ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம்

2 posters

Go down

வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Empty வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம்

Post by ayyasamy ram Thu Jan 30, 2020 6:14 am

வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Tamil_News_large_2468066

வண்ணக் கோலங்கள் நம் வீட்டு வாசலை அலங்கரிக்க அன்றாடம் பூத்துக் குலுங்கும் தரைப் பூக்கள். அசையாத வண்ணத்துப் பூச்சிகள். கோலம் காண நம் வாசலுக்கே விரைந்து வரும் முதல் ரசிகன் சூரியனே. அதிகாலைப் பொழுதில் கண்களுக்கு விருந்தாகவும் மனதிற்கு மருந்தாகவும் வாசலில் வீசும் தெய்வீக மணம்.

சிந்தையும் செயலும் சங்கமிக்கும் யோகம்.மன அழுத்தம் நீங்க, நிதானம் பழக, முன்னோர்கள் நமக்களித்த மந்திரம். ஒருநொடியில் நம் வீட்டினை கோவிலாக மாற்றிடும் வினோதக் கலை. கால் பதித்து நடக்கும் நிலத்திற்கு நாம் செலுத்தும் மரியாதை. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திரு என சத்தமில்லாமல் சொல்லுமொரு சுகராகம் கோலம். மன விகாரங்களை நீங்கி மாதரை பணிவுடன் கைகூப்பி வணங்கச் செய்யும் அழகிய கவிதை.ஒரு நாளை மங்களகரமாகத் துவக்க வேண்டுமென இறைவன் நமக்கு கற்றுக் கொடுத்த முதல் பாடம். பாரதத்தின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் மவுன மொழி.அன்றாட வீட்டுச் சூழலை, உள்ளே ஊஞ்சலாடும் உணர்ச்சிகளை படம் பிடித்துக் காட்டும் அழகான வரைபடம். உலக வரைபடத்தில் காணமுடியாத அதிசயங்களை நம்முன் காட்டும் கண்ணாடி. அடுக்குமாடி கட்டடங்களாலும் அவசர வாழ்க்கையினாலும் நாம் தொலைத்து நிற்கும் அற்புத பொக்கிஷம்.


பாடங்கள் பல



ஏன் கோலங்கள் குறித்து இத்தனை சிந்தனைகள்? காரணம் அவை நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் பல. வாழ்க்கையை நாம் வாழ வேண்டிய முறையை நமக்கு உரைத்து மட்டுமல்ல உணர்த்திச் சொல்லும் வழிகாட்டி. கோலத்தை வேறொரு கோணத்திலிருந்து காண வேண்டும். ஒரு கை அசைவில் ஓசையின்றி விரைந்து பல புள்ளிகள் நடுவே புகுந்து புனிதம் கெடாது மீளும் வீர விளையாட்டே கோலம்.காண்பதற்கு பல நெளிவுகள், சுழிவுகள், சிக்கல்கள் தென்பட்டாலும் முதலும் முடிவும் மிக நேர்த்தியாக ஒன்று சேரும் விசித்திர வித்தை. கோலங்கள் என்றும் அழிவதில்லை. கோலம் ஈசனின் தெய்வீகக் கோலம்.


விதிமுறைகள்



வாழ்க்கையென்பதும் ஒரு அழகிய வண்ணக்கோலம்தான். வீர விளையாட்டுதான். அவ் விளையாட்டினை நாம் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கின்றோம். விதிமுறைகளின்றி விளையாட இயலாது. விதிமுறைகள் வெறும் சுவாரஸ்யத்திற்காக மட்டுமல்ல. அவை நம்மையும் நம் ஆற்றல்களையும் ஒழுங்குபடுத்தும் அதிசய மந்திரக் கோல். விதிமுறைகளில்லாத விளையாட்டு வெற்றுக் கூச்சலாகவும் பெருங் குழப்பமாகவும் முடியும்.வாழ்வில் சில விதிமுறைகளை நாம் பின்பற்றியே ஆகவேண்டும்; யாரும் விதிவிலக்கல்ல. ஏனெனில் இயற்கையின் நியதிகள் எல்லோருக்கும் பொதுவானது. எவருக்கும் அடிபணியாது. தன் பணியை இடையிடின்றி ஆற்றிக் கொண்டே இருக்கின்றது. இயற்கையின் இயக்கங்களை கூர்ந்து கவனித்தால் விதிமுறைகளை மீறாத ஒழுக்கமொன்றைக் காணலாம்.அவ்வியற்கை மனிதனுக்குள்ளும்,வெளியிலும் இயங்குகின்றது. அதை மதியாத போது அதன் எல்லைகளை மீறும் பொழுது அதன் விளைவுகளை சந்திக்கிறோம். தனிமனிதர்களுடைய பேராசைக்காக இயற்கை வளங்களை சூறையாடுகின்றோம். மாசு படுத்துகிறோம். அதன் மதிப்புணராது நகர்ந்து போகின்றோம். இயற்கையினுடைய பொறுமைக்கும் எல்லைகள் உண்டு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Empty Re: வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம்

Post by ayyasamy ram Thu Jan 30, 2020 6:14 am

ஐம்பெரும் சக்திகள்



இயற்கையை ஆகாயம், வாயு, அக்னி, நீர், நிலம் என ஐவகை சக்திகளாகப் பிரித்து தெய்வப் பெயர்களிட்டு வணங்குகிறோம். இந்த ஐந்தும் ஐம்பெரும் சக்திகளாகும். இவ்வுலகானது ஐம்பூதங்களையும் சார்ந்தே உள்ளது. இந்த இயற்கையை மதித்து போற்றி வழிபட்டால் அவை கைமாறாக அனைத்து வளங்களையும் கொடுக்கும். அவற்றை பகிர்ந்து வாழவேண்டும் என்கிறது பகவத்கீதை. வாழ்க்கையை வண்ணக் கோலமாக்கி வாழ இறைவன் நமக்கு வழங்கிய மூலப் பொருளே இயற்கை. அதை சிதைத்தால் வாழ்க்கை அலங்கோலமாகும். இச் சக்திகளைக் கொண்டே வாழ்க்கை என்னும் வண்ணக் கோலமிட வேண்டும். சரியாகக் கோலமிட்டால் முன்பு கோலம் குறித்துக் கூறியது தெளிவாய் புரியும். அத்தனை அனுபவங்களும் வண்ணக் கோலமாய் மின்னும். வாழ்க்கையெனும் விளையாட்டின் முதலும் முடிவுமாக உள்ள ஒரே விதிமுறை இயற்கையை அறிந்து அனுசரித்து அரவணைத்து வாழ்வதே. மற்ற விதிகளைத்தும் இதன் விரிவாக்கமே...


சாதனங்கள்



வெற்றி பெற வெறும் எண்ணங்களும் கனவுகளும் மட்டும் போதாது. செயல்படுத்துவதற்கு மாபெரும் ஆற்றல் தேவை. அவ்வாற்றல் நம்முள் இருப்பதை நாம் இனம் காண வேண்டும். இயற்கையின் ஆற்றல்கள் நம்மில் எவ்வாறு இயங்குகிறது; அதன் பயன் என்ன, அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் யாது என்பது குறித்து பள்ளிப் பாடங்களில் நாம் பயின்றதில்லை.வெற்றி பெறுவதற்கான பெரும் சாதனங்கள் யாது? முதலாவதாக ஐம்புலன்களுடன் கூடிய நம் உடல் (கண் செவி நாசி நாக்குமூவித ஆற்றல்களையும் ஒருங்கிணைத்து வெல்பவனே மாமனிதன்).உடலாய், மனதாய், மதியாய், இயங்குவது ஆகாயம் முதலிய ஐம்பெரும் சக்திகளே. புறத்தே நாம் காணும் பொருளனைத்தும் கூட ஐம் பூதங்களே. வெற்றி வேண்டுமெனில் முதலில் ஐம்புலன்களை ஆள வேண்டும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Empty Re: வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம்

Post by ayyasamy ram Thu Jan 30, 2020 6:15 am

புலனடக்கம்



புலனடக்கத்தையே பிரம்மச்சரியம் என்பர். பிரம்மசரியம் என்பது பார்க்காது, கேட்காது அல்லது இல்லற வாழ்கையை வாழாமல் இருப்பதல்ல. எல்லா செயல்பாடுகளிலும் ஓர் எல்லை மீறாத கட்டுக் கோப்பான வாழ்க்கையே பிரம்மசரியம். பண்டைய குருகுலங்களில் இதற்கென பயிற்சிகள் இருந்தன.நம் ஆற்றல்களை பயனில்லாத விஷயங்களில், எண்ணங்களில், விரயம் செய்யாதிருக்கப் பழகுதல் தவம். ஐம்புலன்கள் தன் வசமிருந்தால் உலகம் நம் காலடியிலிருக்கும். 'ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் வேண்டும்' என்பார் வள்ளுவர்.ஐந்து புலன்களும் கட்டுக்கடங்காத ஐம்பெரும் சக்திகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. அச் சக்திகளை கவனமாக கையாள வேண்டும். அவை ஆக்கத்தின் உச்சியில் மட்டுமல்ல அழிவின் விளிம்பிலும் கொண்டு செல்லும்.“மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய” விலங்கு போலாகும் மனம் என்கிறது திருவாசகம்.இன்றைய சூழலில் வயது வரம்பு பேதமின்றி அனைவரின் கவனத்தையும் புலன்களையும் சீரழிக்க பல சக்திகள் நம்மெதிர் நிற்கின்றன.


போர்க்களம்


புறச்சூழல் போர்க்களமாய் உள்ளது. ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சி. மறுபுறம் ஐம்புலங்களை எல்லாத் திசைகளிலும் ஈர்த்து அரை நொடியில் அடிமையாக்கி ஆர்ப்பரிக்க காத்திருக்கும் புறப்பொருட்கள். ஆகவே நமக்கென சில விதிமுறைகளை விதித்துக் கொள்ள வேண்டும். நல்ல பழக்கங்கள் பழகுவது கடினம். விடுவது சுலபம். தீய பழக்கங்கள் பழகுவது சுலபம். விடுவது கடினம். கோலமிடும் இடத்தை முதலில் சுத்தம் செய்வது போல் நம் இருப்பிடம், நட்பு வட்டம், ஈடுபடும் விஷயங்கள் இவற்றை மிக கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். உயர் விஷயங்களில் உணர்வுப்பூர்வமான ஈடுபாடு வர வேண்டும். ஐம்புலனாற்றல்களை வீண் செய்யாது ஒன்று திரட்டி சேமித்தால் அவ்வாற்றல் வலிமை, உற்சாகம், ஊக்கம், பகுத்தறியும் தன்மை என பல தளங்களில் விரியும். நம்மைப் புதியதோர் மனிதராக்கி புத்துணர்வு கொடுக்கும்.

அடங்கிய புலனே அழியாத அரிய செல்வம்.
புலன்கள் வசப்பட்டால் மனம் ஒருமுகப்படும்
அறிவு தெளிவுறும். தெளிந்த அறிவால் வாழ்வு
வண்ணக் கோலமாகும்.


வாருங்கள்! வாழ்வை வண்ணக் கோலமாக்கி வாழ்வாங்கு
வாழ்வோம்

.-- சுவாமி சிவயோகாநந்தாசின்மயா மிஷன், மதுரை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Empty Re: வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 30, 2020 11:38 am

வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் 3838410834 வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் 103459460 வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Empty Re: வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum