ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Go down

தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Empty தவம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Sun May 23, 2021 5:16 pm

தவம்!

நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

வெளியீடு : ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98.
பக்கங்கள் : 30, விலை : ரூ.50

******
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் நூல் படித்தால் நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ள, மேன்மைப்-படுத்திக் கொள்ள உதவும். அந்த வகையில் இந்த நூலும் வாசக மனதில் உள்ள விலங்குகுணம் அழித்து மனிதநேயம், அன்பு, கருணை விதைக்கும் நூலாக உள்ளது.

இந்த நூலை மதுரை புத்தகத் திருவிழாவில் மாமனிதர் எளியவர் நல்லவர் நேர்மையாளர் நல்லக்கண்ணு அவர்களிடம் ‘கையொப்பம்’ வாங்கி வாங்கிய நூல். பொருத்தமான நூலை பொருத்தமான மனிதரிடமிருந்து பெற்றது பெருமை. அவரும் அரசியல் வாழ்க்கையை தவமாகவே எண்ணி வாழ்ந்து வரும் தூயவர்.

‘‘ஒரே செயலில் சிந்தனை சிதறாமல் ஈடுபடுவதே தவம். எடுத்த காரியம் முடியும் வரை அடுத்த செயல் பற்றிச் சிந்திக்காமல் அதிலேயே அமிழ்ந்து மூழ்கி முத்தெடுத்த பிறகே வெளியே வருவது தான் தவமாகக் கருதப்படுகிறது’’

நூலின் தலைப்பு ‘தவம்’ என்றவுடன் கண்ணை மூடி தினமும் புலித்தோல் மீது அமர்ந்து தவம் செய்திடச் சொல்வாரோ? என்று அய்யம் கொண்டு நூலைப் படித்தேன். நூலின் தொடக்க வரிகளிலேயே தவம் பற்றிய விளக்கம் தந்து வியப்பில் ஆழ்த்தி விட்டார்.

நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வேடு தயாரிக்க ஒரு மாதம் விடுப்பு எடுத்து மதுரைக்கு வந்திருந்தார். அறையில் தங்கியிருந்த போது அலைபேசியை அணைத்து விட்டார். செய்தித்தாள் எதுவும் வாசிக்கவில்லை. முகச்சவரம் கூட செய்யாமல் தாடி வளர்த்து இருந்தார். ஆய்வேடு தயாரிக்கும் பணியில் தன்னை ஒரு முனிவர் போல முற்றும் துறந்து அதில் ஈடுபட்டு அதாவது தவம் செய்து மூழ்கி முத்தெடுத்து வெற்றி பெற்றார்.

அந்த நிகழ்வு என் நினைவிற்கு வந்தது. ஊருக்குத் தான் உபதேசம் என்று இல்லாமல் எழுதுவதை வாழ்க்கையில் அவரும் கடைப்பிடிக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு இது.

நூலில் இருந்து பதச்சோறாக சில துளிகள் உங்கள் பார்வைக்கு இதோ

“தவம் வேறு பாசாங்கு வேறு” சைவ உணவு உண்பதைப் போல வேசமிடுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு முகத்தை வைத்திருப்பார்கள். நல்லவர்களாக ஆகிவிட்டதைப் போல நடிக்கிற போக்கிரிகளும், திருந்தி விட்டதாய் சாதிக்கும் போக்கிரிகளும் சில நாட்கள் உத்தமர்களை விட அதிகமாக புனிதமானவர்களாகக் காட்டிக் கொள்வார்கள். ஆனால் தக்க தருணத்தில் மீனைப் பார்த்ததும் கொத்தும் கொக்கு போல, எலியைப் பார்த்து தாவும் பூனை போல அவர்கள் தவ வேடம் கலைந்து விடும்”.

தவம் செய்வது போல நடிக்கும் போலி மனிதர்களின் முகத்திரையைக் கிழித்து அவர்களின் இயல்பைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். உண்மையில் தவம் செய்வது வேறு, தவம் செய்வது போல நடிப்பது வேறு. இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்த்தி உள்ளார்.

எந்த ஒரு செயலையும் விரும்பி ஈடுபாட்டுடன் செய்வதே தவம் என்கிறார். வேளாண்மையை விரும்பிச் செய்வதும் விளைவிப்பதும் தவம் என்கிறார். பண்டைக்காலத்தில் மாமல்லபுரத்தில் சிலை செதுக்கிய சிற்பி செய்த செயலும் தவம் என்கிறார். பழங்காலத்தில் கோவில்களில் ஓவியம் தீட்டிய ஓவியரின் பணி தவம் என்கிறார்.

“மெஞ்ஞான தவம் மட்டுமல்ல, விஞ்ஞான தவங்களும் நிகழ்ந்தால் தான் இத்தனை மக்கட்தொகையையும் சமாளிக்க முடிகிறது.”

விஞ்ஞானிகள் மனிதகுல வளர்ச்சிக்கு உதவிடும் வண்ணம் கண்டுபிடிக்கும் கருவிகளும் தவத்தின் பயனே என்கிறார்.

முன்பெல்லாம் தேர்வு முடிவுகளை அறிந்திட நாளிதழ்களின் வாசலில் காத்திருந்த காலம் போய் விட்டது. இன்று இணையத்தின் பயனாக கைப்பேசியிலேயே தேர்வு முடிவை தேர்தல் முடிவை அறிந்து கொள்கிறோம். இது போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளும் அறிவியல் அறிஞர்கள் செய்த தவத்தின் பயனே என விளக்கி எழுதி உள்ளார்.


“தனக்காக மட்டுமே தவம் மேற்கொள்கிறவர்கள் மத்தியில் தன்னைத் தேய்த்து மற்றவர்களுக்காக அருந்தவம் புரிகின்ற அவதார மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தலைக்குப் பின்னால் ஒளிவட்டங்கள் இல்லை. அவர்களைச் சுற்றி எப்போதும் இளவட்டங்கள் இருக்கின்றன”.

இந்த வரிகளைப் படித்தவுடன் மாமனிதர் அப்துல்கலாம் என் நினைவிற்கு வந்தார். அவர் தலையைச் சுற்றி ஒளிவட்டம் இல்லை. ஆனால் இளவட்டங்கள் இருந்தார்கள். மாணவ, மாணவியருக்கு தன்னம்பிக்கை விதைப்பதற்கு தன்னலமின்றி ஓடி ஒடி உழைத்தார். அதனால் தான் இறந்த பின்னும் இன்றும், என்றும் நினைக்கப்படுகிறார். போற்றப்படுகிறார் அப்துல்கலாம். தனக்காகத் தவம் செய்பவர்கள் இறந்ததும் இறந்து விடுகின்றனர். பிறருக்காக தவம் செய்பவர்கள் இறந்த பின்னும் வாழ்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை.

காந்தியடிகள் உள்ளிட்ட பல விடுதலைப் போராட்ட வீரர்களின் தன்னலமற்ற தவத்தால் விளைந்தது தான் இந்த விடுதலை என்பதை நன்கு விளக்கி உள்ளார்.

தன்னலம் மறந்து பொதுநலம் பேணவும் உயர்ந்த நிலைக்கு நம்மை உயர்த்திக் கொள்ள பதிவிடும் நூல்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் நூல் என்றால் தனிக்கவனம் செலுத்தி அழகிய வண்ணப்படங்களுடன் நல்ல தாள்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டு விடுகின்றனர். பாராட்டுக்கள்.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சத்சங்கம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வியர்வைக்கு வெகுமதி! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» சின்னச் சின்ன வெளிச்சங்கள் ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இலக்கியத்தில் மேலாண்மை ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அச்சம் தவிர்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum