ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் திருநாள்

2 posters

Go down

பொங்கல் திருநாள் Empty பொங்கல் திருநாள்

Post by ayyasamy ram Mon Jan 13, 2020 5:01 pm

பொங்கல் திருநாள் Tamil_News_large_2191376
எந்த செயலையும் ஆண்டவனை வணங்கி நல்ல நாள்
பார்த்து, நட்சத்திரம், நேரம் குறித்து அதன்படியே, அந்த
நாள், அந்த நேரம், அந்த செயலை ஆரம்பித்தால் வெற்றி
கிட்டும் என்ற மிகப் பெரிய நம்பிக்கையை உடையவர்கள்
நம் மக்கள்.

அதன்படி, ஆண்டின், 12 மாதங்களில், தை மாதம், நல்ல
செயலை ஆரம்பித்தால், அது நல்ல பயனை நமக்கு அளிக்கும்
என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டுள்ளோம்.

வருடா வருடம் மாதந்தோறும் பண்டிகை என்ற பெயரில்
நிறைய விசேஷங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.
ஆயினும் இவற்றில் எல்லாம் முதன்மை பெறும் ஒரு சிறப்பு
மிக்க மகிழ்ச்சியான பண்டிகை, உழவர் திருநாளாம்
தைப்பொங்கல் பண்டிகை தான்.

கதிரவன் தனது வெப்ப சேவையில் உச்சத்தைப் பெறும் முதல்
ஆறு மாதங்கள், 'உத்தராயணம்' என்றும், சாந்தத்தைப் பெறும்
அடுத்த ஆறு மாதங்கள், 'தட்சிணாயணம்' என்றும்
அழைக்கப்படுகின்றன.

உத்தராயணத்தில் கதிரவனின் பார்வை, உக்கிரம் வடக்கு
நோக்கியும், தட்சிணாயணத்தில் தெற்கு நோக்கியும் இருக்கும்
என்றும் கோளியல் அறிஞர்கள் சொல்வதுண்டு.

அத்தகைய உத்தராயணம் தொடங்கும் நாளும் தட்சிணாயணம்
முடியும் நாளும், பொங்கல் பண்டிகையே ஆகும்
ஆறு மாதங்களாய் நிலவி வந்த நீண்ட இரவுகளுக்கு பிறகு வரும்
கடவுள்களின் தினம் தை முதல்நாள்.

இது, நமக்கு உணவளிக்கும் உழவர்களுக்கும் அதற்கு ரணமான
சூரியனுக்கும் நாம் செய்யும் மரியாதையும், நன்றி நவிலலும்தான்.

அதனாலேயே இந்த நாளை தேசிய பொங்கல் தினம் என்று
கூறுகின்றனர். உழவர் திருநாளாம் தைத்திருநாள், உலகளாவிய
ரீதியில் அனைத்து தமிழ் இந்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் விழா, மக்களால் இயற்கை முறையில் இயல்பாகக்
கொண்டாடப்படும் ஒரு உண்மையான விழா; உழைக்கும் தமிழ்
மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு
சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும்
மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா.

நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான
தைப்பொங்கல் திருநாள் நாளை மலர்கிறது. இந்த தைப்பொங்கல்
திருநாளில் உழவர்கள் தமது வேளாண்மைக்கு உதவி செய்த
சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் பொங்கலிட்டு
தமது நன்றியை வெளிக்காட்டுகின்றனர். உழவர்கள் மட்டுமின்றி
ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக
இன்றைய நாள் போற்றப்படுகிறது.உழவர்கள் மழையின்
உதவியால் ஆடி மாதம் முதல், உழைத்துச் சேர்த்த நெல்லை,
மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை
நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

வரலாற்று ரீதியாக பார்க்குமிடத்து, சங்ககாலத்தில் அறுவடை
காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள்
இந்த விரதத்தைக் கடைப்பிடித்தனர்.

தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பர். நல்ல விளைச்சல்
கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு
நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து
வழிபட்டனர்.

இதுவே, நாளடைவில் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக
மாறியது என்ற வரலாற்று கதை,
அனைவர் மத்தியிலும் பிரபலமாக நினைவூட்டப்பட்டு வருகிறது.
-
---------------------------------------
நன்றி-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொங்கல் திருநாள் Empty Re: பொங்கல் திருநாள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 14, 2020 12:11 pm

Code:

வரலாற்று ரீதியாக பார்க்குமிடத்து, சங்ககாலத்தில் அறுவடை
காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள்
இந்த விரதத்தைக் கடைப்பிடித்தனர்.

தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பர். நல்ல விளைச்சல்
கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு
நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து
வழிபட்டனர்.

இதுவே, நாளடைவில் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக
மாறியது என்ற வரலாற்று கதை,
அனைவர் மத்தியிலும் பிரபலமாக நினைவூட்டப்பட்டு வருகிறது.
-


இது கூட உண்மையாக இருக்கலாம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum