Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல்
Page 1 of 1
ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல்
ஒரு ஞாயிற்றுக் கிழமை, நியூயார்க் சர்வதேச
ஜென் மையத்தில் சியுங் சான் தங்கியிருந்தபோது,
ஒரு பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த விழாவுக்கு அமெரிக்காவில் வசிக்கும்
கொரியப் பெண்கள் பலரும் வந்திருந்தனர். அவர்கள்
பைகள் நிறைய உணவையும் பரிசுகளையும்
கொண்டுவந்திருந்தனர்.
பெண் ஒருவர், பெரிய பிளாஸ்டிக் மலர்க்கொத்து
ஒன்றைப் பரிசாகக் கொண்டுவந்திருந்தார்.
அதை சியுங் சானின் அமெரிக்க மாணவர் ஒருவரிடம்
புன்னகைத்தபடி கொடுத்தார்.
அந்த மாணவர், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ,
அவ்வளவு சீக்கிரம் அந்த பிளாஸ்டிக் மலர்களை,
மேலங்கிகளைக் கொண்டு மறைத்தார். ஆனால்,
அங்கு வந்த மற்றொரு பெண் உடனடியாக அந்த
மலர்க்கொத்தைக் கண்டுபிடித்து விட்டார்.
பெரு மகிழ்ச்சியுடன் அவற்றை எடுத்துக்கொண்டு
போய் தர்ம அறையின் பீடத்திலிருந்த பூ ஜாடியில்
வைத்தார்.
அந்த மாணவருக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.
அவர் சியுங் சானிடம், “அந்த பிளாஸ்டிக் மலர்கள்
ரசனைக்குறைவாக இருக்கின்றன. அவற்றைப்
பீடத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோய்
வேறெங்காவது வைத்துவிட முடியாதா?”
என்று கேட்டார்.
“உன்னுடைய மனம்தான் பிளாஸ்டிக்காக இருக்கிறது.
இந்த மொத்தப் பிரபஞ்சமும் பிளாஸ்டிக் தான்”
என்றார் சியுங் சான்.
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்றார் மாணவர்.
“புத்தர் சொல்கிறார், ‘ஒருவரின் மனம் தூய்மையாக
இருந்தால், மொத்தப் பிரபஞ்சமும் தூய்மை யாக
இருக்கும்; ஒருவரின் மனம் களங்கத்துடன் இருந்தால்,
மொத்தப் பிரபஞ்சமும் களங்கத்துடன் இருக்கும்.’
ஒவ்வொரு நாளும், நாம் மகிழ்ச்சியற்ற பலரைச்
சந்திக்கிறோம். அவர்களின் மனம் சோகமாக இருக்கும்
போது, அவர்கள் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது,
தொடுவது என அனைத்துமே சோகமாக இருக்கும்.
மொத்தப் பிரபஞ்சமும் சோகமாகவே இருக்கும்.
மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, மொத்தப்
பிரபஞ்சமும் மகிழ்ச்சியாக இருக்கும். நீ ஏதாவது
ஒன்றுக்கு ஆசைப்பட்டால், அதனுடன் நீ பிணைக்கப்பட்டு
விடுகிறாய்.
அதை நீ புறக்கணித்தாலும், அதனுடன்தான்
நீ பிணைக்கப்பட்டிருக்கிறாய். ஒரு பொருள் அல்லது
விஷயத்துடன் பிணைக்கப்பட்டிருப்பது என்பது உன்
மனத்துக்கான தடையாகிவிடும். அதனால்
, ‘எனக்கு பிளாஸ்டிக் பிடிக்காது’ என்பதும் ‘எனக்கு
பிளாஸ்டிக் பிடிக்கும்’ என்ற இரண்டுமே
பிணைப்புகள்தாம்.
உனக்கு பிளாஸ்டிக் மலர்கள் பிடிக்காது, அதனால் உன்
மனம் பிளாஸ்டிக்காகிவிடுகிறது. அதனால், மொத்தப்
பிரபஞ்சமும் பிளாஸ்டிக்காகவிடுகிறது.
அவை எல்லாவற்றையும் கைவிடு.
ஜென் மையத்தில் சியுங் சான் தங்கியிருந்தபோது,
ஒரு பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த விழாவுக்கு அமெரிக்காவில் வசிக்கும்
கொரியப் பெண்கள் பலரும் வந்திருந்தனர். அவர்கள்
பைகள் நிறைய உணவையும் பரிசுகளையும்
கொண்டுவந்திருந்தனர்.
பெண் ஒருவர், பெரிய பிளாஸ்டிக் மலர்க்கொத்து
ஒன்றைப் பரிசாகக் கொண்டுவந்திருந்தார்.
அதை சியுங் சானின் அமெரிக்க மாணவர் ஒருவரிடம்
புன்னகைத்தபடி கொடுத்தார்.
அந்த மாணவர், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ,
அவ்வளவு சீக்கிரம் அந்த பிளாஸ்டிக் மலர்களை,
மேலங்கிகளைக் கொண்டு மறைத்தார். ஆனால்,
அங்கு வந்த மற்றொரு பெண் உடனடியாக அந்த
மலர்க்கொத்தைக் கண்டுபிடித்து விட்டார்.
பெரு மகிழ்ச்சியுடன் அவற்றை எடுத்துக்கொண்டு
போய் தர்ம அறையின் பீடத்திலிருந்த பூ ஜாடியில்
வைத்தார்.
அந்த மாணவருக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.
அவர் சியுங் சானிடம், “அந்த பிளாஸ்டிக் மலர்கள்
ரசனைக்குறைவாக இருக்கின்றன. அவற்றைப்
பீடத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோய்
வேறெங்காவது வைத்துவிட முடியாதா?”
என்று கேட்டார்.
“உன்னுடைய மனம்தான் பிளாஸ்டிக்காக இருக்கிறது.
இந்த மொத்தப் பிரபஞ்சமும் பிளாஸ்டிக் தான்”
என்றார் சியுங் சான்.
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்றார் மாணவர்.
“புத்தர் சொல்கிறார், ‘ஒருவரின் மனம் தூய்மையாக
இருந்தால், மொத்தப் பிரபஞ்சமும் தூய்மை யாக
இருக்கும்; ஒருவரின் மனம் களங்கத்துடன் இருந்தால்,
மொத்தப் பிரபஞ்சமும் களங்கத்துடன் இருக்கும்.’
ஒவ்வொரு நாளும், நாம் மகிழ்ச்சியற்ற பலரைச்
சந்திக்கிறோம். அவர்களின் மனம் சோகமாக இருக்கும்
போது, அவர்கள் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது,
தொடுவது என அனைத்துமே சோகமாக இருக்கும்.
மொத்தப் பிரபஞ்சமும் சோகமாகவே இருக்கும்.
மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, மொத்தப்
பிரபஞ்சமும் மகிழ்ச்சியாக இருக்கும். நீ ஏதாவது
ஒன்றுக்கு ஆசைப்பட்டால், அதனுடன் நீ பிணைக்கப்பட்டு
விடுகிறாய்.
அதை நீ புறக்கணித்தாலும், அதனுடன்தான்
நீ பிணைக்கப்பட்டிருக்கிறாய். ஒரு பொருள் அல்லது
விஷயத்துடன் பிணைக்கப்பட்டிருப்பது என்பது உன்
மனத்துக்கான தடையாகிவிடும். அதனால்
, ‘எனக்கு பிளாஸ்டிக் பிடிக்காது’ என்பதும் ‘எனக்கு
பிளாஸ்டிக் பிடிக்கும்’ என்ற இரண்டுமே
பிணைப்புகள்தாம்.
உனக்கு பிளாஸ்டிக் மலர்கள் பிடிக்காது, அதனால் உன்
மனம் பிளாஸ்டிக்காகிவிடுகிறது. அதனால், மொத்தப்
பிரபஞ்சமும் பிளாஸ்டிக்காகவிடுகிறது.
அவை எல்லாவற்றையும் கைவிடு.
Re: ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல்
அதற்குப் பிறகு, எதனாலும் தடையிருக்காது. மலர்கள்
பிளாஸ்டிக்காக இருக்கின்றனவா அல்லது உண்மையாக
இருக்கின்றனவா என்பதைப் பற்றி அக்கறைப்பட
மாட்டாய். அவை பீடத்தில் இருக்கின்றனவா அல்லது
குப்பைக் குவியலில் இருக்கின்றனவா என்பதைப் பற்றிக்
கவலைப்பட மாட்டாய். இது உண்மையான விடுதலை.
ஒரு பிளாஸ்டிக் மலர் என்பது வெறுமனே பிளாஸ்டிக் மலர்
அவ்வளவே. ஓர் உண்மையான மலர் என்பதும் வெறுமனே
உண்மையான மலர் அவ்வளவே. நீ பெயர், வடிவத்துடன்
பிணைக்கப்படத் தேவையில்லை” என்று சொன்னார்
சியுங் சான்.
“ஆனால், நாம் இங்கு அனைவருக்குமான ஒரு அழகான
ஜென் மையத்தை உருவாக்க முயன்றுகொண்டிருக்கிறோம்.
எப்படி என்னால் அக்கறை காட்டாமல் இருக்க முடியும்?
அந்த மலர்கள் மொத்த அறையின் அழகையும்
பாழ்படுத்துகின்றன” என்றார் மாணவர்.
யாராவது ஒருவர் புத்தருக்கு உண்மையான மலர்களை
வழங்கினால், புத்தர் மகிழ்ச்சியடைகிறார். யாராவது
ஒருவருக்கு பிளாஸ்டிக் மலர்கள் பிடித்துபோய், அவற்றை
அவர் புத்தருக்கு வழங்கினாலும், புத்தர் மகிழ்ச்சியாகவே
இருக்கிறார். புத்தர் பெயருடனோ, வடிவத்துடனோ
பிணைக்கப்படவில்லை. மலர்கள் பிளாஸ்டிக்கா அல்லது
உண்மையா என்பது பற்றி புத்தருக்கு அக்கறை கிடையாது.
அவர் நமது மனம் பற்றி மட்டும்தான் அக்கறைப்படுகிறார்.
பிளாஸ்டிக் மலர்களை வழங்கும் இந்தப் பெண்களிடம்
தூய்மையான மனம் இருக்கிறது. அவர்களின் இந்தச் செயல்
போதிச்சத்துவச் செயலாகும்.
பிளாஸ்டிக்காக இருக்கின்றனவா அல்லது உண்மையாக
இருக்கின்றனவா என்பதைப் பற்றி அக்கறைப்பட
மாட்டாய். அவை பீடத்தில் இருக்கின்றனவா அல்லது
குப்பைக் குவியலில் இருக்கின்றனவா என்பதைப் பற்றிக்
கவலைப்பட மாட்டாய். இது உண்மையான விடுதலை.
ஒரு பிளாஸ்டிக் மலர் என்பது வெறுமனே பிளாஸ்டிக் மலர்
அவ்வளவே. ஓர் உண்மையான மலர் என்பதும் வெறுமனே
உண்மையான மலர் அவ்வளவே. நீ பெயர், வடிவத்துடன்
பிணைக்கப்படத் தேவையில்லை” என்று சொன்னார்
சியுங் சான்.
“ஆனால், நாம் இங்கு அனைவருக்குமான ஒரு அழகான
ஜென் மையத்தை உருவாக்க முயன்றுகொண்டிருக்கிறோம்.
எப்படி என்னால் அக்கறை காட்டாமல் இருக்க முடியும்?
அந்த மலர்கள் மொத்த அறையின் அழகையும்
பாழ்படுத்துகின்றன” என்றார் மாணவர்.
யாராவது ஒருவர் புத்தருக்கு உண்மையான மலர்களை
வழங்கினால், புத்தர் மகிழ்ச்சியடைகிறார். யாராவது
ஒருவருக்கு பிளாஸ்டிக் மலர்கள் பிடித்துபோய், அவற்றை
அவர் புத்தருக்கு வழங்கினாலும், புத்தர் மகிழ்ச்சியாகவே
இருக்கிறார். புத்தர் பெயருடனோ, வடிவத்துடனோ
பிணைக்கப்படவில்லை. மலர்கள் பிளாஸ்டிக்கா அல்லது
உண்மையா என்பது பற்றி புத்தருக்கு அக்கறை கிடையாது.
அவர் நமது மனம் பற்றி மட்டும்தான் அக்கறைப்படுகிறார்.
பிளாஸ்டிக் மலர்களை வழங்கும் இந்தப் பெண்களிடம்
தூய்மையான மனம் இருக்கிறது. அவர்களின் இந்தச் செயல்
போதிச்சத்துவச் செயலாகும்.
Re: ஜென் துளிகள்: மனம் என்பது பெருங்கடல்
உன் மனம் பிளாஸ்டிக் மலர்களைப் புறக்கணிக்கிறது.
அதனால், நீ நல்லது, கெட்டது, அழகு, அசிங்கம் என்று
பிரபஞ்சத்தைப் பிரித்து விட்டாய்.
அதனால், உன் செயல் போதிச்சத்துவச் செயலில்லை.
புத்தரின் மனத்தை மட்டும் வைத்துக் கொள்.
அப்போது உனக்கு எந்தத் தடையும் இருக்காது.
உண்மையான மலர்கள் நல்லது; பிளாஸ்டிக் மலர்களும்
நல்லது. இந்த மனம் பெருங்கடலைப் போன்றது.
அதனுள் ஹட்சன் ஆறு, சார்லஸ் ஆறு, மஞ்சள் ஆறு, சீன நீர்,
அமெரிக்க நீர், தூய்மையான நீர், மாசடைந்த நீர், உப்பு நீர்,
தெளிந்த நீர் என அனைத்து நீரும் ஓடுகிறது.
‘உன் நீர் மாசடைந்திருக்கிறது. நீ எனக்குள் ஓடமுடியாது’
என்று கடல் ஒருபோதும் சொல்வதில்லை. அது எல்லா
நீரையும் ஏற்றுக்கொள்கிறது. எல்லாவற்றையும் இணைத்து,
கடலாகிறது. அதனால்,நீ புத்தரின் மனத்தை வைத்துக்
கொண்டால், உன் மனம் பெருங்கடலைப் போலாகிவிடும்.
இதுதான் ஞானத்துக்கான பெருங்கடல்” என்றார் சியுங் சான்.
அந்த மாணவர் ஆழ்ந்த வணக்கத்தைச் செலுத்தினார்.
=====================================
(டிராப்பிங் ஆஷஸ் ஆன் தி புத்தா:
தி டீச்சிங் ஆஃப் ஜென் மாஸ்டர் சியுங் சான்
புத்தகத்திலிருந்து)
---
தமிழில்: என். கௌரி
நன்றி-இந்து தமிழ் திசை
(ஆனந்த ஜோதி)
அதனால், நீ நல்லது, கெட்டது, அழகு, அசிங்கம் என்று
பிரபஞ்சத்தைப் பிரித்து விட்டாய்.
அதனால், உன் செயல் போதிச்சத்துவச் செயலில்லை.
புத்தரின் மனத்தை மட்டும் வைத்துக் கொள்.
அப்போது உனக்கு எந்தத் தடையும் இருக்காது.
உண்மையான மலர்கள் நல்லது; பிளாஸ்டிக் மலர்களும்
நல்லது. இந்த மனம் பெருங்கடலைப் போன்றது.
அதனுள் ஹட்சன் ஆறு, சார்லஸ் ஆறு, மஞ்சள் ஆறு, சீன நீர்,
அமெரிக்க நீர், தூய்மையான நீர், மாசடைந்த நீர், உப்பு நீர்,
தெளிந்த நீர் என அனைத்து நீரும் ஓடுகிறது.
‘உன் நீர் மாசடைந்திருக்கிறது. நீ எனக்குள் ஓடமுடியாது’
என்று கடல் ஒருபோதும் சொல்வதில்லை. அது எல்லா
நீரையும் ஏற்றுக்கொள்கிறது. எல்லாவற்றையும் இணைத்து,
கடலாகிறது. அதனால்,நீ புத்தரின் மனத்தை வைத்துக்
கொண்டால், உன் மனம் பெருங்கடலைப் போலாகிவிடும்.
இதுதான் ஞானத்துக்கான பெருங்கடல்” என்றார் சியுங் சான்.
அந்த மாணவர் ஆழ்ந்த வணக்கத்தைச் செலுத்தினார்.
=====================================
(டிராப்பிங் ஆஷஸ் ஆன் தி புத்தா:
தி டீச்சிங் ஆஃப் ஜென் மாஸ்டர் சியுங் சான்
புத்தகத்திலிருந்து)
---
தமிழில்: என். கௌரி
நன்றி-இந்து தமிழ் திசை
(ஆனந்த ஜோதி)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜென் நிலை என்பது யாதெனில்…!
» தியானம் என்பது மனம் மூடி அமர்ந்திருப்பது!
» உலக பெருங்கடல் தினம்
» மனதின் பெருங்கடல் - கவிதை
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» தியானம் என்பது மனம் மூடி அமர்ந்திருப்பது!
» உலக பெருங்கடல் தினம்
» மனதின் பெருங்கடல் - கவிதை
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|