Latest topics
» நாளும் ஒரு சிந்தனைby ayyasamy ram Today at 4:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
manikavi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு
Page 1 of 1
கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு
கோவை:
கோவை சங்கனூர் ரோட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் நிலையம் உள்ளது. இங்கே போலீசார் கஞ்சா வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலித்து வந்ததாக புகார் வந்தது.
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவர் தொழிலை விட்டுவிட்டதாக தெரிகிறது. இவர் மீது கடந்த காலங்களில் பல கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த நபரை செல்போனில் அழைத்து, ‘‘இன்னும் நீ கஞ்சா விற்பதாக தகவல் வந்துள்ளது. நாங்கள் கேட்கும் பணத்தை தரவேண்டும். இல்லாவிட்டால் அதிகளவு கஞ்சா இருப்பதாக வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவோம்’’ என மிரட்டியுள்ளனர்.
பயந்து போன அந்த வியாபாரி தனது மனைவி மகேஸ்வரியிடம் சொல்லி புலம்பியுள்ளார். கடந்த வாரம் கஞ்சா வியாபாரி போலீசாரை சந்தித்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். ‘‘நான் கஞ்சா விற்பனை செய்வதில்லை. என் மீது வழக்கு எதுவும் போடவேண்டாம்’’ எனக்கூறி கெஞ்சியுள்ளார்.
ஆனால் போலீசார், ‘‘இந்த தொகை போதாது. மேலும் 70 ஆயிரம் ரூபாய் தரவேண்டும். நாங்கள் 3 பேர் இருக்கிறோம். கஞ்சா விற்று பல லட்ச ரூபாய் சம்பாதித்து இருப்பாய். பணத்தை கொண்டு வந்து கொடு’’ என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கஞ்சா வியாபாரியின் மனைவி மகேஸ்வரி கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அவர்களின் ஆலோசனையின்படி, போலீஸ் கேட்ட 70 ஆயிரம் ரூபாயுடன் மகேஸ்வரி நேற்று மாலை சங்கனூர் ரோட்டில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கே பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் சரோஜினி, ஏட்டுக்கள் ராமசாமி, அருள்குமார் ஆகியோரிடம் பணத்தை கொடுத்து, தனது கணவர் மீது வழக்கு போடவேண்டாம் என கேட்டு கொண்டார்.
அந்த பணத்தை இன்ஸ்பெக்டரும், ஏட்டுகளும் வாங்கினர். அப்போது அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்ெபக்டர் சரோஜினி மற்றும் 2 ஏட்டுக்களை சுற்றி வளைத்து பணத்துடன் பிடித்தனர். 3 பேர் மீதும் லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
அவர்கள் 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சரோஜினி 3 மாதம் முன்தான் போதை பொருள் தடுப்பு பிரிவிற்கு பணியிடம் மாறுதல் பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன் விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கை இவர்தான் விசாரித்தார்.
இதில் இவர் 2 குற்றவாளிகளை பிடிக்கவில்லை என தெரிகிறது. இவர் கோவைக்கு வந்த பின்னர் கஞ்சா விற்பனை வழக்குகள் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கஞ்சா வியாபாரிகளை மிரட்டி பல லட்ச ரூபாய் வசூலித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தினகரன்
கோவை சங்கனூர் ரோட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் நிலையம் உள்ளது. இங்கே போலீசார் கஞ்சா வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலித்து வந்ததாக புகார் வந்தது.
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவர் தொழிலை விட்டுவிட்டதாக தெரிகிறது. இவர் மீது கடந்த காலங்களில் பல கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த நபரை செல்போனில் அழைத்து, ‘‘இன்னும் நீ கஞ்சா விற்பதாக தகவல் வந்துள்ளது. நாங்கள் கேட்கும் பணத்தை தரவேண்டும். இல்லாவிட்டால் அதிகளவு கஞ்சா இருப்பதாக வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவோம்’’ என மிரட்டியுள்ளனர்.
பயந்து போன அந்த வியாபாரி தனது மனைவி மகேஸ்வரியிடம் சொல்லி புலம்பியுள்ளார். கடந்த வாரம் கஞ்சா வியாபாரி போலீசாரை சந்தித்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். ‘‘நான் கஞ்சா விற்பனை செய்வதில்லை. என் மீது வழக்கு எதுவும் போடவேண்டாம்’’ எனக்கூறி கெஞ்சியுள்ளார்.
ஆனால் போலீசார், ‘‘இந்த தொகை போதாது. மேலும் 70 ஆயிரம் ரூபாய் தரவேண்டும். நாங்கள் 3 பேர் இருக்கிறோம். கஞ்சா விற்று பல லட்ச ரூபாய் சம்பாதித்து இருப்பாய். பணத்தை கொண்டு வந்து கொடு’’ என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கஞ்சா வியாபாரியின் மனைவி மகேஸ்வரி கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அவர்களின் ஆலோசனையின்படி, போலீஸ் கேட்ட 70 ஆயிரம் ரூபாயுடன் மகேஸ்வரி நேற்று மாலை சங்கனூர் ரோட்டில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கே பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் சரோஜினி, ஏட்டுக்கள் ராமசாமி, அருள்குமார் ஆகியோரிடம் பணத்தை கொடுத்து, தனது கணவர் மீது வழக்கு போடவேண்டாம் என கேட்டு கொண்டார்.
அந்த பணத்தை இன்ஸ்பெக்டரும், ஏட்டுகளும் வாங்கினர். அப்போது அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்ெபக்டர் சரோஜினி மற்றும் 2 ஏட்டுக்களை சுற்றி வளைத்து பணத்துடன் பிடித்தனர். 3 பேர் மீதும் லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
அவர்கள் 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சரோஜினி 3 மாதம் முன்தான் போதை பொருள் தடுப்பு பிரிவிற்கு பணியிடம் மாறுதல் பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன் விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கை இவர்தான் விசாரித்தார்.
இதில் இவர் 2 குற்றவாளிகளை பிடிக்கவில்லை என தெரிகிறது. இவர் கோவைக்கு வந்த பின்னர் கஞ்சா விற்பனை வழக்குகள் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கஞ்சா வியாபாரிகளை மிரட்டி பல லட்ச ரூபாய் வசூலித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தினகரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|