ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை மாணவி தற்கொலை.----உளவியல் நிபுணர் ஆலோசனை

Go down

கோவை மாணவி தற்கொலை.----உளவியல் நிபுணர் ஆலோசனை Empty கோவை மாணவி தற்கொலை.----உளவியல் நிபுணர் ஆலோசனை

Post by T.N.Balasubramanian Mon Nov 15, 2021 5:13 pm

கோவை மாணவி தற்கொலை...இதை செய்யுங்க ஒருத்தன் கிட்ட வரமாட்டான்..மாணவிகளுக்கு உளவியல் நிபுணர் ஆலோசனை
கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி மாறியபின்னும் தற்கொலை செய்யும் அளவுக்கு மாறிய மாணவியின் மனநிலை, உளவியல் ரீதியான பார்வை, மாணவ-மாணவியர், பெற்றோர், பள்ளி நிர்வாகம் குறித்த வழிகாட்டுதல்களை உளவியல் நிபுணர் தெரிவித்துள்ளார். என் உடம்பு, என் மனது யாரும் ஆளுமை செய்ய அனுமதிக்க மாட்டேன் என்கிற மன நிலையை வலியுறுத்துகிறார் உளவியல் நிபுணர்.

கோவை மாணவி தற்கொலை ஏற்படுத்திய அதிர்வலை
கடந்த வாரம் தமிழகத்தை அதிர வைத்த ஒரு சம்பவம் கோவை மாணவி தற்கொலை விவகாரம். ஆசிரியரால் தனக்கு நேர்ந்த செக்ஸ் டார்ச்சரை வெளியில் சொல்ல முடியாமல் தவித்த மாணவி இறுதியில் தேர்ந்தெடுத்தது தற்கொலை. தன்னுயிரை மாய்ப்பது கொடூரமான நிகழ்வு. அதிலும் சமூக அவலத்தால் அந்நிலைக்கு 17 வயது மாணவி தள்ளப்பட்டது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு.

நன்றி தட்ஸ்தமிழ்
தொடருகிறது


Last edited by T.N.Balasubramanian on Mon Nov 15, 2021 5:36 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கோவை மாணவி தற்கொலை.----உளவியல் நிபுணர் ஆலோசனை Empty Re: கோவை மாணவி தற்கொலை.----உளவியல் நிபுணர் ஆலோசனை

Post by T.N.Balasubramanian Mon Nov 15, 2021 5:18 pm

----2-----
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும், இதுகுறித்து தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைத்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. அவர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளனர். பலமுறை பல்வேறு சம்பவங்களில் திரும்ப திரும்ப வலியுறுத்தினாலும் பெற்றோரும், சக மாணவர்களும், பள்ளி தலைமையும் இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டியதன் விளைவே ஒரு மாணவி உயிரிழக்கும்நிலை உருவாகியுள்ளது.

வருந்தத்தக்க இந்நிகழ்வு குறித்து இதுபோன்ற விஷயங்களில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை தரும், அரசின் 104 ஹெல்ப் லைனில் ஆலோசகராக பணியாற்றிய உளவியல் நிபுணர் இளையராஜாவிடம் இது குறித்து ஒன் இந்தியா தமிழ் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

பல முறை தமிழகத்தில் எங்காவது ஒரு இடத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்து வருகிறது, கோவை மாணவி தற்கொலை விவகாரம் பெரிதாக எழுந்துள்ளது, தற்போது இந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை, சக மாணவருக்கு தெரிந்தும் நடவடிக்கை இல்லை ஏன்? இந்த விவகாரத்தை பார்க்கும்போது இதில் என்ன செய்திருக்கலாம், பெற்றோரும் என்ன செய்திருக்கலாம் என்று பார்க்கும்போது இதுமாதிரி பாதிக்கப்படும் மாணவ-மாணவியர் ஒரு விஷயத்தை தெளிவாக தெரிந்துக்கொள்ளவேண்டும். மாணவ-மாணவியர் செய்ய வேண்டியது

நாம் முதலில் நம்மை நிர்வாகிக்கும் புரிதல் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது என் உடம்பு, என் மனது என்கிற ஒரு உறுதி வரவேண்டும். இந்த ஆளுமையில் நம் மனதை, நம் உடம்பை பாதிக்கும் விதத்தில் யார் தொந்தரவு செய்யவும் அனுமதிக்க மாட்டேன் என்கிற மன நிலையில் வளரவேண்டும். அப்படி மீறி உடம்புக்கோ, மனதுக்கோ ஆசிரியர் அல்லது நெருங்கிய உறவினர்களால் தொந்தரவு இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக தனது பெற்றோர் அல்லது காப்பாளருக்கு தகவல் தெரிவித்து விடவேண்டும்.

------3-----


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கோவை மாணவி தற்கொலை.----உளவியல் நிபுணர் ஆலோசனை Empty Re: கோவை மாணவி தற்கொலை.----உளவியல் நிபுணர் ஆலோசனை

Post by T.N.Balasubramanian Mon Nov 15, 2021 5:25 pm

---3---
பெற்றோரின் தவறான நம்பிக்கை இங்கு என்ன தவறான நம்பிக்கை உள்ளது என்றால், அந்த ஆசிரியர் அப்படி செய்திருக்க மாட்டார், அந்த உறவினர் அப்படி செய்திருக்க மாட்டார் என்று பெற்றோர் நம்புவது. அல்லது இதுகுறித்து கேட்டால் கல்வி பாதிக்குமோ, மானம் மரியாதை போகுமோ, வெளியில் தெரிந்து திருமணம் பாதிக்குமோ என்று பயப்படுவது. பெற்றோர், நட்பு வட்டம் நிராகரிப்பால் ஏற்படும் பாதிப்பு இப்படி பெற்றோர் காதுகொடுத்து கேட்காமல் நிராகரிப்பதால் இந்த விஷயம் வெளியில் செல்லாமல் சம்பந்தப்பட்ட மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகரித்திருக்கும், இதனால் படிப்பில் கவனம் குறைந்திருக்கும், பள்ளிக்கு செல்வதில் வெறுப்பு அதிகரித்து அழுத்தம் அதிகரித்திருக்கும். தன்மீதே வெறுப்பு வந்திருக்கும், பய உணர்வுடன் இருந்திருக்கலாம். சகிப்புத்தன்மை மீறும்போது எடுக்கும் முடிவு இது அதிகரிக்கும்போது சகிப்புத்தன்மை குறைந்து வெடிக்கும் மன நிலைக்கு வருபவர்கள் தன்னை வெளிப்படுத்தி பகீரங்கமாக புகார் அளிப்பார்கள், சிலர் மனதுக்குள் வைத்து புளுங்கி தற்கொலை முடிவை தேடுவார்கள். கோவை மாணவி பள்ளியை மாற்றிய பின்னரும் அதே மன நிலையில் இருந்து தற்கொலை செய்ய என்ன காரணம்? ஸ்கூல் மாறியதற்கு சரியான காரணம் தெரியவில்லை. இதற்கு பெயர் trauma என்று சொல்வோம். மனதில் போட்டு உருட்டிக்கொண்டே இருப்பது, அதையே நினைத்து மன அழுத்தத்தில் இருப்பது. நடந்த சம்பவங்களை மறக்க முடியாது. ஒருவேளை அந்த மாணவி வளர்க்கப்பட்ட விதம் அல்லது சந்தித்த அனுபவங்கள் ஒருவேளை அனைத்து ஆண்களும் இப்படித்தானா என்கிற மனநிலையில் இருந்திருக்கலாம். இரண்டாவது அப்பா, அம்மாவுடன் தொடர்ச்சியாக ஒரு வாக்குவாதம் இருந்துக்கொண்டே இருந்திருக்கலாம், நட்பு வட்டாரமும் சரியாக காதுகொடுத்து கேட்காமல் இருந்திருக்கலாம். இதனால் நாம் சொல்வது எங்கேயும் கேட்கப்படவில்லையே என்கிற எண்ணம் இம்முடிவைத்தேட காரணமாக அமைந்திருக்கும்.

இதுபோன்ற சூழ்நிலையைச் சந்திக்கும் மாணவ மாணவியருக்கு, பெண்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? நாம் முன்னரே சொன்னதுபோன்று ஒரு ஆளுமையில் இருக்கவேண்டும். நம் உடல், நம் மனதை யாரும் நம் அனுமதியின்றி நெருங்க இடம் தரக்கூடாது. யாராக இருந்தாலும் பெற்றோரைத்தவிர மற்றவர்களிடம் சோஷியல் டிஸ்டன்ஸ் (இடைவெளி) கடைபிடிக்கவேண்டும். மேலை நாடுகளில் தந்தையையே கிட்ட நெருங்க விடுவதில்லை. அங்கு ஸ்டெப் ஃபாதர் கலாச்சாரம் உள்ளதால் இதை கடை பிடிக்கிறார்கள். அதேப்போன்று ஆசிரியர், ஆண்களிடம் இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். தவறாக நடப்பதாக தெரிந்தால் உடனடியாக பெற்றோர் அல்லது சக நண்பர்களிடம் புகார் அளித்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும். வலைதள நண்பர்கள் என்பதைத்தாண்டி நேரடி நட்புகள் நம்பகமான நட்புகளை வலுப்படுத்தி அவர்களிடம் பிரச்சினையை பேசலாம். அதன்மூலம் மன அழுத்தம் குறையும், பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

-----4----


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கோவை மாணவி தற்கொலை.----உளவியல் நிபுணர் ஆலோசனை Empty Re: கோவை மாணவி தற்கொலை.----உளவியல் நிபுணர் ஆலோசனை

Post by T.N.Balasubramanian Mon Nov 15, 2021 5:34 pm

---4----

பள்ளி நிர்வாகத்திற்கு, ஆசிரியர்களுக்கு என்ன அறிவுரை? ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகம் மூலம் உளவியல் சார்ந்த (faculty development program) நடத்த வேண்டும். அவர்களுக்கும் இதுபோன்ற மறைமுக தாக்கம் இருக்கும். ஆசிரியர்கள் பலர் மாணவிகளிடம் நெருங்கி பழகி குடும்ப விவகாரங்களை தெரிந்துக்கொண்டு தொந்தரவு செய்தால் யாரும் வரமாட்டார்கள் என்கிற தைரியத்தில் தொடர் தொந்தரவு தருவார்கள். இதன்மூலம் அவர்களை நெறிப்படுத்த முடியும். அதை தடுக்க பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளி நிர்வாகம் என்ன நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும்? ஒவ்வொரு பள்ளியிலும் ஹராஷ்மெண்ட் கமிட்டி ஒன்று இருக்கவேண்டும், ஐடி செக்டாரில் வந்துவிட்டது. பள்ளி நிர்வாகம் மாணவ -மாணவியர் குறைகளை தெரிவிக்க தகுந்த கவுன்சிலர்களை, நம்பகமானவர்களை பள்ளியில் நியமிக்க வேண்டும். அல்லது ஏதாவது ஹெல்ப்லைன் எண் கொடுத்து புகார் பெறலாம். ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்கவேண்டும். அந்த இடத்தில் சிசிடிவி கேமரா இருக்கக்கூடாது. இப்படி செய்தால் ஏதோ ஒரு வகையில் புகார் நிர்வாகத்தை வந்துச் சேரும். இதன்மூலம் ஏதாவது ஒரு ஓட்டையையாவது அடைக்க முடியும். மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை எந்த வயதில் ஆரம்பிக்கலாம்

6 ஆம் வகுப்பிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும், எனக்கு கிடைத்த அதிர்ச்சிகரமான அனுபவம் ஒரு ஆர்மி பள்ளியில் இதுபோன்ற ஒரு விழிப்புணர்வு சம்பந்தமாக 6 ஆம் வகுப்பு மாணவிகளிடம் எடுத்தேன், ஏகப்பட்ட புகார்கள் என்னிடம் சொன்னார்கள். பலர் கதறி அழுதனர். அவர்கள் பெற்றோர், ஆசிரியர்களிடம் சொல்ல மாட்டார்கள், என் போன்ற உளவியல் நிபுணர்களிடம் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் சொல்வார்கள். ஆகவே 6 ஆம் வகுப்பிலிருந்தே ஆளுமையை, குட் டச், பேட் டச் தொடுதல் குறித்த பார்வை, என் உடம்பு, என் மனது இதை யாரும் ஆளுமை செய்ய விட மாட்டேன் என்பதை இயக்கமாக மாற்ற வேண்டும். அது மாறுதலைத்தரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

===========================


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கோவை மாணவி தற்கொலை.----உளவியல் நிபுணர் ஆலோசனை Empty Re: கோவை மாணவி தற்கொலை.----உளவியல் நிபுணர் ஆலோசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உளவியல் நிபுணர் எச்சரிக்கை சிறுவர்கள் இணைய தளத்திற்குஅடிமையா?
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» திங்கட்கிழமை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர்
» பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? முற்பிறவிக்கு சென்று வர பயிற்சி பெற விருப்பமா? உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தர்
» "ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளவில்லை': பிரிட்டன் வரலாற்று நிபுணர் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum