ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 
Dr.S.Soundarapandian
அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_m10அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை

4 posters

Go down

அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Empty அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை

Post by ayyasamy ram Tue Aug 04, 2020 8:29 pm

அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Vikatan%2F2020-08%2F81ce36ec-1c08-43d8-b32d-6721f7a4309c%2Fvikatan_2019_05_fd244f86_f1f8_4706_a345_a815deabf912_23.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
ராமசாமியின் மாமனார், கோயில் திருவிழாவிற்கு மனைவியுடன்
வரும்படி கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் ராதா முழுகாமல் இருப்பதால் இப்போது பயணம்
வேண்டாமென்று ராமசாமியின் தாய் கூறிவிட்டதால், ராமசாமி
மட்டும் திருவிழா சமயத்தில் மாமனார் வீடு சென்றான்.

மாப்பிள்ளையின் வருகையால் மகிழ்ந்துபோன ராதா குடும்பத்தினர்,
ஒவ்வொரு வேளை உணவையுமே விருந்தாகப் படைத்தனர்.

ராமசாமியைத் திக்குமுக்காட வைத்தனர். அதிலும் அன்று மாலை
டிபனுக்காகச் செய்த ‘ கொழுக்கட்டை’ அவனுக்கு ரொம்பவும்
பிடித்துப் போயிற்று.

சூடான வெண்மாவு மேல்புறத்தில் உள்ளே வேகவைத்து மசித்த
கடலைப்பருப்புடன் தேங்காய்ப் பூவும் வெல்லப்பாகும் சேர்ந்து தரும்
அலாதிச் சுவை!

நாக்கில் எச்சில் ஊற வைக்கும் இனிமை. அதன் பெயரென்ன
என்பதை தனது மாமியாரிடமே கேட்டு வைத்துக்கொண்டான்.
இருந்தாலும் 'கொழுக்கட்டை' என்ற பெயர் அவனுக்கு அடிக்கடி
மறந்துபோயிற்று.

நான்கைந்து நாட்களுக்குப் பிறகு ஊருக்குப் புறப்பட்ட போது
மீண்டும் அந்த இனிப்பின் பெயரை மீண்டும் ஒருமுறை கேட்டுக்
கொண்டான்!

வரும் வழியில் வயல்களைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்ல
எண்ணிய அவன், வரப்புகளில் இறங்கி நடந்தான்! அப்போது வரை
மனதிற்குள், "கொழுக்கட்டை,கொழுக்கட்டை" என்று சொல்லிக்
கொண்டு வந்தான்!

வரப்பில் ஓரிடத்தில் பெரிதாக உடைந்து உடைப்பெடுத்திருக்க,
அதனைத் தாண்டுவதற்காக மூச்சுப் படித்த அவன், ’அத்ரி பாட்சா’
என்று சொல்லியபடியே தாண்டினான்.

அவ்வளவுதான். உடைப்பின் அந்தப் பக்கத்தோட கொழுக்கட்டை
போக, இந்தப் பக்கம் வந்த அவன் மனதில் ‘அத்ரி பாட்சா’ ஒட்டிக்
கொண்டது. மனதிற்குள் அத்ரிப் பாட்சாவே சாசுவதமானது.

வீட்டிற்கு வந்தவனை அனைவரும் குசலம் விசாரித்தனர்.
மனைவி ராதாவும், தங்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தாள்.
விருந்தைப் பற்றியும், ராதா வீட்டாரின் விருந்தோம்பலைப்
பற்றியும் ஏகமாக சிலாகித்த அவன், மனைவியிடம்
"ஒங்கம்மா செய்ற மாதிரியே எனக்கு அத்ரி பாட்சா செய்து தா!"
என்றான்! "என்ன அத்ரி பாட்சாவா?" என்றவள், கணவன் தன்னிடம்
ஏதோ விளையாடுகிறான் என்று எண்ணி இருந்துவிட்டாள்.

இரண்டு நாட்கள் நகர்ந்தன. வயலிலிருந்து களைத்துப்போய்
மாலை திரும்பிய அவன், அன்றாவது மனைவி கை மூலம்
"அத்ரி பாட்சா" கிடைக்குமென்று ஆசையாக வந்தான்.

அன்றைக்கும் ‘இல்லை’ என்றதும் அவனுக்குப் பயங்கர கோபம்
வந்து விட்டது! ’எங்கே அத்ரிபாட்சா?’ என்று மனைவியை உலுக்க ,
அவள் என்னவென்றே புரியாமல் திகைக்க, "ஒங்கம்மா செய்யிற
அத்ரி பாட்சா உனக்கு மட்டும் தெரியாதா? என் வார்த்தைக்கு
அவ்வளவுதான் மதிப்பா?" என்றபடியே அவள் கன்னத்தில் கோபமாக
அறைந்தான்.

அவள் செய்வதறியாமல் திகைத்து," என்னதான் ஆயிற்று? இந்த
மனுஷனுக்கு?’ என்று புலம்பியபடி, மறுநாள் யாரையாவது ஊருக்கு
அனுப்பி அம்மாவிடமாவது அந்த இனிப்பின் பெயரை அறிந்துவரச்
செய்யவேண்டுமென்று முடிவுசெய்தாள்.

மாலை, எப்போதாவது வந்து ராதாவிடம் பேசிக்கொண்டிருக்கும்
பக்கத்துவீட்டுப் பாட்டி வர, ராதாவின் முகத்தைப் பார்த்து அதிர்ந்து,
"பேராண்டியா அடிச்சான்? இப்படிக் கொழுக்கட்டை மாதிரி வீங்கிக்
கிடக்கே? அப்படி நீ என்ன செஞ்சே?" என்று கேட்டுக்
கொண்டிருக்கையில், அதனைக்கேட்ட ராமசாமி,

"மன்னிச்சுடு! ராதா! கொழுக்கட்டையைத் தான் அத்ரி பாட்சா என்று
என் ஞாபக மறதியால் கூறி உன்னைச் சங்கடப்படுத்தி விட்டேன்!
என்னை மன்னிச்சுடு!"

என்று உருக, ராதாவோ,’சரிங்க விடுங்க! நான் ஒங்க பொண்டாட்டி!
அடிக்கிறதுக்கும், அணைக்கிறதுக்கும் ஒங்களுக்கில்லாத உரிமையா!
இருங்க. இன்னைக்கே அத்ரி பாட்சா செஞ்சு ஒங்களை அசத்திடறேன்."
என்றாள். அடித்ததும், அடிபட்டதும் தன் பேச்சைக் கேட்டு சுமுகமாகி
விட்டதைக் கண்ட பாட்டிக்கு ரொம்பவும் சந்தோஷம்.
-
-----------------------------
-ரெ.ஆத்மநாதன்,
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Empty Re: அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை

Post by T.N.Balasubramanian Tue Aug 04, 2020 8:46 pm

இரெண்டு அத்திரி பாட்சா பதிவாகி இருக்கிறது 
ஒரு கொழுக்கட்டையை நீக்கி விடுகிறேன்.
என்ஜாய் பண்ணுங்க 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Empty Re: அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை

Post by krishnaamma Tue Aug 04, 2020 8:59 pm

ம்ம்.. அந்தக்காலத்து பாட்டிக் கதை...புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Empty Re: அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை

Post by T.N.Balasubramanian Wed Aug 05, 2020 5:24 pm

அத்திரிமாக் என கேள்வி பட்டுள்ளேன்,இந்த கதையில் 
அத்திரிபாட்சா கேள்விப்பட்டதில்லை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Empty Re: அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை

Post by SK Thu Aug 06, 2020 7:05 pm

30 வரும் முன் பிடித்த கதை நினைவு படுத்தியதற்கு நன்றி ஐயா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை Empty Re: அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum