Latest topics
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu 26 Sep 2024 - 1:21
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் வெற்றி
2 posters
Page 1 of 1
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் வெற்றி
சென்னை,
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று நிறைவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
ரசிகர்கள் இன்றி சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. பெங்களூரு அணியில் தேவ்தத் படிக்கல் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட போதிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரஜத் படிதர் அறிமுக வீரராக இடம் பிடித்தார். மும்பை அணியில் புதுமுக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜேன்சன் (தென்ஆப்பிரிக்கா) ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார்.
‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், கிறிஸ் லின்னும் களம் புகுந்தனர். முதல் 2 ஓவர்கள் நிதானம் காட்டிய இவர்கள் ரன்வேகத்தை துரிதப்படுத்திய சமயத்தில் ரோகித் சர்மா (19 ரன், 15 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் ஆனார். பாதி தூரம் ஓடிவிட்டு திரும்பிய ரோகித் சர்மா கோலி-சாஹல் கூட்டணியால் ரன்-அவுட்டில் வீழ்த்தப்பட்டார். ஐ.பி.எல்.-ல் அவர் ரன்-அவுட் ஆவது இது 11-வது நிகழ்வாகும்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (31 ரன், 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), இஷான் கிஷன் (28 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 49 ரன்னில் (35 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) வாஷிங்டன் சுழலில் அவரிடமே சிக்கினார். ஹர்திக் பாண்ட்யா 13 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
ஆனாலும் மும்பை வீரர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது எளிதில் 170 ரன்களை தாண்டும் போல் தோன்றியது. ஆனால் இறுதிகட்டத்தில் பெங்களூரு பவுலர்கள் கட்டுக்கோப்புடன் பந்து வீசி முடக்கினர். வேகப்பந்து வீ்ச்சாளர் ஹர்ஷல் பட்டேல் வீசிய இன்னிங்சின் கடைசி ஓவரில் மட்டும் ரன்-அவுட் உள்பட 4 வீரர்கள் விக்கெட்டுகளை தாரைவார்த்தனர். இதில் பொல்லார்ட் (7 ரன் ), குருணல் பாண்ட்யா (7 ரன்) ஆகியோரும் அடங்குவர்.
20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தது. கடைசி 4 ஓவர்களில் வெறும் 25 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பீல்டிங்கின் போது விராட் கோலி, முகமது சிராஜ் உள்பட 4 பேர் கேட்ச் வாய்ப்புகளை வீணடித்தனர். இல்லாவிட்டால் மும்பைக்கு இன்னும் சிக்கலாகியிருக்கும். பெங்களூரு தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இது அவரது சிறந்த பந்து வீச்சாகும்.
Re: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் வெற்றி
அடுத்து 160 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூரு அணி ஆடியது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் கேப்டன் விராட் கோலியுடன், வாஷிங்டன் சுந்தர் தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் வாய்ப்பு பெற்றார். 2-வது பந்திலேயே ஸ்லிப்பில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த சுந்தர் 10 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து இறங்கிய ரஜத் படிதர் (8 ரன்) போல்டு ஆனார்.
இதைத் தொடர்ந்து விராட் கோலியும், கிளைன் மேக்ஸ்வெல்லும் ஜோடி சேர்ந்து ஸ்கோரை சீராக உயர்த்தினர். ஸ்கோர் 98 ரன்களை எட்டிய போது (12.3 ஓவர்) விராட் கோலி (33 ரன், 29 பந்து, 4 பவுண்டரி) பும்ராவின் பந்து வீச்சில் எல்.டபிள்யூ. ஆனார். சிறிது நேரத்தில் மேஸ்வெல்லும் (39 ரன், 28 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேற பெங்களூரு அணிக்கு நெருக்கடி உண்டானது.
இதன் பின்னர் டிவில்லியர்ஸ் அதிரடி காட்டி அணியை நிமிர வைத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை இளம் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜேன்சன் வீசினார். இதில் முதல் 3 பந்தில் 4 ரன் எடுக்கப்பட்டது. 4-வது பந்தில் 2-வது ரன்னுக்கு ஓடிய போது டிவில்லியர்ஸ் (48 ரன், 27 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்-அவுட் ஆக, திரில்லிங் எகிறியது. இதையடுத்து 2 பந்தில் 2 ரன் தேவையானது. 5-வது பந்தில் ஒரு ரன் வந்தது. தொடர்ந்து 6-வது பந்தில் ஹர்ஷல் பட்டேல் ஒரு ரன் எடுக்க பெங்களூரு அணி ‘திரில்’ வெற்றியை ருசித்தது.
பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்ஷல் பட்டேல் 4 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இந்த ஆட்டத்தில் பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் 30 வயதான ஹர்ஷல் பட்டேல் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். கடைசி ஓவரில் மயிரிழையில் ஹாட்ரிக் வாய்ப்பை நழுவ விட்ட ஹர்ஷல் பட்டேல் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அட்டகாசப்படுத்தினார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் மும்பை இந்தியன்சுக்கு எதிராக 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார். ஐ.பி.எல்.-ல் இதுவரை இன்னிங்சில் 5 விக்கெட் என்பது 22 முறை பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் விமர்சனத்துக்குள்ளான மேக்ஸ்வெல் (பெங்களூரு அணி வீரர்) இந்த சீசனில் முதல் ஆட்டத்திலேயே சிக்சர் அடித்தார். அதுவும் அது ஒரு மெகா சிக்சராகும். குருணல் பாண்ட்யாவின் ஓவரில் அவர் தூக்கியடித்த பந்து 100 மீட்டர் தூரத்திற்கு பறந்து மைதானத்தின் மேற்கூரையில் போய் விழுந்தது.
மும்பை இந்தியன்ஸ் 5 முறை சாம்பியன் என்றாலும் 2013-ம் ஆண்டில் இருந்து அந்த அணி ஒவ்வொரு சீசனிலும் தங்களது முதல் லீக்கில் தோற்று இருக்கிறது. அந்த பரிதாபம் இந்த முறையும் தொடருகிறது. தொடர்ந்து 9-வது ஆண்டாக தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
தினத்தந்தி
Re: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் வெற்றி
நாற்காலியின் நுனியில் உட்கார்ந்து பார்க்கத்தூண்டிய
கடைசி நான்கு ஓவர்கள்.
யாருமில்லா ஸ்டேடியத்தில் இரவு 7 1/2 மணிக்கு விளையாட்டை
ஆரம்பிக்கவேண்டிய அவசியம் என்ன என்று புரியமாட்டேன் என்கிறது!
7 மணிக்கு ஆரம்பித்து 1100 மணி அளவில் முடிக்கலாம்.
பல சமயங்களில் நாம் நம்முடைய மதியை மதிப்பதில்லை.
செக்குமாடு மாதிரி ஒரே பாதையில் கண்ணை மூடிக்கொண்டு
போகிறோம்.
கிரிக்கெட் வாரியம் சிறிது முன்னேற்றத்தை பற்றி யோசிக்கவும் வேண்டும்.
கடைசி நான்கு ஓவர்கள்.
யாருமில்லா ஸ்டேடியத்தில் இரவு 7 1/2 மணிக்கு விளையாட்டை
ஆரம்பிக்கவேண்டிய அவசியம் என்ன என்று புரியமாட்டேன் என்கிறது!
7 மணிக்கு ஆரம்பித்து 1100 மணி அளவில் முடிக்கலாம்.
பல சமயங்களில் நாம் நம்முடைய மதியை மதிப்பதில்லை.
செக்குமாடு மாதிரி ஒரே பாதையில் கண்ணை மூடிக்கொண்டு
போகிறோம்.
கிரிக்கெட் வாரியம் சிறிது முன்னேற்றத்தை பற்றி யோசிக்கவும் வேண்டும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
» நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் இந்திய அணி ‘திரில்’ வெற்றி
» பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
» முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது
» தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி
» நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் இந்திய அணி ‘திரில்’ வெற்றி
» பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
» முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது
» தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|