறையில் உட்கார்ந்திருந்தபோது, உள்ளே சாரங்கணின் தந்தை எட்டிப்பார்த்து என்ன செய்தார்? இங்கே ஒரு நுட்பம்! அழகிரிசாமி தூரிகை ஓட்டம் :
அப்போது வெளியிலிருந்து வந்த அவனுடைய தகப்பனார், அறைக்குள் எட்டிப் பார்த்தார். என்னைப் பார்த்து “வாருங்கள்” என்று சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டார். “என்ன விசேஷம்?” என்று என்னை அவர் விசாரிக்காமல் விட்டது எனக்கு ராஜமரியாதை செய்தது போல் இருந்தது.
சாரங்கனின் தந்தை ஆசிரியரைப் பார்த்து ‘எதற்கு வந்தீர்கள்? ’ என்றெல்லாம் கேட்கவில்லையாம்! அப்படிக் கேட்டிருந்தால், வளைந்து நெளிந்து, ‘பையன் ஆசையாகக் கூப்பிட்டான்’ என்றோ, ’சும்மாதான் என்றோ ’ எதுஎதையோ கூறவேண்டி வந்திருக்கும்! அது எதுவுமில்லாமக் ‘வாருங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டது ஆசிரியருக்கு ’ராஜமரியாதை’ செய்தது போல இருந்ததாம்!உண்மையில் இப்படியெல்லாம் கு.அழகிரிசாமி எழுதிக்காட்டுவது, நமக்கு ‘ராஜமரியாதை’ செய்வதுபோல இல்லை?
முற்றிலும் சிறார்களை மையப்படுத்திக் கதை இருந்தாலும், உலகில் ‘அன்பு’ என்றால் என்ன? என்கிற பெரிய வினாவை நம் மண்டையில் போடுகிறது ‘அன்பளிப்பு’ச் சிறுகதை!
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’
» சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’
» சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|