ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் திருச்சிக்கு போகணும்னா, என்னோட காருல கூட இனிமே ஏற மாட்டேன்!’’

Go down

நான் திருச்சிக்கு போகணும்னா, என்னோட காருல கூட இனிமே ஏற மாட்டேன்!’’ Empty நான் திருச்சிக்கு போகணும்னா, என்னோட காருல கூட இனிமே ஏற மாட்டேன்!’’

Post by ayyasamy ram Sun Nov 01, 2020 12:45 pm

நான் திருச்சிக்கு போகணும்னா, என்னோட காருல கூட இனிமே ஏற மாட்டேன்!’’ CbyWKKpCR1KuTmihCJZW+NTLRG_20170508103822542831
--
@Kaalachakram Narasimmaa Tan – எனது தந்தை சித்ராலயா கோபு திரைப்படங்களில் எழுதிய நகைச்சுவைகள் ஒருபுறம் இருக்க, திரைக்குப் பின்னால்  படப்பிடிப்பின்போது நிகழும் நகைச்சுவை சம்பவங்களைப் பற்றி விவரிக்கும்போது சிரிப்பை அடக்க முடியாது.

அப்படித்தான், தான் எழுதி இயக்கிய ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தில், நடிகர் சுருளிராஜனுக்கும், படத்தயாரிப்பாளருக்கும் இடையேயான ஒரு பிரச்னையைப் பற்றிக் கூறினார். படம் என்ன, தயாரிப்பாளர் யார் என்பதைக் குறிப்பிடாமல், சம்பவத்தை மட்டும் கூறுகிறேன்.

அந்த தயாரிப்பாளர் ஒரு பிரபல நடிகையின் தம்பி. சித்ராலயா கோபு எழுதி இயக்கிய அந்த நகைச்சுவைப் படத்தில் மனோரமா, சுருளிராஜனுக்கு மிகவும் முக்கிய பங்கு. தயாரிப்பாளர் அனைவருக்குமே அட்வான்ஸ் கொடுத்திருந்தார். அதற்குப்பின் அவரது லெதர் பாகின் ஜிப் திறக்கவேயில்லை.
பணம் தராமல் இருக்க எல்லா காரணங்களையும் கூறுவார்.

அஷ்டமி, சந்திராஷ்டமம், பாங்க் போக நேரமில்லை, இன்றைக்கு வெள்ளிக்கிழமை, லெதர் பாக் ஜிப் சிக்கிக்கொண்டு விட்டது திறக்க முடியவில்லை என்று புதிது புதிதாக காரணங்களைக் கூறுவார்.

ஆனால், படப்பிடிப்பு மட்டும் வெகு வேகமாக நடைபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பார். நடிகர் சுருளிராஜனுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. அன்று அவருக்கு முக்கியமான காட்சிகள் இருந்தன. படப்பிடிப்புக்கு புறப்படுவதற்கு முன்பாக நேராக எங்கள் வீட்டிற்கு வந்து, அப்பாவுடன் காரிலேயே படப்பிடிப்புக்கு போனார்.

‘‘கோபு சார்! அவசரமாக திருச்சி போகணும். ஒரு குடும்ப பிரச்னை. பணம் தேவைப்படுகிறது. எனக்கு தயாரிப்பாளர் கிட்டே இன்னைக்கு குறைந்தபட்சம் ஐந்தாயிரமாவது வாங்கிக் கொடுங்க. இல்லேனா நான் மேக்கப்  போட்டுக்க மாட்டேன்!’’ என்றார் சுருளிராஜன்.

படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றவுடன், அப்பா தயாரிப்பாளரை அழைத்தார். ‘‘சார்! பாவம் சுருளிக்கு பெரிய பிரச்னை. திருச்சிக்கு போகவேண்டுமாம். பணம் இல்லேனா அவரு இன்னைக்கு நடிக்க மாட்டார்!’’ என்று கோபு சொல்ல, அடுத்த நிமிடம் ஆச்சரியம் கோபுவுக்கும், சுருளிக்கும்.

தயாரிப்பாளர், தனது லெதர் பாகைத் திறந்து, சுளையாக ஐந்தாயிரம் ரூபாயை எடுத்து சுருளி கையில் வைத்தார். ‘‘சுருளிராஜன் சார்! கவலைப்படாதீங்க. உங்க சீன்களை நடிச்சுக் கொடுத்துருங்க. இன்னைக்கு மத்தியானம், நானே திருச்சிக்கு போறேன். உங்களை என் காரிலேயே கொண்டு விட்டுடறேன்’’ என்றார்.

சுருளிக்கு ஒரே குஷி! கிடுகிடு என்று காட்சிகளை அமர்க்களமாக மனோரமாவுடன் நடித்துக் கொடுத்துவிட்டு, கோபுவிடம் விடைபெற்றுக் கொண்டு, தயாரிப்பாளர் காரிலேயே திருச்சிக்கு பயணமானார்அன்றிரவு பதினோரு மணிக்கு, சுருளிராஜனிடம் இருந்து அப்பாவுக்கு போன்.


‘‘என்ன சுருளி? திருச்சி போய்ச் சேர்ந்துட்டீங்களா? பிரச்னை தீர்ந்ததா?’’ என்றார் சித்ராலயா கோபு.‘‘என் பிரச்னையை விட்டுத் தள்ளுங்க கோபு சார்! இந்த கொடாக்கண்டன் தயாரிப்பாளரை எங்கேயிருந்து பிடிச்சு வந்தீங்க?’’ என்று கேட்க, கோபுவுக்கு திகைப்பு‘‘என்னாச்சு சுருளி?’’ என்றார் கோபு.

‘‘தயாரிப்பாளர் காலையில ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தாரா? அதை வாங்கி என் பையில வச்சுக்கிட்டு, அவரோட கார்ல திருச்சிக்கு போனேன்  இல்லையா?  செங்கல்பட்டுகிட்டே வரச்சே, கோபுவோட ஊரு என்று சொன்னவாறு, திடீர்னு ஆயிரம் ரூபாய் கொடுங்க, காருக்கு பெட்ரோல் போடணும், திருச்சி வந்ததும் கொடுத்துடறேன்.

இப்போ என்கிட்டே சில்லரையில்லேனு சொன்னாரு!  சரினு ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். அப்புறம் டிபன், லஞ்ச் எல்லாத்துக்கும் என்னைத்தான் கேட்டாரு. எல்லாத்துக்கும் நான்தான் கொடுத்தேன்.


Last edited by ayyasamy ram on Sun Nov 01, 2020 12:49 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நான் திருச்சிக்கு போகணும்னா, என்னோட காருல கூட இனிமே ஏற மாட்டேன்!’’ Empty Re: நான் திருச்சிக்கு போகணும்னா, என்னோட காருல கூட இனிமே ஏற மாட்டேன்!’’

Post by ayyasamy ram Sun Nov 01, 2020 12:46 pm

விழுப்புரம், உளுந்தூர்பேட்டைனு வண்டியை நிறுத்தி, பழம் வாங்கறது, காய்கறி வாங்கறதுனு எல்லாத்துக்கும் பணம்கேட்டாரு.
திருச்சி வந்தப்புறம் கொடுத்துடப் போறாருனு கொடுத்துட்டேன். கடைசியில திருச்சி வந்ததும், என்னை இறக்கிட்டு லெதர் பாகோட ஜிப்பைத் திறந்தார்.

என்னோட அஞ்சாயிரம் ரூபாயை தரப்போறாருனு ஆவலோடு நின்னேன். கொஞ்சம் புகையிலையை வாயில அடக்கிக்கிட்டு, ‘வரேன் சுருளி சார்! எனக்கு நல்ல கம்பெனி கொடுத்தீங்க! டிரைவர் வண்டியை எடு’ன்னு சொல்லிட்டு கிளம்பிப் போயிட்டாரு.

கடைசியில கையில தம்புடி இல்லாம நான் திருச்சியில் நின்னதுதான் மிச்சம்! எனக்குத் தெரிஞ்ச ஒரு மளிகைக்கடைக்காரர்கிட்டே கடன் வாங்கிட்டு, குடும்பப் பிரச்னையைத் தீர்த்துக்கிட்டு, சென்னை வந்து சேர்ந்தேன்…’’ என்றார் சுருளி.

படம் நன்றாக ஓடியது. ஆனால் தயாரிப்பாளர், அப்பாவுக்கு பேசிய முழுத்தொகையைக் கொடுக்கவில்லை.அதன்பிறகு சுருளி அப்பாவை எங்கே சந்தித்தாலும், ‘‘சார்! நான் திருச்சிக்கு போகணும்னா, என்னோட காருல கூட இனிமே ஏற மாட்டேன்!’’ என்றாரே பார்க்கலாம்!

நன்றி-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
» மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை-ஆசின்
» இந்த தேர்தலில் நான் ஓட்டுப் போட மாட்டேன்...!' - கண்சிவந்த கமல்
» நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய்
» அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum