Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்ணன் படத்தில் கண்ணதாசன் –
2 posters
Page 1 of 1
கர்ணன் படத்தில் கண்ணதாசன் –
![கர்ணன் படத்தில் கண்ணதாசன் – 18881808821585642337148542760new-project-98](https://rammalar.files.wordpress.com/2020/06/18881808821585642337148542760new-project-98.jpg)
கர்ணன் 1964ம் வருடம் வந்த படம். இந்த படத்தில் மொத்தம்
பன்னிரெண்டு பாடல்கள். இது போன்ற படங்களுக்கு
எழுதுவது என்பது எந்த கவிஞருக்கும் ஒரு சவாலான விஷயம்
தான்.
படத்தின் டைட்டில் போடும்போதே, கர்ணனாக நடிக்கும்
சிவாஜி தன் ரதத்தில் ஏறிப் போகிற மாதிரி அந்த டைட்டில்
துவங்கும். அப்போதே டி.எம்.எஸ். குரல் ஒலிக்கத் துவங்கும்.
அங்கேயே கர்ணனின் கதாபாத்திரத்தைப் பற்றிய நான்கு
வரிகள்.
மன்னவர் பொருட்களை கை கொண்டு நீட்டுவார்
மற்றவர் பணிந்து கொள்வார்.
மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான்
மற்றவர் எடுத்துக் கொள்வார்
அப்போதே கர்ணனின் கொடைத்தன்மையை விளக்கி
விடுவார்.
இப்போது வில் வித்தை போட்டி நடக்கும். அங்கே பெற்றோர்
பெயர் தெரியாத கர்ணன் போட்டியில் கலந்து கொள்ளக்
கூடாது என்று அவமானப் படுத்தப்பட்டவுடன், உடனே
துரியோதனன் அவனை தன் நாட்டிற்குட்பட்ட அங்கதேசத்து
மன்னனாக்கி விடுவான்.
இப்போது தன் புதிய நண்பனை தன் அரண்மனைக்கு அழைத்து
வரும்போது துரியோதனன் மனைவி பானுமதி பாடும் பாடல்தான்
என்னுயிர்த்தோழி கேளடி கேளடி தோழி
இதுதானோ உங்கள் மன்னவன் நீதி
என்று பாடுவாள்.
வழக்கமாக கர்ணன் படப்பாடல்களை தொலைக்காட்சிகளிலோ,
வானொலியிலோ ஒளி, ஒலி பரப்பினால்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா’
மகாராஜன் உலகை ஆளுவான், அந்த மகாராணி அவனை
ஆளுவாள்’
இரவும் நிலவும் வளரட்டுமே’ இன்னும் சிலருக்கு ரசனையிருக்கும்போது
கண்ணுக்கு குலமேது பாடல்’ வெளிவரும்.
கண்ணுக்கு குலமேது பாடலை வானொலியில், தொலைக்
காட்சிகளில் பார்க்கும்போது அந்தக் காட்சியின் பின்னனியோடு
அந்தப் பாட்டின் வரிகளைக் கேட்டால்தான் கவிஞர் சொல்ல
வருகிற காட்சியின் ஆழம் புரியும்.
கர்ணனை அவன் மாமனார் அவமானப்படுத்தி அனுப்பி
விடுவார். குலமில்லாதவன் என்று சொல்லிவிடுவார்.
சோகத்தோடு வரும் அவனுக்கு மனைவு சுபாங்கி ஆறுதல்
சொல்வாள்
கண்ணுக்கு குலமேது ! கண்ணா கருணைக்கு இனமேது ?
விண்ணுக்குள் பிரிவேது !கண்ணா விளக்குக்கு இருளேது ?
இதைவிட ஒரு ஆறுதல் பாட்டு கர்ணனுக்கு மட்டுமல்ல.
ஜாதி குலம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் இந்தப் பாடல்
பொருந்தும்.
மனித கண்களுக்கு குலமிருக்கிறதா ?
இனம் பார்த்தா கருணை பிறக்கும்
இதைவிட ஜாதி இன வேறுபாடுகளை அலட்சியப் படுத்த
வேறு பாட்டு வேண்டுமா என்ன?
Re: கர்ணன் படத்தில் கண்ணதாசன் –
கர்ணனின் கொடைத் தன்மையை அழகாக
விளக்கியிருப்பார் கவிஞர்.
இந்த பாடலை கர்ணன் அரசவையில் புலவர் பாடுவதாக
அமைந்த பாடல்
சீர்காழியும், திருச்சி லோகநாதனும் பாடியிருப்பார்கள்.
மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்
இந்த நான்கு வரிகளை சீர்காழி பாடியிருப்பார்.
இந்தப் பாடலை கேட்டுத்தான் நகரவாசிகளுக்கு
மழை, வயல், பசு வழங்கும் கொடையின் காலங்களே
புரிந்தது.
அடுத்த புலவர் பாடுவார்,
இது திருச்சி லோகநாதன் குரலில் வரும்.
நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்
நாடுதோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள்
நற்பொருளை தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்
தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன்
திருக்கரமே!
அடுத்து இந்திரன் கர்ணனனிடம் இருக்கும் காது
குண்டலத்தையும் மார்போடு ஒட்டிய கவசத்தையும்
தானமாக கேட்க மாறு வேடத்தில் வருவான்
என்ன கொடுப்பான், எவை கொடுப்பான்
என்றிவர்கள் எண்ணுமுன்னே
பொன்னும் கொடுப்பான், பொருளும் கொடுப்பான்
போதாது போதாதென்றால்
இன்னும் கொடுப்பான்
இவையும் குறைவென்றால்
தன்னைக் கொடுப்பான், தன்னுயிரும் தான் கொடுப்பான்
தயாநிதியே
ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை இதை விட எளிமையாக
பாமரர்களும் புரிந்து கொள்ளும்படியாக சொல்ல முடியுமா
என்ன ?
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன்
வகுத்ததடா இந்த பாடல் எல்லோருக்கும் தெரியும் !
ஆனால் பாரதப் போரில் இறுதிக் கட்டம் அருச்சுனன்
போரிடத் தயங்குவான்.
அப்போது பகவத் கீதையே பிறந்தது
கீதை என்பது ஒன்பது அத்தியாயங்கள் கொண்டது.
அதன் சாரத்தை கண்ணதாசன் சில வரிகளின் சாறாக
பிழிந்து கொடுத்திருப்பார்
மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா
மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிட ஆத்மா மரணமெய்தாது
மறுபடி பிறந்திருக்கும்
கண்ணதாசன் கற்பனை ஊற்று இப்படி சுரந்தது என்றால்
அவர் நமது தமிழ் இலக்கியங்களில், புராணங்களில் ஊறித்
திளைத்திருப்பார்.
-
----------------------------------
(மீண்டும் சந்திப்போம்)
நன்றி- தினமலர்(நெல்லை)
விளக்கியிருப்பார் கவிஞர்.
இந்த பாடலை கர்ணன் அரசவையில் புலவர் பாடுவதாக
அமைந்த பாடல்
சீர்காழியும், திருச்சி லோகநாதனும் பாடியிருப்பார்கள்.
மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்
இந்த நான்கு வரிகளை சீர்காழி பாடியிருப்பார்.
இந்தப் பாடலை கேட்டுத்தான் நகரவாசிகளுக்கு
மழை, வயல், பசு வழங்கும் கொடையின் காலங்களே
புரிந்தது.
அடுத்த புலவர் பாடுவார்,
இது திருச்சி லோகநாதன் குரலில் வரும்.
நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்
நாடுதோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள்
நற்பொருளை தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்
தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன்
திருக்கரமே!
அடுத்து இந்திரன் கர்ணனனிடம் இருக்கும் காது
குண்டலத்தையும் மார்போடு ஒட்டிய கவசத்தையும்
தானமாக கேட்க மாறு வேடத்தில் வருவான்
என்ன கொடுப்பான், எவை கொடுப்பான்
என்றிவர்கள் எண்ணுமுன்னே
பொன்னும் கொடுப்பான், பொருளும் கொடுப்பான்
போதாது போதாதென்றால்
இன்னும் கொடுப்பான்
இவையும் குறைவென்றால்
தன்னைக் கொடுப்பான், தன்னுயிரும் தான் கொடுப்பான்
தயாநிதியே
ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை இதை விட எளிமையாக
பாமரர்களும் புரிந்து கொள்ளும்படியாக சொல்ல முடியுமா
என்ன ?
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன்
வகுத்ததடா இந்த பாடல் எல்லோருக்கும் தெரியும் !
ஆனால் பாரதப் போரில் இறுதிக் கட்டம் அருச்சுனன்
போரிடத் தயங்குவான்.
அப்போது பகவத் கீதையே பிறந்தது
கீதை என்பது ஒன்பது அத்தியாயங்கள் கொண்டது.
அதன் சாரத்தை கண்ணதாசன் சில வரிகளின் சாறாக
பிழிந்து கொடுத்திருப்பார்
மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா
மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிட ஆத்மா மரணமெய்தாது
மறுபடி பிறந்திருக்கும்
கண்ணதாசன் கற்பனை ஊற்று இப்படி சுரந்தது என்றால்
அவர் நமது தமிழ் இலக்கியங்களில், புராணங்களில் ஊறித்
திளைத்திருப்பார்.
-
----------------------------------
(மீண்டும் சந்திப்போம்)
நன்றி- தினமலர்(நெல்லை)
Re: கர்ணன் படத்தில் கண்ணதாசன் –
10/15 வருடங்களுக்கு முன் அமுதசுரபி அல்லது கலைமகள் இதழில் கர்ணனை பற்றிய கதை.அவரது மனைவி அவரை எப்பிடியெல்லாம் உதாசீனப்படுத்தினார்.தாய் தந்தை யாரென தெரியாதவன் என இகழப்பட்டதை எல்லாம் இறக்கும் தருவாயில் தாய் குந்தியின் மடியில் சாய்ந்து கூறிவிட்டு,தான் யார் என்று அவளுக்கும் உலகிற்கும் எடுத்துக்கூறுங்கள் என்று கூறி உயிரை விடுவான்.
மனதை உருக்கிய கதை: பாதுகாக்க நினைத்து புத்தகத்தை பழைய பேப்பருடன் போட்டவன்.
எழுதியவர் கெளதம நீலாம்பரன் அல்லது கெளசிகன் -பெயர் நினைவில்லை.
மனதை உருக்கிய கதை: பாதுகாக்க நினைத்து புத்தகத்தை பழைய பேப்பருடன் போட்டவன்.
எழுதியவர் கெளதம நீலாம்பரன் அல்லது கெளசிகன் -பெயர் நினைவில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கர்ணன் படத்தில் தனுஷ் பாடிய பாடல் புது வரவு
» கர்ணன் – திரைப்பட விமரிசனம்
» கர்ணன் பட பாடல்
» கர்ணன் அவதரித்த கதை!
» கர்ணன் முன்னோட்டக்காட்சி வெளியீடு
» கர்ணன் – திரைப்பட விமரிசனம்
» கர்ணன் பட பாடல்
» கர்ணன் அவதரித்த கதை!
» கர்ணன் முன்னோட்டக்காட்சி வெளியீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|