ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!

2 posters

Go down

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Empty பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!

Post by ayyasamy ram Sat Jan 16, 2021 7:53 am

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
அறிந்த விளக்கம்:
மிகப் பிரபலமான இந்த பழமொழிக்கு அறிந்த விளக்கம்
சொல்வது என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடுவது
போல.

(பாருங்கள் எடுத்துக்காட்டுக்கு கூட பழமொழியைத் தான்
உபயோகிக்க வேண்டியிருக்கிறது )

பாம்பைக் கண்டால் தனியாக இருக்கும் போது
வேண்டுமானால் நடுங்கிப் போவோம்.
படையோடு இருந்தால் பாம்புக்கு நாம் நடுங்க மாட்டோம்.
பாம்பை நடுங்கவைப்போம் . முடிந்தால் மோட்சம் கொடுத்து
விடுவோம்..
.
சரியான விளக்கம்:
புராண கால போர்களில் வாள்,அம்பு, வேல் இந்த ஆயுதங்கள்
எல்லாம் பயன் படுத்தப்பட்டதற்கு பிறகு போரின் கடைசி
கட்டமாக அல்லது உச்சகட்டமாக பெரிய அழிவைத் தரும்
ஆயுதங்களை பயன்படுத்த தொடங்குவார்கள்.

அதில் ஒன்று நாகாஸ்திரம் என்பது. நாகத்தைப் போல்
வடிவமைகப்பட்டிருக்கும் இது ஏவப்பட்ட இடத்திலிருந்து தன்
இலக்கை அடையும் போது பெரும் சேதத்தை விளைவித்து
நிறைய பேரை அழித்து விடும்.

மகாபாரதத்தில் அர்சுணனே இதை கண்டு பயப்பட்டான்
என்றால் இதை பற்றி மேலும் சொல்ல என்ன இருக்கிறது...?

இதை மிக முக்கியமானவர்கள் மட்டுமே பயன் படுத்துவார்கள்
என்பதால் இதை எடுப்பதை பார்த்தவுடனே எதிராளியினர்
பதறியடித்து பின் வாங்குவார்கள் .என்பதனால் பாம்பைக்
கண்டால் படையும் நடுங்கும் என சொல்லிவைத்தார்கள் .
-
----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Empty Re: பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!

Post by ayyasamy ram Sat Jan 16, 2021 7:54 am

கழுதை கெட்டால் குட்டிச் சுவர்.
-


கழுதையின் தோல் கெட்டால் என்று அர்த்தம்.
அதாவது கழுதையில் தடித்த உடம்புத்தோலில் அரிப்பு அல்லது
புண் போன்று ஏதும் வந்தால் சாதாரணமாக இருக்கும் சுவர்களை
விட பாதி சிதிலமடைந்த சுவர்களை நாடிச் சென்று தன் உடம்பை
அதன்மேல் தேய்த்துக் கொள்ளும்.

காரணம் நல்ல சுவர்கள் சொரசொரப்பு அதிகம் இருக்காது.
எனவே அது குட்டிச் சுவர் என்று சொல்லக் கூடிய சிதிலமடைந்த
சுவர்களையே நாடும் .

இங்கு கெட்டால் என்பது அதன் தோல் கெட்டால் என்று அர்த்தம்.
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது
சந்திப்பது அரட்டையடிப்பது என்று இருப்பவர்களை வீட்டார்கள்
இவ்விதம் குறிப்பிடுவது வழக்கமாகப் போய்விட்டது.

(பின்னால் வாழ்க்கை என்னும் பொதியை சுமக்க
போகிறவர்கள்தானே என்று இளைஞர்/இளைஞிகளை கழுதையாக்கி
பெரியோர்கள் உவமானப் படுத்துக்கிறார்களோ என்னவோ)

--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Empty Re: பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!

Post by ayyasamy ram Sat Jan 16, 2021 7:57 am

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

அறிந்த விளக்கம்:
வாய்ச் சொல்லில் வீரனடி,
அறுக்கத் தெரியாதவன் கக்கத்தில் ஏழெட்டுக் கருக்கருவாள்
போன்ற பதங்களுக்கு என்ன பொருளோ
அதே பொருள் தருவதுபோல் தான் இந்தப் பழமொழியும்
தோற்றமளிக்கிறது .

அதாவது பேச்சு பெருசா இருக்கும்,செயல்ல ஒண்ணும்
இருக்காது என்று இடித்துரைப்பார்களே அதுபோலதான்
இந்த பழமொழியும் உலக வழக்கில் பொருள் கொள்ளப் பட்டு
வருகிறது .

ஆனால் இதன் பொருளை ஆராய்ந்தால் ஒரு அற்புதமான
உடலைப் பற்றிய அறிவியல் விளக்கம் கிடைக்கிறது.
-
அறியாத விளக்கம்:
-
ஒட்டைக் கப்பல் என்பது மனித உடலையும் ஒன்பது மாலுமிகள்
என்பது நம் உடலில் உள்ள பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது ..

எனவேதான் இந்த மனித வாழ்க்கையில் ஒருவனுக்கு மரணம்
நேரும்போது அவனுடைய உயிர் மூச்சு அந்த உடலின் எந்த
ஓட்டைவழியேனும் வெளியேறலாம் என்பதற்காய் பெரியோர்கள்
நிலையற்ற இந்த மனித வாழ்வை குறிக்கும் போது ஓட்டைக்
கப்பலுக்கு ஒன்பது மாலுமி போய் ஆக வேண்டியதைப் பாரப்பா
என்று சொல்லி வைத்தார்கள்
-
---------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Empty Re: பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!

Post by ayyasamy ram Sat Jan 16, 2021 7:59 am

புல் தடுக்கிப் பயில்வான் போல...

புல் தடுக்கி எங்கேயாவது யாரேனும் விழுந்திருப்பதாய்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா...?

புல் தடுக்கி என்பதை நம்பவே முடியாது .. வேண்டுமானால்
சில வகை காட்டுப் புல்கள் அடர்ந்து புதராய் இருக்கும்
இடத்தில் புல் இடறி என வேண்டுமானால் பொருள் கொள்ளலாம்..

சில பழமொழிகள் உபயோகிக்கப் பட்டதற்கு பின்னால்
சில சம்பவங்கள் சொல்லப்படுகின்றன ..
அப்படி ஒரு சம்பவத்தால் வந்ததுதான் இந்த பழமொழி.
இது பழமொழி என்பதை விட உவமை/உவமானப்
பதங்களாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.

அறியாத விளக்கம் :

புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன்
அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்தான்.

ஒரு முறை கானகப் பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர்,
உடனே அதை வேரோடு பிடுங்கி, எரித்து சாம்பலாக்கி –
கரைத்துக் குடித்தாராம்….

எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை
அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர்
சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது.

(டாஸ் மார்க்கில் தடுக்கி விழுவது வேறு ரகம்..
அது புல் இல்லை ஃபுல் )
----
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Empty Re: பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!

Post by ayyasamy ram Sat Jan 16, 2021 8:01 am

எழுதியவன் ஏட்டை கெடுத்தான். படிச்சவன் பாட்டை கெடுத்தான்.

அறிந்த விளக்கம்:

ஏடு என்பது மிகவும் தூய்மையாக இருக்கும்.
அதில் எழுதியவுடன் எழுத்துகள் பதிந்து ஏடு கெட்டுப்
போகும். அதுதான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தது.
இது வஞ்சப் புகழ்ச்சி.

படித்தவன் பாட்டைக் கெடுத்தான். தமிழிசையில்
ஏழு ஸ்வரங்கள். குரல், விழி , துத்தம் என்று ஏழுக்கும்
ஏழு பெயர்கள்.

சரிகமபதநி என்று வரிசையாக ஸ்வரங்கள் ஏறும்.
ஆனால் பாடற்கலையைப் படித்தவன் சுரங்களை
மாற்றிப் போட்டு ஏற்றங்களையும் இறக்கங்களை
முன்னுக்குப் பின் மாற்றி புது மெட்டுகளைக் கண்டு
பிடிப்பார்கள் அல்லவா.
அதுதான் படித்தவன் பாட்டைக் கெடுத்த கதை.

ஆனால் அது அப்படியல்ல,
படித்தவன் பாட்டை கொடுத்தான்...
எழுதியவன் ஏட்டை கொடுத்தான்....
காலத்தால் விடு பட்டு போன துணைக்காலினால்
பழமொழியே மாறிப் போயிற்று..!!
--
ப.பி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Empty Re: பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!

Post by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 2:46 pm

அருமையான விளக்கங்கள், ராம். பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! 103459460 பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! 1571444738


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Empty Re: பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum