Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்!
Page 1 of 1
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்!
![அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Vikatan%2F2020-07%2F6eeff055-6d66-4c33-99bd-3e24d86058e5%2Fkid_165256_1920.jpg?rect=0%2C0%2C1920%2C1080&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2020-07%2F6eeff055-6d66-4c33-99bd-3e24d86058e5%2Fkid_165256_1920.jpg?rect=0%2C0%2C1920%2C1080&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1.0)
-
என் மகன் கேட்பதையும் பொருட்படுத்தாமல்,
அங்கே அமர்ந்திருந்த குடும்பத்திலிருந்த ஒரு நடுத்தர
வயது ஆண், அந்தப் பந்தை தூரத்தில் விட்டெறிந்தார்.
பந்து இருள் கவ்விக்கிடந்த ஒரு வேலியிட்ட இடத்தில்
விழுந்தது.
சகோதரி குடும்பம், நண்பர்கள் குடும்பத்துடன் ஒரு
சுற்றுலா தலத்துக்குச் சென்றிருந்தோம். இப்படியோர்
அரிதான நாள், மூன்றாண்டுகளுக்குப் பின் எங்களுக்கு
அமைந்திருந்தது.
இரண்டு எஸ்.யூ.வி கார்களில், அந்த இரண்டு நாள்
சுற்றுலாவுக்குக் கிளம்பினோம்.
முதல் நாள் பகல் இனிதாகக் கழிந்தது. எங்கள்
பிள்ளைகளுடன் ஒரு குட்டித்தீவு போன்ற இடத்தில் கடலில்
குளித்து, மணலில் ஆடி, வகை வகையாகத்
திண்பண்டங்கள் உண்டு மகிழ்ந்தோம்.
மாலையில் ஒரு பூங்காவில் கூடினோம். அது விளையாட்டுத்
திடல் அல்ல. இருந்தும் சிறுவர்கள் தங்களுக்குக் கிடைத்த
பொருள்களைக் கொண்டு அதையே விளையாட்டுத்
திடலாக மாற்றி, அமர்ந்திருந்த மக்களுக்கு இடையே
ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தனர்.
என் மகன்களும் உறவினர் பிள்ளைகளும் அதையே செய்தனர்.
ஒரு சிறிய இடைவெளியில் நான் திண்பண்டம் வாங்கச்
சென்று சிறிது நேரம் கழித்துத் திரும்பினேன். எங்கள்
பிள்ளைகள் விளையாடுமிடத்துக்கு அருகில் அந்தக்
காட்சியைப் பார்த்தேன்.
Re: அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்!
![அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Vikatan%2F2020-08%2Fc7be512a-6d2a-4581-a3bb-106e9d7e22e5%2Fhappy_1082921_640.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2020-08%2Fc7be512a-6d2a-4581-a3bb-106e9d7e22e5%2Fhappy_1082921_640.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.0)
-
என் மகன் எங்கள் குடும்பத்துப் பிள்ளைகளுடன் எறிந்து
பிடித்து விளையாடிக்கொண்டிருந்த ஒரு ரப்பர் பந்து,
அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஒரு
குடும்பத்தினரிடையே போய் விழுந்தது. அதை வாங்கச்
சென்ற என் மகன் கேட்பதையும் பொருட்படுத்தாமல்,
அங்கே அமர்ந்திருந்த குடும்பத்திலிருந்த ஒரு நடுத்தர வயது
ஆண், அந்தப் பந்தை தூரத்தில் விட்டெறிந்தார்.
பந்து இருள் கவ்விக்கிடந்த ஒரு வேலியிட்ட இடத்தில்
விழுந்தது. அந்த இருட்டில் அதைத் திரும்ப எடுக்க முடியாது.
எப்போதோ ஒருமுறை என் மகன்களுடன் விளையாடும்
அந்த மகிழ்வான தருணத்தையும், அந்தச் சிறுவர்களுக்குக்
கிடைத்த அந்த சிலமணி நேர பொழுதுபோக்கையும் கெடுத்து
விட்டாரே அந்த மனிதன். எனக்குக் கோபம் பொங்கிக்கொண்டு
வந்தது. அவரிடம் சென்று சட்டையைப் பிடிக்காத குறையாகக்
கேட்டேன். அவரோ, 'பந்து போய் விழுந்த இடத்தில் எடுத்துக்கொள்'
என்றார்.
எனக்கு மேலும் கோபம் தலைக்கேறியது.
`நீயேன்டா தூக்கிப்போட்ட..?' என்று ஒருமையில் சாடினேன்.
`என் அம்மாவின் மேல் பந்து பலமுறை விழுந்தது, பிள்ளைகளை
எச்சரித்தேன்.
மீண்டும் பந்து விழுந்ததால் எடுத்தெறிந்தேன்' என்றார் அவர்.
மேலும் மேலும் தலைக்கேறிய என் கோபத்தில் அவர் `பலமுறை’
என்று சொன்னதை மனதிலேற்றவில்லை. என் பிள்ளைகளுக்குக்
கிடைத்த மகிழ்வான நேரத்தை வீணடித்துவிட்டாரே என்பது
மட்டுமே என் மனதில் ஓடியது. என் வார்த்தைகள் தடித்தன.
ஆக்ரோஷமாக அவரை நோக்கிக் கத்தினேன். அவரின்
தொடர்ந்த அலட்சிய பதிலால், அவரை அடிக்கப் பாய்ந்தேன்.
அவரை அவரின் குடும்பத்தார் தள்ளிக் கூட்டிச் சென்றனர்.
என் குடும்பத்தார் என்னை இழுத்து சமாதானப்படுத்த முயன்றனர்.
இன்னும் என் கோபம் அடங்கவில்லை. சிறிது நேரத்தில் அங்கு
பெரிய கூட்டம் கூடிவிட்டது. அப்போதும் நான் அவரை நோக்கிக்
கத்திக்கொண்டே இருந்தேன். என் கோபத்தில் வரைமுறையற்ற
வார்த்தைகள் வந்துவிழுந்தன.
அதனால், அங்கே கூடியவர்கள் நானே அங்கு நடக்கும்
குழப்பத்துக்குக் காரணம் என்று தீர்மானித்தனர்.
போலீஸ் வரவழைக்கப்பட்டது. அப்போதுதான் நான் நிதானத்துக்கு
வந்தேன். பெரும் சிக்கலானது சூழல். என்னை உடனே காவல்
நிலையத்துக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் எனக் காவலர்கள்
கூறினர். நேரம் பின்னிரவைக் கடந்திருந்தது.
Re: அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்!
![அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Vikatan%2F2020-07%2F65b5ac77-251a-4c87-ae7a-2213a224cf11%2Fwater_863053_1920.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2020-07%2F65b5ac77-251a-4c87-ae7a-2213a224cf11%2Fwater_863053_1920.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.0)
-
என் குடும்பத்தார் கடும் முயற்சியெடுத்து எனக்காக மன்னிப்புக்
கோரி என்னைக் காவல்நிலையம் கொண்டு செல்லாமல்
பாதுகாத்தனர்.
எல்லோரும் ஹோட்டல் அறைக்குத் திரும்பினோம்.
அந்த சில நிமிடங்கள் எனது நடவடிக்கையால், நான் எந்த அரிதான
நேரம் வீணாகப்போகிறது எனக் கோபப்பட்டேனோ, அதற்கு மேலும்
நேரம் வீணானதை உணர்ந்தேன்.
அதோடு, நான் காவல்நிலையம் சென்றிருந்தால், அந்த இரவு
முழுவதும், ஏன் மறுநாள் நாங்கள் தீர்மானித்திருந்த பொழுதுகளும்
வீணாகியிருக்கக்கூடும்.
அந்த சில விநாடி நிதானம் ஏன் எனக்குத் தவறியது?
`நான்' என்ற எண்ணத்தால். `என்னிடமேவா...' என்ற ஆணவத்தால்.
நாம் நமக்குள் என்னவாக இருக்கிறோம் என்பது இப்படிப்பட்ட
திடீர் வலியை எதிர்கொள்ளும்போதுதான் நமக்கே புரியும்.
அந்தக் கணநேர வலியை எதிர்கொள்ளும்வரை, நாம் எல்லோரும்
நல்ல குணமுடையவராகவே தெரிவோம். அதற்கு மேலும் நாம்
நற்குணத்தைக் காக்க முடியும். நாம் நம்மை அந்த விநாடி கவனிக்க
வேண்டும்.
தெருவில் அவசரமாக நடந்துகொண்டிருக்கும்போது நம் கால்,
வழியில் கிடக்கும் ஒரு கூரான கல்லில் தட்டிவிடுகிறது.
ரத்தம் வழிகிறது, வலி தலைக்கு விர்ரென்று ஏறுகிறது.
அடுத்த கணம் நாம் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் நம் வலியை
வெளிப்படுத்துவோம்.`ஸ்ஸ்ப்பா… சே கல்லு கிடக்கிறத பாக்கலயே',
`சனியன் இந்தக் கல்லு எங்கிருந்து வந்துச்சு', `ஸ்ஸ்…
வேற யாராவது இதே மாதிரி இடிச்சா என்னாகுறது'.
நாம் எப்படிப்பட்டவரென தெரியும் அப்போது!
------------------
- மு.அகிலன்
நன்றி- விகடன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அய்யப்பனும் கோஷியும் பட இயக்குனர் காலமானார்
» தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு
» கோபம் நம்மை ‘கொல்லாமல்’ இருக்க நாம் கோபம் கொள்ளாமல் இருப்போம்!
» முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
» நூலகரின் அர்ப்பணிப்பும், வாசகரின் அன்பளிப்பும்!
» தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு
» கோபம் நம்மை ‘கொல்லாமல்’ இருக்க நாம் கோபம் கொள்ளாமல் இருப்போம்!
» முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
» நூலகரின் அர்ப்பணிப்பும், வாசகரின் அன்பளிப்பும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|