ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார்

Go down

என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார் Empty என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார்

Post by ayyasamy ram Sun Jul 19, 2020 10:00 am



* நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

* மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

* மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!

* ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ
வேலை யிட்டுக் கூலி குறைத்தேனோ
பசித்தோர் முகத்தைப்பாராதிருந்தேனோ!

* இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ
நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ
கலங்கி யொளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!

* கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ
கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனோ
கருப்ப மழித்துக் களித்திருந்தேனோ!

* குருவை வணங்கக் கூசி நின்றேனோ
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!

* பக் ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ
கன்றுக்குப் பாலுாட்டாது கட்டி வைத்தேனோ
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!

* அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ
குடிக்கின்ற நீருள்ள குளம் துார்த்தேனோ
வெய்யிலுக் கொதுங்கும் விருக் ஷமழித்தேனோ
பகை கொண்டு அயலோர் பயிரழித்தேனோ!

* பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ
சிவனடியாரைச் சீறி வைதேனோ
தவஞ்செய் வோரைத் தாழ்வு சொன்னேனோ

* சுத்த ஞானிகளைத் துாஷணஞ் செய்தேனோ
தந்தை, தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ...
என்ன பாவம் செய்தேனோ, இன்னதென்றறியேனே!

(மனு முறை கண்ட வாசகம்)
- வள்ளலார்
-
--------------------------------------
வள்ளலார் சொல்லிச் சென்று விட்டார்...
நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
-
படித்ததில் பிடித்தது -
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum