ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சிவசிவ ''சாமியார்....

2 posters

Go down

'சிவசிவ ''சாமியார்.... Empty 'சிவசிவ ''சாமியார்....

Post by krishnaamma Thu Feb 03, 2022 8:26 pm

சிவசிவ சாமியார் என்பவர்,
‘சிவசிவ’ என்று எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பார்.

இதைத்தவிர வேறு எதையும் பேசாத அவர்,
ஊரார் கொடுக்கும் உணவை மட்டும் ஏற்றுக் கொள்வார்.

அந்த துறவியை வேறு ஏதாவது
பேச வைக்க வேண்டும் என ஒரு இளைஞன் திட்டமிட்டான்.

அதற்காக தன் நண்பனின் உதவியை நாடினான்.
இருவரும் துறவி இருக்குமிடம் வந்தனர். அவரிடம் பேச்சு கொடுத்தனர்.

அவர் பதிலேதும் சொல்லவில்லை. அவருக்கு கோபம் வரும் வகையில் கடுமையான வார்த்தைகளைப் பேசினர்.

அப்போதும் அவர் அமைதியாகவே இருந்தார். பொறுமையிழந்த அவர்கள், ‘இருவரும் சண்டையிடுவது போல கைகலப்பில் ஈடுபடுவோம்.
அப்போது இவர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்’ என்று முடிவெடுத்தனர்.

இருவரும் சண்டையிட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் நிலைமை தலைகீழானது.
விளையாட்டு வினையாகும் என்பார்களே....

அதன்படி, ஒருவன் தற்செயலாக இன்னொருவனை பலமாக அடிக்க, அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

பதிலுக்கு அவன் தன் நண்பனை பலமாகத் தாக்க, பொய் சண்டை நிஜமான சண்டையானது.
இதில் ஒருவனுக்கு உடம்பே வீங்கி விட்டது.

ஊர் பஞ்சாயத்தாரிடம் நடந்ததைச் சொல்லி முறையிட்டான்.

பஞ்சாயத்தார், “இருவரின் சண்டையை நேரில் பார்த்த சாட்சி யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டனர்.

“இருக்கிறாரே.... ஊரிலுள்ள சிவசிவ சாமியார் கேளுங்கள்.
உண்மை தெரியும்” என்றனர்.

“வாயே திறக்காத சிவசிவ சாமியார் எப்படியப்பா நடந்ததைச் சொல்வார்?” என்றார் பஞ்சாயத்து தலைவர்.

“சாமியார் மட்டும் தாங்க சாட்சி. வேற யாரும் சண்டையைப் பார்க்கவில்லை” என்று இருவரும் சொன்னதால்,

வேறு வழியின்றி சிவசிவ சாமியார் பஞ்சாயத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இதைக் கேள்விப்பட்ட ஊர் மக்களும் சாமியார் பேசுவதைக் காணத் திரண்டனர்.
அவரை வணங்கிய பஞ்சாயத்து தலைவர்,

“சாமி! நீங்க தான் நடந் ததைச் சொல்ல வேண்டும்” என்றார்.

துறவியும் தலையசைத்து நடந்ததைச் சொல்ல முன் வந்தார்.

இளைஞர் இருவருக்கும் மனதிற்குள் மகிழ்ச்சி உண்டானது.

“பரவாயில்லையே! தங்களுக்குள் நிஜமாகவே சண்டை ஏற்பட்டாலும் சாமியார் மவுனத்தை கலைக்கப் போறாரே!” என்ற ஆவலுடன் அவர் என்ன சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்து நின்றனர்.

அப்போது துறவி இருவரையும் கையால் சுட்டிக் காட்டியபடி,

“இச்சிவத்தை அச்சிவம் சிவ! அச்சிவத்தை இச்சிவம் சிவ!

இச்சிவமும் அச்சிவமும் சிவசிவ” என்றார்.

ஒன்றும் புரியாததால் பஞ்சாயத்து தலைவர் விழித்தார்.

அப்போது பெரியவர் ஒருவர்,

“இவன் அவனை அடித்தான். அவன் இவனை அடித்தான்.
அதன் பின் இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்,” என்று விளக்கமளித்தார்.

இதைக் கேட்டதும் இளைஞர் இருவரும் துறவியின் காலில் விழுந்தனர்.

“துறவியே! தாங்கள் மனதிற்குள் மட்டுமல்ல! வாய் திறந் தாலும் சிவ நாமமே சொல்கிறீர்கள். இந்த மனப்பக்குவம் யாருக்கு வரும் இனி நாங்களும் எங்களால் முடிந்தவரை சிவநாமம் சொல்லுவோம்.

இருப்பினும், உங்களுக்கு இடைஞ்சல் தந்த எங்களுக்கு தக்க தண்டனையை நீங்களே கொடுங்கள்,” என்றனர்.

மனம் திருந்திய இளைஞர்களை அன்புடன் தழுவிக் கொண்டார் துறவி.

அங்கு கூடியிருந்த மக்களும் துறவியை வணங்கினர்.

‘சிவசிவ’ என்று துறவி சொல்ல, அங்கிருந்த எல்லாரும் சிவநாமத்தை முழங்கினர்.

சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
சிவ சிவ என்றிட தீவினைமாளும்
சிவ சிவ என்றிட தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே.

ஓம் நமசிவாய !

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'சிவசிவ ''சாமியார்.... Empty Re: 'சிவசிவ ''சாமியார்....

Post by T.N.Balasubramanian Thu Feb 03, 2022 9:00 pm

சிவ சிவா சிவ சிவா இன்று சிவ மயம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'சிவசிவ ''சாமியார்.... Empty Re: 'சிவசிவ ''சாமியார்....

Post by krishnaamma Thu Feb 03, 2022 9:06 pm

T.N.Balasubramanian wrote:சிவ சிவா சிவ சிவா இன்று சிவ மயம்.
மேற்கோள் செய்த பதிவு: 1357375

ஆமா...ஆமாம்... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இப்படித் தினமும் இருந்தால் நல்லா இருக்கும்.... குதூகலம் குதூகலம் குதூகலம் ............. ஜாலி ஜாலி ஜாலி ............ கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'சிவசிவ ''சாமியார்.... Empty Re: 'சிவசிவ ''சாமியார்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum