ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.!

Go down

எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! Empty எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.!

Post by Guest Sun Oct 11, 2020 3:46 pm

எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! WhatsApp-Image-2020-10-10-at-3.27.46-PM

சுமதி என் சுந்தரி என்ற படத்திற்காக “பொட்டு வைத்த முகமோ” என்ற பாடலை பாட வைக்க மெல்லிசை மன்னர், எஸ்பிபியை தேர்ந்து எடுத்தார். விஷயம் கேள்விப்பட்ட எஸ்பிபி மகிழ்ச்சி அடைவதை விட மிகவும் டென்ஷன்தான் ஆகிவிட்டார். காரணம் படத்தின் ஹீரோ சிவாஜி.
அந்தக் காலத்தில் சிவாஜி என்பதும் டிஎம்எஸ் என்பதும் வேறு வேறு அல்ல. டிஎம்எஸ்ஸில் ரசிகர்கள் சிவாஜியை பார்த்தார்கள். சிவாஜியிடம் ரசிகர்கள் டிஎம்எஸ்ஸை ரசித்தார்கள்.

எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! Sivaji-and-tms

அப்படிப்பட்ட சிவாஜிக்கு தன்னுடைய மென்மையான குரலில் பாடல் பாடினால் சிவாஜியை திருப்தி படுத்த முடியுமா? இல்லை சிவாஜி ரசிகர்களிடம் தான் தான் பெயரெடுக்க முடியுமா? பெயர் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் திட்டுக்கும் ஆளாக நேரிடுமே என்ற பயம் எஸ்பிபிக்கு.

எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! WhatsApp-Image-2020-10-10-at-3.24.45-PM

அந்த நாளும் வந்தது. எஸ்பிபி சிவாஜிக்கு தன் முதல் பாடல் என்ற அந்த பயத்தோடவே ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு சென்றார். ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்ற பாலுவுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அங்கு நடிகர் திலகம் ஒரு நாற்காலியில் ஹாயாக அமர்ந்திருந்தார். எஸ்பிபிக்கு அவரை பார்த்தவுடன் அதிர்ச்சி. எக்ஸாம் ஹாலுக்குள் ஹெட் மாஸ்டரே வந்தது போல் ஒரு பயம்.

எஸ்பிபியை அருகே அழைத்த சிவாஜி, சிறிது நேரம் கேஷுவலாக பேசிவிட்டு சரி போய் பாடு என அனுப்பி விட்டார். “அப்பா எஸ்கேப்” என்ற மனநிலையுடன் எஸ்பிபி ரெக்கார்டிங் ஸ்டூடியோக்களில் ஓடிச்சென்று புகுந்துகொண்டார்.

உண்மையில் சிவாஜி அவரின் எந்த பாடல் ரெக்கார்ட்டிங்கிற்கும் பொதுவாக வருவதில்லை. ரிக்கார்டிங் தியேட்டரில் உள்ளவர்களுக்கே இது பெரிய ஆச்சரியம். யார் பாடல் பதிவுக்கும் வராத சிவாஜி, இந்தச் சின்ன பையனின் ரெக்கார்டிங்கிற்கு ஏன் வந்தார் என்பது அனைவருக்கும் ஆச்சரியம்.

எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! Sppb-odl

எஸ்பிபி டென்ஷன் எல்லாம் கொஞ்சம் விட்டுவிட்டு பாடல் பாட ஆரம்பித்தார். திடீரென ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் ஒரு தலை எட்டிப்பார்க்கிறது எஸ்பிபி திரும்பி பார்க்கிறார். அது சிவாஜியின் தலை கை கால்கள் வெட வெடக்க ஆரம்பிக்கின்றது. பாடல்கள் பாட முடியாமல் நாக்கு உளறர ஆரம்பிக்கின்றது. ரெக்கார்ட்டிங் நிறுத்தப்படுகின்றது.

சிவாஜி ரெக்கார்டிங் ரூமிற்குள் சென்றார். எஸ்பிபியிடம் சொன்னார். சில பேர் உன்னை குழப்பி இருப்பார்கள். சிவாஜிக்கு டிஎம்ஸ் குரல் தான் பொருத்தமாக இருக்கும் என்று. அதனால் டிஎம்எஸ் ஸ்டைலில் எனக்காக பாட முயற்சிக்காதே. உன் இயல்பான குரல், ஸ்டைல் எப்படியிருக்குமோ அதே குரலிலயே பாடு. உன்னுடைய குரலுக்கு நான் எப்படி நடிக்கிறேன் என்று நீ படத்தில் வந்து பாரு என்று சொன்ன சிவாஜி, எம்எஸ்வியிடமும் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

சுமதி என் சுந்தரியில் வரும் பொட்டு வைத்த முகமோ பாடலை இன்றும் பாருங்கள், வழக்கமான எல்லா படத்தைவிட இளமை துள்ளலுடன் மிக ஸ்டைலாக சிவாஜி நடித்து இருப்பார்.

அதற்கு சிவாஜி பயன்படுத்திய டெக்னிக் என்ன தெரியுமா. அந்தக் காலகட்டத்தில் வழக்கமாக எஸ்பிபி முத்துராமன், சிவகுமார் போன்றவர்கள் தான் அதிகமாக பாடிக்கொண்டிருந்தனர். சிவாஜி என்ன செய்தார் தெரியுமா முத்துராமனின் மேனரிசங்களையும் நடையும் சற்று இமிடேட் பண்ணி அந்தப் படத்தில் சிவாஜி பண்ணியிருப்பார்.

அதுவே ஒரு புதிய ஸ்டைலாக தோன்றும். இந்த காலத்தில், படத்துக்குப்படம் தன் குரலை கூட மாற்ற முடியாமல், எல்லா படத்திலும் எல்லா கேரக்டர்களுக்கும் ஒரே குரலில் பேசிக் கொண்டிருக்கும் இந்தக் கால நடிகர்களுக்கு மத்தியில், சிவாஜிகணேசன் அந்த காலத்திலேயே குரலுக்கு ஏற்றவாரெலாம் நடித்திருந்தார்.

அதுதான் அவர் நடிகர் திலகம்.

(ஜேம்ஸ் டேவிட்- ttnews.cinema)

avatar
Guest
Guest


Back to top Go down

எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! Empty Re: எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.!

Post by ayyasamy ram Mon Oct 12, 2020 7:11 am

எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! 103459460 எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! 3838410834
-

படம்: சுமதி என் சுந்தரி
பாடியவர்கள்: s.p.பாலசுப்ரமணியம், p.சுசீலா


பொட்டு வைத்த முகமோ…
கட்டி வைத்த குழலோ…
பொன்மணிச் சரமோ…..
அந்தி மஞ்சள் நிறமோ…
அந்தி மஞ்சள் நிறமோ…

பொட்டு வைத்த முகமோ
ஆஆஆ… கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ……
அந்தி மஞ்சள் நிறமோ…
அந்தி மஞ்சள் நிறமோ…

தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தால்
புன்னகைப் புரிந்தால்….

(பொட்டு வைத்த…..)

ஆஆஆஆஆஆஆஅ………
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடைப் போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தால்
லலாலலாலலாலலா…
என்னுடன் கலந்தால்…. லலாலலாலலாலலா…

ஆஆஆஆஆஆஆஆ……. ஹொஹொஹொஹோ…
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
லலாலலாலலாலலா…
நிழல் போல் மறைந்தாள்…. லலாலலாலலாலலா…

பொட்டு வைத்த முகமோ… ஓஓஓஓஓ….
கட்டி வைத்த குழலோ… ஓஓஓஒ…..
பொன்மணிச் சரமோ…..
அந்தி மஞ்சள் நிறமோ… லலாலலாலலாலலா…
அந்தி மஞ்சள் நிறமோ… லலாலலாலலாலலா…
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum