Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வள்ளிக்குறத்தி
Page 1 of 1
வள்ளிக்குறத்தி
ஒருமுறை, சிவனாரின் ஆனந்த நடனத்தில் லயித்து
இன்புற்றிருந்த திருமாலின் கண்களில் ஆனந்த நீர்
பெருகியது. திருமகளின் திருவருளுடன் அந்தக்
கண்ணீர்த் துளிகள் இரண்டு பெண்களாக வடிவம்
கொண்டன.
விஷ்ணுவும் லட்சுமியும் அவர்களைத் தங்களின்
மகள்களாக ஏற்று அமுதவல்லி,
சுந்தரவல்லி எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.
தந்தை திருமாலின் மந்திர உபதேசப்படி, அந்தப்
பெண்கள் திருமுருகனை நோக்கித் தவம் செய்தனர்.
அதனால் மகிழ்ந்த முருகன், அவர்கள் முன் தோன்றி
ஆசியளித்து, அவர்களது விருப்பப்படி அவர்களைத்
திருமணம் செய்துகொள்வதாக வரம் அளித்தார்.
அமுதவல்லியைத் தேவலோகத்திலும், சுந்தரவல்லியை
மண்ணுலகிலும் பிறக்கும்படி கூறினார்.
முருகன் ஆணைப்படி மண்ணுலகம் வந்த சுந்தரவல்லி,
மலைக் குகை ஒன்றில் தவம் இருந்தாள். அந்தப் பகுதியை
ஆண்ட நம்பிராஜன் என்ற குறவர் குலத் தலைவன்,
பெண் குழந்தை இல்லையே என்று ஏக்கம் மேலிட,
தமது குல தெய்வமான முருகனிடம் வேண்டி வழிபட்டான்.
அதே மலைச்சாரலில், யோகத்தில் எழுந்தருளியிருந்தார் திருமால்.
அங்கே, பெண் மான் வடிவில் வந்த மகாலட்சுமி, அவர் முன்னே
துள்ளிக் கொண்டிருந்தாள். திருமால் அந்த மானை இச்சையுடன்
நோக்க, அதனைத் தனது யோகத் தால் உணர்ந்த சுந்தரவல்லி,
திருமாலின் கண் வழியாகப் புகுந்து, மான் வயிற்றில் உள்ள கருவை
அடைந்தாள்.
மான் கருவுற்று, பெண் குழந்தையை ஈன்றது. தான் ஈன்ற
குட்டி மான் குட்டியாக இல்லாமல், மனித வடிவில் இருப்பதைக்
கண்ட அந்தப் பெண் மான், வள்ளிக் கிழங்கு அகழ்ந்த
குழியொன்றில் அந்தக் குழந்தையை விட்டுச் சென்றது.
அதே நேரம், யோகநிலை விட்டு திருமால் அங்கு வர, மகாலட்சுமியும்
மான் வடிவம் நீங்கி வந்து, இருவரும் அந்தக் குழந்தையைத் தழுவி
மகிழ்ந்து, வாழ்த்தினர்.
Re: வள்ளிக்குறத்தி
பின்னர், வள்ளிக் கிழங்கை அகழ்ந்த அந்தக் குழியிலேயே அந்தக்
குழந்தையை அவர்கள் விட்டுச் சென்றனர். குழந்தையின் அழுகுரல்
கேட்டு அங்கு வந்த நம்பிராஜன், தான் வேண்டிய படியே முருகன்
அளித்த அந்தப் பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு தன்
இல்லத்துக்குச் சென்று, 'வள்ளி’ என்று பெயர் சூட்டி அன்புடன்
வளர்த்தான்.
வள்ளி வளர்ந்து, பருவமெய்தினாள். குல வழக்கப்படி, தினைப்புனம்
காக்க, தோழியரோடு சென்றாள். அங்கு பறவைகளைக் கவண்கல்
எறிந்து துரத்தி, ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தனர்.
அதே நேரம், மாயோன் மருகனை தியானித்துத் தவம் இருக்கவும்
வள்ளி தவறவில்லை.
இந்த நிலையில், சூரனை வென்று தெய்வானையை மணந்தபின்,
திருத்தணிகை வந்து யோகத்தில் அமர்ந்தார் குமரவேள்.
நாரதர் அவரிடம் வந்து, தணிகைக்கு அருகில் வள்ளிமலையில்
வாழ்ந்து வரும் வள்ளியின் பெருமைகளை விவரித்தார்.
அவளுக்கு அருள்புரிய, திருவுளம் கொண்ட முருகன்
வள்ளிமலைக்குச் சென்றார். அங்கு தினைப் புனத்தில்,
வேடனாகவும், வேங்கை மரமாகவும், விருத்தனாகவும்
வேடமிட்டு, லீலைகள் பல செய்து, அவளை மணம் புரிய
விரும்பி, காதல் மொழிகளைப் பேசினார்.
வயோதிக உருவில் இருந்த அவரை இன்னார் என்று
தெரியாமல் வள்ளி மிரண்டு விலக, அவளை மணக்க
அண்ணனாகிய விநாயகரைத் துணைக்கு அழைத்தார்.
அவர் யானை வடிவில் வந்து, வள்ளியைத் துரத்தினார்.
யானையைக் கண்டு அஞ்சி, வயோதிகராக வந்த முருகனை
அணைத்துக்கொண்டாள் வள்ளி.
இப்படி வள்ளியிடம் குறும்பு விளையாட்டு நடத்திய முருகன்
ஞானவேல் ஏந்தி, மயில் மேல் ஆறுமுகனாகக் காட்சியளித்து,
ஞான உபதேசம் செய்து வள்ளிக்கு அருள்பாலித்தார்.
வள்ளி- முருகன் திருமணம் சிறப்பாக நடந்தேறியது.
பின்பு, வள்ளியுடன் ஞானமலையில் சிறிது காலம் தங்கி,
திருத்தணியை அடைந்தார் திருமுருகன்.
வள்ளியம்மையை மணந்து முருகன் பெற்ற ஐந்து
சீதனங்களாக ஊதுகொம்பு, சேவற்கொடி, வேலாயுதம்,
மயில்வாகனம், மலைஆட்சி என்று கந்தரந்தாதி 8-ம் பாடலில்
நயம்படப் பாடுகிறார் அருணகிரியார்.
-
-------------------------------------
-வேழ மகளும் வேட மகளும்! - ஆன்மிக கட்டுரையிலிருந்து
நன்றி- சக்தி விகடன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|