Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
Page 1 of 1
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
![உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Tamil_News_large_2485857](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2485857.jpg)
-
'ஒரு பசு மாடும், ஒரு முருங்கை மரமும் இருந்தால்
போதும்; ஏழை வாழ்ந்து விடலாம்' என, கிராமத்தில்
பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால், இன்றைய
கிராமத்துக் குழந்தைகள் கூட, பாக்கெட் பாலை
நம்பி இருக்கின்றன.
பால், வணிகப் பொருளாக மாறி விட்ட பின், பால்
கறக்காத மாடுகளும் கைவிடப்படுகின்றன.
அப்படி கைவிடப்பட்ட மாடுகளுக்கு, மறுவாழ்வு
அளிக்கும் பணியை செய்து வருகிறார்
டாக்டர் சாதனா ராவ், 75. அவரிடம் பேசியதிலிருந்து...
எவ்வளவு ஆண்டுகளாக பசுக்களை பராமரிக்கிறீர்கள்?
பசுமாடுகளைப் பராமரிக்கும் பணியில்,
45 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளேன்.
டாக்டரான நீங்கள், பசுக்களை ஆதரிக்க காரணம்?
எங்கள் குடும்பம், காஷ்மீரை பூர்வீகமாக கொண்டது.
சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வீட்டில்,
எங்கள் தாத்தா மாடுகளை வளர்த்தார்.அதனால், சிறு
வயதிலிருந்தே, எனக்கு மாடுகளின் அறிமுகம் உண்டு.
பின், மருத்துவம் படித்தேன்.
ஒருநாள், எங்கள் வீட்டுப் பக்கமாக வந்த, காஞ்சி மகா
பெரியவர், மாடுகளுக்கு ஆசி வழங்கிச் சென்றார்.
அப்போது தான், மாடுகளின் மீது பிரியம் ஏற்பட்டது.
ஒருநாள், அவர் என்னிடம், 'நீ பசுக்களை வளர்க்க
வேண்டும்' என்றார். அவரின் அருளாசியாக ஏற்று,
பசுக்களை வளர்த்து வருகிறேன்.
-
![உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Gallerye_205554230_2485857](https://img.dinamalar.com/data/gallery/gallerye_205554230_2485857.jpg)
-
பசுக்களை எங்கு பராமரிக்கிறீர்கள்?
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில்
உள்ள, வெங்கடாபுரத்தில், 4 ஏக்கரில், எங்களின்,
'இந்திய கால்நடை பராமரிப்பு மையம்' செயல்பட்டு
வருகிறது.
இங்கு, 800க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.
அவற்றில் பெரும்பாலும், கறவை நின்ற பசுக்கள், கால்
ஒடிந்த, வயதான காளைகள் தான் அதிகம்.
அவற்றில், 1 சதவீதம் மட்டுமே, கறக்கும் மாடுகள்
உள்ளன. இவற்றுடன், ஆடுகளும், நாய்களும் கூட உள்ளன.
பசுக்களை பராமரிப்பதை, குல வழக்கமாகக்
கொண்டுள்ள, சமண சமயத்தைச் சார்ந்த சுரானா
குடும்பத்தினர் தான், இந்த இடத்தைக் கொடுத்து,
மாடுகளைகாப்பாற்றினர்.
Re: உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
கொஞ்சம் விளக்கமாக...
சென்னை, மயிலாப்பூரில் இருந்து, மாடுகள் காப்பகத்தை
மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, நீலாங்கரையில்
இடம் தந்தனர். அங்கிருந்து அகற்றப்பட வேண்டிய சூழல்
ஏற்பட்ட போது, இங்கும் நிலம் கொடுத்து உதவியவர்கள்,
அவர்கள் தான். இவற்றை பராமரிக்க, 64 பணியாளர்கள்
உள்ளனர்.
உங்கள் காப்பகத்தின் நிலை?
மாதம், 8 லட்சம் ரூபாய் வரை, பணியாளர்களுக்கு சம்பளம்
கொடுக்கிறோம். மருத்துவச் செலவுக்கு, 35 ஆயிரம் ரூபாய்
வரை செலவாகிறது. மற்றபடி உணவு உள்ளிட்ட
அனைத்துக்கும் சேர்த்து, ஒவ்வொரு மாதமும், 16 லட்சம்
ரூபாய் வரைசெலவாகிறது.
இவ்வளவு தொகையை செலவு செய்ய உங்களால் எப்படி
முடிகிறது?
ஒவ்வொரு மாதமும், கஷ்டமாகத் தான் உள்ளது.
ஆனால், காஞ்சி மகா பெரியவர், என்னை மாடு வளர்க்கச்
சொன்ன போது, 'டாக்டரான நான், வேலையை விட்டு
விட்டால், நான் எப்படி செலவு செய்வது?' எனக் கேட்டேன்.
அவர், 'தாகம் ஏற்படும் போது, தண்ணீர் கிடைத்தே தீரும்'
என்றார். அதன்படியே, இதுவரை, பசுக்களைப்
பராமரிக்கத் தேவையான நிதியை, ஆர்வலர்கள்
வழங்கிவருகின்றனர்.
பசுக்களை எப்படி பராமரிக்கிறீர்கள்?
தினமும், தவிடு, பொட்டு, புல், வைக்கோல், வைட்டமின்
சத்துக்கள் வழங்கி வருகிறோம். மாடுகளை, தினமும்
குளிப்பாட்டி, தேவையான பராமரிப்புகளை செய்கிறோம்.
அத்துடன், கால்கள், வால்கள் வெட்டப்பட்ட நிலையில்,
சாலையில் கிடக்கும் மாடுகள், கைவிடப்பட்ட காளைகள்,
எருமைகள், அடிமாட்டுக்காக கடத்தப்பட்டு, 'புளூ கிராஸ்'
அமைப்பால் மீட்கப்படும் மாடுகள், தீ விபத்தால்
பாதிக்கப்படுபவை என, பலவிதமான பாதிப்புகளுடன்,
கால்நடைகள் இங்கு வருகின்றன.
அவற்றால், இங்குள்ள கால்நடைகளுக்கு, நோய்த்தொற்று
ஏற்படக்கூடாது என்பதற்காக, கால்நடை மருத்துவர் பிரியா,
அவற்றை பரிசோதிப்பார்; தேவையான ஊசி, மருந்துகளை
வழங்க பரிந்துரைப்பார்.அவர் ஆலோசனைப்படி,
தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து, அவற்றை
காப்போம். ஈன்ற பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் கூட,
மருத்துவ உதவி தேவைப்படும்.
Re: உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
இவ்வளவு சிரமங்களுக்கும், உங்களின் ஆன்மிகப்
பற்று தான் காரணமா?
இந்த பணி செய்வதற்காக, எந்த சிரமமும் படவில்லை.
முழு மகிழ்ச்சியுடனும், ஈடுபாட்டுடனும் தான் செய்கிறேன்.
ஆனாலும், போதிய நிதி இல்லாமல், அவ்வப்போது
கஷ்டப்பட வேண்டி உள்ளது.அதேபோல், தற்போது
தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்துள்ளது.
ஆனாலும், எனக்கு, காஞ்சி மகா பெரியவர், கஞ்சன்காடு
ஆனந்த ஆசிரமம் பப்பா ராமதாஸ் சுவாமிகள், புதுச்சேரி
அரவிந்தர் ஆசிரமத்தின் அன்னை ஆகியோரின் ஆசி,
எனக்கு பரிபூரணமாக கிடைத்துள்ளது.
அதனால், கடந்த கோடையில், உள்ளூர் மக்களே,
வறட்சியிலிருந்து மாடுகளைக் காக்கத் தேவையான
உதவிகளை செய்தனர். இப்படி, மலை போல் வரும்
சிரமங்கள் எல்லாம், பனி போல் மறைந்துவிட, என்,
ஆன்மிக ஈடுபாடு தான் காரணம்.
இதில் பொதுமக்கள் ஆர்வம் எவ்வாறு உள்ளது?
சென்னையில் இருந்தபோது, ஆன்மிகப் பற்றுள்ளோர்,
பிறந்த நாள், திருமண நாள், புதுமனைப் புகுவிழா
உள்ளிட்டவற்றுக்கு, கோ பூஜை செய்வர். அப்போது,
பசுக்களுக்குத் தேவையான தீவனம் அல்லது ஒரு மாத
தீவனத்துக்கான தொகையை கொடுப்பர்.
பசு பராமரிப்பில் மக்கள் நம்பிக்கை எந்தளவு உள்ளது?
இல்லை. மக்கள் எளிதில் அணுகும் இடத்தில் நாங்கள்
இல்லை; அது தான் காரணம். பொதுவாக, சமண
சமயத்தவர்கள், தங்களின் சம்பாத்தியத்தில் ஒரு
பகுதியை, 'ஜீவோதயா' என்னும் தத்துவப்படி,
பிராணிகளை காக்க செலவிடுவர்.
ஹிந்துக்கள், பாவங்கள் கழிய, பசுக்களுக்கு பசியாற்றி
வழிபடுவர். பசுக்களை காத்தால், குழந்தை பாக்கியம்
கிடைக்கும்; வீட்டில் செல்வம் பெருகும் என்பது போன்ற
நம்பிக்கைகள், ஹிந்துக்களிடம் உள்ளன.
அது, இப்போதும் உள்ளது. அந்த நம்பிக்கை தான், இந்த
கைவிடப்பட்ட கால்நடைகளைக் காக்கிறது.
சக உயிர்களைக் காக்கும் நம்பிக்கையைத் தருவது
நல்லது தானே!
சேவையைப் பாராட்டவும், கால்நடைகளைக் காக்கவும்
ஆர்வமுள்ளவர்கள், உதவி செய்ய விரும்புவோர்,
இந்திய கால்நடை பராமரிப்பு மையநிர்வாகி,
கமலா ராமமூர்த்தியை, தொடர்பு கொள்ளலாம்.
-
------------------------------
நன்றி-தினமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஹீரோயின் ஆகிறார் சாதனா
» பண்பாட்டைக் காப்பதே மாண்பு
» அனுபவித்து வாழ்வோம்
» தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு!
» செயற்கை உயிர்களை உருவாக்கும் `உயிரணு மென்பொருள்'
» பண்பாட்டைக் காப்பதே மாண்பு
» அனுபவித்து வாழ்வோம்
» தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு!
» செயற்கை உயிர்களை உருவாக்கும் `உயிரணு மென்பொருள்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|