ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது Poll_c10 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது Poll_m10 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது Poll_c10 
Dr.S.Soundarapandian
 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது Poll_c10 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது Poll_m10 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது Poll_c10 
heezulia
 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது Poll_c10 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது Poll_m10 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது Poll_c10 
i6appar
 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது Poll_c10 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது Poll_m10 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது

Go down

 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது Empty லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது

Post by ayyasamy ram Wed Sep 09, 2020 5:49 pm

 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது 1
--
அப்பத்தாவின் பண்புகளையே...
அம்மாவின் பெரும் கருணையையே...
என் மனைவி மீதும் பூசியிருக்கிறேன்!

“ஓவியக் கல்லூரியின் வரலாற்றை மறைத்து, ஓவிய பாடத்
திட்டத்தில் ஆகம விதிகளைச் சேர்க்கவேண்டிய
அவசியமென்ன” என்று மத்திய அரசின் மீது கோபத்தில்
இருக்கிறார் ஓவியர் டிராட்ஸ்கி மருது.

ஓவியம், கலை, மொழி என பண்பாட்டுத் தளங்களில் வேர்
பாய்ச்சி பயணிக்கிறார். ‘அருமையான தம்பதியர்’ என
நண்பர்களிடத்தில் பேசுபொருளாகும் அவரது
இல்வாழ்க்கையின் வடிவம் இது. சொற்களைத் தாண்டிய
அந்த உணர்வுகள் அப்படியே இருக்கட்டும்…

பெண்மையின் அருகாமையை அம்மாவிடமிருந்தே
உணர்ந்தேன். சற்று முன்பு அவர்கள் இறுதிப் பயணத்தை
மேற்கொண்டபோது தூக்கிச் சுமந்த சிறு கனம் கூட இன்னும்
என் கைகளில் இருக்கிறது.

இப்படிப்பட்ட பெண்களிடம் இருந்து வளர்ந்த பிறகே உலகின்
எல்லாப் பெண்களையும் மதிக்கும் இயல்பு வந்திருக்கிறது.
அதுக்கும் முன்னாடி அப்பத்தாவைப் பத்திச் சொல்லணும்.
அது வெறும் உறவுமில்லை. வேற இடத்திலிருந்து பிடுங்கி
வந்து நட்டு வைத்த மாதிரி குடும்பத்திற்குள்ளே வந்து
மொத்தக் குடும்பத்தையும் தூக்கிச் சுமக்கிறது எவ்வளவு
பெரிய வேலை!
-
-------------


Last edited by ayyasamy ram on Wed Sep 09, 2020 6:14 pm; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது Empty Re: லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது

Post by ayyasamy ram Wed Sep 09, 2020 5:49 pm

 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது 1a
-

எனக்கு அவங்களோட அருகாமை அவ்வளவு ஆச்சர்யமா
இருக்கும். என் மேல் அவ்வளவு உயிராக இருந்த அப்பத்தா…
என்னோட ஒவ்வொரு வார்த்தையையும், வரைந்து கிறுக்கிப்
போட்டதையும் தூக்கி வைச்சுக் கொண்டாடிய
அப்பத்தாவை முதல் மனுஷியாகக் கொண்டாடுவேன்.

நிலமும் புலமும் விவசாயமும் அறுவடையும் கொண்ட
பெரும் குடும்பம். பண்ணையம் பார்க்கிறதுக்கு சொந்த
பந்தம் மாதிரி கூடியிருந்த மக்கள், உறவினர்கள்னு பெரும்
கூட்டம். விவசாயத்தை அப்படி ஆசையாகப் பார்த்து,
பயிர்களின் வளர்ச்சியையெல்லாம் குழந்தை வளர்ற
மாதிரி ரசிச்ச அப்பத்தாதான் என்னுடைய முதல் பெண்.

அப்படியே நாற்காலி போட்டு காலை மடிச்சுக்கிட்டு
உட்கார்ந்து, பண்ணையம் மக்களோடு சேர்ந்து சாப்பிட்டும்,
சிரிச்சும், அவங்க கண்ணு கசிஞ்சா வேதனைப்பட்டும்,
துயர் துடைச்சும், தட்டிக் கொடுத்திட்டு இருந்த அப்பத்தாவை
மறக்கவே முடியாது.

நானெல்லாம் அன்பை உள்ளும் புறமுமா கத்துக்கிட்டது
அங்கேதான். விவசாயம் பண்ணும் போது வெளியே நின்னு
அதிகாரம் பண்ணாமல், சிரிப்பு சிந்துகிற கனிந்த முகத்தோடு
அப்பத்தா நிக்கிறது அப்படியே மனச்சித்திரமாக இருக்கு.

உடனே அதை ஓவியமாகக் தீட்டி உங்ககிட்டே காட்டிட
முடியும் என்னால். நான் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும்,
குழந்தைத்தனத்திற்கும் நெகிழ்ந்து நின்னு அன்பைக்
கொடுத்த அப்பத்தா.

அவசியமே இல்லாவிட்டாலும், விவசாயம் பார்க்கிற
பெண்களோடு இறங்கி நின்று வேலை பார்த்து, கேலி பேசி
புண்படுத்தாம சிரிக்க வைச்சு, சாயங்காலம் ஆனதும்
‘டேய் பயலே… அந்தச் செம்புத் தண்ணிய ஊத்துடே...’
என கைகளை நீட்டிக்கொண்டு குனிவார்.

காய்ஞ்சு வறண்டுபோன முதுகிற்கு தண்ணீர் ஊற்ற ஊற்ற
கொஞ்சம் கொஞ்சமாக சூடு போய் பச்சை நரம்பு தெரியும்.
பின்பு அப்படியே உப்புமூட்டை தூக்கிக்கொண்டு என்னோடு
பயணம்தான்.

அப்பத்தாவின் பண்புகளையே, அம்மாவின் பெரும்
கருணையையே நான் பிற்பாடு என் மனைவி மீதும்
பூசியிருக்கிறேன். அவர்கள் அதனால் அதில் ஒளிர்கிறார்கள்.
என் அன்பைச் சொல்வது இப்படித்தான்.

ஓவியம் படிக்க சென்னைக்கு வந்திட்டேன். நாடகமும்,
சினிமாவும், கலையும் சேர்ந்து வளர்ந்திருந்த பெருங்
குடும்பத்தில் பிறந்தவனுக்கு வேறு என்ன வரும்!

சோலைமலை தாத்தாவோடு பத்மினி, சாவித்திரி, சந்திரபாபு
போன்ற கலைஞர்களை அவரவர் இயல்போடு
சந்தித்ததெல்லாம் நினைவு மட்டுமல்ல. அப்பத்தாவும், அப்பா,
அம்மாவும் கற்றுக் கொடுத்த பாடங்கள் மறக்க முடியாதவை.

அப்பா நிறைய படிப்பார். எங்களை வளர்த்தெடுத்ததில்
மகன், மகள் என வேறுபாடு காட்டவே மாட்டார்.

அம்மாவிற்கு குடும்பத்தோடு எல்லோரையும் அரவணைப்பதில்
பெரும் விருப்பம் இருந்தது. அவரிடம் பெற்று வளர்ந்ததே இந்த
பெரும் வாழ்வு.

‘யாரும் கைவிடப்படுவதில்லை’ என்கிற கிறிஸ்துவின்
வாக்கியம் அம்மாவின் வீட்டு மேலாண்மைக்கு பொருந்தும்.
இத்தனை பெரிய ஜனக்கட்டு கொண்ட பெரும் குடும்பத்தில்
ஒரு படி அரிசி கூட வெளியே விலைக்கு போனதில்லை.
எல்லோர் பசியையும் விளைந்த தானியம் தீர்த்தே
வைத்திருக்கிறது.
-


Last edited by ayyasamy ram on Wed Sep 09, 2020 6:17 pm; edited 3 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது Empty Re: லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது

Post by ayyasamy ram Wed Sep 09, 2020 5:51 pm

பசியில் காது அடைத்துப் போய் வருகிறவர்களுக்கு
யாராச்சும் ‘நீ சாப்டியா’னு கேட்க மாட்டாங்களான்னு
மனசு ஏங்கும். அப்படி வருகிறவர்களை அந்த வார்த்தை
கூட கேட்காமல் பெத்த பிள்ளை மாதிரி உட்கார
வைத்து வயிறு நிரப்பி அனுப்பும் அம்மா.
இந்த ஈரத்தைப் பார்த்து வளர்ந்தவன்தான் நான்.

இத்தனை பிரியத்தை தாண்டித்தான் இந்த சென்னைக்கு
வருகிறேன். இங்கே நண்பர்களின் அருகாமை நல்லா
அமையுது. அம்மாவைப் போலான சுசி சின்னம்மாவின்
கவனிப்பும் கிடைக்கிறது.

அப்படியிருக்கும் போது ஒரு நாள் வீட்டிலிருந்து ஒரு கடிதம்
வருது. ‘பொண்ணு பாத்தாச்சு. கல்யாணம் கூடி வருது.
புறப்பட்டு வா’னு தேதி நிர்ணயிச்சு அனுப்புறாங்க.
நான் மறுவார்த்தையில்லாமல் மதுரைக்கு புறப்பட்டுப்
போனேன். தாலி கட்டும்போதுதான் மனைவியாகப் போகும்
ரெத்தினத்தைப் பார்க்கிறேன்.

எங்களைப் போலவே பெரும் தலைக்கட்டாக வேரோடி
நிற்கிற குடும்பம்.

என்னோடு ரெத்தினத்தை சென்னைக்கு அனுப்பும்போது
‘சென்னை நாகரிகத்திற்கு பழக்கமில்லாத கிராமத்துப்
பொண்ணு. நீதான் பார்த்துக்கணும்’ என்று அம்மா அனுப்பி
வைத்தார்கள்.

மாறாக ரெத்தினமே என்னைப் பார்த்துக் கொள்கிறார்.
என் வாழ்வில் சந்தோஷத்தை நிலைநிறுத்திய மனைவி!
என்னிடம் அன்பாய் இருப்பது தவிர அவருக்கு எதுவும்
தெரியாது. ஒரு நாளும் இருவரும் சுடுசொல் பரிமாறியதில்லை.
நம்புவது உங்கள் விருப்பம்.

எல்லோரையும் அரவணைத்து வளர்ந்த மனப்பாங்கும்
அவரிடம் குவிந்திருக்கிறது. நான் நினைப்பதைச் செய்து
முடிக்கிற பக்குவம். இருவர் பார்வைக்கும் எங்களுக்கு
மட்டுமே தெரிந்த பொருளிருக்கிறது. அவருக்கு அன்பு
செய்வது தவிர எதுவும் தெரியாது.

வீட்டிற்கு வரும் நண்பர்களும் எங்களுக்கு மதுரையின்
ஜனக்கட்டு சூழலை நினைவூட்டுகிறார்கள். எனக்கு
ஓவியத்தையும் அவரின் அன்பை உணரவும் மட்டுமே
தெரியும்.

அவர் தனித்த பெண்ணல்ல. வீட்டிற்கு வருகிற நண்பர்களை
பாகுபாடின்றி நேசிக்கவும், மதிக்கவும், அன்பில்
கனியவைக்கவும் அவரால் முடியும்.

ஒரு நாளும் என்னிடம் குறைப்பட்டதில்லை. சேர்ந்திருக்கும்
வாழ்க்கையின் மீதான புகார் ஏதுமில்லை. என் வாழ்க்கையின்
மீதான அத்தனை பிரியமும் அவரையொட்டியே
அமைந்திருக்கிறது. மறந்தும் என் மனம் அலைவுற்றதில்லை.

உலகத்தைச் சுற்றி வந்த போதெல்லாம் அவரோடு இணைந்தே
போயிருக்கிறேன். என்னை அறிந்தவர்கள் ரெத்தினத்தையும்
சேர்த்தே அறிந்திருக்கிறார்கள்.

அக்காவாக, அம்மாவாக, அண்ணியாக மாறியிருக்கிறார்.
ஒரு நாளும் அகந்தையின் கரத்தில் அகப்பட்டதில்லை.
தன்னகங்காரம் இல்லாத அவரின் குழந்தைத் தனத்தை
எப்போதும் ரசிப்பேன். உண்மையான அன்பில் செறிந்து
நிற்கிறோம். அதுவே வாழ்க்கையாகிறது!
--
செய்தி: நா.கதிர்வேலன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
நன்றி- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது Empty Re: லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum