ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரல்வளை நெரிக்கப்படுகிறது…

2 posters

Go down

குரல்வளை நெரிக்கப்படுகிறது… Empty குரல்வளை நெரிக்கப்படுகிறது…

Post by kirupairajah Mon Jan 11, 2010 8:40 pm



யூகோசுலாவியா, ருவாண்டா இனப்படுகொலைகளை விசாரித்த அய்.நா. 1956லிருந்து திட்டமிட்டு படுகொலை செய்யப்படும் தமிழர் அவலம் குறித்து கண்டு கொள்ளவில்லை. 1983ல் தொடங்கி ஒரு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 98மூ மக்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள். கடந்த மூன்றாண்டுகளில் கொல்லப்பட்ட பதினோரு பத்திரிகையாசிரியர்களில் எழுவர் தமிழர்கள். அய்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 20000 தமிழ்ப் பெண்கள் கைம்பெண்களாயினர். ஏண்ணற்றோர் பாலியல் வன்புணர்விற்கும் கொடிய சித்திரவதைகளுக்கும் ஆளாகி வருகின்றனர். இவ்வளவும் அவர்களின் குடும்பத்தார் முன்னிலையிலேயே நடக்கின்றன. பல்லாயிரக்கணக்கான தமிழர் உடல்கள் அடையாளம் காணப்படாத கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளைப் பிரிந்த பெற்றோர்கள் முள்கம்பி வேலிகளுக்குப் பின்னால் பரிதவிக்கின்றனர். இந்துக்கள் மற்றும் கிறித்தவர்களின் மதகுருக்கள் கொல்லப்படுகின்றனர். அவர்களின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான இந்துக் கோயில்களும் கிறித்தவக் கோயில்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. சிங்களக் குடியேற்றங்கள் புதிதாக முளைக்கின்றன. தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்களத்திற்கு மாற்றப்படுகின்றன.

இட்லர் யூதர்களைக் கொன்றொழித்த போது உலகம் விழித்தெழுந்து பாசிசத்திற்கெதிராகப் போராடியது. பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா நாசிகளை எதிர்த்துப் போராடின. பலரும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க உதவி செய்தன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இனவெறி சிங்கள பௌத்த தலைவர்களிடம் சிக்குண்டு உயிரும் உடைமையும் இழக்கும் தமிழர்களின் துயர் துடைக்க அகிலம் ஆதரவுக்கை கொடுக்கவில்லை. இலங்கை அரச பயங்கரவாதத்திற்கெதிராகத் தனது சுட்டு விரலையும் அசைக்கவில்லை. தமிழர்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது வன்முறையல்ல. அது சுதந்திரத்திற்கான போராட்டம். பிரான்சும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தமிழர் மீதான போரை நிறுத்தச் சொல்லி வேண்டின. பேச்சுவார்த்தைகளும் நடத்தின. இங்கிலாந்து, பிரான்சு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கொழும்பு சென்று வெறுங் கையோடு திரும்பி வந்தனர். மருத்துவமனைகள், பள்ளிகள், அனாதை இல்லங்கள், முதியோர் காப்பகங்கள் போன்றவற்றை அழித்தும் வயல்களைச் சூறையாடியும் எண்ணற்ற பச்சிளம் குழந்தைகளின் மீது குண்டு வீசியும் வருகின்ற இனவெறியர்களிடம் எதைப் புரியவைத்துவிட முடியும்?

ஏப்பொழுது வேண்டுமானாலும் கடத்தப்படுவோம், கொலை செய்யப்படுவோம், பாலியல் வன்புணர்விற்கு ஆளோவோம் என்ற நிலையில் தமிழ் மக்கள் காலந்தள்ளுகின்றனர். பெரும்பான்மை இனவெறியர் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலையில் தமிழர்களின் எதிர்காலமும் நிகழ்காலம் போன்றே இருண்டு போயுள்ளது. அய்.நாவின் மனித உரிமை ஆணையர் லூயிசே ஆர்பரின் அறிக்கையும் அதையே சுட்டுகிறது. வுன்னி மக்கள் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்திலும் கொழும்புவிலும் கூடத் தமிழரின் நி;ம்மதி பறிக்கப்பட்டுள்ளது. நேசனல் போச்டு பத்திரிகையில் சுடுவர்டு பெல் யாழ்ப்பாணத்தில் சுதந்திரம் இல்லை. நகரம் திறந்தவெளிச் சிறைச்சாலையாக உள்ளது. அச்சமும் இரத்தம் சிந்துதலுமே ஆள்கின்றன. மீன்பிடிக்கத் தடை. வயல்வெளிகள் பகுதி யாவும் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளது. தரப்படுத்துதலால் மாணவர்கள் படிக்க முடியவில்லை என்று எழுதுகிறார். கொழும்புவிலும் தமிழர்கள் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்படுகின்றனர். சுதந்திரத்தின் போது இங்கிலாந்து தமிழர்களுக்கெதிராக மிகப் பெரும் தவறிழைத்துவிட்டது. சிறுபான்மையினத்தவரைப் பாதுகாக்கும் சட்டங்களை அப்போதே கொண்டு வரவில்லையே என்று வருந்துகிறார் அய்வோர் சென்னிங்சு. கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம்.

நாட்டாட்சி கொடுங்கோலாட்சியாகும் போது அதைக் காட்டாட்சி என்று கூறுவோம். ஆனால் கிளிநொச்சியில் காட்டுக்குள் நடந்த ஆட்சி நாட்டாட்சியை நாண வைக்கும். அந்த அளவிற்கு அனைத்தும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் திறமையாகவும் நடைபெற்று வந்தன. அங்கு சென்று திரும்பிய வெளிநாட்டு அதிகாரிகளும் பத்திரிகையாசிரியர்களும் புகழாரம் சூட்டுகின்றனர். இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சன26, 2009ல் குறிப்பிடுகிறார்: “புலிகளை நாங்கள் வென்று விட்டோம். முடிந்துவிட்டது. விடுதலைப் புலிகளின்கதை என்றார்.

தமிழ் ஈழத்தில் தரைப்படை, கப்பற்படை, வானூர்திப்படை (அனைவரும் சீருடைகளுடன்) இருந்தன. சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில் அவர்களின் சொந்த காவல் துறை, நீதிமன்றங்கள், வரி வசூலிப்பு நிலவின” என்கிறார். தனது அகிம்சை முறைப் போராட்டங்கள் அனைத்தும் தோற்றுப் போனதைக் கண்ட ஈழத்துக் காந்தி எனப்படும் தந்தை செல்வநாயகம் கடைசியில் வான் நோக்கிக் கண்களை உயர்த்தி ‘கடவுளே, தமிழர்களைக் காப்பாற்று என்று கூறிவிட்டுத் தன் கடைசி மூச்சை விட்டார். உண்மையில், தமிழர்கள் பிரபாகனைப் பின்பற்றவில்லை. பிரபாகரன்தான் தமிழர்களைப் பின்பற்றுகிறார். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறார். 70களில் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமிழ்ஈழத்தை முன்மொழிந்தவரே மலையகத் தலைவர் தொண்டைமான்தான். 1983 கறுப்பு சாலை கலவரங்களுக்குப் பிறகு ஈழ வரலாற்றில் தவிர்க்க முடியாத நாயகனானார் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

சிங்கள அரசுகளுக்குப் புரியும் மொழியில் இவர்தான் பேசுகிறார். வவுனியாவில் சரணடைந்த ஒரு தமிழ்ப் பெண்ணை எந்த அளவிற்கு இராணுவத்தினர் நாசப்படுத்தியுள்ளனர் என்றால் ஒரு லிட்டருக்கும் மேல் விந்து இருந்துள்ளது. அய்.நா.வின் படையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள வீரர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காளாகி வெளியேற்றப்பட்டதையும் இங்கு நினைவு கூறலாம்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ள பேரா. வி.சூரியநாராயணன் நமது கைகள் இரத்தத்தில் தோய்ந்துள்ளன என்கிறார். இந்தியா தலையிடும் என்கிற அச்சம் இப்போது இலங்கைக்கு இல்லை. இது இந்தியாவின் இராசதந்திரத்திற்குத் தோல்வி. இதன் விளைவாகத்தான் அய்நா மனித உரிமை அமைப்பில் சீனாவோடும் பாகிசுதானோடும் கைகோர்த்துக் கொண்டோம். புதுதில்லியின் வாக்களிக்கும் நடத்தை ஒரு இந்தியன் என்ற வகையில் என்னை அவமானப்படுத்துகிறது. வாக்களிப்பதிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும் என்கிறார்.

இந்தியா இலங்கையில் என்னதான் செய்கிறது என்பது பாராளுமன்றத்திற்குக் கூடத் தெரியாமல் ஒளித்து மறைத்து செய்யப்படுவதற்குக் காரணம் ஒரு சில பாராளுமன்றத்திற்கு அப்பால்பட்ட சனநாயக விரோத சக்திகள்தான். கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் கொடிய குண்டு வீச்சை சொந்த நாட்டு மக்கள் மீதே நடத்திய ராசபக்சேக்கு மட்டுமல்ல அவரின் கைகளை வலுப்படுத்தியவர்களுக்கும் சாவு மணி அடிக்கப்படும் என்கிறார். 500 கோடியை எந்த நிபந்தனையும் விதிக்காமல் இலங்கைக்குக் கொடுப்பதற்காக எம்.கே.நாராயணனையும் சிவசங்கர் மேனனையும் சாடுகிறார். பணத்தைக் கையாள இலங்கை அரசு உருவாக்கியுள்ள 20 நபர் குழுவில் 19 பேர் சிங்களர்கள், ஒருவர் இசுலாமியர். ஒருவர்கூடத் தமிழர் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.


குரல்வளை நெரிக்கப்படுகிறது… Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

குரல்வளை நெரிக்கப்படுகிறது… Empty Re: குரல்வளை நெரிக்கப்படுகிறது…

Post by nandhtiha Mon Jan 11, 2010 8:50 pm

அன்புள்ள இளவலுக்கு
வணக்கம்
உலகத்துக்கு நாகரிகம் கொடுத்தவன் தமிழன். அவன் இன்று மிருகங்களிலும் கேடாக நடத்தப் படுகின்றனர். இதுகொடுமையிலும் கொடுமை. தமிழர்களே தமிழர்களுக்குத் துரோகிகளான கதை வெட்கத்துக்குரியது.
வேதனையுடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum