ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!

Go down

 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Empty திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!

Post by ayyasamy ram Fri Aug 28, 2020 1:48 pm

 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Ht4451702869
-

சாதாரணமாக சாலையோரங்களில் வளர்ந்து
செழித்திருக்கும் திருநீற்றுப்பச்சிலை ஆன்மிகரீதியாக
நிறைய பயன்பட்டு வருகிறது. இது மருத்துவரீதியாகவும்
எண்ணற்ற பலன்களைக் கொண்டது.

இதன் முக்கியத்துவம் காரணமாக மூலிகைகளின் அரசன்
என்றே வர்ணிக்கப்படுகிறது. யோகா மற்றும் இயற்கை
மருத்துவர் வித்யாலட்சுமியிடம் இதன் மருத்துவ சிறப்புகள்
குறித்து கேட்டோம்…

‘‘Ocimum Basilicum என்று தாவரவியலில் திருநீற்றுப்பச்சிலை
குறிப்பிடப்படுகிறது. துளசியைப் போல மணம் மிக்க தாவரம்
இது. திருநீற்றுப் பச்சிலையின் முழுத் தாவரமும் மருத்துவ
குணம் கொண்டதாகத் திகழ்கிறது. உருத்திரசடை, பச்சை,
பச்சிலை, சியா அல்லது சப்ஜா, இனிப்பு துளசி போன்ற வேறு
பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இதன் இலைகளுக்கென்று தனி மணம் உண்டு. அது கற்பூரத்தின்
தன்மை கொண்டது. அதில் Linalool, Eugenol, Thymol போன்ற
பொருட்கள் இருப்பதே அதற்கு காரணம். திருநீற்றுப்பச்சிலையில்
வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் போன்றவை காணப்படுகின்றன.
குறைந்த கலோரிகளை கொண்டுள்ள திருநீற்றுப்பச்சிலையில்
பொட்டாசியம், மாங்கனீசியம், கால்சியம் போன்ற தாது
உப்புக்களும் காணப்படுகின்றன.

இவை ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய்க்கிருமிகளுக்கு
எதிராக செயல்படுகிறது.

அதிகாலையில் இதன் இலைகள் ஐந்தினை எடுத்து மென்று
சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் நீங்கும். மேலும் இதன்
சாற்றினை சாப்பிடுவதன் மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படக்கூடிய
கடுமையான வலி குறையும். அதேபோல இதன் விதையை நீரில்
ஊற வைத்து, பிரசவத்துக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் பிரசவத்தால்
ஏற்பட்ட வலி குறையும்.

இந்த இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும்.
இதன் சாற்றினை காதில் விட காது வலி குறையும், மூக்கில் விட
மூக்கடைப்பு தீரும். இலைகளை முகர்ந்து பார்த்தால் தலைவலி,
இதய நடுக்கம், தூக்கமின்மை பிரச்னைகள் சரியாவதுடன் மூக்கு
தொடர்பான சின்னச்சின்ன பிரச்னைகளும் சரியாகும்.

திருநீற்றுப்பச்சிலையின் இலைச்சாறு வாந்தி, சுரம் ஆகியவற்றைப்
போக்கும். காதுவலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு
இதன் இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Empty Re: திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!

Post by ayyasamy ram Fri Aug 28, 2020 1:49 pm





இதன் இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால்
மார்புச்சளி, இருமல், வயிறு தொடர்பான வாயு பிரச்னைகள்
சரியாகும். முகப்பருவை விரட்ட இதன் சாறுடன் வசம்பு சேர்த்து
அரைத்துப் பூசினால் நல்ல பலன் கிடைக்கும். இதன் இலையை
அரைத்து இரவில் கட்டியில் பற்று போட்டு வர கட்டிகள் உடையும்.

தேள் கடியினால் வலி ஏற்படும் போது, அதன் கடிவாயில் இதன்
இலையை கசக்கி பூசினால் வலி குறையும். ஒற்றைத் தலைவலி
இருப்பவர்கள் இதன் இலையை தாய்ப்பால் விட்டு மென்மையாக
அரைத்து அதிகாலையில் வலியுள்ள பகுதியில் தொடர்ந்து
மூன்று நாட்கள் பற்று போட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

சப்ஜா விதை என்று அழைக்கப்படுகிற திருநீற்றுப்பச்சிலையின்
விதையை 5 கிராம் அளவு எடுத்து, அதை தண்ணீரில் 3 மணி நேரம்
ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வருவதன் மூலம் உடல்
உஷ்ணம் குறையும்.

மேலும் சீதபேதி, வெள்ளை, வெட்டை, வெட்டைச்சூடு, இருமல்,
வயிற்றுக்கடுப்பு, ரத்தக்கழிச்சல், நீர் எரிச்சல் போன்ற பிரச்னைகளும்
சரியாகும். இந்த விதைகள் வயிற்றுப் போக்குக்கு தீர்வு காண
உதவுகிறது.

இந்த விதையை கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலுக்கு
சுறுசுறுப்பு கிடைக்கும். விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்
பூச்சிக்கடிக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

இந்த தாவரத்தின் மலரானது மிகவும் சக்தி வாய்ந்தவை.
அது அஜீரணம் மற்றும் மூத்திர கடுப்பைப் போக்கும் தன்மையுடையது.
இதில் உள்ள ரசாயனங்கள் உடலில் உள்ள நோய்களைப் போக்கும்
அருமருந்தாக பயன்படுகின்றன.

இதிலுள்ள Carminative வயிற்றுப் பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது.
Diuretic சிறுநீரகக் கோளாறுகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது.
மேலும் இதிலுள்ள Antispasmodic வலி நிவாரணியாக பயன்படுகிறது.
இந்த தாவரத்தின் வேரானது காய்ச்சலைத் தணிக்கும்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கலை குணப்படுத்தும். இதன் வேரை இடித்து
பொடித்து கஷாயம் செய்து காலையும், மாலையும் அருந்தி வந்தால்
வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்றுப் புண்களை ஆற்றும்.

சிறுநீரகத்தை பலப்படுத்தி சிறுநீரை பெருக்கும்.
இது உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட
நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. யோகா மற்றும் இயற்கை
மருத்துவத்தில் மக்களின் நோய் தீர்ப்பதில் திருநீற்றுப்பச்சிலைக்கென்று
தனித்த ஓர் இடம் உண்டு.

இந்த தாவரம் பார்ப்பதற்கு துளசி போன்று காட்சியளித்தாலும்
தனக்கென்று தனித்துவமான பல்வேறு மருத்துவ குணங்களைப்
பெற்றுள்ளது. இதன் இலை, பூ, விதை, வேர் என்று அனைத்து பாகங்களும்
ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்களை உடையது.

எனவே, இதை மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான முறையில்
பயன்படுத்தினால், அதன் பலனை நாம் முழுமையாக பெற்று,
நோய்களை குணப்படுத்தி நலமுடன் வாழலாம்.’’
-
----------------------------------

க.கதிரவன்
நன்றி-தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum