ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்சத்திரத்தின் பிறப்பும் இறப்பும்

Go down

நட்சத்திரத்தின் பிறப்பும் இறப்பும் Empty நட்சத்திரத்தின் பிறப்பும் இறப்பும்

Post by தாமு Mon Jan 04, 2010 3:18 pm

நட்சத்திரத்தின் பிறப்பும் இறப்பும்


ஸ்டெல்லார் மேகங்கள்(stellar clouds) என்பதில் இருந்து தான் நட்சத்திரங்கள் உருவாகுகின்றன. இது உயிர்களின் தோற்றத்தோடு ஒப்பிடும் சமயம் விந்து அல்லது ஓவம் என்ற நிலை என்பதை அறியலாம் அதாவது தொடக்க நிலை இதுதான்.

ஸ்டெல்லார் மேகங்கள் என்றால் என்ன? மேகம் என்பது என்ன?
நீராவி திரண்டு ஆகாயத்தில் ஒரே இடத்தில் இருக்கிறது அந்த நீராவி திரண்டு இருக்கும் இடத்தை நாம் மேகம் என்று சொல்கிறோம்(நீராவி ஏன் ஒரே இடத்தில் திரண்டு இருக்க வேண்டும்? மேகத்தில் மட்டும் இருக்கும் அந்த நீராவி ஏன் ஆகாயம் முழுக்க பரவுவதில்லை யோசித்திருக்கிறீர்களா? இதற்கு பதில் அளிக்க வேண்டுமெனில் ஒரு தனி பதிவு இட வேண்டும்.)
ஸ்டெல்லார் மேகங்கள் என்பது அண்டவெளியில் ஒரே இடத்தில் திரண்டு இருக்கும் வாயுக்கள். நம் நீர் மேகங்கள் சிறிய அளவில் இருப்பதால் ஸ்டெல்லார் மேகங்களும் இதே போல இருக்கும் என்று நினைத்து விடக் கூடாது. முன்பு குறிப்பிட்டுள்ள மிகப் பெரிய நட்சத்திரத்தை விட பெரிய அளவில் கூட இருக்கும் இந்த ஸ்டெல்லார் மேகங்கள். இந்த ஸ்டெல்லார் மேகங்களில் அதிக அளவில் இருப்பது ஹைட்ரஜனாக இருக்கும்.
ஒரு ஸ்டெல்லார் மேகம் மற்றொன்றுடன் மோதும் சமயம் ஏற்படும் உராய்வு அல்லது நட்சத்திரங்களில் ஏற்படும் சூப்பர் நோவா உண்டாக்கும் வெப்பம் மற்றும் அதிர்வுகளாலேயே இந்த ஸ்டெல்லார் மேகங்கள் நட்சத்திரங்களாக மாறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகுகிறது.ஏதுவான சூழ்நிலை தான் உருவாகுகிறதே தவிர எல்லா ஸ்டெல்லார் மேகங்களும் நட்சத்திரங்களாக மாறுவதில்லை.

மேலே குறிப்பிட்டதில் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தாலும் இந்த ஸ்டெல்லார் மேகங்களில் உண்டாகும் புவியீர்ப்பு விசை மாறுதல்களால் இந்த ஸ்டெல்லார் மேகங்கள் ஒரு புரோட்டோ ஸ்டார்(proto star) என்ற நிலையை அடையும்.

இந்தப் பருவத்தை நம் குழந்தைப் பருவத்துடன் ஒப்பிடலாம். அதாவது வளரும் பருவம் இது. முழு நட்சத்திரமாக மாறுவதற்கு முந்தைய நிலை இது.

இப்படி ஆகும் ஸ்டெல்லார் மேகங்கள் நட்சத்திரங்களாக மாற அதனுடைய வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவு அதிகரிக்க வேண்டும்.

வெப்பம் அந்த அளவை நிலையை அடைந்தவுடன் அணு சேர்க்கை(nuclear fusion) ஆரம்பமாகி விடும். சில ஸ்டெல்லார் மேகங்களில் இந்த அணு சேர்க்கை நடப்பதற்கு தேவையான வெப்ப அளவை அடைவதே இல்லை. இந்த ஸ்டெல்லார் மேகங்கள் பழுப்புக் குள்ளன் (Brown dwarf) ஆக மாறி விடும்.

இப்படி அணுசேர்க்கை ஆரம்பித்து வெளிச்சத்தையும் வெப்பத்தையும் அந்த அணுசேர்க்கையின் காரணமாக வெளியேற்றிக் கொண்டிருக்கும் நட்சத்திரத்தை நாம் முழுக்க வளர்ந்த ஒரு மனிதனுடன் ஒப்பிடலாம். அதாவது நட்சத்திரத்தின் வாழ்க்கைப் பயணத்தில் பருவம் அடைந்து விட்டது என்று கூறலாம்.

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த பூமியில் நமக்கே இடம் ஏது என்பது போல எல்லா நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் அப்படியே இருந்து விட்டால் புதுப் புது நட்சத்திரங்கள் தோன்றத் தோன்ற பிரபஞ்சமே நட்சத்திரங்களால் நிறைந்து விடாதா?
மனிதர்களுக்கு மரணிப்பது போலவே நட்சத்திரங்களும் மரணிக்கின்றன.

ஏன் மரணிக்கிறது என்றால், நட்சத்திரங்களில் அணுச்சேர்க்கையின் போது என்ன நடக்கிறது என்றால் ஹைட்ரஜன் அணுக்களை எல்லாம் ஒன்று சேர்ந்து ஹீலியம் அணுக்களாக மாறுகிறது. நம் உடலில் நடக்கும் செல் மரணங்கள், ஜனனங்களுடன் இதனை ஒப்பிடலாம். இந்த சேர்க்கையின் போது வெளியாகும் சக்திதான் வெப்பமாகவும், வெளிச்சமாகவும் வெளிப்படுகிறது. ஆனால் நட்சத்திரங்களில் ஹைட்ரஜன் அணுக்கள் எதோ ஒரு சந்தர்பத்தில் தீர வேண்டும் அல்லவா? அப்படி தீரும் சமயம் இல்லை ஹீலியம் மிக அதிக அளவில் உற்பத்தியாகும் சமயம் இந்த அணுசேர்க்கையில் வெளியாகும் சக்தி போதுமானதாக இருப்பதில்லை.

அந்த சமயத்தில் இந்த நட்சத்திரம் மரணிக்க ஆரம்பிக்கிறது. புவியீர்ப்பு சக்தி(gravitational force) மெதுவாக இந்த நட்சத்திரத்தைச் சுருங்கச் செய்கிறது.
இதை லாடம் கட்டுவதுடன் ஒப்பிடலாம். ஒரு பொருளைச் சூடாக்கினால் அது விரிவடைகிறது. அதனைக் குளிர்வித்தால் அது சுருங்குகிறது அல்லவா? அதே போல மிக வெப்பமாக இருந்த நட்சத்திரம் அந்த வெப்பம் இப்பொழுது இல்லாததால் சுருங்க ஆரம்பிக்கிறது.

சூரியன் போல நடுத்தர அளவு நட்சத்திரங்களில் என்னவாகும் என்றால் இதன் புவியீர்ப்பு விசை மிக அதிகமாக இல்லாததால் இதனை நம் பூமி அளவுக்கு சுருக்கி விடும். அப்படி சுருங்கிய சூரியன் தன் பிரகாசம் இழந்து வெப்பம் வெளியாக்கும் சக்தியை இழந்து ஒரு வெள்ளைக் குள்ளனாக(white dwarf) சுருங்கி விடும்.

சூரியனை விட சற்று பெரியதாக இருக்கும் நட்சத்திரங்களில் புவியீர்ப்பு விசை இன்னும் அதிகமாக இருப்பதால் இதனை மிக மிக அதிகமாகச் சுருக்கி ஒரு நியூட்டரான் ஸ்டார்(neutron star) ஆக மாறி விடும்.

சூரியனை விடப் பல மடங்கு பெரியதாக இருக்கும் நட்சத்திரங்கள் கரும் பள்ளங்களாகி விடும். இப்படித்தான் நட்சத்திரங்கள் மரணிக்கின்றன.
இந்த அற்புதம் நாள்தோறும் இந்த பிரபஞ்சத்தின் எதோ ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

1,00,000 ஆண்டுகள் மனிதர்கள் இந்த பூமியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள், இது ஒரு நட்சத்திரம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சமயத்தில் ஒரு மிகச் சிறிய ஒரு பகுதியே. ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை நட்சத்திரங்கள் பிரபஞ்சத்தில் இருக்கும் சமயத்தோடு ஒப்பீடு செய்யவே முடியாது.


க.கிருசாந்தன்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum