ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில், விமானங்களை தமிழகத்தில் இயக்க தயக்கம் !

Go down

ரயில், விமானங்களை தமிழகத்தில் இயக்க தயக்கம் ! Empty ரயில், விமானங்களை தமிழகத்தில் இயக்க தயக்கம் !

Post by ayyasamy ram Sun May 24, 2020 5:18 am


சென்னை :
தமிழகத்தில் ரயில், விமானங்களை இயக்க அரசு தயக்கம் காட்டுகிறது.
ரயில் மற்றும் விமான நிலையங்களிலிருந்து பயணியர் வீடுகளுக்குச்
செல்ல உதவும் பொதுப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த முடியாததே
இதற்குக் காரணம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

நோய் தொற்று குறையாமல் பொதுப் போக்குவரத்தை துவங்க சாத்தியமில்லை
என்பதால் மத்திய அரசு அனுமதித்த போதிலும் மாநில அரசு மவுனம் காக்கிறது.


நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. மே 31 வரை ஊரடங்கு
அறிவிக்கப்பட்டிருந்தாலும் பொது மக்கள் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள்
பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளன.நோய் தொற்று குறைவாக உள்ள
மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து சேவை துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
அரசு ஊழியர்கள் பணிக்கு வர குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதிலும் 50 சதவீத பயணியர் மட்டும் அனுமதிக்கப் படுகின்றனர்.

சிக்கல்கள்


நேற்று முதல் சென்னை தவிர மாநிலத்தின் பிற பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க
அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு பயணியை மட்டும் ஏற்றிச் செல்ல
வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று குறையாததால்
பஸ் போக்குவரத்து துவக்கப்படாமல் உள்ளது.இந்நிலையில் ரயில் மற்றும் விமான
சேவையை துவக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு மாநில அரசுகளின் ஒப்புதல்
கோரப்பட்டது; தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.

விமான சேவையை துவக்கினால் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து
வருவோரை பரிசோதனை செய்து நோய் தொற்று இருந்தால் மருத்துவமனையில்
அனுமதிப்பது தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.

பின் அவர்களை சொந்த மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும்.
அதேபோல் ரயில் சேவையை துவக்கினால் நோய் தொற்று உள்ளவர்கள் பயணிப்பதை
கண்டறிவதில் சிக்கல் ஏற்படும். இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால் பொது
போக்குவரத்தை அனுமதிக்க மாநில அரசு தயக்கம் காட்டுகிறது.எனவே தமிழகத்தில்
நோய் தொற்று குறையும் வரை ரயில் மற்றும் விமான சேவையை அனுமதிக்க வேண்டாம்
என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 710 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதிகபட்சமாக சென்னையில் 624 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.

அபாயம்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நோய் பரவல் அ
திகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நோய் பரவல் கட்டுக்குள் வந்தால் மட்டுமே பொது போக்குவரத்தை அனுமதிக்க முடியும்
என்ற நிலை உள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முன் பொது போக்குவரத்தை
அனுமதித்தால் நோய் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.இதை உணர்ந்து
மக்களும் நோய் பரவலை தடுக்க உரிய விதிமுறைகளை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு
அளித்தால் தான் போக்குவரத்து சாதனங்களை இயக்க உதவியாக இருக்கும். மக்கள்
வாழ்க்கையும் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

ரயில்கள் இயக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு ரயில்வே கடிதம்


'நாடு முழுவதும் ஜூன் 1ம் தேதியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 'ஏசி' இல்லாத இரண்டாம்
வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்ட 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என ரயில்வே அமைச்சகம்
அறிவித்தது.அதன்படி 100 ரயில்களுக்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது.இந்த ரயில்களுக்கு
21ம் தேதியில் இருந்து முன்பதிவு நடந்து வருகிறது. கேரளாவுக்கு மூன்று ரயில்கள் இயக்கப்
படுகின்றன.தமிழக அரசு அனுமதி இல்லாததால் தமிழகத்திற்கு ரயில்கள் அறிவிக்கப்படவில்லை.

ஆனால் 21ம் தேதியில் இருந்து புதுடில்லி -- சென்னை இடையே ராஜ்தானி சூப்பர் பாஸ்ட் ரயில்
வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.சென்னை தவிர தமிழகத்தின்
மற்ற நகரங்கள் இடையே மாநில அரசின் அனுமதியுடன் படிப்படியாக ரயில் போக்குவரத்தை
துவங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

கோவை -- மயிலாடுதுறை இடையே இயக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ள
ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை சிறப்பு ரயிலாக இயக்க வாரியம் திட்டமிட்டுள்ளது.
சென்னை எழும்பூர் - - மதுரை இடையிலான வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை விழுப்புரத்தில் இருந்து
மதுரை வரை; திருச்சி -- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்சி -- நாகர்கோவில்
வரை இயக்க திட்டமிட்டுள்ளது.

கோவை -- சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை கோவை -- காட்பாடி வரை இயக்க
திட்டமிட்டுள்ளது.இதற்கு அனுமதி கோரி ரயில்வே வாரியம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அனுமதி கிடைத்தால் ரயில் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
» மாவட்டங்களுக்கு இடையே பஸ் இயக்க அனுமதி: பயணிகள் ரயில் சேவையும் துவங்குகிறது
» ட்ரெய்ன் 18 : தமிழகத்தில் உருவான இந்தியாவின் அதிவேக ரயில் …
» ரயில் பயணிகள் புகார் தெரிவிக்க ‘1512’ எண் தமிழகத்தில் தொடக்கம்
» தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum