Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்டி ரேவதி கவிதைகள்
Page 1 of 1
குட்டி ரேவதி கவிதைகள்
-
விதையுறக்கம்
ஆகவே விளிம்புநிலையைப் பற்றிக்கொண்டுத்
தொங்குகிறேன்
இனி ஒரு பொழுதும் உனைத் தேடாதிருப்பேனாக
நீர்நிலையைத் தேடும் பறவையைப்போல்
இரவின் உச்சத்தில் கனவு
கல்லெறிந்ததால் உண்டான வட்டங்களாய் விரிகிறது
அதன் ஒளிபரப்பில் உன் புன்னகையால்
எனைத் தேற்றுகிறாய்; தேற்றுகிறாய்
சிறார்கள் தமது உறுப்புகளை
மறைவுகளில் கண்டறிவதுபோல்தான்
நான் உன்னைக் கண்டறிந்தேன்
உடல், விதைக்கவோ வளர்க்கவோ
யாருமேயிலாது
பாழ்நிலமாய் உலர்ந்து வெடிக்கிறது
எச்சத்தில் ஊறிய விதையைப்
பறவைகள் வெளிக்கிட்டுப் பறக்கின்றன
ஒரு மழையின் ஸ்பரிசத்தால் குளிராதவரை
வெடிப்பில் வீழ்ந்த விதை
உறக்கம் தழுவிக்கொண்டிருக்கும்
இனி ஒருபொழுதும் உனைத் தேடாதிருப்பேனாக
Re: குட்டி ரேவதி கவிதைகள்
வனதேவதை
பால்மேனிக் கொங்கைகள் பற்றியேறித்
தழுவி அணைக்கும் கொடிகள் உண்டு
ரகசியமாய் வெடித்துப் பரவி
ஈரமண்ணில் கருக்கொள்ளும் விதைகளுண்டு
ஏகாந்தமாய் அதிகாலை
உடலையே விரித்துப்போட்டு
ஒளியோடு புணரப் புணரச் சுவாசத்திலே
குழறி எழும் பறவைகளும் காண்பேன்
கள்ள மார்புகள் கூடிக்கழிக்க”
இரவின் மாயை
முதுமையிலும் புணரும் இச்சையில்
புடவையை மாற்றுவேன் வண்ணாத்திப் பூக்களாய்
என் புதருக்குள் நுழைந்தவனை
மீளவிடேன்
ஆணுறுப்பு மலையருவி
சொரிந்து நிறையவும் வழி தருவேன்
வனதேவதைக்குப் புருஷனில்லை
புரட்டிப் புரட்டிப் போகிக்க வழிப்போக்கர் எவருமுண்டு
உச்சியில் தீவிரமாய் ஒளி தேடி
நான் தரிக்க இலைகளின் மொழியுமுண்டு
பால்மேனிக் கொங்கைகள் பற்றியேறித்
தழுவி அணைக்கும் கொடிகள் உண்டு
ரகசியமாய் வெடித்துப் பரவி
ஈரமண்ணில் கருக்கொள்ளும் விதைகளுண்டு
ஏகாந்தமாய் அதிகாலை
உடலையே விரித்துப்போட்டு
ஒளியோடு புணரப் புணரச் சுவாசத்திலே
குழறி எழும் பறவைகளும் காண்பேன்
கள்ள மார்புகள் கூடிக்கழிக்க”
இரவின் மாயை
முதுமையிலும் புணரும் இச்சையில்
புடவையை மாற்றுவேன் வண்ணாத்திப் பூக்களாய்
என் புதருக்குள் நுழைந்தவனை
மீளவிடேன்
ஆணுறுப்பு மலையருவி
சொரிந்து நிறையவும் வழி தருவேன்
வனதேவதைக்குப் புருஷனில்லை
புரட்டிப் புரட்டிப் போகிக்க வழிப்போக்கர் எவருமுண்டு
உச்சியில் தீவிரமாய் ஒளி தேடி
நான் தரிக்க இலைகளின் மொழியுமுண்டு
Re: குட்டி ரேவதி கவிதைகள்
மணப்பெண்
கட்டுண்டிருக்கும் மலர்களுக்கிடையே கசியும்
வியர்வை எவருமறியாமல்
மார்பின் பள்ளங்களில் பெருகி
அசௌகரியத்தின் நதியாகிறது
திருமணப் பெருக்கத்தின் நெரிசலினூடே
பெருமூச்சு வாங்கிய இரத்த ஓட்டத்தில்
உலர்ந்த மாலைகளைப்போல கைகள்
உணர்வின்றித் தொங்குகின்றன
மார்புக்கச்சையை அறுத்தெறியும் ஆவலோடு
இரவின் கைகளும் திமிரேறியிருக்க
தொடைகளின் பாதாளத்தில்
தடாகத்தின் உயிராய் மொக்கொன்று எழும்பி
இடுக்கோடு கசியப்போகும் வெண்கிரணத்துக்காய்க்
காத்திருக்க
விருந்துணவின் சுவைநரம்புகள் முனைமழுங்க
பட்டின் சரசரப்பில்
நின்றிருந்த கால்களோடு காலவேரின் முறுக்கேற
கட்டுண்டிருக்கும் மலர்களுக்கிடையே கசியும்
வியர்வை எவருமறியாமல்
மார்பின் பள்ளங்களில் பெருகி
அசௌகரியத்தின் நதியாகிறது
திருமணப் பெருக்கத்தின் நெரிசலினூடே
பெருமூச்சு வாங்கிய இரத்த ஓட்டத்தில்
உலர்ந்த மாலைகளைப்போல கைகள்
உணர்வின்றித் தொங்குகின்றன
மார்புக்கச்சையை அறுத்தெறியும் ஆவலோடு
இரவின் கைகளும் திமிரேறியிருக்க
தொடைகளின் பாதாளத்தில்
தடாகத்தின் உயிராய் மொக்கொன்று எழும்பி
இடுக்கோடு கசியப்போகும் வெண்கிரணத்துக்காய்க்
காத்திருக்க
விருந்துணவின் சுவைநரம்புகள் முனைமழுங்க
பட்டின் சரசரப்பில்
நின்றிருந்த கால்களோடு காலவேரின் முறுக்கேற
Re: குட்டி ரேவதி கவிதைகள்
காகிதக்கப்பல்
பெரியவர்கள் கிறங்கி உறங்கும்
மதியக்கிறக்கவேளையில்
நான் தனியே அனுப்பிய காகிதக்கப்பல்
வழிமறித்த தீவில்
கரையொதுங்கியிருக்கக் கூடும்
நீந்திக் களைப்புற்ற மீன்கள்
அக்கப்பலேறி மறுகரை சென்றிருக்கலாம்
கடற்பறல் அலைக்கழிக்க
சில கணங்களாவது அதன் தலை சுற்றியிருக்கலாம்
திசைமாறிப் போகாது காற்று
தன் கைகளைப் துடுப்பாய் வலித்திருக்கலாம்
வானத்தின் வண்ணம் தூவிய முகத்தைத்
தன் நீரால் கழுவும்
கல்லின் மறுகரைக்குச் சென்றிருக்கலாம்
சூரியன் கால் அலம்பும் நேரத்தில்
ஒய்யாரமாய்க் கரைதட்டியிருக்கலாம்.
பெரியவர்கள் கிறங்கி உறங்கும்
மதியக்கிறக்கவேளையில்
நான் தனியே அனுப்பிய காகிதக்கப்பல்
வழிமறித்த தீவில்
கரையொதுங்கியிருக்கக் கூடும்
நீந்திக் களைப்புற்ற மீன்கள்
அக்கப்பலேறி மறுகரை சென்றிருக்கலாம்
கடற்பறல் அலைக்கழிக்க
சில கணங்களாவது அதன் தலை சுற்றியிருக்கலாம்
திசைமாறிப் போகாது காற்று
தன் கைகளைப் துடுப்பாய் வலித்திருக்கலாம்
வானத்தின் வண்ணம் தூவிய முகத்தைத்
தன் நீரால் கழுவும்
கல்லின் மறுகரைக்குச் சென்றிருக்கலாம்
சூரியன் கால் அலம்பும் நேரத்தில்
ஒய்யாரமாய்க் கரைதட்டியிருக்கலாம்.
Re: குட்டி ரேவதி கவிதைகள்
மரணத்தின் கிளை
1மரணத்தின் கிளை
ஜன்னல் வழியே நுழைந்து
எங்கள் உரையாடலை இடைமறித்தது
புன்னகையின் பேரொளியை
ஒரே ஊதலில் அணைத்தது
சந்தடியற்ற வீதிகளில்
தனியே நடக்கச்செய்தது
சூரியன் உருளும் சாலையில்
பாதங்களைத் தீய்த்தது
சைக்கிளின் சக்கரக்கம்பிகளுக்கிடையே
தலை சிக்கச்செய்தது
பறவைகள் அலறித்திரும்பும் மாலையொன்றில்
துயரத்தின் கனி பரிமாறப்பட்டிருந்த
மரணத்தின் கிளை
1மரணத்தின் கிளை
ஜன்னல் வழியே நுழைந்து
எங்கள் உரையாடலை இடைமறித்தது
புன்னகையின் பேரொளியை
ஒரே ஊதலில் அணைத்தது
சந்தடியற்ற வீதிகளில்
தனியே நடக்கச்செய்தது
சூரியன் உருளும் சாலையில்
பாதங்களைத் தீய்த்தது
சைக்கிளின் சக்கரக்கம்பிகளுக்கிடையே
தலை சிக்கச்செய்தது
பறவைகள் அலறித்திரும்பும் மாலையொன்றில்
துயரத்தின் கனி பரிமாறப்பட்டிருந்த
மரணத்தின் கிளை
Re: குட்டி ரேவதி கவிதைகள்
நிழல்களின் நெருக்கடி
அந்தப் பெரிய மாளிகை எனதாயிருந்தது
சாமான்கள் அடைத்துக்கொண்டிராத அறைகளில்
நானும் என்னைவிடப் பெரிதான
பருத்த உடலுடைய அவளும்
ஒளியேற்றும்போது மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறாள்
எனது குரல் சுவர்களை மோதித் திரும்புவதுபோல்
ஒரு மயானத்தை உருவாக்குகிறாள் என்னைச் சுற்றி
அச்சத்தைக் காட்டிக்கொள்ளாது சமாளிக்கிறேன்
முலைகளின் கவர்ச்சி
எட்ட நிறுத்துகிறது அவளை
என்னையே உறுத்துப்பார்க்கும் அவளிடம் திரும்புகையில்
பாராமுகமாய்த் திரும்பிக்கொள்கிறாள்
நாடகப்பாணியிலான அவளது இயக்கம் எரிச்சலூட்டக் கூடியது
பகலில் பணியின் பொருட்டு வெளியேறிவிடுவதால்
அவளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதில்லை
ஒரு வேளை அவள் என்னைப் பின்தொடரவும் கூடும்
அறைகளின் வெறுமையை இடித்துக்கொண்டு நிறைக்கிறது
அவள் இருப்பு என்றாலும்
ஒருபொழுதும் அவள் எனது தொடைகளுக்கிடையே
பருத்த குறியைத் திணிப்பதில்லை
Re: குட்டி ரேவதி கவிதைகள்
சூல்
பாம்போடு பாம்பு பிணையும்
அவை புன்னகைக்கச் சந்தனம் மணக்கும்
வயிறு புடைக்க முட்டைகள் சுமக்கும்
உயரக் கிளை தொங்கும் நிலவு நழுவ
முட்டை மீது முட்டையடுக்கி அவயம் காக்கும்
மார்பில் பால்முட்டும் குட்டிகளுக்கு
உடல் விரித்து ஆனந்திக்கும்
உயிரிழுத்துப் போட்ட பின்னும்
கண் துஞ்சாமல் சூல் கொள்ளும்
பசியென்றால் ஈனும் குட்டியுண்ணும்
உறுப்பெல்லாம் கருப்பையாய் மாறிச் சுமக்கும்
ஆணொன்று விரட்டிப் புணர
உடலெல்லாம் கருக்கொள்ளும்
வயிறு கிழித்துக் குட்டிகள் முதுகேறத்
தாய் மரிக்கும்
உடலின் சிறகடியில் நினைவு குவித்து
முட்டைகள் அவயம் காக்கும்
கண்ணில் புத்துயிரின் வெறி
நெஞ்சில் பெருஞ்சுவாசம்
நிலைதாங்கி நின்றக்கால் கரு காலாட்டும்
பூக்களின் மீது வண்ணாத்தியாய்க்
காற்றில் மிதக்கும்
கரப்பானின் புற்றுக்குள்
குஞ்சுகள் பொரியுமட்டும்
சீறிக் காவல் காக்கும்
இரத்தச் சகதியில் கால் எழும்பி நிற்பதற்காய்
ஈரநாவால் நக்கி நக்கி உயிர்கூட்டும்
மெல்ல நினைவின் கண் திறந்து
கல்லுக்குள் பதுங்கும் முன்
கழுகொன்று கொத்திப்போகும்
புலம் பெயர்ந்த மண் பிறக்கும்
திசைகள் அறியும்
கனவுகளை அடக்கி
முட்டைகளாய் ஊதும்
நிலவொளியில் உடலைப் புரட்டி
உயிர்கொள்ளும்
பாம்போடு பாம்பு பிணையும்
அவை புன்னகைக்கச் சந்தனம் மணக்கும்
வயிறு புடைக்க முட்டைகள் சுமக்கும்
உயரக் கிளை தொங்கும் நிலவு நழுவ
முட்டை மீது முட்டையடுக்கி அவயம் காக்கும்
மார்பில் பால்முட்டும் குட்டிகளுக்கு
உடல் விரித்து ஆனந்திக்கும்
உயிரிழுத்துப் போட்ட பின்னும்
கண் துஞ்சாமல் சூல் கொள்ளும்
பசியென்றால் ஈனும் குட்டியுண்ணும்
உறுப்பெல்லாம் கருப்பையாய் மாறிச் சுமக்கும்
ஆணொன்று விரட்டிப் புணர
உடலெல்லாம் கருக்கொள்ளும்
வயிறு கிழித்துக் குட்டிகள் முதுகேறத்
தாய் மரிக்கும்
உடலின் சிறகடியில் நினைவு குவித்து
முட்டைகள் அவயம் காக்கும்
கண்ணில் புத்துயிரின் வெறி
நெஞ்சில் பெருஞ்சுவாசம்
நிலைதாங்கி நின்றக்கால் கரு காலாட்டும்
பூக்களின் மீது வண்ணாத்தியாய்க்
காற்றில் மிதக்கும்
கரப்பானின் புற்றுக்குள்
குஞ்சுகள் பொரியுமட்டும்
சீறிக் காவல் காக்கும்
இரத்தச் சகதியில் கால் எழும்பி நிற்பதற்காய்
ஈரநாவால் நக்கி நக்கி உயிர்கூட்டும்
மெல்ல நினைவின் கண் திறந்து
கல்லுக்குள் பதுங்கும் முன்
கழுகொன்று கொத்திப்போகும்
புலம் பெயர்ந்த மண் பிறக்கும்
திசைகள் அறியும்
கனவுகளை அடக்கி
முட்டைகளாய் ஊதும்
நிலவொளியில் உடலைப் புரட்டி
உயிர்கொள்ளும்
Similar topics
» குட்டி ரேவதி கவிதைகள்
» என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…
» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
» குட்டி கவிதைகள்
» குட்டி கவிதைகள் ...!
» என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…
» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
» குட்டி கவிதைகள்
» குட்டி கவிதைகள் ...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|