ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...

5 posters

Go down

இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில்  மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...  Empty இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...

Post by ayyasamy ram Wed Aug 05, 2020 9:16 am

இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில்  மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...  550857
-


‘மோகனாம்பாள்’, ‘சிக்கல் சண்முகசுந்தரம்’
கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷன் யார்? - கொத்தமங்கலம்
சுப்பு உருவாக்கினார்; ஏ.பி.நாகராஜன் மெருகூட்டினார்!

’இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டால்,
‘எத்தனை தடவை பார்த்திருக்கிறேன் என்று கேளுங்கள்’
என்று தமிழ் ரசிகர்கள் உற்சாகத்துடன் கேட்பார்கள்.

படம் பிடித்துப் போகலாம். ஆனால் படத்தில் இந்தக் காட்சி
பிடிக்கலை, அந்தக் காட்சி சரியில்லை என்று சொல்ல,
எல்லாப் படங்களிலும் எக்கச்சக்க காட்சிகள் உண்டு.

ஆனால், ‘ஒவ்வொரு சீனும் அவ்ளோ பிரமாதமா எடுக்கப்
பட்டிருக்கும்’ என்று எல்லோரும் ஒருமித்த குரலில்
சொல்வார்கள். அந்தப் படம் ‘தில்லானா மோகனாம்பாள்’.

டிவியில் ஒரு படத்தைத் திரையிட்டால்,
’எத்தனை தடவைதான் போடுவாங்களோ? போனமாசம்தான்
போட்டாங்க. பாத்தோம். சேனலை திருப்பு சேனலை திருப்பு’
என்று மற்ற படங்களைத் திரையிட்டால் சொல்வார்கள்.
ஆனால் ‘தில்லானா மோகனாம்பாள்’ இவற்றுக்கெல்லாம்
விதிவிலக்கு.

நேற்றைக்குப் போடும்போதும் பார்த்தார்கள். இன்றைக்குப்
போட்டாலும் பார்ப்பார்கள். நாளைக்கே ஒளிபரப்பினாலும்
மீண்டும் ஆர்வத்துடன் பார்ப்பார்கள்.
அதுதான் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் மேஜிக்
திரைக்கதை.

புதிதாக ரிலீஸாகும் படங்கள் கூட அப்படியொரு தாக்கத்தை
நிகழ்த்தாது. ஆனால் இந்தப் படம் நமக்குள் ஒவ்வொரு
முறையும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.

இத்தனைக்கும் படம் வெளியாகி 52 வருடங்களாகின்றன.
இதுவும் அளப்பரிய சாதனைதான்! அப்படியெனில்,
52 வருடங்களுக்கு முன்பு, படம் ரிலீஸானபோது இன்னும்
எப்படியெல்லாம் குதூகலித்திருப்பார்கள் ரசிகர்கள்.

’தில்லானா மோகனாம்பாள்’ நிகழ்த்திய சாதனையைப்
போல், தமிழ் சினிமாவில் வேறு ஏதேனுமொரு படம் இதற்கு
நிகராக நிகழ்த்தியிருக்குமா என்பது சந்தேகம்தான்.

ஒருநாவல் எப்படி சினிமாவாக மாற்றப்படவேண்டும்,
ஒரு சினிமா எந்தவகையிலான திரைக்கதையுடன் இருக்க
வேண்டும் என்பதற்கெல்லாம் டிக்‌ஷனரி,
என்சைக்ளோபீடியா எல்லாமே ‘தில்லானா மோகனாம்பாள்’
தான்!
இந்த ரசவாதத்தைச் செய்த முதல் சூத்திரதாரி...
கொத்தமங்கலம் சுப்பு. கதையின் கர்த்தா இவர்.
---
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில்  மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...  Empty Re: இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...

Post by ayyasamy ram Wed Aug 05, 2020 9:18 am


ஆனந்த விகடனில் இவர் இந்தக் கதையை தொடராக
எழுதியபோதே, வாசகர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டு
உட்கார்ந்துகொண்டாள் ’மோகனாம்பாள்’. கதை
சொல்வதில் மன்னர் இவர். அதனால்தான் இவர் எழுதிய
‘சந்திரலேகா’ கூட இன்றைக்கும் பிரம்மாண்டத்தால்
பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

நடனமே உயிரென வாழ்ந்து வரும் நாயகி. நாகஸ்வரமே
மூச்சென வாழ்ந்து வரும் நாயகன். இருவருக்கும் காதலுக்குள்
நடக்கிற மோதலும், மோதலுக்குள்ளேயே வளர்கிற காதலும்,
இறுதியில் இருவரும் ஒன்றுசேருவதும்தான் கதை.

இதை ஒரு தொடர்கதையாக எழுதவும் அந்தத் தொடரை,
சினிமாவாக மாற்றுவதும் லேசுப்பட்ட விஷயமல்ல.

’’பந்தநல்லூர் ஜெயலட்சுமி. மயிலாடுதுறை அருகில் உள்ளது
இந்த ஊர். நாட்டியக்கலைஞர் இவர். இவரைக் கொண்டுதான்
மோகனாம்பாள் கேரக்டரை உருவாக்கினாராம்
கொத்தமங்கலம் சுப்பு. நாதஸ்வரக் கலைஞர்
சிக்கல் சண்முகசுந்தரத்தின் பாடி லாங்வேஜெல்லாம்
திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையை வைத்து
உருவாக்கப்பட்டதாம்.

ஆனாலும் மோகனாம்பாளையும் சிக்கல் சண்முகசுந்தரத்தையும்
எங்கோ வாழ்ந்த ஜீவன்களாகத்தான் இன்னும் நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்!

அவர்களை மட்டுமா? வைத்தியையும் ஜில்ஜில்
ரமாமணியையும் சிங்கபுரம் மைனரையும் மதன்பூர்
மகாராஜாவையும் கூட ரசிகர்கள் மறக்கவில்லை. மறக்கவும்
முடியாது. கொத்தமங்கலம் சுப்பு ஒரு ஜாம்பவான். ஏ.பி.நாகராஜன்
மற்றொரு ஜாம்பவான்.

அவரின் கதாபாத்திரங்களுக்கும் கதைக்கும் இவர் மெருகூட்டினார்.
சிவாஜியும் பத்மினியும் நாகேஷும் மனோரமாவும்
உயிரூட்டினார்கள்!

அதனால்தான், சிக்கல் சண்முகசுந்தரம், மோகனாம்பாள்,
அவரின் அம்மா வடிவு, வைத்தி, ஜில்ஜில் ரமாமணி எல்லோரும்
இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், நம் மனங்களில்!

இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில்
மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...
‘தில்லானா மோகனாம்பாள்’. அதனால்தான் திரும்பத்
திரும்பப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் தமிழ் மக்கள்!
-
--------------------------
-
வி. ராம்ஜி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில்  மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...  Empty Re: இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...

Post by ayyasamy ram Wed Aug 05, 2020 9:27 am

இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில்  மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...  Images?q=tbn%3AANd9GcS6uo9-n08EScMvGlMYsesn_T6KSjJVTDJQdA&usqp=CAU
-
இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில்  மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...  GzJuikrxRA4JsBrLruvf+0499d3d7-5654-45b9-a436-fa47768072b4
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில்  மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...  Empty Re: இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...

Post by மாணிக்கம் நடேசன் Wed Aug 05, 2020 11:34 am

உண்மை தான் ஐயா சார். உங்களது சிறப்பான இப்பதிவுக்கு எனது நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில்  மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...  Empty Re: இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...

Post by Dr.S.Soundarapandian Wed Aug 05, 2020 11:58 am

மறைந்திருந்து பார்க்காமல் எல்லோரும் அறியும்படியாக இயம்பியது சிறப்பு!

சண்முகப்பிரியா ராகத்தில் ‘மறைந்திருந்து ...’  பாடல் காட்சியில் சிவாஜி நடிப்பைப் பார்ப்பதா? பத்மினி நடனத்தைப் பார்ப்பதா? பாலையா நகைச்சுவையைப் பார்ப்பதா? என்று குழம்புவோம்! படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள் என்கிறீர்களே, அதன் இரகசியம் இதுதான் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில்  மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...  Empty Re: இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...

Post by SK Wed Aug 05, 2020 12:01 pm

இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில்  மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...  3838410834 இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில்  மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...  3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில்  மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...  Empty Re: இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...

Post by heezulia Fri Aug 07, 2020 1:56 pm

07.08.2020

சபாஷ் சரியான போட்டி.
என்ன..............வஞ்சிக்கோட்டை வாலிபன் படம் ஞாபகம் வந்துருச்சா? வரும் வரும், ஏன் வராது? இந்த படத்ல அவ்ளோ பாப்புலரான வசனமாச்சே.

ஆனா இது தில்லானா மோகனாம்பாள் படத்ல பத்மினிக்கும், சிவாஜிக்குமான போட்டி. போ.......................ட்டி போட்டு நடிச்சிருப்பாங்க ரெண்டு பேரும்.

படம் வந்து 50 வருஷத்துக்கு மேலாகியும், நம்ம மனசுல நீங்காத இடம் பெற்றிருக்கிற பட,ம்.

MGR முதலமைச்சராக இருந்தபோது, இந்திய கலாச்சாரத்தை பற்றி தெரிஞ்சுகிறதுக்காக வெளிநாட்டவர் வந்திருந்தாங்க. அரசு அதிகாரிகள் எல்லாரும் ஒட்டுமொத்தமா அவ்ங்களுக்கு எம்.ஜி.ஆர். நடிச்ச எங்க வீட்டு பிள்ளை படத்தை போட்டு காட்டலாம்னு சொன்னாங்களாம்.
ஆனா MGR என்ன சொன்னார் தெரீமோ?
"இல்ல இல்ல, இந்த படம் வ்யாபார ரீதியாத்தான் வெற்றி பெற்றுச்சு. வந்திருக்கிறவங்க நம்ம நாட்டோட கலை, பண்பாடுல்லாம் தெரிஞ்சுக்க வந்திருக்காங்க. அவ்ங்க எதிர்பாக்குற அத்தன விஷயங்களும் தில்லானா மோகனாம்பாள் படத்துலதான் இருக்கு. அதனால அந்த படத்த போட்டுக்காட்டுங்க"ன்னு சொல்லிட்டாரு. அவருக்கும் இந்த படம் அவ்ளோ........... புடிச்சிருக்ககூன்னா பாத்துக்கோங்களேன்.

இந்த படத்ல நாகேஷின் வைத்தி ரோல்ல கொத்தமங்கலம் சுப்புதான் நடிப்பதாக இருந்துச்சாம். அது முடியாம போச்சு.

ஜில்ஜில் ரமாமணி மனோரமாவை 'ஜில்லு' னு செல்லமா சிவாஜி கூப்ட்ற அழகு, ஸ்டைலே தனிதான்.

இந்த படத்துக்கு பின்னணி இசை போட்ட மதுரை சகோதரர்கள் பொன்னுசாமியும், சேதுராமனும் மதுரைக்கும், சென்னைக்குமா வந்து போயி வந்து போயி சிவாஜிக்கு பயிற்சி கொடுத்தாங்களாம்.
நாலு மாச ரிகர்சல். KV மகாதேவன் மதுரை சகோதரர்களை beண்டை நிமித்திட்டாராம்.

ஷூட்டிங் ஸ்பாட்ல நாதஸ்வர வித்வான்கள் அந்த ஸீன்க்கு ஏத்தபடி வாசிக்க, ஏ.ப்பி. நாகராஜன் அதை மனசுல போட்டுக்க, சிவாஜியும், AVM ராஜனும் உண்மையான நாதஸ்வர கலைஞர்களை போல நடிச்சு அசத்தினாங்க. அந்த அசத்தலைத்தான் படத்ல பாத்தோம்.

ஜனங்கள் மனஸ்ல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்கிறவதான் இந்த தில்லானா மோகனாம்பாள்.

இந்த படத்தை பற்றி இன்னும் ஏராளமாக எழுத இருக்கு. ஆனா இது போதும்.


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில்  மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...  Empty Re: இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum