ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன?

Go down

“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? Empty “எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன?

Post by ayyasamy ram Fri May 22, 2020 12:06 pm

“நீங்கள் புத்தரை சந்தித்தால், அவரைக் கொல்லுங்கள்.”

இந்த புகழ்பெற்ற மேற்கோள் ஜென் வரலாற்றின் மிக முக்கியமான
லின்ஜி யிக்சுவான் சொன்ன தனித்துவமான ஜென் உரையாடல்
அல்லது சுருக்கமான நிகழ்வு. (ஜென் வழியில் இதை
koan -கோன்ஸ் என்று சொல்லலாம்.)

கோன்ஸ் என்பது, பகுத்தறிவு பதில்களை மறுக்கும் ஜென்
ஆசிரியர்களின் ரகசிய மற்றும் முரண்பாடான கேள்விகள்.
(நமது சித்தர் பாடல்கள் போல ).

லின்ஜி புத்தத்தின் அடிப்படை சாரம் பற்றி பேசும்போது சொல்வது
” புத்தர் என்பது மனதின் தூய்மை என்பதாகும். அதன் பிரகாசம்
முழு தர்ம மண்டலத்திலும் பரவுகிறது.”

ஜென் மொழியில், “நீங்கள் புத்தரைச் சந்திக்கும்போது, ​​அவரைக்
கொல்லுங்கள்” என்பது,

உங்கள் மனதில் புத்தரை உணராமல் , புறத்தே ஒரு புத்தரை கண்டால்
அந்த மாயையான புத்தரை கொல்லுங்கள். ஏனெனில், உங்களிடமிருந்து
தனித்து பிரிக்க புத்தர் ஒரு உருவம் அல்ல. அது உணர்வு.

எங்கோ படித்த அல்லது கேட்டது போல இருக்கிறதா?

“நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?“
-
“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? Main-qimg-eb392f07ff19b28aab8a38b3f8c3c672

-சண்முக சுந்தரம்,
நன்றி-கோரா – பதில்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? Empty Re: “எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன?

Post by Guest Fri May 22, 2020 3:08 pm

புத்தரைக் கொன்ற மடாலயத்தினர்…..வாழ வைத்த முதியவர்.

அந்த வயது முதிர்ந்தவர் வரும்போதே அவருடைய கையில் இருந்த ஊன்றுகோல்கூட குளிரில் நடுநடுங்கியது. பற்கள் கஞ்சிரா வாசித்தன. குளிரோடு வந்த அந்த முதியவருக்கு... அந்த புத்த மடாலயத்தில் அன்றிரவு மட்டும் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தங்குவதற்கு மட்டும்தான் அனுமதியளிக்கப்பட்டதே தவிர... போர்த்திக்கொண்டு படுத்துறங்க அங்கே எந்த வசதியும் துளியும் இல்லை.
அங்கு தங்கியிருந்த மற்றவர்களுக்கெல்லாம் அந்தக் குளிர் பழக்கப்பட்டுப்போயிருந்தது. அவர்கள் நிம்மதியாக குறட்டை வாசித்தனர்.

ஆனால் அந்த முதியவரை குளிர் படுக்கவிடாமல் வாட்டியெடுத்தது.
என்ன செய்வது என்று புரிபடாத அந்த இரவுப் பொழுதில்... அந்த புத்த மடலாயத்தில் ஒரு மேடையில் இருந்த மரத்தால் ஆன புத்தர் சிலையை எடுத்து வந்து கொளுத்தி அதில் குளிர் காய ஆரம்பித்தார் அந்த முதியவர்.
ஏதோ மரம் எரியும் வாசனையை அறிந்த புத்த மடாலயத்தைச் சேர்ந்தவர்கள் தூக்கத்தில் இருந்து சட்டென்று விழித்துக்கொண்டு ஓடி வந்தார்கள்.

தங்குவதற்கு இடம்கொடுத்த இடத்தில் புத்தரின் சிலையை எரியவிட்டு குளிர்காயும் அந்த முதியவரை... கடுமையாகத் திட்டினர்.

''இனி, ஒரு நாழிகைக்கூட இங்கு நீ தங்கக் கூடாது... இதோ இப்போதே இங்கிருந்து வெளியேற வேண்டும்'' என்று கோபத்துடன் முதியவரை திட்டி, அந்த நள்ளிரவில் மடாலயத்தில் இருந்து வெளியேற்றினர்.
நடுங்கும் குளிரில் நடக்கவே முடியாமல் ஊர்ந்தபடி அங்கிருந்து வெளியேறினார் முதியவர்.
மறுநாள் விடியற்காலை. மண், மரம், செடி, கொடி எங்கும் பனியின் ஈரக் கையொப்பம்.
நள்ளிரவில் இங்கிருந்து வெளியேற்றப்பட்ட அந்த முதியவர் என்ன ஆனார் என்று மடாலயத்துக்கு வெளியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தனர்.

அந்த முதியவர் மடாலயத்துக்கு வெளியே... சாலையில் இருந்த ஒரு எல்லைக்கல்லின் மீது பால்நிற தும்பைப் பூக்களைத் தூவி, ''புத்தம்... சரணம்.... கச்சாமி....புத்தம்... சரணம்.... கச்சாமி....'' என்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்.

மடாலயத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த முதியவரை நெருங்கி, ''நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அந்த எல்லைக் கல் என்ன புத்தரா? பூக்கள் போட்டு அந்த எல்லைக் கல்லை போய் வணங்குகிறீர்களே!'' என்று கேட்டார்.

அதற்கு அந்த முதியவர் சொன்னார்:
''நான் குளிர் காய எரித்தது சாதாரண மரத்தைதான் என்று நம்புகிறேன். நீங்கள்தான் அதனைப் புத்தர் என்று சொன்னீர்கள். எனவே, ஒரு மரம் புத்தராகும்போது; ஒரு எல்லைக் கல் ஏன் புத்தர் ஆகக் கூடாது? எனக்குள் இருந்த புத்தரைக் காப்பாற்றத்தான் நேற்று நான் புத்தர் சிலையை எரித்து குளிர் காய்ந்தேன். ஒரு மரப் புத்தரை எரித்ததற்காக நீங்கள் உயிருள்ள புத்தரை வெளியே துரத்திவிட்டீர்கள்!'' என்றார்.


(இணையம்)

avatar
Guest
Guest


Back to top Go down

“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? Empty Re: “எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன?

Post by ayyasamy ram Fri May 22, 2020 3:45 pm

புத்தரைக் கொன்ற மடாலயத்தினர்…..வாழ வைத்த முதியவர்.
-
“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? 103459460 “எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? 3838410834
[“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? Roseandwater
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? Empty Re: “எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum