ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள்

3 posters

Go down

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் Empty வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள்

Post by ayyasamy ram Fri Jul 09, 2021 12:03 pm

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் 201702231021379028_goal-of-life-to-live_SECVPF
இளைய தலைமுறையே, ஊக்கமும் உறுதியும்
உயர்ந்த உள்ளமும் கொண்டவர்களாக வாழுங்கள்!
எண்ணியதை எண்ணியவாறு அடையுங்கள்.

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள்
வாழ்க்கையை இருவகையாக வாழலாம். இப்படித்தான் வாழவேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்வது, எப்படியும் வாழலாம் என்ற மனம் போனபடி வாழ்வது. பண்பாளர், நன்னெறியாளர் தேர்ந்தெடுப்பது முதல் வகை வாழ்க்கையையே.

‘பெற்றோரைக் கொடுப்பது விதி

வாழ்க்கையை அமைப்பது மதி’

வாழ்க்கையை வகுத்துக்கொள்ளத் தெரியாமல் எப்படியோ வாழ்ந்து, நிலைதடுமாறி, எண்ணியது கிடைக்காமல், மனம் வெறுத்து, தளர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் இளைய தலைமுறையை கண்டு மனது பதறுகிறது, கலங்குகிறது.

மனதில் உறுதி, வாக்கினில் இனிமை, நல்ல நினைவு இருந்தால் நினைத்தது கிடைக்காமல் போய்விடுமா என்ன?. சிலர் கூறுவர், இது நடக்க வேண்டும் என்று நினைத்தேன், நடந்து விட்டது என்பர். அவரிடம் உள்ள மந்திர சக்தியா அதை நடத்தியது? இல்லவே இல்லை. அவர் எதை அடைய வேண்டும் என்று நினைத்தாரோ, அதை எண்ணத்தை மிகத்தீவிரமாக மனதில் புதைத்து ஆழ்மனதில் மூலம் அந்த செயல் நடைபெற வேண்டும், அதில் தான் வெற்றி பெற வேண்டும் என்று விடாது எண்ணியதின் விளைவு தான் மந்திரச்செயல் போல் நடக்கிறது.

நம் வள்ளுவர் பெருந்தகையும்.

‘எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்’

என்று கூறுகிறார். எண்ணத்தில் திண்மை இருந்தால் நினைத்தது கட்டாயம் நடக்கும். நல்லதை நினையுங்கள், உறுதியாக எண்ணுங்கள், வெற்றி உங்கள் கையில்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் Empty Re: வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள்

Post by ayyasamy ram Fri Jul 09, 2021 12:03 pm

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் 5EEC171C-F903-423B-BF70-AE946FB6817E_L_styvpf
வயது முதிர்ந்த நிலையில் நாவுக்கரசர் இறைவனை கயிலையில் காண விரும்பி பயணம் மேற்கொண்டார். நடை தளர்ந்தது, உள்ளம் தளரவில்லை. உடலுறுப்புகள் தேய்ந்தன, ஊக்கம் தேயவில்லை. படுத்த நிலையில் ஊர்ந்து செல்லும் நாவுக்கரசரைக் காணப்பொறுக்காத இறைவனே அந்தணனாக வடிவெடுத்து முயற்சியை கைவிடுமாறு வேண்டியும்,

‘ஆளும் நாயகன் கயிலை இருக்கைக் கண்டல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்’

என்று மறுத்தார்.

அந்த உறுதிக்கு இறைவனே பணிந்து திருவையாற்றில் கயிலைக் காட்சியை அவருக்கு அருளினார்.

மார்க்கண்டேயர் கதையும் அனைவருக்கும் தெரியும்.

‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும்’

என்ற குறளுக்கு எடுத்துக்காட்டு மார்க்கண்டேயர்.

வள்ளுவரை காண வந்த ஒருவர் ஐயா விதி என்னை வஞ்சித்து விட்டதே! நான் இனி எப்படி வாழ்வேன்? என்று புலம்பினார்.

வள்ளுவரும்

ஊழிற் பெருவலி யாவுள?

என்று விதியை ஏற்றுக்கொண்ட அவர், அத்தோடு நிறுத்தி விடவில்லை. உடனே விடாமுயற்சி இருந்தால் விதியையும் மதியால் வென்று விடலாம் என்று பதிலளிக்கிறார். ஊக்கம் இருந்தால் ஆக்கம் எங்கே எங்கே என்று வழிகேட்டு நம்மைத் தேடி ஓடிவரும்.

இளைய தலைமுறையினரே!

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்

என்பதை மனதில் ஏற்றிக்கொண்டு வாழ்ந்தால் அந்த தற்கொலையல்லவா தற்கொலை செய்துகொள்ளும்!

நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. நமது வாழ்க்கை நம்மை சுற்றி வாழ்கின்ற பல உயிரினங்களுடன் தான் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. நாமும் வாழ வேண்டும், பிற உயிர்களையும் வாழ விட வேண்டும்.

குருவி, கழுகு, புலி, காண்டாமிருகம் போன்ற பல உயிரினங்கள் அருகி வரும் உயிரினமாக அஞ்சப்படுகிறது. இதற்கு யார் காரணம்? நமது வாழ்வியல் முறைகளும், பேராசையும் தானே?. மனிதர்கள் வாங்கி வைக்காத மண்ணின் விசிறிகளாக பாதசாரிகளின் பணிமனை கூடங்களாக மானிட ஆண்மைக்கு மண் கொடுத்த சீதனங்களாக இருந்த மரங்கள் இன்று பல்வேறு காரணங்களுக்காக அழிக்கப்பட்டு வருகின்றன.

எண்ணிப்பாருங்கள், இளைய தலைமுறையே, ஊக்கமும் உறுதியும் உயர்ந்த உள்ளமும் கொண்டவர்களாக வாழுங்கள்! எண்ணியதை எண்ணியவாறு அடையுங்கள்.

நம் வாழ்க்கையோடு ஒன்றி வாழும் பிற உயிரினங்களிடமும் அன்பு கொண்டு அவற்றையும் வாழ விடுங்கள்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் Empty Re: வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள்

Post by Dr.S.Soundarapandian Fri Jul 09, 2021 5:40 pm

" வெற்றி உங்கள் கையில்."-

'நம்ம கையில் என்ன இருக்கிறது?' என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் இந் நேரத்தில் , ‘வெற்றி உங்கள் கையில்’ என்று சொன்னீர்களே - வாழ்க!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் Empty Re: வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள்

Post by T.N.Balasubramanian Fri Jul 09, 2021 6:35 pm

இளைய தலைமுறையே, ஊக்கமும் உறுதியும்
உயர்ந்த உள்ளமும் கொண்டவர்களாக வாழுங்கள்!
எண்ணியதை எண்ணியவாறு அடையுங்கள்.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் Empty Re: வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum