ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்!

2 posters

Go down

விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Empty விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்!

Post by சிவா Tue Jan 05, 2010 6:36 pm

புரிந்து கொள்ளுதல் இல்லாதபோதுதான் இனிக்கும் இல்லறம் கசக்கத் துவங்கும். சின்ன சின்ன பிரச்னைகள் கூட பூதாகரமாக விஸ்வரூபம் எடுக்கும். கொடுமைகள் எல்லைமீற, இதற்கு மேல் தீர்வுகாண முடியாது என்ற நிலையில் கணவனோ மனைவியோ அந்தப் பிரச்னையில் இருந்து சட்டப்பூர்வமாக விடுபட வழி செய்யும் சட்டம்தான் விவாகரத்து சட்டம். ஆனால் நிலை இன்று தலைகீழ். தொட்டதற்கெல்லாம் துணையைக் குற்றம் சாட்டி குடும்ப நல நீதிமன்றங்களைத் தேடும் தம்பதிகள் அதிகாரித்து விட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படி விவாகரத்து கோரும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகாரித்துள்ளது.

2004ம் ஆண்டு 2,400ஆக இருந்த விவாகரத்து வழக்குகள் 2009ம் ஆண்டு 4,100 ஆக உயந்துள்ளது. கணவரது மனம் புண்படும்படி பேசினாலோ, மனைவியை மன உளைச்சலுக்கு உட்படுத்தினாலோ விவாகரத்து கேட்கலாம் என சட்டத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட வழிகள் இருக்க, தற்போது ஒரு மும்பை தம்பதிக்கு விவாகரத்து வழங்கிய தீர்ப்பில் இன்னுமொரு காரணத்தையும் சேர்த்திருக்கிறது மும்பை ஐகோர்ட். அதாவது சேர்ந்து வாழ மனமின்றி கணவனோ மனைவியோ இருவரில் ஒருவர் வீட்டை விட்டுப் பிரிந்து வாழ்தலோ அல்லது ஒரே வீட்டில் பிரிந்து வாழ்ந்தாலோ விவாகரத்து கோர போதுமானது என தீர்ப்பளித்துள்ளது.

என்ன காரணம் கிடைக்கும் விவாகரத்து கோரலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் ஆசாமிகளுக்கு இந்தத் தீர்ப்பு இரட்டிப்பு சந்தோஷத்தைத் தந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பின் தாக்கம் தமிழகத்தில் எப்படி இருக்கும் என வழக்கறிஞர் அஜிதாவிடம் கேட்டோம்..

‘‘விவாகரத்து கோருவதற்கு இப்படி பிரிந்து வாழ்வதை காரணமாக சொல்ல முடியும் என சட்டப்பிரிவு 13ல் சொல்லப்பட்டுள்ளது. இது இந்திய விவாகரத்து சட்டத்தின்படி இந்து திருமணமுறைப்படி திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் சிறப்பு திருமண சட்டப்படி கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் பொருந்தும்.

திருமணத்தின் அடிப்படையே தாம்பத்தியம்தான். அதில் முறிவு ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்பட்டவர் விவாகரத்து கோர முடியும். இப்படி ஒருவர் மற்றொருவரால் புறக்கணிக்கப்பட்டு பிரிந்து வாழ்வதை ‘கைவிடுதல்’ என்றும் கூறுவார்கள். கைவிடுதலினால் பாதிக்கப்பட்டவர், இந்த சட்டத்தினால் உதவி பெற்று புது வாழ்க்கையை துவக்கவும் சுதந்திரமாக வாழவும் வழிவகை செய்வதுதான் இந்தத் தீர்ப்பின் நோக்கம்.

விவாகரத்து கோரி எத்தனையோ வழக்குகள் நீதிமன்றத்துக்கு வருகின்றன. அதில் சொல்லப்படுகிற தீர்ப்புகளைப் பார்த்து யாரும் விவாகரத்து கேட்பார்கள் என்று கூற முடியாது. யாருக்கு காய்ச்சல், தலைவலி இருக்கிறதோ அவர்கள்தான் மருந்து சாப்பிடுவார்கள். பிரச்னை இருப்பவர்கள்தான் விவாகரத்து கேட்பார்கள். நம் குடும்ப உறுப்பினர்கள் எப்போது முற்போக்கு சிந்தனைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ அப்போதுதான் விவாகரத்துகள் குறையும். காலகாலமாக இருந்த குடும்ப வன்முறைக்கு சட்டப்படி தண்டனை வழங்கலாம் என்ற சட்டமே 2006ல் தான் அமலுக்கு வந்தது. பெண்கள் எத்தனைதான் முன்னேறினாலும் அவர்களை அடிமைப்படுத்தியே வைக்க வேண்டும் என்கிற கீழ்த்தரமான எண்ணம் உள்ளவர்கள்தான் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கி ஆதாயம் தேட நினைப்பார்கள். எத்தனை சட்டங்கள் வந்தாலும் புரிந்து கொள்ளுதல் இருக்கிற இடத்தில் பிரிவுக்கு இடமில்லை.’’ என்றார் அஜிதா.

சட்டம் சொல்வது இருக்கட்டும்... நீங்கள் என்ன சொல்கிறீர்கள் வாசகர்களே..?

இரா.ரூபாவதி.


விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Empty Re: விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்!

Post by தாமு Wed Jan 06, 2010 4:21 pm

சிவா wrote:கணவரது மனம் புண்படும்படி பேசினாலோ, மனைவியை மன உளைச்சலுக்கு உட்படுத்தினாலோ விவாகரத்து கேட்கலாம் என சட்டத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட வழிகள் இருக்க, தற்போது ஒரு மும்பை தம்பதிக்கு விவாகரத்து வழங்கிய தீர்ப்பில் இன்னுமொரு காரணத்தையும் சேர்த்திருக்கிறது மும்பை ஐகோர்ட். அதாவது சேர்ந்து வாழ மனமின்றி கணவனோ மனைவியோ இருவரில் ஒருவர் வீட்டை விட்டுப் பிரிந்து வாழ்தலோ அல்லது ஒரே வீட்டில் பிரிந்து வாழ்ந்தாலோ விவாகரத்து கோர போதுமானது என தீர்ப்பளித்துள்ளது.

.


இது அனியாயம் அவங்க என்னிக்காவது ஒரு நாள் மனம் மாரலாம் இல்லையா? விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! 502589
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum